வெள்ளி, 29 நவம்பர், 2019

குறைந்த ரத்த அழுத்தத்திற்கு தீர்வு

உயர் ரத்த அழுத்தம் குறித்து அநேகருக் கும் தெரிந்திருக் கிறது. அதேவேளையில் குறை ரத்த அழுத்தம் குறித்து படித்த வர்களிடம்கூட விழிப்புணர்வு இல்லை என்பதுதான் உண்மை. உலகளவில் சொல்லப்படும் புள்ளி விவரப்படி இளம் வயதில் 100ல் 10 பேருக்குக் குறை ரத்த அழுத்தம் உள்ளது. வயது கூடும்போது இந்த சதவீதமும் கூடுகிறது.

உயர் ரத்த அழுத்த நோயை அமைதி யான ஆட்கொல்லி  என்கிறோம். அது போல் குறை ரத்த அழுத்தத்தை ஓர் எரிமலை என்கிறோம். எரிமலை எப்போது நெருப்பைக் கக்கும் என்று சொல்ல முடியாததுபோல, குறை ரத்த அழுத்தமும் எப்போது ஆபத்தைத் தரும் என்று கூற முடியாது.

குறை ரத்த அழுத்தம் என்பது எது?

முப்பது வயதுள்ள ஒரு நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இதில் 120 என்பது மேல் அழுத்தம்; 80 என்பது கீழ் அழுத்தம். ரத்த அழுத்தம் 90/60 மி.மீ.க்குக் கீழ் குறைந்தால் அது குறை ரத்த அழுத்தம். இதில் பல வகை உண்டு. வழக்கத்தில் நாம் குறிப்பிடும் குறை ரத்த அழுத்த நோய்க்குத் தமனிநாளக் குறை ரத்த அழுத்தம் என்று பெயர்.

நம்மிடையே பலருக்குக் குறை ரத்த அழுத்தம் இருக்கும். ஆனால், தொல் லைகள் இருக்காது. அவர்கள் பயப்படத் தேவையில்லை.

திடீரென்று மேல் அழுத்தத்தில் 20 மி.மீ. குறைகிறதென்றால் அல்லது கீழ் அழுத்தத்தில் 10 மி.மீ. குறை கிறதென்றால் மயக்கம் உள்ளிட்ட சில தொல்லைகள் தோன்றும். அப்போது மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

ரத்த அழுத்தம் குறைவது ஏன்?

இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்லத் தடை உண்டாவதுதான் குறை ரத்த அழுத்தம் ஏற்பட அடிப்படைக் காரணம். ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப் புக்குக் கீழே நின்றுவிடுகிறது; இதயத்துக் கும் மூளைக்கும் செல்லும் ரத்தம் குறை கிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்து விடுகிறது; மயக்கம் ஏற்படுகிறது.

யாருக்கு இது வருகிறது?

விபத்துக்குள்ளாகுபவர்கள், தடகள வீரர்கள், கடுமையான உடற் பயிற்சி/ஜிம் பயிற்சி செய்பவர்கள், ஒல்லியாக உள்ள வர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு உள் ளிட்ட சில ஹார்மோன் பிரச்சினை உள்ளவர்கள், வயதானவர்கள், படுக் கையில் நீண்ட காலம் படுத்திருப்பவர்கள், ரத்தம் இழப்பவர்கள், ரத்தசோகை, கடுமையான நோய்த்தொற்று, இதயநோய், நுரையீரல் நோய், சிறுநீரக நோய் - சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடலில் நீரிழப்பு ஏற்பட்டவர்கள், ஒவ்வாமை உள்ள வர்கள் போன்றோருக்குக் குறை ரத்த அழுத்தம் ஏற்பட சாத்தியம் அதிகம். கடுமையான தீப்புண், அதிர்ச்சி, விஷக்கடி, மருந்துகளின் பக்க விளைவு போன்ற வற்றாலும் இது ஏற்படலாம்.

அறிகுறிகள் எப்படி இருக்கும்?

தலைக்கனம், தலைசுற்றல், மயக்கம், வாந்தி, அதிக தாகம், சோர்வு, கண்கள் இருட்டாவது போன்ற உணர்வு, வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைமை, உடல் சில்லிட்டுப்போவது, படபடப்பு, மூச்சுவாங்குவது போன்ற அறிகுறிகளில் ஒன்றோ பலவோ ஏற்பட்டால், அப்போது குறை ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது.

இருக்கை நிலை குறை ரத்த

அழுத்தம் என்பது என்ன?

சிலருக்குப் படுக்கையைவிட்டு எழுந் ததும் அல்லது கழிப்பறையில் கழிப்பிடத்திலிருந்து எழுந்ததும் கண்கள் இருட் டாவது போல் உணர்வது, தலைசுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதுவும் குறை ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படுவதுதான்.

இதற்கு இருக்கை நிலை குறை ரத்த அழுத்தம் என்று பெயர். இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுவது அதிகம். நடு வயதிலும் ஏற்படலாம். நீண்ட நேரம் கால்களை மடக்கித் தரையில் அமர்ந்து விட்டு, திடீரென்று எழுந்து நின்றால் குறை ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயக்கம் வருவதும் உண்டு. சில மாத்திரை மருந்து களாலும், உறக்கமின்மை போன்ற உடல் சார்ந்த கோளாறுகளாலும் இது ஏற்படு வதுண்டு.

உணவு சாப்பிட்ட பிறகு சிலருக்கு

மயக்கம் ஏற்படுகிறது. அது ஏன்?

சிலருக்கு உணவு சாப்பிட்டதும் ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இது பொது வாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும். தானியங்கி நரம்புக் குறைபாடு உள்ளவர்களுக்கும் பார்க்கின்சன் நோயாளிகளுக்கும் இது ஏற்படுவதற்கு சாத்தியம் அதிகம்.

உணவைச் சாப்பிட் டதும் அதைச் செரிமானம் செய்ய குட லுக்கு அதிக அளவில் ரத்தம் சென்றுவிடும்.

இதனால் இதயத்துக்கும் மூளைக்கும் செல்ல வேண்டிய ரத்தம் குறைந்து, ரத்த அழுத்தம் குறைந்துவிடும்.

இந்த வகை குறை ரத்த அழுத்தத்தைத் தவிர்க்க சிறிது சிறிதாகச் சிறிய இடை வெளிகளில் உணவு சாப்பிட வேண்டும். கொழுப்புச் சத்து உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டியதும் முக்கியம்.

இதற்கு என்னென்ன பரிசோதனைகள் தேவைப்படும்?

குறை ரத்த அழுத்தம் உள்ளவர் களுக்கு மல்லாந்து படுத்த நிலையிலும் பிறகு எழுந்து நின்ற நிலையிலும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட வேண்டும். வழக்கமான ரத்தப் பரிசோதனைகள், இசிஜி, எக்கோ, டிரட்மில் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகளைச் செய்து கொள்வதும் நல்லது. சிலருக்கு சாய் மேசை பரிசோதனையும் தேவைப்படும்.

என்ன சிகிச்சைகள் உள்ளன?

அடிப்படைக் காரணத்தைச் சரி செய்தால் மட்டுமே குறை ரத்த அழுத்தம் சரியாகும். மருத்துவரின் ஆலோசனைப் படி உணவில் உப்பை சிறிதளவு அதிகப் படுத்திக்கொள்ளலாம்.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கால்களுக்கு மீளுறை களை அணிந்து கொள்வது நல்லது. சிறு தானியங்கள், கீரை, காய்கறி, பழங்கள் கலந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும். உடல் எடையைப் பேண வேண்டும். இந்த நோயைக் குணப்படுத்த மாத்திரைகளும் உள்ளன.

- விடுதலை நாளேடு 25 11 19

செவ்வாய், 12 நவம்பர், 2019

குணாதிசயம் சொல்லும் குரோமாசோம்

கருப்பையில் வளரும் சிசுவின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்பதை அறிய கர்ப்பிணிகளுக்கு வயிற்றில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுவது பலருக்குத் தெரிந்திருக்கும். சில கர்ப்பிணிகளுக்கு மட்டும் மருத்துவர்கள் கேரியோ டைப்  என்னும் சிறப்புப் பரிசோதனையை மேற் கொள்ளச் சொல்கிறார்கள். இது ஏன், எதற்கு, இதை எப்படிச் செய்கிறார்கள்?

மரபியல் நினைவகம் என்பது என்ன?

நமது உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லுக்குள்ளேயும் 23 இணை குரோமோசோம்கள் வீதம் மொத்தம் 46 குரோமோசோம்கள் இருக்கின்றன. இவற்றில் 23 குரோமோசோம்கள் அப்பாவிடமிருந்தும் அடுத்த 23 குரோமோசோம்கள் அம்மாவிட மிருந்தும் வருகின்றன. இந்த 46 குரோமோசோம்களில் எக்ஸ், ஒய் குரோமோசோம்கள் நம் பாலினத்தை நிர்ணயிப்பவை. ஒருவருக்கு எக்ஸ் குரோமோசோமும் இருக்கிறது; ஒய் குரோமோசோமும் இருக்கிறது என்றால் அவர் ஆண்; மாறாக, ஒய் குரோமோசோம் இல்லை; இரண்டுமே எக்ஸ் குரோமோசோம்களே என்றால் அவர் பெண்.

இந்த குரோமோசோம்களில்தான் மரபணுக் களைக் கொண்ட டி.என்.ஏ. மூலக்கூறுகள் இருக் கின்றன. இவற்றில் காலம் காலமாய் நம் மரபில் வரும் குணாதிசயங்கள் பொதிந்திருக்கின்றன. ஆகவே, இவற்றை மரபியல் நினைவகம் என்கிறோம். ஒரு குழந்தைக்கு அம்மாவின் கண், அப்பாவின் மூக்கு, தாத்தாவின் உயரம், பாட்டியின் நினை வாற்றல், முப்பாட்டனின் முன்கோபம், முப்பாட்டி யின் முடி என்று எல்லாமே சேர்ந்திருப்பதற்கு இதுதான் காரணம்.

******

நிலவேம்பு கசாயத்தில் கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் உள்ளது

* பால் ஒவ்வாமை உள்ளவர்கள் பருத்தி பாலை குடிப்பதால் போதிய சத்துக்களை பெறலாம்

* தேங்காய் உடலில் பரவியுள்ள நுண்கிருமி களை அழித்து, உடலை தூய்மை செய்கிறது.

* அல்சர், குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் ஆற்றல் பெற்றது கொய்யா பழம்.

* சுண்டைக்காய் நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுத்து பார்வைத் திறனை அதிகரிக்கும், நினைவாற்றல் கூடும்.

- விடுதலை நாளில் 4 11 19

நீரிழிவு நோயாளிகளே கவனம்!

சர்க்கரை நோய் கட்டுப்படாமல் இருப்பவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப் படுவது இயல்பு. அந்தப் பாதிப்புகளுக்கு டயபடிக் நியூரோபதி என்று பெயர். அந்தப் பாதிப்பு ஏன் வருகிறது? எப்படி வருகிறது? என்ன தீர்வு?

ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப் படுத்தாததுதான் இதற்கு முக்கியக் கார ணம். ரத்தச் சர்க்கரை அதிகமாகும் போது அது சார்பிட்டால் எனும் வேதிப் பொருளாக மாறி நரம்புகளில் ஒட்டிக் கொள்ளும். அது இலையைத் தின்னும் பூச்சிபோல நரம்பிழைகளைத் தின்னும். இதனால் நரம்புகளின் தகவல் பரிமாற்றம் தடைப்படும். மேலும், இவர்களுக்கு நுண்ணிய ரத்தக்குழாய்களும் பாதிக்கப் படுவதால், நரம்பு முனை களுக்குப் போதிய ஊட்டச்சத்தும் ஆக்சிஜனும் கிடைக்காது. இது அந்தப் பாதிப்பை அதிகப்படுத்தும்.

அடுத்து, சர்க்கரை நோய் காரண மாகச் சிறுநீரகமும் பாதிக்கப்படுவதால், ரத்தத்தில் சில நச்சுக்கள் சேரும். அவை நரம்புச் சுவர்களைச் சிதைக்கும். இவர் களுக்குப் புகைபிடிக்கும் பழக்கமும் இருந் தால் நிலைமை இன்னும் மோசமாகும். புகையில் உள்ள நச்சுக்கள் ரத்தக் குழாய்களைச் சுருக்கிவிடுவதால், உறுப்பு களுக்குச் செல்ல வேண்டிய ரத்தம் குறைந்துவிடுவதுதான் காரணம்.

யாருக்கு இந்தப் பாதிப்பு அதிகம்?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எவருக் கும் இது வரலாம். என்றாலும், எப்போதும் ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல் லாமல் இருப்பவர்களுக்கு இது வேகமாக வந்துவிடும். உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன், ரத்த மிகு கொலஸ்டிரால், புகை/மதுப் பழக்கங்கள் உள்ளவர்களுக்கு இதற்கான சாத்தியம் அதிகம்.

நரம்பு பாதிப்புகள் எல்லாமே ஒரே வகைதானா? வெவ்வேறா?

நரம்பு பாதிப்புகளில் புற நரம்பு பாதிப்பு, தானியங்கு நரம்பு பாதிப்பு, அண்மை நரம்பு பாதிப்பு, குவிய நரம்பு பாதிப்பு எனப் பல வகை உண்டு. ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. இவற்றில் அதிகம் காணப் படுவது, புற நரம்பு பாதிப்பு. இதில் கை, கால், பாத நரம்புகள் பிரதானமாகப் பாதிக்கப்படும். இந்தப் பாதிப்பு இருப்பவர்களுக்குக் கை, கால் மரத்துப்போகும்; எரிச்சல் ஏற்படும்; ஊசி குத்தும் வலி உண்டாகும்; இந்தத் தொல்லைகள் இரவில் அதிகமாக இருக் கும்; சிலருக்குத் தொடு உணர்வு அதி கரிக்கும்; பாதங்களில் போர்வை பட்டால் கூடச் சுமையாகத் தோன்றும்; நடந்தால் மெத்தைமேல் நடப்பது போலிருக்கும்; பலருக்குச் செருப்பு கழன்று போவதுகூடத் தெரியாது. அந்த அளவுக்கு உணர்வு குறைந்து போகும்; பாதங்களில் கூர்மை யான பொருட்கள் குத்தினாலும் தெரி யாது என்பதால் அடிக்கடி பாதங்களில் தொற்றும் புண்களும் உண்டாகும்.

அண்மை நரம்பு பாதிப்பு என்பது என்ன? கேள்விப்படாததாக இருக்கிறதே! நாற்பது வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு அண்மை நரம்பு பாதிப்பு ஏற்படுகிறது. இதில் புட்டம், இடுப்பு, தொடை நரம்புகள் பெரிதும் பாதிக்கப்படும். அப்போது இடுப்பில்/ புட்டத்தில் / முன் தொடையில் திடீ ரென்று கடுமையாக வலிக்கும். தொடக் கத்தில் தொடை வலி ஒரு பக்கத்தில் மட்டுமே ஏற்படும். போகப்போக இரண்டு பக்கமும் வலிக்கும். அத்தோடு, சம் மணம் போட்டு உட்கார்ந்து எழுந்தி ருப்பதும் படிகளில் ஏறு வதும் சிரமப்படும். தொடைத் தசைகள் சுருங்கி விட்டதுபோல் தெரியும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு

இதய நரம்புகளும் பாதிக்கப்படும் என்று சொல்கிறார்கள். அது உண்மையா?

உண்மைதான். இது தானியங்கி நரம்புகள் பாதிக்கப் படுவதால் ஏற்படும் விளைவு. இதயம் மட்டுமல்ல, நுரையீரல், கண், சிறுநீரகம், வாய், உணவுக்குழாய், இரைப்பை, குடல், பாலின உறுப்புகள் ஆகியவற்றையும் தானியங்கி நரம்புகளே கட்டுப்படுத்துகின்றன. ரத்தச் சர்க் கரையைக் கட்டுப்படுத்தத் தவறினால் இந்த உறுப்புகள் பாதிக்கப்படுவதுண்டு. உதாரணமாக, இதய நரம்புகள் பாதிக் கப்பட்டால் இதயம் ஒழுங்கற்றுத் துடிக்கும். படபடப்பு வரும். ரத்த அழுத் தம் குறையும். உட்கார்ந்து எழுந்திருக் கும்போது தலைசுற்றும்.

மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சில் வலி வருவதை நமக்கு உணர்த்துவது தானியங்கு நரம்புகளே. ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த நரம்புகள் பாதிக்கப் படுவதால் மாரடைப்பு வரும் போது நெஞ்சில் வலி தெரிவதில்லை. அமைதியான மாரடைப்பு  வருகிறது. சிலருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்படுவதும் இப்படியே. இது ஓர் ஆபத்தான நிலைமை.

இதேபோல் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தாலும் இவர்களுக்குத் தெரிவதில்லை. ரத்தச் சர்க்கரை குறையும் போது உடல் வியர்க்கும். கைகால் நடுங்கும். தானியங்கு நரம்பு பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த அறி குறிகள் தெரியாது. இதுவும் ஓர் ஆபத்தான பாதிப்பே. உறக்கத்தில் ரத்தச் சர்க்கரை குறைந்துவிட்டால் அதை உணர முடி யாமல் உயிரிழப்புகூட ஏற்படலாம்.

பாதிக்கப்படுவது வாய்/உணவுக் குழாய் நரம்பு என்றால், உதடுகள் உலர்ந்து போகலாம். விழுங்குவதில் சிரமம் ஏற் படலாம். குடல் நரம்புகள் பாதிக்கப் பட்டால் அடிக்கடி வயிற்றில் வாயு சேரும்; ஏப்பம் உண்டாகும். மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறி மாறித் தொல்லை  கொடுக்கும். மலத்தை அடக்க முடியாமல் போகும். பாதிக்கப்படுவது சிறுநீர்ப்பை நரம்பு என்றால், சிறுநீரை அடக்க முடியாது. அவசரமாக வருவதுபோல் இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். ஆனால், சிறுநீர் கழிப்பது சிரமமாக இருக்கும். இரவில் இந்தத் தொல்லை அதிக மாக இருக்கும். அடிக்கடி உறக் கத்தில் எழுப்பிவிடும். பாலின நரம்பு பாதிக்கப் படும் போது ஆண்களுக்கு விரைப்புத் தன்மை குறைவதும் பெண் களுக்குப் பிறப்புறுப்பு உலர்வதும் உண்டு.

ஒற்றை நரம்பு பாதிப்பு என்பது என்ன?

உடலில் குறிப்பிட்ட ஒரு நரம்பு மட்டும் பாதிக்கப்படும் நிலைமை இது  திடீரென்றுதான் வரும் உதாரணமாக, கண்ணுக்கு வரும். மூன்றாவது மத்திய நரம்பு பாதிக்கப்படுமானால், கண்ணுக்குப் பின்னால் கடுமையாக வலிக்கும். ஆறாவது மத்திய நரம்பு பாதிக்கப்படுகிறது என்றால், பார்க்கும் பொருளெல்லாம் இரண்டிரண்டாகத் தெரியும். முக நரம்பு பாதிக்கப்படும் போது முகவாதம் வரும். முகத்தில் ஒரு பக்கத்தில் தசைகள் இயங்காது என்பதால், பேசும்போது வாய் ஒரு பக்கமாகக் கோணும். ஒரு பக்க இமை மூடாது. கைக்கு வரும் நடுநரம்பு பாதிக்கப்படுகிறது என்றால், விரல்களில் வலி, கூச்ச உணர்வு, மதமதப்பு, பலவீனம் போன்ற அறிகுறிகள் தோன் றும். இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் கையில் எடுக்கும் பொருட்களை அடிக்கடி கீழே போட்டுவிடு வார்கள். ஒற்றை நரம்பு பாதிப்பில் ஒரு நல்ல செய்தியும் உண்டு. இவை எல்லாமே சில மாதங்கள் இருந்துவிட்டு முழுமையாக மறைந்து விடும்.

இதற்கு என்ன தீர்வு? இதைத் தடுப்பதற்கு வழி உண்டா?

ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பதுதான் இதற்கான தீர்வு. இன்சுலின் சிகிச்சை, ஆரோக்கியமான உணவு முறை, தேவையான உடற்பயிற்சி மூலம் இது சாத்தியமாகும். உடல் எடையைச் சரியாகப் பேணுவதும் பாதப் பராமரிப்பும் பொருத்தமான காலணிகள் அணி வதும் முக்கியம். ரத்த அழுத்தம், ரத்த கொலஸ்டிரால் அளவுகளைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

மது, புகைப் பழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை பயோதிசியோ மெட்ரி' என்னும் பாதப் பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட வழிகளில் நரம்புகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் தள்ளிப் போடவும் முடியும். பொதுவாக, நரம்புப் பிரச்சினை களைத் தொடக்கத்தி லேயே கவனித்துவிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும். தாமதமானால் சிரமமாகி விடும்.

- விடுதலை நாளேடு 4.11.19