ஞாயிறு, 28 டிசம்பர், 2014

துடிக்காத இதயத்தைத் துடிக்க வைத்த மருத்துவச் சாதனை

சிட்னி, அக். 25_ ஆஸ்தி ரேலியாவைச் சேர்ந்த மருத்துவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை களில், துடிக்காத இதயத்தை வெற்றிகரமாக பயன் படுத்தி சாதனை படைத் துள்ளனர்.
பொதுவாக இதய மாற்று அறுவை சிகிச்சை களில் மருத்துவர்கள் துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தையே பயன்படுத்தி வந்தனர். ஆனால், உலகில் முதன்முறையாக சிட்னி யின் செயின்ட் வின் சென்ட் மருத்துவமனை மற்றும் விக்டர் சாங் இருதய ஆராய்ச்சி மய்யம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள ஒரு புதிய செயல்பாட்டின் மூலம், துடிப்பது நின்று 20 நிமி டத்திற்கு பிறகும் கொடை செய்யப்பட்ட இதயத்தை வெற்றிகரமாக மற்றொரு வருக்கு பொருத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை இந்த செயல் பாட்டின் உதவியால் மூன்று பேருக்கு வெற்றி கரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக வும், இந்த முறையில் சிகிச்சை பெற்றவர்களில் இருவர் நலமுடன் இருப்ப தாகவும், மூன்றாவது நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சாதனை செயல்பாடு குறித்து நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் இணை பேராசி ரியர் குமுத் டித்தால் கூறி யதாவது:-
உலகிலேயே மூவருக்கு தான் இந்த சிகிச்சை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த முறையில் கொடை செய்யப்பட்ட இதயம் ஹார்ட் இன் ஏ பாக்ஸ் என்னும் ஒரு சிறிய இயந் திரத்தினுள் கதகதப்பான சூழலில், பாதுகாப்பான திரவத்தில் வைக்கப்படு கிறது.
இவ்வகையில் பரா மரிக்கப்படும் இதயங்கள் பாதுகாப்பாக உள்ளன என்பது மருத்துவர்க ளுக்கு உறுதியாக தெரிவ தால், நோயாளிகளுக்கு இம்முறை உதவியாக உள் ளது. இன்னும் 5 ஆண்டு களில் நாம் அதிக அள வில் இயந்திரங்கள் மூலம் இதயத்தை பாதுகாக்கும் முறையை பின்பற்ற துவங்கி யிருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலை,25.10.14


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக