வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

அதிகரிக்கும் சிறுநீர் கல் உபாதை



சிறுநீரகம் ஒருநாளைக்கு 30 முறை ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணியைச் செய்கிறது. நிமிடக் கணக்கில் 90 மில்லி ரத்தத்தை எடுத்து அமினோ அமிலம், யூரிக் அமிலம் போன்ற பல்வேறு கூறுகளை வடித்துச் சுத்தப்படுத்து கிறது.

சிறுநீரகத்தின் உட்பாகமான நெப்ரான்கள் ரத்தத்தில் உள்ள கழிவம்சங்களை நீக்கி நல்ல ரத்தத்தை இதயம் நோக்கி உந்தித் தள்ளுகின்றன. சுமார் 1.5 மில்லியன் எண்ணிக்கையில் உள்ள குவளை போன்ற வடிவமுடைய நெப்ரான்கள் சுருங்கும்போது சட்டென்று சுருங்கிக் கழிவுப் பொருட்களை நீக்குகிறது. விரியும்போது சீரான வேகத்தில் நின்று அடுத்த கட்டத்துக்குத் தாவுகிறது. சிறுநீரகம் ஒருநாளைக்குச் சுமார் 165 லிட்டர் ரத்தத்தை வடிகட்டி 1.5 லிட்டர் கழிவைச் சிறுநீராகப் பிரித்துச் சிறுநீர்க் குழாய் வழியாகச் சிறுநீர்ப் பைக்கு அனுப்புகிறது. அவ்வளவு பெரிய அளவுக்கு வடிகட்டி சிறுநீரைப் பிரிக்கத் தெரிந்த நெப்ரான்களால் கல்லீரல் மூலமாகவும் பித்தப் பையிலும் சேரும் அடர் கழிவுகளைச் சிதைக்க முடிவதில்லை.

உடலில் பரு வடிவத்தில் சேரும் உடலுக்குத் தேவையற்ற கழிவுகளை ஈர்த்துவைக்கும் கல்லீரல் அவற்றைச் சிறுநீரகத்துக்கு அனுப்பும் போது தன் வழக்கமான செயல் முறையை மேற்கொண்டு வடிவ மாற்றம் செய்யாமல் குறுணைக் கல் வடிவத்திலோ சேமியா போன்ற நீளக் குச்சிகளாகவோ நொறுங்கும் தன்மை யுள்ள சில்லுகளாகவோ திரித்திரியாகவோ சிறுநீர்க் குழாய்க்கு அனுப்பி விடுகிறது.

இப்படி அனுப்பப்படுவதையே சிறுநீரகக் கல் என்றும் பித்தப்பைக் கல் என்றும் குறிப் பிடுகிறோம். இத்தகைய கல் வெளியேறும்போது சிறுநீரகத்திலிருந்து சிறுநீரகப் பை வரையிலும் அதைக் கடந்து சிறுநீர்த் தாரையிலும் பிறப்பு உறுப்பிலும் கடுமையான வலி தோன்றுகிறது. முப்பதாண்டுகளுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் சிறுநீர்க் கல் உபாதை இப்போது பரவலாகிவிட்டது.

அதிக உணவால் தள்ளாடும் நெப்ரான்

நமது கழிவு நீக்க உறுப்புகளில் பிறவற்றின் வேலை குறைந்து விட்டதால் அவற்றின் பொறுப்பையும் சிறுநீரகமே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. எடுத்துக் காட்டாக வேலை நெருக்கடியாலோ சோம்பல் பட்டோ மலம் கழிக்கவில்லை என்றால் மலக் கழிவில் உள்ள நீர் ரத்தத்தின் வழியாகச் சிறுநீரகம் நோக்கிச் செலுத்தப்பட்டுவிடும். அப்போது அந்த நீரை வெளியேற்ற வேண்டிய பொறுப்பு சிறுநீரகத் தினுடையதாகி விடுகிறது. இப்படிப் பிற கழிவு நீக்க உறுப்புகளின் செயல் திறன் குறைகிற போதெல்லாம் அதை ஈடு செய்யச் சிறுநீரகமே கூடுதலாக உழைக்க நேர்கிறது. ரத்தத்தில் சேரும் கழிவுகளை நீக்கும் பணிகளோடு அவ்வப்போது உணவில் சேரும் தேவைக்குக் கூடுதலான உப்பு, காரம், கசப்பு, இனிப்பு போன்ற கூறுகளையும் நீக்க வேண்டிய கடமை சிறுநீரகத்தின் நெப்ரான்களுக்கு உண்டு. நாம் உண்ணும் கெட்டியான சாம்பார், கிரீஸ் தன்மையிலான கிரேவி போன்றவற்றில் சுவை உடலின் தேவைக்கு மிகுதியாக இருப்பதோடு நீண்ட நேரம் சமைக்கப்படுவதால் அதில் மிகுந்திருக்கும் வெப்பம் செரிமானத் துக்காக உடலில் உள்ள நீரை உறிஞ்சிக் கொள் கிறது. உடலில் இயல்புக்கு மாறாக நீர் வற்று வதால் ரத்தவோட்டத்தின் வேகமே குறைந்து போகும். கெட்டியான உணவை உண்ட பின்னர் நமக்கு அடிக்கடி தாகம் ஏற்படுகிற தென்றால் சிறுநீரகத்தின் நெப்ரான்கள் நீர் வற்றித் தவிக்கின்றன என்று பொருள்.

கால் ஏன் மரத்துப் போகிறது?

பரவலாக நம்பப்படுவது போல, உணவு உண்டு செரிமானமான பிறகு சுமார் நான்கு மணி நேரம் கழித்து உணவின் சாரம் ரத்தமாக மாற்றப்படுவதில்லை. மாறாக, நாம் உணவு உண்ணத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே உணவின் ஒரு பகுதி ரத்தமாகி விடுகிறது. இரண்டு கால்களையும் மடக்கிச் சம்மணமிட்டு அமர்ந்து உண்கிற பொழுது சுமார் பத்து நிமிடங்களில் முழங்கால்களுக்குக் கீழ்ப்பகுதி மரத்துப்போவதை உணர முடியும். அப்படி யானால் உண்டு கொண்டிருக்கும் உணவிலி ருந்து முதற் கட்டமாகப் பெற்ற சாரம் ரத்தத்தில் கலந்து  ரத்தத்தின் அடர்த்தி அதிகரித்து விட்டது என்று பொருள். ரத்தத்தின் அடர்த்தி உயராத அளவுக்கு உண்டால் நெப்ரான்களுக் கான வேலைப் பளு குறைவாகவே இருக்கும். உண்டு கொண்டிருக்கும்போதே உணவின் வழியாகச் சேரும் உபரிப் பொருளை வெளி யேற்ற வேண் டிய வேலைப் பளு நெப்ரான்களுக்கு அதிகரிக் குமானால் முதல் கட்டமாகச் செரிமானத்துக்கு வாயில் சுரக்க வேண்டிய உமிழ்நீரைச் சிறுநீரகத்தால் சுரக்க இயலாது.

- விடுதலை நாளேடு, 26. 8 .19

சனி, 24 ஆகஸ்ட், 2019

மருத்துவம்: கருவுற்ற பெண்களுக்கு ஏற்ற உணவுகள்!




கருவுற்றிருக்கும்போது இரத்த சோகை ஏற்படுவது இப்போது மிகவும் பரவலாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவே குறைப் பிரசவம், கருக்கலைவது, குழந்தை இறந்து பிறப்பது உள்ளிட்டவையும் நிகழ்கின்றன.

மைக்ரோ நியூட்ரியன்ஸ் என்று சொல்லக்கூடிய வைட்டமின் ஏ, ஜிங்க், ஃபோலிக் ஆசிட், அயோடின் சத்து இவையனைத்தையும் ஒரு கர்ப்பிணிப் பெண் சரியான அளவு எடுத்துக்கொண்டால், அவளுடைய பிரசவத்தில் எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாது!

கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டியவை:


பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள், கருவுற்ற முதல் நாளிலிருந்து முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது, உடலில் உள்ள கால்சியத்தை உடலுக்குப் பயனில்லாமல் வெளியேற்றிவிடும். வனஸ்பதியில் செய்த உணவுகள், ஸ்பைசி உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள் உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பது, தாய்க்கும் சேய்க்கும் நலம் தரும்.

எந்தவொரு கனமான பொருளையும் தூக்கக்கூடாது. கர்ப்பமாக இருப்பதை வியாதியைப் போன்று நினைத்து, எந்தவித உடல் உழைப்பும் இன்றி உண்பதும் உறங்குவதுமாக இருக்கக்கூடாது. இது, குழந்தைப் பிறப்பை சிக்கலாக்கிவிடக் கூடும்.

அயோடின் அளவோடு தேவை:




கர்ப்ப காலத்தில் தாய், அயோடின் சத்துள்ள உணவுகளை தகுந்த அளவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், கருவிலிருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி குறைந்து, மூளைக் குறைபாட்டுடன் குழந்தை பிறக்க வாய்ப்பாகிறது. இதைத் தவிர்க்க, கடல் உணவுகள், குறிப்பாக, மத்தி மீன், சங்கரா மீன், அசைவ உணவுகள், சிறுதானியங்கள்  இவற்றைத் தேவையான அளவு சாப்பிட வேண்டும்.

சமச்சீர் உணவு:


உடலுக்குச் சக்தியைக் கொடுக்கக் கூடியதும், கொழுப்புச் சத்து தரக்கூடிய உணவுகளையும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். புரதச் சத்துள்ள உணவுகள் மற்றும் நுண்சத்துகள் உள்ள உணவுகளைக் கர்ப்ப காலத்தில் சற்று அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே ஒரு சமச்சீர் உணவு.

சக்தி கொடுக்கும் உணவுகள், உடலை வளர்க்கக் கூடிய உணவுகள், நோய் நொடிகளிடமிருந்து நம்மைக் காக்கும் நுண்சத்துகள் நிறைந்த உணவுகள். தேவையான அளவு ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டும்.

ஒரு நாளைக்கு 300 கிராம் அரிசி அல்லது சிறுதானிய உணவு, 30 கிராம் அளவு எண்ணெய் தேவை. ஆனால், நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி, பனைவெல்லம் உள்ளிட்ட இனிப்பு 20 கிராம் போதுமானது. சமச்சீர் உணவைப் பொறுத்தவரை பாலுக்கு, ஒரு நாளைக்கு அரை லிட்டர் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 60 கிராம் அளவு புரதச்சத்து தேவை. அதேபோல் பழங்களும் 200 கிராம் அளவு சேர்க்க வேண்டும். கீரை 130 கிராம் தேவை. மற்ற காய்கறிகள் 120 கிராம் தேவை. சராசரியாக ஒரு பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 2,500 கலோரிகள் தேவை எனில், கர்ப்பிணிகளுக்கு இதைவிட 300 கலோரிகள் அதிகம் தேவைப்படும். பாலூட்டும் தாய்மார்கள் எனில் 500 கலோரி அதிகம் தேவை. கவனியுங்கள், இரண்டு உயிருக்குத் தேவை என்கிற நோக்கில் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதும் சரியல்ல! 60 கிலோ எடையுள்ள ஒரு பெண் கருவுற்றிருக்கிறார் எனில், அவருக்கு கூடுதலாக 10 கிராம் புரதச்சத்து கொடுப்பது ஏற்றது. ஏனெனில், இவை குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு உதவும். பருப்பு வகைகள், முட்டை, பால், மீன், நாட்டுக்கோழி, பயறு வகைகள் உள்ளிட்டவற்றில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது.

இரும்புச்சத்து மாத்திரை:




கர்ப்பகாலத்தில் 100க்கு 90 பெண்கள் சந்திக்கும் மிக முக்கியப் பிரச்னை ரத்தசோகை. பொதுவாகவே, பெண்களுக்கு, இரும்புச்சத்து குறைவாக இருக்கும். ரத்தசோகை குறைபாடுள்ளவர்கள் அயர்ன் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது காபி, டீ குடிப்பதைத் தவிர்க்கவும். இது இரும்புச் சத்து உடலுக்குச் சேருவதைத் தடுக்கும். இயற்கையாகவே இரும்புச்சத்தை அதிகரிக்க நினைப்பவர்கள், மாதுளை முத்துகளைச் சாப்பிட்டுவிட்டு, சிட்ரஸ் பழச்சாறு சிறிதளவுக் குடிக்கலாம். ஏனெனில், இரும்புச்சத்தை உடல் கிரகித்துக் கொள்ள வைட்டமின் சியே உதவும்.

இரும்புச்சத்துக் குறைவாக இருந்தால், சோர்வு, வெளுத்துப்போன சருமம், நாக்கில் புண் வருவதுபோல் புள்ளிப் புள்ளியாய் இருக்கும். சீரற்ற இதயத்துடிப்பு, நடந்தாலே மூச்சு வாங்குதல், லேசான தலைசுற்றல், உள்ளங்கை உள்ளங்கால் குளிர்ச்சியடைதல், முடி கொட்டுதல், அடிக்கடி தலைவலி, பசியின்மை, சருமத்தில் அரிப்பு உள்ளிட்டவையும் ஏற்படும். இந்த அறிகுறிகளை வைத்து ரத்த சோகையைக் கண்டறியலாம்.

அரைக்கீரை, முள்ளங்கிகீரை, வெற்றிலை, பருப்புக்கீரை, டர்னிப் கீரை, காலிஃபிளவர் (பூவை விட கீரையில்தான் சத்தே இருக்கிறது), அரிசி தவிடு (அவல்), முளையிட்ட தானியங்கள், முளைவிட்ட கோதுமை, அரிசி பொரி, கம்பு, சோயா பீன்ஸ், கடலைப்பருப்பு, தாமரைத் தண்டு, காளான், சுண்டை வற்றல், சுண்டைக்காய், மஞ்சள்தூள் (2 சிட்டிகை), கொய்யாப்பழம், சீத்தாப்பழம், பனை வெல்லம் உள்ளிட்டவற்றிலும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது!

உடற்பயிற்சி


கர்ப்ப காலத்தில் தினமும் கட்டாயம் 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இது, கை காலில் துவங்கி உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் சீரான ரத்த ஓட்டம் பாய வழிவகுக்கும். இதனால், குழந்தைக்குத் தேவையான ரத்தமும் அதன் ஓட்டமும் சீராக இருக்கும். தவிர, ஹார்மோன்களின் சுரப்பு சமச்சீராக இருக்கும். எலும்புகள் வலுவடையும். நல்ல பசியை உண்டாக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியமும் சிறக்கும்.

குனிந்து நிமிர்ந்து வேலை பார்க்கலாம். இவ்வாறு செய்வதால் இடுப்பு எலும்பு நன்றாக வளைந்து கொடுக்கும். இலகுவான சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். பிரசவமும் வலியுன்றி நிகழும்!

மகிழ்வான மனநிலை:


கருவுற்ற பெண் மகிழ்வான மனநிலையில் இருப்பது நல்லது. அதிக அதிர்ச்சி, கவலையளிக்கும் சூழலைத் தவிர்க்க வேண்டும்.

-  உண்மை இதழ்- 1-15.7.19

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

எலும்பு புரையும் முறிவும்

முதுமையில் மூட்டின் மேல் வன்மம் கொள்ளும் பிரச்சினைகளில் முக்கியமானது மூட்டுத் தேய்மானம் என்றால், மொத்த எலும்பு கூட்டத்தின் மேல் தாக்குதல் தொடுப்பது எலும்பு வலுவிழப்பு என்னும் எலும்பு புரை நோய்.

ஓசைப்படாமல் பல எலும்பு முறிவுகளுக்கு இது காரண மாக இருப்பது, நம்மில் பலருக்குத் தெரியாது. அதனால் மூட்டுகள் வலுவிழப்பதற்கான காரணங்களை அறிந்து கொள்வது, முதுமையைச் சுகப்படுத்த உதவும்.

உலக ஆஸ்டியோபோரோசிஸ்  அமைப் பின் கூற்றின்படி, இன்று உலக அளவில் எலும்பு வலிமை இழப்பால் ஒவ்வொரு மூன்று விநாடிகளுக்கு ஒருவர் எலும்பு முறிவால் பாதிக்கப்படுகிறார். அதாவது அய்ம்பது வயதைத் தாண்டியவர்களில் மூன்றில் ஒரு பெண்ணும் அய்ந்தில் ஒரு ஆணும் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை வைத்து, இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம்.

எப்படி வருகிறது?


பல்வேறு காரணங்களால் எலும்புகளின் தாது அடர்த்தி குறைவதாலும், அதன் நுண்ணிய கட்டமைப்பு தகர்க்கப்படுவதாலும் இது வருகிறது. அதாவது வரவுக்கு மீறிச் செலவு செய்யும்போது எப்படிப் பொருளா தாரச் சமநிலை குலைகிறதோ, அதைப் போல் எலும்புகளின் உருவாக்கத்துக்கும் தேய் மானத்துக்கும் முதுமையில் பெரும் இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது.

யாரெல்லாம் கவனமாக


இருக்க வேண்டும்?


# பெண்கள், குறிப்பாக மாதவிலக்கு சுழற்சி நின்ற பிறகு

# அறுபது வயதைத் தாண்டியவர்கள்

# உணவில் போதுமான ஊட்டச் சத்தைச் சேர்த்துக்கொள்ளாமல் வெறும் சோறு, இட்லி, தோசை என்றே வாழ்பவர்கள். நவீன உணவுக் காதலர்களான ஃபாஸ்ட் ஃபுட், பேக்கரி உணவு, காபி, டீ, நொறுக்குத் தீனிகளில் தங்களைத் தொலைப்பவர்கள்

# அசைவ உணவில் அதிக ஆர்வம் உடையவர்கள். இதில் உள்ள அதிக அளவு புரதம் ஆபத்து

# குடும்ப மரபில் ஏற்கெனவே யாராவது இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந் தால்

# உடற்பயிற்சி செய்யச் சொன்னால் பல கோணத்தில் முகத்தைச் சுளிப்பவர்கள்

# புகையையும் மதுவையும் கூட்டணி தர்மமாக வைத்திருப்பவர்கள்

# நாட்பட்ட நோய்களுக்குத் தொடர் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள்

# குறைந்து போகும் ஹார்மோன்கள். குறிப்பாக, பெண்களுக்கு அடிப்படையான ஈஸ்ட்ரோஜன், ஆண்களுக்கு அடிப்படை யான டெஸ்டோஸ்டீரோன்.

# தைராய்டு சுரப்பு குறைபாட்டுக்காகத் தேவையான அளவைவிடக் கூடுதல் மருந்து களை எடுத்துக்கொள்பவர்கள் (தைராய்டு பிரச்சினை இருப்பவர்கள், நாளமில்லா சுரப்பு நிபுணர்களின் கண்காணிப்பில் இருப்பது உத்தமம்)

# பாரா தைராய்டு, அட்ரீனல் சுரப்புக் களின் அதீதச் செயற்பாடு

# வயதுக்குப் பொருத்தமில்லாத அதிக உடல் எடையும் குறைந்த உடல் எடையும் ஆபத்துதான்.

# உணவில் போதுமான அளவு கால்சியம் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பவர்கள் (சராசரியாக நாள்தோறும் 1,000 மி.கி. அளவு கால்சியம் உடலில் சேர வேண்டும். அதுவே 50 வயதை தாண்டிய பெண்களும் 65 வயதை தாண்டிய ஆண்களும் 1,200 மி.கி. அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்)

பொதுவான அறிகுறிகள்


எலும்பு முறிவு ஏற்படும்வரை பொதுவாக எந்த அறிகுறியும் தெரிவதில்லை.

# இடுப்புவலி இருந்துகொண்டே இருக் கும். இது தண்டுவட எலும்புகள் விரிசல் அடைவதால் அல்லது தண்டுவட எலும்பு களின் வடிவைப்பு சீர்குலைவதால் ஏற்பட லாம்

# சராசரியான உயரம் குறைந்து போகலாம்

# முதுகுத் தண்டுவடம் வளைந்து கூன் விழலாம்

# சிறு சறுக்கலுக்கும் எலும்பு உடையலாம்

# அதிகம் பாதிக்கப்படும் எலும்புகள் இடுப்பு, தண்டுவட, கணுக்கால், மணிக்கட்டு எலும்புகள்

# பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் முதல் அறிகுறி மணிக்கட்டில் ஏற்படும் எலும்பு முறிவு.

-  விடுதலை நாளேடு, 12.8.19

உணவால் எலும்பைப் பலப்படுத்தலாம்



எலும்பு பலவீனம் அடைவதைத் தொடக்க நிலையிலேயே கண்டறி யலாம். இதற்காக உலக ஆஸ்டி யோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தயாரித்துள்ளது. அதற்கு '    ' என்று பெயரிடப்பட்டுள்ளது.

கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதன் மூலம் நமக்கு எலும்பு வலுவிழப்பு உள்ளதா என்பதை அறிய முடியும்:

# உங்கள் பெற்றோருக்குச் சற்றே தடுக்கி விழுந்தாலோ லேசான அடி பட்டோ இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா?

# கீழே விழுந்தோ லேசாக அடி பட்டோ உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா?

# உங்களுடைய மாதவிடாய் 45 வயதுக்கு முன்பே நின்றுவிட்டதா?

# உங்களுடைய உயரம் மூன்று செ.மீ.க்கு மேல் குறைந்துள்ளதா?


# அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உள்ளவரா?

# தினமும் 10 சிகரெட்டுக்கு மேல் பிடிக்கும் பழக்கம் உடையவரா?

(இதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ஆம் என்று பதில் அளித்திருந்தால், உங்களுக்கு எலும்பு வலுவிழக்க சாத்தியம் அதிகம். தகுதி வாய்ந்த மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்)

எலும்பு வலுவிழப்பை


எவ்வாறு தடுக்கலாம்?


# தேவையான அளவு கால்சியம், வைட்டமின் 'டி' அடங்கியுள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம்

# வாழ்நாள் முழுவதும் தசைகளை உறுதியுடன் வைத்திருக்கும், எடை தாங்கும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களுக்கு 30 முதல் 45 நிமிடம் அது இருக்க வேண்டும்.

# நடைப் பயிற்சி அவசியம், நீச்சல் பயிற்சி சிறந்தது

# புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டையும் மது அருந்து வதையும் தவிர்க்க வேண்டும்.

# முழுக் கவனத்துடன் வாழ்க்கை முறையை நெறிப்படுத்த வேண்டும்.

கவனிக்க வேண்டியவை


கோதுமை உணவு, கீரைகள், சில பீன்ஸ் வகைகளை உண்ணும்போது பால் பொருட்களைத் தவிர்க்க வேண் டும். ஏனென்றால், இவற்றில் இருக்கும் ஃபைட்டேட் , ஆக்ஸ்லேட்  பாலில் உள்ள கால்சியம் சத்தை இரைப்பை உறிஞ்ச முடியாமல் தடுக்கின்றன.

மருத்துவ ஊட்டச்சத்து சிகிச்சை: மருத்துவரின் ஆலோசனை அடிப் படையில் மட்டுமே கால்சியம், வைட்ட மின் டி' எடுத்துக்கொள்ளலாம் (விளம் பர மோகத்தில் அறிவை இழந்துவிடக் கூடாது). பிரச்சினைக் கேற்ப நல்ல மருந்துகள் உள்ளன. செய்ய வேண்டியது தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகுவது மட்டுமே.

கீழே விழாமல் இருப்பது எப்படி?


# தேவையான பொருட்களை கைக்கு எட்டும் தூரத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

# அடிக்கடி குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளுக்குத் தகுந்த துணைக் கருவிகளைப் பயன்படுத்தலாம். சூடான பொருட்களை அடுப்பிலிருந்து உணவு மேஜைக்கு மாற்ற சிறிய தள்ளு வண்டியைப் பயன்படுத்தலாம்.

வெளியில் நடக்கும்போது....


# குதிகால் உயரம் குறைந்த காலணிகளைப் பயன்படுத்துங்கள்

# மழைக் காலத்தில் வெதுவெதுப்பைத் தரும் காலணிகளை அணியுங்கள்

# படிகளில் ஏறும்போதோ இறங்கும் போதோ கைப்பிடியைப் பயன்படுத் துங்கள்

# நடக்கும்போது அக்கம் பக்கம் பராக்கு பார்க்காமல், தரையைப் பார்த்து கவனமாக நடக்க வேண்டும்

# வெளிச்சமான இடத்தில் மட்டுமே நடக்க வேண்டும்.

# கைப்பையில் பொருட்களை எடுத்து போவதைத் தவிர்த்து, தோளில் மாட்டும் பையைப் பயன்படுத்துவது நல்லது.

# தேவைப்படும் நிலையில் கைத் தடியை வெட்கமின்றிப் பயன்படுத் தலாம்.

எலும்பு வலுவிழப்பு தொடர்பான மூடநம்பிக்கைகள் தேவையற்றவை. ஏனென்றால்,

# எலும்பு வலுவிழப்பு நோய் வராமல் தடுக்க முடியும்

# வந்தபின் குணப்படுத்த முடியும்

# சரியான உடற்பயிற்சியும் உணவுத் திட்டமும் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்ள உதவும்

# இளமையிலேயே வாழ்க்கை முறையை நெறிப்படுத்துங்கள்

# சுயமருந்து வேண்டவே வேண்டாம்

தவிர்க்க வேண்டியவை


# அதிக உப்பு  சிப்ஸ், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு வரும் வறுத்த தின்பண்டங்கள் போன்றவற்றை. இவை உடலில் உள்ள கால்சியம் சத்தைக் குறைத்து எலும்புத் தேய்மானத்தை அதிகரிக்கும்.

# அதிகமான ஊறுகாயும் உப்பும் மிகவும் தவறு.

 

 

 

 

மருத்துவ குறிப்புகள்

மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகள் தீர வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு ஆகியவற்றை அரைத்து சாப்பிட வேண்டும்.

கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் நாவல் பழம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.

தினமும் பப்பாளி விதைகளை சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் மற்றும் புழுக்கள் அழியும்.

 - விடுதலை நாளேடு, 12 .8. 19

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

நீரிழிவு நோயும் உணவுக் கட்டுப்பாடும்



நீரிழிவு நோய் வந்துவிட்டதே என்று அஞ்சுகிறார்களோ இல்லையோ அதற்காகச் சொல்லப்படும் உணவுக் கட்டுப்பாடுகளை நினைத்துப் பலரும் அலறுவார்கள். உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க முடியாமல் திணறுபவர்களும் உண்டு.

உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் எதையும் சரிவரச் சாப்பிடாமல் இருப்பவர்களும் உண்டு. நீரிழிவு நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய உணவுக் கட்டுப்பாடுகள் என்னென்ன?

நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும்  அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும். அதிக அளவிலான பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கார்போ அய்ட்ரேட் நிறைந்த உணவு வகைகளான அரிசி, பிரெட், பாஸ்தா, கிழங்கு வகைகள் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் சர்க்கரை நிறைந்த பானங்களைத்  தவிர்த்துவிட வேண் டும். இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா பகிர்ந்துகொண்ட சில ஆலோசனைகள்.

சப்பாத்தி போதுமா?

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடும் உணவில் எப்போதும் சப்பாத்திக்கு முன்னுரிமை இருக்கும். அரிசிக்கு மாற்றாகச் சப்பாத்தியைத் தான் பலரும் பயன்படுத்த நினைப்பார்கள். சப்பாத்தி சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதா?  சப்பாத்தி சாப்பிடுவது தவறு அல்ல.

சப்பாத்திக்கு ஈடாகச் சிறிது அளவு அரிசிச் சோறும் எடுத்துக்கொள்ளலாம். சப்பாத்தியோ அரிசிச் சோறோ எதை எடுத்துக்கொண்டாலும் அத்துடன் அதிக அளவில் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சப்பாத்திக்குப் பதிலாகச் சிவப்பு அரிசி, பார்லி, கடலை மாவு ஆகியவற்றால் செய்த உணவையும் எடுத்துக்கொள்ளலாம்.

அரிசியைக் குறையுங்கள்

நீரிழிவு நோய்க்கு கார்போ ஹைட்ரேட் உணவு எதிரி என்பதால், அரிசி உணவைக் குறைத்துக்கொள்ளப் பலரும் நினைப்பார்கள். அரிசி உணவைக் குறைத்தால் போதுமா என்று ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் திவ்யா புரு ஷோத்தமனிடம் கேட்டோம். அரிசி உணவை முழுவதுமாகத் தவிர்க்க வேண்டிய கட்டாய மில்லை. அதேநேரம் அதிக அளவில் உண் ணாமல் அளவைக் குறைத்துச் சாப்பிட வேண்டும். பொதுவாக, வெள்ளை அரிசிக்கு மாற்றாக பாசுமதி அரிசி, சிவப்பு அரிசி, கைகுத்தல் அரிசி போன்றவற்றைப் பயன் படுத்தலாம். தினமும் புரதம், கொழுப்பு, கார்போஅய்ட்ரேட், நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது நல்லது. பழங்கள், காய்கறிகள், ராகி, பார்லி போன்றவை தினசரி உணவில் கட்டாயம் இருப்பது நல்லது. மீன், ஆலிவ் எண்ணெய், பாதாம் பருப்பு, வாதுமை கொட்டை (வால் நட்) ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பலம் தரும் பழம்

பழச்சாற்றுக்குப் பதிலாகப் பழமாக உண்ண வேண்டும். குறிப்பாக ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், நாவல் பழம், ஆகிய பழங்களை நீரிழிவு நோயாளிகள் அதிகம் உண்ணலாம். இந்தப் பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்தப் பழங்கள் அதிக நேரம் உடலுக்குச் சக்தியைக் கொடுக்கும்.

உதவும் அசைவம்

நீரிழிவு நோயாளிகள் அசைவ உணவில் ஆட்டிறைச்சியைச் சாப்பிடச் சற்று அச்சப் படுவார்கள். கொழுப்பு கூடிவிடுமோ என்று நினைப்பார்கள். அசைவ உணவு சாப்பிடுவதில் நீரிழிவு நோயாளிகளுக்குக் கட்டுப்பாடு தேவையா? நீரிழிவு நோயாளிகள் அசைவ உணவைத் தாராளமாகச் சாப்பிடலாம். கோழி, கடல் உணவான மீன், இறால், நண்டு ஆகிய அசைவ உணவில் உள்ள சத்துகள் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.

* கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் நாவல் பழம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.

* தினமும் பப்பாளி விதைகளை சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் மற்றும் புழுக்கள் அழியும்.

*  பிரண்டை, மல்லித்தழை, தூதுவளை, கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து துவையல் செய்து சாப்பிட கால் வலி நீங்கும்

- விடுதலை நாளேடு, 5.8.19

சிறுநீர்ப் பை, வெறும் கழிவுநீர்த் தொட்டி அல்ல!



சிறுநீர்ப்பை, உடலின் நடுப் பகுதியில், இடுப்பெலும்பின் முன் பகுதியில் புனல் போன்று அமைந்துள்ளது. உடலின் கழிவு நீக்கத்தில் பெரும் பகுதியைத் தோல் பகுதிக்கு அடுத்தபடியாக நிறைவேற்றுவது சிறுநீர்ப்பைதான்.

சிறுநீர்க் குழாய் வழியாக அனுப்பப் படும் கழிவுநீர் மட்டுமே சிறுநீர்ப் பையில் தேங்குவதில்லை.

சிறுநீர்ப் பையினுள் அமைந்துள்ள சேய்மை சுருண்ட குழாயுடன் தொடர் புடைய வேறு பல குழாய்கள் வழியாகவும் கழிவுநீர் சேருகிறது. ஹைப்போதாலமஸில் இருந்து இதய நாளங்கள்வரை நேரடி யாகத் தொடர்புடைய சிறுநீர்ப் பை உடலின் வெப்பச் சமநிலையைப் பாது காப்பதில் சிறுநீரகத்தைக் காட்டிலும் முதன்மையான பங்கு வகிக்கிறது.

தன்னிச்சையாகவும் இயங்கும்

சிறுநீர்ப் பை, சுமார் 500 மில்லி கொள்ளளவு கொண்டது . இதில் 300 மில்லியை எட்டியதும் கழிப்பதற்கான உணர்வு நமக்கு எழும். மேலும், 200 மில்லி சேரும்வரை கழிக்காமல் இருப்பதை அனுமதிக்கும். இவ்வாறு அனுமதிப்பது உடல் நமக்களிக்கும் சலுகை. ஆனால், அச்சலுகையை அடிக்கடி பயன்படுத்திக் கொண்டே இருந்தால் உணர்வுகள் மரத்துப் போகத் தொடங்கும். சிறுநீர்ப் பையில் உப்புகள் படிவது அதிகரித்து, தொடர் வலி முதல் புற்றுநோய் வரை செல்லக்கூடும்.

சிறுநீர்ப் பை, சிறுநீரகத்தின் ஆற் றலைப் பெற்று இயங்கும் உறுப்பு மட் டுமல்ல; அது பேரளவு சிறுநீரகத்துக்குத் துணை செய்யும் உறுப்பும்கூட. பல நேரம் சிறுநீரகத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு வேலைசெய்வதுடன், தன்னிச்சை யாக வும் இயங்கி சிறுநீரகத்தின் பணியைக் குறைத்து ஒட்டுமொத்த உடல் இயக் கத்துக்கும் பேருதவி புரிகிறது சிறுநீர்ப் பை.

உதாரணமாக, விபத்து ஏற்பட்டு உடலுறுப்புகள் அத்தனையும் தமது இயல்பை இழப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது சிறுநீர்ப் பை தன்னிடம் உள்ள சிறுநீரைச் சட்டென்று வெளியேற்றிவிடும். அத்துடன் நிற்காமல் உடல் முழுதும் தேங்கியிருக்கும் கழிவுநீரின் ஒரு பகுதியை வழக்கமான சிறுநீர்க் குழாய் வழியாக அல்லாமல் செல்களின் வழியாக வடித்தெடுத்துச் சிறுநீர்த் தாரை வழியாக வெளியேற்றிக் கொண்டே இருக்கும்.

உணர்வைக் கடத்தும்

மென் திசுக்களால் ஆன சிறுநீர்ப் பை மென்னுணர்வு மிக்கது. நாம் எந்த உணர்வுக்கு ஆளானாலும் அந்த உணர் வைப் பெற்று வைத்துக்கொள்வது சிறு நீர்ப் பையே.  சுமார் பத்து வயதுவரை திடீரென்று அச்சநிலைக்கு உள்ளாகும் போது தம்மையறியாமலே சிறுநீர் கசிவதைப் பார்த்திருப்போம். இப்படி சிறுநீரை வெளியேற்றுவதற்குக் காரணம் சிறுநீர்ப் பை நிரம்பியதால் அல்ல.  உடலில் திடீரென்று தோன்றிய தீய உணர்வை நீக்குவதேயாகும்.

கோபம், பதற்றம் போன்ற விரும்பத் தகாத உணர்வுகள் எழும்போதும் பெரிய வர்களுக்குச் சிறுநீர் கழிக்கத் தோன்றும். தீய உணர்வுகள் மேலெழும்போது அடிவயிறு கனப்பதுபோல் தோன்றுவதற்குக் காரணம் சிறுநீர் கழிப்பதற்கான உந்து தலே. ஆனால், வயது கூடக் கூட உணர்வு களைத் தொடர்ந்து புறக்கணிப்பதால் உடல் தரும் சமிக்ஞைகளை நம்மால் சரியாக இனம் காண முடிவதில்லை.

அச்சம் வேண்டாம்

சிறுநீர்ப் பையானது  வெறும்  கழிவுநீர்த் தொட்டி அல்ல. உணர்வு களைக் கையாள்வதில் சிறுநீர்ப் பைக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. வெப்பச் சமநிலையைக் கையாள்வதில் சிறுநீர்ப் பைக்கு முக்கியப் பங்கு இருப்பதால் அதனுடன் தொடர்புடைய நாளங்கள் வழியாக ரத்தத்தில் அடர்ந்த கழிவு கருஞ்சிவப்பு நிறத்திலோ வெளிர் காவி நிறத்திலோ சிறுநீரில் வெளியாகக் கூடும். அவ்வாறு ஓரிரு நாட்களுக்குச் சிறுநீர் வெளியாவதைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை.

அடர்த்தி அதிகமாகவோ நுரைத்த படியோ சிறுநீர் கழித்து முடித்தவுடன் லேசான வலி ஏற்படுவதையோ கெட்ட அறிகுறியாகப் பார்த்து உடனடியாகச் சோதனை செய்து பார்க்க வேண்டிய தில்லை. அப்படி வெளியாகும் நாட் களுக்கு முன்னர் நம்முடைய நடவடிக்கைகளைக் கவனித்துப் பார்த்தால் அலுவலகத்தில் ஆடிட்டிங் நடந்த நாட்களாக இருந்திருக்கும். அல்லது திட்டத்தை முடிக்க வேண்டிய இறுதி நாட்களாக இருந்திருக்கும். அல்லது மிகுந்த மன அழுத்தம் நிறைந்த நாட்களாக இருந்திருக்கலாம். தொடர் மன அழுத்தம், அதிகக் குளிர்ச்சி, அதிக வெப்பம் போன்றவை சிறுநீரகத்தை நேரடியாகப் பாதிப்பதுடன் அதன் துணை உறுப்பான சிறுநீர்ப் பையையும் கடுமையாகப் பாதிக்கும்.

மன அழுத்தம் தவிர்ப்போம்

இடுப்புப் புகுதியில் வெப்பம் தாக்கும் வகையில் நீண்ட நேரம் அடுப்படியில் நின்று வேலை செய்யும் பெண்கள், சமையலர்கள் போன்றோருக்குச்  சிறுநீர் கடுத்து அடிவயிற்றில் வலியுடன் பிரிய லாம். இது உடலில் வெப்பம் பரவாமல் முழு வெப்பத்தையும் சிறுநீர்ப் பையே பெற்றுக்கொள்வதால் நிகழ்வ தாகும். தொடர்ந்து நீண்ட நேரம் ஏசி அறையில் வேலைசெய்யும்போது உடலின் வெப்பச் சமநிலைக் குலைந்து தொண்டை வறட்சி முதல் சிறுநீர் அடர்ந்து செல்வதுவரை பல்வேறு இயல்பு மாற்றங்கள் ஏற்படலாம்.

இந்த நிலை நீடிக்கு மானால் சிறுநீர்ப் பையின் மென் திசுக்களில் உணர்விழப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும்போது சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் பிரிதல் அல்லது சிறுநீர் கழித்து முடித்த பிறகும் கழித்த நிறைவு ஏற்படாமை; அல்லது கழிவறையைவிட்டு வந்த மறுநிமிடமே மீண்டும் கழிக்கத் தோன்றுதல் ஆகிய உபாதைகள் நேரலாம்.

மென்திசுக்களின் உணர்வை மீட்டெடுக்க மருந்து மாத்திரைகளின் உதவியை நாடினால், தற்காலிகத் தீர்வாகத்தான் இருக்குமே தவிர நிரந்தரத் தீர்வாக இருக்காது. அதன் உணர்வை மீட்டெடுக்க மன அழுத்தமற்ற நிலையும் வெப்பச் சமநிலையும் ஓய்வும் ஆழ்ந்த தூக்கமும் மட்டுமே உதவும்.

சிறுநீர்ப் பையை முறையாகப் பரா மரிக்கும் நுட்பத்தைக் கற்றுக்கொண்டால் உடலின் மொத்த ஆரோக்கியமும் எளி தாகக் கைவரப் பெறும்.

- விடுதலை நாளேடு, 5.8.19