வியாழன், 29 நவம்பர், 2018

முடங்கிய கைகளுக்கு விடுதலை!

வயது ஆக ஆக, வலியும் அதனால் ஏற்படும் வேதனையும் சொல்லி மாளாது. அதுவும், காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கையில் விழுவது வரை, நாள் முழுக்க கை, கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டு நம்மைச் சித்திரவதைக்கு உள்ளாக்கிவிடும். இந்த வலி தரும் பயத்தாலேயே பலரும் வெளியில் செல்வதற்குத் தயங்கி, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். முடக்கு வாதம் என்று இந்த நோய்க்குச் சரியான பெயரைத்தான் சூட்டியிருக்கிறார்கள்!

ரூமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் அல்லது முடக்கு வாதம் என்பது உடலிலுள்ள நீர்ம மூட்டுகளைப் பிரதானமாக தாக்கும் நாள்பட்ட மூட்டு நோயாகும். இந்த நோய், மூட்டுகளை மட்டுமல்லாது நுரையீரல், இதயம், கண் போன்ற உடலின் பிற உறுப்புகளையும் பாதிக்கும். பொதுவாக, 40 முதல் 50 வயது கொண்டவர்களை அதிகமாகத் தாக்கினாலும், எந்த வயதினரையும் பாதிக்கக்கூடிய நோயாகவே இது கருதப்படுகிறது. ஆண்களைவிடப் பெண்கள் மூன்று மடங்கு இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

முடக்கு வாதம் கொண்ட வர்களுக்கு மூட்டு வலி, மூட்டு வீக்கம், காலை நேர மூட்டு இறுக்கம், மூட்டுச் சீர்குலைவு மற்றும் மூட்டுச் செயல்பாடின்மை போன்ற அறிகுறிகள் காணப்படும். சிலருக்கு அன் றாட வேலைகளைச் செய்வதில் மிகுந்த சிரமமும் உடல் அயற்சியும் ஏற்படும்.

வலி குறைக்கும் பயிற்சிகள்


முடக்கு வாதத்தைக் குணப்படுத்துவதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், வலியைக் குறைப்பதற்கான மருந்துகள், அறுவை சிகிச்சைகள் ஆகியவை மூலமாக ஓரளவு தீர்வு பெற முடியும். அதோடு சில உடற் பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

முடக்கு வாதம் கொண்டவர்களில் பெரும்பாலா னோ ருக்குக் கை விரல்கள் மற்றும் மணிக்கட்டுகளில் உள்ள மூட்டுகளில் முழுமை யான மூட்டு அசைவு கள் இல்லாமல் இறுக்கமாக இருக்கும். மேலும், எதையும் இறுக்கமாகப் பற்றிக்கொள்ளும் திறன் இருக்காது. இதனால், அவர்களால் பையைத் தூக்குவது, சாவி கொண்டு கதவைத் திறப்பது, பாட்டில் மூடியைத் திறப்பது, டம்ளரைப் பிடிப்பது போன்ற அன்றாட வேலைகளைச் செய்வதுகூடக் கடினமாக இருக்கும். ஆதலால், கை, மணிக்கட்டு மூட்டுகளில் இத்தகைய பிரச்சினைகளைக் கொண்டவர்கள் கண்டிப்பாகக் கைகளுக்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

இதற்காக சாரா எனும் பயிற்சிகள் வழங்கப் படுகின்றன. இவை, உயர்தர மருத்துவ ஆய்வு ஒன்றில், முடக்கு வாதம் கொண்ட மக்களிடையே சோதிக்கப்பட்டு, திறன் மிக்கவை எனக் கண்டறியப்பட்டவை. மேலும், இந்தப் பயிற்சிகள் கை, மணிக்கட்டு மூட்டுகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முடக்கு வாதம் பாதிக்கப்பட்ட கைகளைக் கொண்ட நோயாளிகளுக்கு சாரா பயிற்சிகள் பரிந்துரைப்பதை முடக்கு வாத மருத்துவர்கள் மற்றும் தெரப் பிஸ்ட்டுகள் ஆதரித்து வருகின்றனர்.

மூட்டு அசைவுகளை எளிதாக்கும் 7 பயிற்சிகள் மற்றும்  விரல்கள், உள்ளங்கை, மணிக்கட்டுகளில் உள்ள தசைகளை உறுதிப்படுத்தும் 4 பயிற்சிகள் என சாரா இரண்டு வகையான பயிற்சிகளைக் கொண்டது.   இவற்றைச் செய்வதால் மூட்டு வலியும் இறுக்கமும் குறைந்து அன்றாடச் செயல்பாட்டை அதிகரிக்க முடியும்.

-  விடுதலை நாளேடு, 26.11.18

வைரஸ் காய்ச்சலைத் தடுப்பது எப்படி?



மழைக்காலம் வந்தால் வைரஸ் காய்ச்சல்களும் தொடங்கிவிடும். டெங்கு, சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல், மலேரியா எனப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்.  மழைக் காலத்தில் வரக்கூடிய வைரஸ் காய்ச்சல்களை எப்படித் தவிர்ப்பது, குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல்கள் வராமல் பார்த்துக்கொள்வது எப்படி?

டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல்களுக்குக் கொசுதான் முதல் காரணம். கொசுக் கடி மூலம் உடலுக்குள் செல்லும் வைரஸ், 3 முதல் 7 நாட்களுக்குள் வேலை யைக் காட்டத் தொடங்கிவிடும். முன்பு கொசுக்கடியால் மலேரியா காய்ச்சல்தான் தீவிரமாக இருந்தது. இப்போது டெங்கு, சிக்குன் குனியா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் அதிகம் தாக்குகின்றன.

இந்தக் காய்ச்சல்கள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சென் னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் சிவராம கண்ணனிடம் கேட்டபோது, டெங்குவும் ஒரு வகையான வைரஸ்தான். கொசுக் கடியால் வருவதுதான். கொசுவைக் கட்டுப்படுத்தினாலே அந்தக் காய்ச்சல் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். டெங்கு வால் பாதிக்கப்பட்டவரைக் கடிக்கும் கொசு மற்றவர்களைக் கடித்தால், அவர்களுக்கும் டெங்கு தொற்றிவிடும்.

வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டெங்குவைப் பரப்பும் ஏடீஸ் கொசு பகலில்தான் கடிக்கிறது. எனவே, கொசுக் கடியிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். முதியவர்கள், குழந் தைகள், நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களை வைரஸ் காய்ச்சல் எளிதில் தாக்கிவிடும். எனவே, இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. மழை, குளிர் காலத்தில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த் தாலே, எந்த வைரஸ் காய்ச்சலையும் தவிர்த்துவிடலாம் என்கிறார்.

கைகளை நன்றாகக் கழுவுங்கள்


ஒருவருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் நன்றாக இருந்தாலோ நுரையீரலில் பிரச்சினை இல்லாமல் இருந்தாலோ அவரை வைரஸ் காய்ச்சல் எளிதில் அண்டாது. அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால், ஜூரம் அதிகமா னாலோ ரத்த அழுத்தம் அதிகரித்தாலோ வியர்வை, தலைசுற்றல், பசியின்மை போன்ற பிரச்சினைகள் தெரிந்தாலோ மருத்துவரை உடனே அணுக வேண்டும். பொதுவாக குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் ஆகியோர் வைரஸ் காய்ச்சல்களுக்கு எளிதில் இலக்காகிவிடுவார்கள்.

பொதுவாக ஃப்ளு, இன்ஃப்ளூயன்சா ஆகியவற்றைத்தான் வைரஸ் காய்ச்சல் என்கிறோம். இந்தக் காய்ச்சல் சுவாச வழியில் மூக்கு முதல்  தொண்டைவரை பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. நுரையீரல் வரையிலும் பாதிப்பு நீளும். வைரஸால் பாதிக்கப்பட்டவர் இருமும்போதோ தும்மும்போதோ பக்கத்தில் மற்றவர்கள் இருந்தால் அவர்களுக்கும் காய்ச்சல் வரக்கூடும். இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் முகமூடி அணிந்துகொண்டாலோ கர்சீப்பை வைத்து மூடிக்கொண்டாலோ மற்றவருக்குப் பரவாது.

ஒரு வேளை அவர்கள் அப்படி இல்லாமல் இருந்தால், அவர்களை அணுகுபவர்கள் பாதுகாப்பாக இருப்பது நல்லது. காய்ச்சல் வந்தவர்களைத் தொட்டாலோ கைக்குலுக்கி னாலோ கையை நன்றாகக் கழுவிவிட வேண்டும். இதைப் பழக்கமாக வைத்துக் கொண்டாலே வைரஸ் காய்ச்சல் அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்கிறார் மருத்துவர் சிவராம கண்ணன்.

குளியல் மிக அவசியம்!


மழைக்காலத்தில் குழந்தைகளுக்குச் சளி பிடித்தல், இருமல், காய்ச்சல் ஆகியவை அடிக்கடி வரும். மழை பெய்யும்போது தண்ணீரில் விளையாட குழந்தைகள் ஆர்வம் காட்டுவார்கள். குழந்தைகளை இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படிக் காப்பது?

மழைத் தண்ணீரில் குழந்தைகள் விளை யாடிவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு, கை, கால், முகம்  முறையாக சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். அப்படிக் கழுவாமல் உணவு சாப்பிட்டால், அதன் மூலம் குழந்தை களுக்கு வைரஸ் உள்ளே சென்றுவிடலாம். அதனால் வயிற்றுப்போக்கு, வைரஸ் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். மழைக் காலத்தில் டெங்குக் காய்ச்சலி லிருந்து குழந்தைகளைக் காப்பது மிகவும் முக்கியம். பள்ளியில் இருக்கும்போதோ வீட்டில் இருக்கும்போதோ கொசுக் கடிக்கு ஆளாகமல் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் மழை நீரில் விளையாடக் கூடாது எனப் பெற்றோர் அறி வுறுத்த வேண்டும். சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

1 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தை களுடைய கையையும் விரல்களையும் பெற்றோர்கள் சுத்தமாகப் பராமரிக்க வேண் டும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ரவி.

- விடுதலை நாளேடு, 26.11.18

வியாழன், 22 நவம்பர், 2018

இரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி



ஒளியும் நிறமும் நம் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் திறன் படைத்தவை. நீல நிற ஒளியால் உயர் ரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்க முடியும் என, பிரிட்டனி லுள்ள சர்ரே பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு, தினமும் மூன்று வேளை உயர் ரத்த அழுத்த மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு ஆறுதல் தரக் கூடியது.

சர்ரே ஆராய்ச்சியாளர்கள், ஆரோக்கிய மான, 14 பேரை 30 நிமிடங்கள் நீல நிற ஒளியில் இருக்கவைத்தனர். ஆய்வாளர்கள் பயன்படுத்திய நீல நிற ஒளியின் அலைநீளம் 450 நேனோ மீட்டர்கள் கொண்டது. இது சூரிய ஒளியில் இருக்கும் நீல ஒளியின் தன்மையுடையது. அடுத்த நாள், அதே நபர்களை சாதாரண ஒளியில் 30 நிமிடங்கள் இருக்க வைத்தனர்.

இந்த சோதனைக்கு முன், சோதனைக்கு பின், இரண்டு மணி நேரங்கள் கழித்தும் பங்கேற்பாளர்களின் ரத்த அழுத்தம், ரத்த நாளங்களின் இறுக்கம், இளக்கம், ரத்த பிளாஸ்மாவில் நைட்ரிக் அமிலத்தின் அளவு போன்றவற்றை ஆராய்ச்சியாளர்கள் அளந்து பார்த்தனர். சாதாரண ஒளியில் நனைந்த பின், ரத்த அழுத்தத்தில் எந்த மாற்றமும் தென்பட வில்லை. ஆனால், நீல ஒளியில் நனைந்த பின், இதயம் சுருங்கிய நிலையில் (சிஸ்டாலிக்) ரத்த அழுத்தம் 8 மி.மி மெர்குரி அளவுக்கு குறைந்திருந்தது.

இது ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகளை சாப்பிடும்போது கிடைக்கும் பலன் அளவுக்கு இருப்பதாக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்தனர். நீல ஒளி பட்டதும், தோலில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியாகி, அது ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இதனால் இறுகியிருந்த ரத்த நாளங்கள் இளக்க மடைகின்றன.

இதையடுத்து, ரத்த ஒட்டம் அதிகரித்து, ரத்த அழுத்தம் குறைகிறது என, ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்தனர். வயதானவர்களின் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, நீல ஒளியைப் பாய்ச்சும் கருவிகளை அணிந்தால் அதிக மாத்திரைகளை உட்கொள்ளாமலேயே ரத்த அழுத்தத்தை சீராக்கலாம் என, சர்ரே பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- விடுதலை நாளேடு,22.11.18

வியாழன், 8 நவம்பர், 2018

டெங்கு, சிக்கன் குனியா, ஜிகா காய்ச்சல்கள் எச்சரிக்கை!

பேராசிரியர் டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் அவர்களின் மருத்துவத்துறை அனுபவ அறிவுரை


டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சல்கள்


டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சல்கள் வைரசால் ஏற்படுகின்றன. தேங்கியிருக் கும் தண்ணீரிலுள்ள பெண் கொசுக்கள் பகல் நேரத்திலேயே கடிப்பதால் பரவு கின்றன. டெங்கு, சிக்கன் குனியாவால் காய்ச் சல் அதிகமாகும். தோல் வெடிப்புகள், மூட்டு வலிகள் ஏற்படும். டெங்கு காய்ச் சலின்போது இரத்த இழப்பு ஏற்படுவ தால், இரத்த உறைதலுக்கு மூலப் பொருளான இரத்த தட்டுகள் குறைந்து விடுவதால் இரத்த இழப்பு அதிகமாகிறது. பாரசிட்டமால் மற்றும் மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நிலையும், டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய் களுக்கு தடுப்பு மருந்தும் இல்லாத நிலையும் உள்ளது.

ஜிகா காய்ச்சல்


ஒருவரிடமிருந்து மற்றவருக்கு சுவாசிக்கின்ற காற்றின்மூலமாகவும், பாலியல் உறவுகளின் மூலமாகவும்  பரவுகின்ற வைரஸ் காரணமாக ஜிகா காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல், உடல் வலி, தலைவலி ஏற்படும். தும்மல், மூக்கடைப்பு இராது. தடுப்பு மருந்து இல்லை.

பப்பாளியின் பயன்


பப்பாளி இலைகள் டெங்குவைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. டெங்கு வால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பப்பாளி இலைச் சாறு அளிப்பதன்மூலமாக 5 நாள்களில் குணம் அடைகிறார்கள்.

ஸ்வைன் புளூ காய்ச்சல்


ஸ்வைன் புளூ காய்ச்சலுக்கு மருந்து உள்ளது.


- விடுதலை நாளேடு, 6.11.18

*கொழுப்புக்கும் இருதய நோய்க்கும் தொடர்பு இல்லை!' - ஆய்வில் தகவல்*

இதய நோய்க்கும் கொழுப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது ஆய்வில் நிரூபணமாகியுள்ளதாக சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இருதய நோய்
இதுதொடர்பாக அவரிடம் பேசினோம்.`` கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் என வரும்போது அறிவியலா அரசியலா என்ற போராட்டத்தில் அறிவியல் தோற்று, அரசியல் வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய உலகில் மனித நலன் புறம் தள்ளப்படுகிறது என்பதை உறுதியாக்கி உள்ளது. உணவில் உள்ள கொழுப்புச்சத்தால் இதய நோய் அதிகமாகிறது என்பதே பரவலான கருத்தாக இருந்தாலும் உண்மை என்னவெனில் இக்கருத்தில் அறிவியல் தோல்வியடைந்து மக்கள் எவ்வாறு முட்டாள்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ காரணவியல் ஆய்வாளர் அன்செல் கீ (Ancel key ) 7 நாடுகளில் கிடைத்த புள்ளி விவரப்படி கொழுப்பு மற்றும் இதய நோய் தொடர்பான ஆய்வை மேற்கொண்டார். அதில் உணவில் உள்ள கொழுப்பு மற்றும் இதய நோய்க்கு நேரடி தொடர்பு இல்லை என்று உறுதியாகியுள்ளது. 22 நாள்கள் புள்ளி விவரங்களை ஆய்வு செய்த அவர் நேரடி தொடர்பை உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதை உணர்ந்தார். இதை அறிந்து ஒன்றன் பின் ஒன்றாக புள்ளி விவரத்தை நீக்கினார். இதன் மூலம் நேரடி தொடர்பு இருப்பதாக அவரால் வெட்டி, ஒட்டி காண்பிக்க முடிந்தது. இந்த ஆய்வு அறிவியல் ரீதியானது அல்ல என்பது மட்டுமல்லாமல் முற்றிலும் தவறானதும் கூட. ஆனாலும் மருந்து குழுமங்கள், அரசு, மருத்துவர்கள் ஊக்கம் அளித்து இந்தப் பொய்யைத் தொடர்ந்து பரப்புவதில் வெற்றி கண்டனர். உண்மையில் இதய நோய் பாதிப்புக்கும் கொழுப்புக்கும் நோரடி தொடர்பு இல்லை என இருந்தும் இம்மருந்துகள் சுயேச்சையாக சிந்திக்காத மருத்துவர்களால் தொடர்ந்து , பரிந்துரைக்கப்பட்டு மருந்து குழுமங்கள் பெருத்த லாபத்தை அடைந்து வருகிறது. கொழுப்பைக் குறைக்கும் மருந்துகளால் இறப்பு அதிகமாக உள்ளது. அது குறையவில்லை எனும் உண்மை மறைக்கப்பட்டு வருகிறது.

உடம்பில் உற்பத்தியாகும் கொழுப்பில் (cholesterol)  80-90% கொழுப்பு ஈரலின் மூலம் நமது உடம்பின் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்படுகிறது என்ற உண்மை பலருக்கும் தெரியவில்லை. சமீபத்திய ஆய்வில் ரத்தக்குழாய் அடைப்பில் உள்ள கொழுப்பு செறிவற்ற கொழுப்பு (unsaturated fat) என்பது உறுதியாகி உள்ள நிலையில் செறிவு நிறைந்த கொழுப்பு (saturated fat) தான் அபாயகரமானது என்பது தவறு என உணர்த்துகிறது.

ஒரு காலகட்டத்தில் வழக்கமான கொழுப்பின் அளவு 200-250 MG என இருந்தது. நாடுகளின் கொழுப்பு பற்றிய புள்ளி விவரங்களை  நீக்கியதின் விளைவாக , மருந்து குழுமங்களுக்கு சாதகமாக 150-200 MG என குறைக்கப்பட்டது . இந்த விஷயத்தை உணர்ந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

          >>>---{ *இர* }--->
- கட்செவி மூலம் வந்தது....

மனிதக் குடலில் நுண்ணுயிரிகள்



மனிதன் உண்ட உணவை செரிப்பது முதல், கழிவை வெளியேற்றுவது வரை முக்கியமான வேலைகளை செய்வது கோடிக் கணக்காண நுண்ணுயிரிகள் தான்.

இந்த நல்ல நுண்ணுயிரிகள், நாம் பலவித சிகிச்சைகளுக்காக எடுத்துக் கொள்ளும், ஆன்டிபயாடிக் மருந்துகளால் கூண்டோடு அழித்து வெளியேற்றப்படுகின்றன. இத னால், சிறிது காலத்திற்கு குடல் பகுதியே நிலைகுலைந்து போகிறது. சரி, குடலில் நல்ல நுண்ணுயிரிகள் மீண்டும் தழைக்க எத்தனை காலம் ஆகும்?

கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஆறு மாதங்களாக மேற் கொண்ட ஆய்வின் முடிவில், பெரும்பாலான நுண்ணுயிரிகள் மீண்டும் குடலில் பல்கிப் பெருகுவதற்கு, ஆறு வாரங்கள் வரை ஆகும் என்று தெரிய வந்தது. ஆனால், ஆறு மாதங்களாகியும் சில நல்ல வகை பாக்டீ ரியாக்கள் திரும்பவும் தழைக்கவே இல்லை என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

புரோபயாடிக் என்று பாட்டிலில் அடைத்து விற்கப்படும் நல்ல பாக்டீரி யாக்களை சாப்பிடலாமா? அதனால், நல்ல நுண்ணுயிரிகள் குடலில் தழைக்கும் என்றாலும், அதிலும் சில மோசமான பக்கவிளைவுகள் இருப்பதாக அண்மைக்கால ஆய்வுகள் எச்சரித்துள்ளன.

என்ன தான் செய்வது? நல்ல பாக்டீரி யாக்களின் எண்ணிக்கையை வெளியேற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளை அடிக்கடி உட்கொள்ளாமல் பார்த்துக்கொள்வதே சிறந்த வழி என்கின்றனர் ஆய்வாளர்கள். அளவுக்கு மிஞ்சினால் ஆன்டிபயாடிக்கும் நஞ்சு.

- விடுதலை நாளேடு, 8.11.18

புதன், 7 நவம்பர், 2018

பக்கவாத நோய் ஏற்பட காரணங்கள்

இதய நோய், புற்றுநோய் போன்றவை மட்டுமே உயிரைப் பறிக்கும் நோய்கள் அல்ல. பேச்சு வழக்கில் பக்கவாத நோய் என்றழைக்கப் படும் ஸ்ட்ரோக்கும் பெரிய நோய்தான். ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் ஒன்றரைக் கோடிப் பேரை இந்த நோய் முடக்கிப் போட்டு, வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிடுகிறது!

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் சுமார் 6 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் சுமார் 1.40 லட்சம் பேர் உயிரிழக் கிறார்கள். உலகம் முழுவதும் சுமார் 8 கோடிப் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 5 கோடிப் பேர் நிரந்தரமாக ஊனமடைந்து வாழ்ந்து வருகிறார்கள்.  ஒவ்வொரு 6  விநாடிகளுக்கும் புதிதாக பக்கவாத நோயாளி உருவாவதாகச் சொல்கிறது உலகச் சுகாதார நிறுவனம்.

மூளைக்குள் ரத்தம் உறைவது அல்லது ரத்தம் செல்வது தடைபடுவதால் ஏற்படும் நோய்தான், பக்கவாதம். இதை மூளைத் தாக்கு அல்லது மூளை ரத்த நாளச் சேதம் என்றும் அழைக்கிறார்கள். மற்ற நோய்களைப் போல அல்லாமல் முன் அறிகுறிகள் எதையும் வெளிகாட்டாமல் திடீரென வருவதால் ஆங்கிலத்தில் இதை  ஸ்ட்ரோக் என்கிறார்கள்.



இரண்டு காரணங்கள்


இதுகுறித்து, திருச்சியைச் சேர்ந்த மூளை நரம்பியல் நிபுணர் எம்.ஏ.அலீம் கூறுகையில்,

பக்கவாத நோய் ஏற்பட இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, ரத்த ஓட்டம் தடைபடுவது. இரண்டாவது, ரத்தக் கசிவு ஏற்படுவது. ரத்த ஓட்டத் தடையின் மூலம் ஏற்படும் பக்கவாதத்துக்கு, கொழுப்புப் படிவுதான் முக்கியக் காரணம். அதாவது, ரத்த நாளங்களின் உட்சுவர்களில் கொழுப்பு படியும்போது நாளங்கள் கடினத் தன்மையை அடைந்துவிடுகின்றன. இப்படி ரத்த நாளங்கள் கடினமாவதால் அதன் உட்புறப் பாதையின் அளவு குறைகிறது. இதனால் ரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு, ரத்தம் உறையலாம். இதனால், பக்கவாதம் ஏற்படலாம்.

இரண்டாவதாக ஏற்படும் பக்கவாதம், மூளையில் ரத்தக் கசிவு ஏற்படுவதால் வருகிறது. இதற்குக் காரணம், உயர் ரத்த அழுத்தம்தான். ரத்த நாளங்களிலிருந்து ரத்தம் கசிந்து வெளியேறி மூளைத் திசுக்களுக்குள் பரவும்போது, திசுக்கள் பாதிக்கப்படும். மூளை நாளங்களில் கசிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகே உள்ள மூளைத் திசுக்களும் ரத்த ஓட்டத்தை இழந்து பாதிக்கப்படலாம். ஆனால், ரத்தக் கசிவுகளால் ஏற்படும் பக்கவாதத்தைவிட ரத்த ஓட்டத் தடையால் ஏற்படும் பக்கவாதங்களே அதிகம் ஏற்படுகின்றன என்கிறார் அலீம்.

- விடுதலை நாளேடு, 5.11.18

பக்க விளைவுகள் குறைந்த பிசியோதெரபி சிகிச்சை



விதவிதமான, புதிது புதிதான உடல் உபாதைகளைத் தாண்டி, உடல் சோர்வு, வலி, காயப்பட்டுக் கொள்ளுதல் என இன்னும் பல விதங்களில் நம் உடல் பாதிக்கப்படுகிறது.

அப்படியான காயங்களுக்கு, உடல் சோர்வுக்கெல்லாம் உகந்த சிகிச்சையாக ஃபிசியோதெரபி சிகிச்சை பார்க்கப்படுகிறது.

காயங்களைக் கண்டறிந்து, உடல் ரீதியாகவே சிகிச்சை தரும் அறிவியலே ஃபிசியோதெரபி. இதன் முக்கிய நோக்கம் வலியைக் குறைப்பதும், செயலிழப்பை குறைப்பதுமே.

சிறியவர் முதல் பெரியவர் வரை, தசை, எலும்பு, வாதம், சுவாசம், நரம்பு மண்டலம் தொடர்பான எந்த காயங்களுக்கும், விளையாட்டில் ஏற்படும் காயங்களுக்கும், ஆண் / பெண்களின் ஆரோக்கியத்துக்காகவும் ஃபிசியோதெரபி பயன்படும்.

உபாதைகளையும் மீறி வாழ்க்கையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஃபிசியோதெரபி உதவும். சென்னையைச் சேர்ந்த ஃபிசியோதெரபி நிபுணர் முசபிஹா தஹசீன், இந்த சிகிச்சை முறை குறித்து விரிவாக விளக்குகிறார்.

சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதே பிசியோதெரபி நிபுணரின் வேலை. இது வலி நிவாரணம் மூலமாகவும், உடற்

பயிற்சி மூலமாகவும் நடக்கும். இதனால் உடலில் நடக்கும் மாற்றங்களுக்கு வளைந்து கொடுக்க முடியும். சுதந்திரமாக செயல்பட முடியும். வலி நிவாரணத்துக்கான ஆலோ சனைகளையும் பிசியோதெரபி நிபுணர் வழங்குவார். ஆரோக் கியம் மேம்பட உடற் பயிற்சியும் தரப்படும்.

முதல் சந்திப்பில் உடல் நிலை, தினசரி நடவடிக்கைகளை செய்ய விட முடியாமல் தடுக்கும் உபாதைகள் போன்றவற்றைப் பேச முடியும். உடலை பற்றிய ஆய்வை பிசியோ தெரபி நிபுணர் மேற்கொள்வார். பிறகு குறிப்பிட்ட நபருக்கு ஏற்றவாரு, ஆரோக் கியமாக வாழ ஏதுவான சிகிச்சை முறைகளை திட்டமிடுவார்.

காயத்துக்கு பின் ஒருவர் சரியாக எழுந்து நடமாட பிசியோதெரபி உதவுகிறது. மூட்டு களில் இருக்கும் மெல்லிய திசுக்களை அசைத்தல், உடலில் இருக்கும் நச்சை நீக்குதல், தசைகளை தளர்த்து ஓய்வெடுத்தல் என இந்த சிகிச்சை நடக்கும். ஒரு நபரின் உடல் வலிமையை மேம்படுத்தவும், அதிகரிக்கவும் பிசியோதெரபி உதவும். அதே நேரத்தில் இருக்கும் உபாதைகளையும் சரிசெய்யும். காயத்தின் தன்மை அல்லது உபாதையின் தன்மையைப் பொருத்து பிசியோதெரபி நிபுணர் பல்வேறு சிகிச்சை முறைகளைக் கையாளுவார். பல்வேறு விசேஷ பரிசோத னைகளுக்குப் பிறகு நிபுணர் சிகிச்சையைத் தொடங்குவார்.

முக்கியமாக, பிசியோதெரபியினால் குறைந்த அளவு பக்க விளைவுகளே நேரும்.

வலி: உடலை வளைக்கும்போது வலி ஏற்படலாம். உடல் சரியாகும் போது அந்த வலி அதிகமாகும்.

வீக்கம்: இது பொதுவானதே. ஏனென்றால் திசுக்கள், சதை விரியும்போது வலுவடையும். அதே நேரத்தில் வீக்கம் ஏற்படும். சிகிச்சைக்குப் பின் குளிர்ந்த / சூடான ஒத்தடம் கொடுக்கும் போது வலி, வீக்கம் சரியாகும்.

அடிப்படை விதியே முழு சிகிச்சையை பிசகின்றி முடிப்பதுதான். வலி மற்றும் வீக்கம் காரணமாக சிகிச்சை தடைபட்டால் அது உபாதையை இன்னும் மோசமாக்கி நிவார ணத்தையும் தாமதமாக்கும். தேவை என்ன என்பது குறித்து பிசியோதெரபி நிபுணரிடம் பேசவேண்டும். அப்போதுதான் விரைவில் குணம் பெறத் தேவையான அறிவுரைகளை அவர் வழங்குவார்.

நிவாரண காலம்


ஒவ்வொரும் வித்தியாசமனாவர்கள். அதனால் குறிப்பிட்ட நிவாரண காலம் என்று எதுவும் கிடையாது. அது நபருக்கு நபர், காயத்தின் தன்மை பொருத்து மாறும். ஒருவர் மற்றவரை விட சீக்கிரம் நிவாரணம் பெறலாம். அது அவர்களின் வலி தாங்கும் அளவு மற்றும் காயத்தின் தன்மையைப் பொருத்தது.

இதன் பலன் எவ்வளவு நாள் நீடிக்கும்?

ஒரு அறுவை சிகிச்சை அல்லது காயத்துக்குப் பின், ஒருவரின் உடல் முழுமை யாக மீள பிசியோதெரபி மிக முக்கியமானது. சிகிச்சை காலம் முழுவதும் தவறாமல் எல்லா பயிற்சிகளையும் அக்கறையுடன் செய்வீர் களென்றால், பிசியோதெரப்பி உங்களை பரி பூரணமாகக் குணப்படுத்தி, ஆரோக்கியமான, சுதந்திரமான வாழ்க்கை வாழ உதவும்.

இதற்கான மாற்று சிகிச்சை என்றால், உடற்பயிற்சி, உடற்பயிற்சி மேலும் உடற் பயிற்சி மட்டுமே.

மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் உருவாகாமல் தடுக்கும் வழிமுறைகள்



- விடுதலை நாளேடு, 5.11.18