ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

கர்ப்ப காலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா? ஆயுஷ் கையேட்டுக்கு மருத்துவரின் விளக்கம்



மத்திய யோகா மற்றும் நேச்ரோபதி கவுன்சில் (ஆயுஷ்) கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டுள்ளது. அதில், `கர்ப்பிணிகள் அசைவம் சாப்பிடக் கூடாது. கோபப்படக் கூடாது. ஆசைப்படக் கூடாது. கர்ப்பக் காலத்தில் கணவன் - மனைவி தாம்பத்தியம் வைத்துக்கொள்ளக் கூடாது. படுக்கை அறையில் அழகான படங்களை மாட்டி வைத்துக்கொண்டு, பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். நல்ல புத்தகங்கள் படிக்க வேண்டும். பிரார்த் தனை செய்ய வேண்டும். நல்ல இசை கேட்க வேண்டும்' என்பது உட்பட பல்வேறு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் அழகான, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போல் கடந்த மாதம் ஆரோக்கிய பாரதி (ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மருத்துவ அணி) சார்பாக ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. அதில் அழகான, உயரமான, அறிவான குழந்தைகளைப் பெற ஜெர்மனியின் ஆயுர்வேதா முறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப் பட்டது. அதன்படி, குறிப்பிட்ட கிரகங்கள் ஒன்று சேரும் நேரத்தில் மட்டும் கணவன் - மனைவி தொடர்ந்து 3 மாதங்கள் தாம் பத்திய உறவில் ஈடுபட வேண்டும். இதனால் உடனே கருத்தரித்து, அழகான, உயரமான ஆரோக்கியமான குழந்தையைப் பெற முடியும். கருத்தரித்ததில் இருந்து குழந்தை பிறக்கும் வரை தாம்பத்திய உறவு வைத் துக்கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

சமூகம் தழைத்தோங்க ஆண் - பெண் உறவு என்பது அவசியமான ஒன்று. பசி, தாகம் போல் தாம்பத்தியம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் அத்தி யாவசியமான உணர்வு. நம் முன்னோர்கள் கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு அவசியம்; அதன் மூலம் சுகப்பிரசவம் ஆகும் என வலியுறுத்தியுள்ளனர். `இந்த நேரத்தில்தான் உறவுகொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் உறவுகொள்ளக் கூடாது' என்று சொல்வதும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தாம்பத்திய ஆசை ஏற்படுவதை தண்டனைக்குரிய குற்றம் போல் சித்திரிப்பதும்... விந்தையாக உள்ளது. ஏற்கெனவே மனைவியுடன் கணவன் பலவந்தமாக உடலுறவுகொள்வது குற்றமாகப் பார்க்கப்படுவது இல்லை. இச்சூழலில் கருத்தரித்த நாளில் இருந்து பெண் உறவுகொள்ளக் கூடாது என்பது தனி மனித உரிமைக்கு விரோதமாகவும், பெண்களுக்கு எதிராகவும் உள்ளது. 

தாம்பத்தியம் “கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக மாமிசம் சாப்பிடக் கூடாது; தாம்பத்தியம் கூடாது என்று சொல்வது முற்றிலும் பிற்போக்குத்தனம்'' என்று கூறுகிறார், மதுரை மகப்பேறு மருத்துவர் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் மாநில உறுப்பினர் மீனாம்பாள் கூறியதாவது:-

‘‘கர்ப்ப காலத்தில் தாய்க்கும், குழந் தைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் சாப்பிடுகிற உணவு மூலமாக வேத்தான் கிடைக்கின்றன. இந்தச் சமயத்துல கர்ப்பிணிகள் அதிகளவுல இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும். காய்கறிகளைவிட மாமிசத்துல அதிக அளவில் இந்தச் சத்துகள்  இருக்கின்றன. காய்கறிகளில் கிடைக்காத நிறைய சத்துகள் மாமிசத்துல மட்டும்தான் இருக்கின்றன. அதனால கர்ப்பிணிகளை  புரோட்டீன், இரும்புச் சத்து அதிகமுள்ள மாமிச உணவுகளைச் சாப்பிடச் சொல்வோம். காய்கறிகளை விட மாமிசம் சாப்பிடறப்ப எளிதாக சத்துக்களை உடல் உறிஞ்சும். அதனால கர்ப்ப காலத்தில் பெண்கள் காய்கறி களோட இறைச்சி, மீன், முட்டை, பால் எல்லாம் கண்டிப்பா சேத்துக்கிறது அவசியம்’’ என்றவர் கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவின் அவசியம் பற்றியும் விவரித்தார்... 

‘‘கர்ப்ப காலத்துல தாம்பத்திய உறவே கூடாதுனு சொல்றதை ஏத்துக்க முடியாது. கர்ப்பம் உறுதியானதும் ஒரு மாசம் ரொம்ப ஹார்ஷா வேணாம்னு கொஞ்சம் அவாய்ட் பண்ண சொல்வோம். அதுக்கப்பறம் பொண்ணுக்கு எந்த காம்ப்ளிகேஷனும் இல்லேனா எப்பவும் போல கம்ஃபர்டபிளா தாம்பத்திய உறவு வெச்சுக்கலாம். தாம்பத்திய உறவால குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் வராது. குழந்தை நல்ல பாதுகாப்பா அம்மாவோட பனிக்குடத்துலதான் வளருது. கர்ப்பமா இருக்குற பொண்ணு உடல் அளவுல சவுகரியமா பீல் பண்ணினா அதுக்கேத்த மாதிரி இரண்டு பேரும் ஃபாலோ பண்ணிக்கணும். 

சில பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஆகியிருக்கும். சிலருக்கு நச்சுக்கொடி கீழ் நோக்கி இறங்கி இருக்கும், சிலருக்கு கர்ப்பவாய் பிரசவிக்கிற காலத்துக்கு முன்னாடியே திறந்திருக்கும். இந்த மாதிரி சில உடலளவுல பிரச்சினை இருக்கறவங்களை சில குறிப்பிட்ட காலம் மட்டும் தாம்பத்திய உறவை தவிர்க்கச் சொல்லுவோம். இது தவிர எச்.அய்.வி நோயாளிகள் கண்டிப்பாக தாம்பத்திய உறவை தவிர்க்கணும். சில இன்ஃபெக்ஷன் இருக்கிறவங்களும் குறிப்பிட்ட காலம் தாம்பத்திய உறவை  தவிர்க்கணும். கர்ப்ப காலத்துல பெண்கள் ஆரோக்கியமான சாப்பாட்டோடு, மன அழுத்தம் இல்லாம, கணவன் - மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா, அனுசரணையா இருக்குறது அவசியம். கணவன் - மனைவிக்கு இடையே தாம்பத்தியம் அதிகளவுல பாசப்பிணைப்பை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்துல அரசோட இந்த நெறி முறைகளை தவிர்த்துட்டு ஒவ்வொருத் தரும் அவங்க செக்கப் போற டாக்டர்கள் என்ன சொல்றாங்களோ அதை ஃபாலோ பண்ணினாலே நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெத்தெடுக்கலாம்...''  என நம்பிக்கை ஊட்டுகிறார் டாக்டர் மீனாம்பாள். 

- நன்றி: விகடன் இணையம், 17.6.2017

-விடுதலை,8.7.17

சனி, 19 ஆகஸ்ட், 2017

புற்றுநோய் ஒரு நோயல்ல; B17 வைட்டமின் குறைபாடே!

கேன்சர் என்பது நோய் அல்ல; வைட்டமின் பி17 குறைபாடு. மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற்றுநோயை சிலர்  வியாபாரமாக்கி கோடிகோடியாய் சம்பாதிக்கிறார்கள்.

ஆனால் முறையான உணவால் அப்பாதிப்பிலிருந்து மீளலாம்! உயிர்பயம் தேவையில்லை
தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் பி17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை கேன்சரை எதிர்த்து போராடக்-கூடிய வல்லமை பெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சரை எதிர்த்து போராடக்கூடிய  லேட்ரில்  உள்ளது.

ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோவிலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்திக் கொண்டு செல்லப்படுகிறது. ஞிக்ஷீ. ஹரோல்ட் கீ. மேன்னர் என்பவர் "டெத் ஆப் கேன்சர்" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சரை எதிர்க்கும் மருத்துவ முறையில்  90% வெற்றி கண்டார்.

புற்று பாதிப்பை நீக்க உண்ண வேண்டிய உணவுகள்  :

1. காய்கறிகள்- பீன்ஸ், சோளம், லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி. 

2. பருப்பு வகைகள்- லென்டில் (மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முளை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் (பாதம் பருப்பு). இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.

3. பழங்கள்-_முசுக்கட்டைய் பழத்தில் (Mullberries) இல் கருப்பு முசுக்கட்டை, பிளூபெர்ரி, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.

4. விதைகள்-_எள் (வெள்ளை & கருப்பு), ஆளி விதை.

5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி (Brown Rice), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.

6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.

கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்: 

அப்ரிகாட்

லிமா பீன்ஸ்

ஃபாவா பீன்ஸ் (Fave Beans) 

கோதுமை புல் (Wheat Grass) 

பாதாம்

ராஸ்பெரிஸ்

ஸ்ட்ராபெர்ரி

ப்ளாக்பெர்ரி

பிளூபெர்ரி

பக் வீட் (Buck Wheat)

சோளம்

பார்லி

குதிரைவாலி

முந்திரி

மெகடாமியா கொட்டைகள் (Macadamia Nuts)

முளைகட்டிய பீன்ஸ்

இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.

இதில் கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் Handwash Liquid, Dishwash Liquid இல் அதிகளவு கேன்சரை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் உள்ளது. 

நாம் இதைப் பயன்படுத்தும்பொழுது இது நம் கைகளிலோ, உணவு தட்டுகளிலோ படிந்து-விடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாகப் பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது.

இதை தவிர்ப்பதற்கு லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம். 
அதுமட்டுமின்றி நாம் உண்ணும் காய்கறிகளில்கூட புற்றுநோயை உண்டாக்கக் கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நாம் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு சிறந்த வழி நீங்கள் தினமும் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.

உறவுகளே! உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள். நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.

(http://www.newsrescue.com/secret-uncovered-cancer-not-disease-business/#axzz4MOVbUFAiஎன்ற இணையத்திலிருந்து...)
-உண்மை,16.31.7.17

 


செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

தேவைக்குத் தண்ணீர் அருந்தினால் மாரடைப்பை தவிர்க்கலாம்



கொலஸ்டிராலுக்கும், மாரடைப்புக்கும் உள்ள தொடர்பு பரவலாக அறியப்பட்டது. ஆனால், தண்ணீர் அருந்துவதற்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். 

தண்ணீர் இல்லாமல் உடலில் எந்த செல்லும் இயங்க முடியாது. உடலில் உள்ள எல்லா செல்களுக்கும் தண்ணீர் தேவை. திசுக்களுக்குத் தண்ணீர் தேவை. ரத்த உற்பத்திக்கு, செல்களின் வளர்சிதைமாற்றப் பணிகளுக்கு, வளர்ச்சிப் பணிகளுக்குச் சரியான ஊடகம் தண்ணீர்தான். மேலும், ரத்த ஓட்டத்துக்கு, சுவாசத்துக்கு, உணவு செரிமானத்துக்கு, வியர்ப்பதற்கு, சிறுநீர் கழிப்பதற்கு, உடலின் வெப்பத்தைச் சமப்படுத்துவதற்கு என உடலின் முக்கியமான இயக்கங்களுக்கும் தண்ணீர் தேவை.

வயது, உடல் எடை, உடல் உழைப்பு, உணவுப் பழக்கம், காலநிலை, நோய்நிலை எனப் பல காரணிகள் ஒருவருடைய தண்ணீர்த் தேவையை தீர்மானிக்கின்றன. என்றாலும், ஆரோக்கியமாக உள்ள ஒருவர் தினமும் 2,400லிருந்து 3,000 மிலிவரை தண்ணீர் குடிக்க வேண் டும். பொதுவாகச் சொன்னால், ஒரு கிலோ உடல் எடைக்கு 35 மி.லி. தண்ணீரை தினமும் அருந்த வேண்டும். 

ரத்த பிளாஸ்மாவில் 92 சதவீதம் தண்ணீர் உள்ளது. ரத்தச் சிவப்பணுவில் 70 சதவீதம் தண்ணீர் உள்ளது. தண்ணீரின் அளவு உடலில் சரியாக இருந்தால், இந்த அளவுகள் மாறாது; ரத்தம் திரவ நிலையில் இருக்கும். அப்போது இதயத்துக்குத் தேவையான ரத்தம் சரியாகக் கிடைக்கும். இதனால், இதயத்தின் அழுத்த விசையும் சரியாக இருக்கும்.

அடுத்து, ரத்தச் சுற்றோட்டத்தில் ரத்தம் உறைந்து விடுவதுதான் மாரடைப்புக்கு முக்கியக் காரணம். ரத்தத்தில் ஃபைப்ரினோஜன் எனும் ரத்த உறைவுப் பொருள் உள்ளது. உடலில் ரத்தக்காயம் ஏற்படும்போது ரத்தக்கசிவைத் தடுப்பதும் கட்டுப்படுத்துவதும் இந்த ஃபைப்ரினோஜன்தான்.
ரத்தம் திரவ நிலையில் இருந்தால் மட்டுமே ஃபைப்ரினோஜன் தன் வேலையைச் சரியாகச் செய்யும். உடலில் தண்ணீரின் அளவு குறைந்து, அது திடமாகிவிட்டால், ரத்தக் குழாய்க்குள்ளேயே ரத்தம் உறைவதற்கு ஃபைப்ரினோஜன் ஏற்பாடு செய்துவிடும். அப்போது மாரடைப்புக்கு சாத்தியம் உண்டாகும். 

ஒருவர் தேவைக்குத் தண்ணீர் அருந்தாவிட்டால், முதலில் இதயத்தைச் சுற்றியுள்ள கொலாட்டிரல்ஸ் () எனும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்கள் மூடிக்கொள்கின்றன. இவற்றின் முக்கியத்துவம் என்ன? முதன்மை மின்சார இணைப்பு நின்று போனால், யு.பி.எஸ்.  கருவி தடங்கல் இல்லாமல் மின் விநியோகத்தைப் பார்த்துக்கொள்வது போலத்தான் இந்த நுண்ணிய ரத்தக்குழாய்கள் நமக்கு உதவுகின்றன.
அதாவது, இதயத் தசைகளுக்கு ரத்த விநியோகம் செய்யும் முதன்மை ரத்தக் குழாய்களான கரோனரி தமனிகளில் அடைப்பு உண்டாகி, மாரடைப்பு ஏற் படும்போது, இவைதான் இதயத் தசைகளுக்கு ஆபத் பாந்தவன்களாக ரத்தம் கொடுக்கின்றன. இதன் மூலம் மாரடைப்பு தள்ளிப்போகும் அல்லது மாரடைப்பின் கடுமை குறையும்.

கரோனரி ரத்தக்குழாய் அடைப்புக்கு ஸ்டென்ட் சிகிச்சை அல்லது பைபாஸ் அறுவைச் சிகிச்சையைப் பெறும்வரை உயிரைத் தாங்கிப் பிடிப்பவை இந்த நுண்ணிய ரத்தக் குழாய்கள்தான். ஆகவே, இவை சரியாக ரத்தம் விநியோகம் செய்ய வேண்டுமானால், தேவைக்குத் தண்ணீர் அருந்த வேண்டியது முக்கியம்.

அடுத்து, குறைவாகத் தண்ணீர் அருந்துவதால் உடலில் நீர் வறட்சி  ஏற்படும் அல்லவா? இந்த நிலைமை நீடித்தால், ரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்கும். அப்போது ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். இது மாரடைப்புக்கு வழி அமைக்கும். மேலும், அதிக அடர்த்தியுள்ள ரத்தம் உடலைச் சுற்றிவருவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ரத்தச் சுற்றோட்டத்தின் வேகம் குறையும். இதனால், லேசாக உள்ள அல்லது ஆரம்ப நிலையில் உள்ள அல்லது வெளியில் தெரியாமல் மறைந்துள்ள மாரடைப்பானது, நாம் சிறிதளவு கடின வேலைகளைச் செய்யும்போதுகூட கடுமையாகி உயிருக்கு ஆபத்தை வரவழைக்கலாம். 

தினமும் தேவையான தண்ணீரை அருந்தும் பழக்கம் எல்லோருக்கும் அவசியம்தான் என்றாலும், புகை பிடிப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், பிறவி இதயநோய் உள்ளவர்கள், ஏற்கெனவே மாரடைப்பு வந்து சிகிச்சை பெறுபவர்கள், கர்ப்பிணிகள், சுருள் சிரை நோய்  உள்ளவர்கள், அடிக்கடி அதிக தூரம் பயணம் செய்பவர்கள், காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நோய் உள்ளவர்கள், வெயிலில் வேலை செய்பவர்கள் ஆகியோர் தங்கள் தேவைக்கு தினமும் தண்ணீர் அருந்தி, உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாரடைப்பைத் தடுக்க உதவும் வழிகளில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
-விடுதலை,7.8.17

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

குழந்தை நீரிழிவுக்கு - தடுப்பூசி


நீரிழிவு நோய் உலகெங்கும் அதிகரித்து வருகிறது. இதில், 'டைப் 1' ரக நீரிழிவு நோய் சில வைரஸ் தொற்றினால் வரக்கூடும் என பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அந்த வைரஸ்களைப் பற்றி கடந்த, 25 ஆண்டுகளாக செய்த ஆய்வுக்குப் பிறகு, அவற்றைத் தடுக்கும் ஊசி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். டைப் 1 நீரிழிவு, டைப் 2 நீரிழிவை விட குறைவாகவே வருகிறது என்றாலும், வைரஸ் தொற்று ஏற்பட்ட குழந்தைகளுக்கு, சிறு வயதிலேயே டைப் 1 நீரிழிவு ஆரம்பித்து விடுவது கொடுமையானது. உலகெங்கும் ஆண்டுக்கு, 80 ஆயிரம் குழந்தைகளுக்கு டைப் 1 நீரிழிவு உண்டாகிறது. குறிப்பிட்ட சில வைரஸ்கள், உடலில் இன்சுலினை சுரக்கும் கணையத்தை தாக்குகின்றன. இதனால்தான் டைப் 1 நீரிழிவு குறைபாடு உண்டாகிறது. எனவே, அதை உருவாக்கும் வைரசுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் டைப் 1 நீரிழிவை வெற்றிகரமாக தடுக்க முடியும் என பின்லாந்திலுள்ள டேம்பர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். விலங்குச் சோதனைகளில் வெற்றி கிடைத்திருப்பதையடுத்து, 2018இல் மனிதர்களுக்கு அந்தத் தடுப்பூசியைப் போட்டு சோதனைகளை மேற்கொள்ள விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். அதில் வெற்றி கிடைத்தால், டைப் 1 வகை நீரிழிவு நோயாளிகள் இளம் வயதிலேயே உருவாவதை தடுக்க முடியும்.

-விடுதலை,3.8.17

பேதி மருந்து சாப்பிட்டால் மட்டும் குடல் புழுக்கள் ஒழியுமா?


பேதிக்குக்கொடுக்கப்படும்மாத்திரைக ளும்திரவமருந்துகளும்மலத்தைஎளிதில் வெளியேற்றஉதவுகின்றன.முக்கியமாக, மலச்சிக்கல்ஏற்படும்போதும்,மலத்தை வெளி யேற்றுவதற்கான திறன் முதியவர்களுக்குக் குறையும்போதும், பேதி மாத்திரைகளைப் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இந்த மருந்துகளில் பலவிதம் உண்டு. ஒவ் வொன்றும் ஒவ்வொரு வழியில் செயல்பட்டு, குடலியக்கத்தைத் தூண்டி, மலத்தை வெளி யேற்ற உதவுகின்றன. ஆனால், இந்த மருந்து களால் குடல் புழுக்களை வெளியேற்ற முடியாது. இதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், புழுக்களின் வளர்ச்சிப் புராணம் தெரிந்திருக்க வேண்டும்.

புழுக்கள் வளரும் விதம்

குடல் புழுக்களில் உருண்டைப் புழு, கொக்கிப் புழு, நூல் புழு, சாட்டைப் புழு, நாடா புழு எனப் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகையிலும் ஆண், பெண் என இரண்டு இனமுண்டு. பெண் புழு இடும் முட்டைகள் மனித மலத்தின் வழியாக நிலத்துக்கு வந்து, மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும். குழந்தைகள் விளையாடும்போது கை விரல் நகங்களில், அவை புகுந்துகொள்ளும். கைகளைச் சுத்தப்படுத்தாமல் உணவைச் சாப்பிடும்போது, உணவுடன் முட்டைகள் சிறுகுடலுக்குச் சென்று, லார்வாக்கள் எனும் தோற்றுவளரிகளைப் பொரிக்கும்.

ஒவ்வொரு லார்வாவும் சிறுகுடலின் சுவரைத் துளைத்து, ரத்தத்தில் கலந்து, கல் லீரலுக்குச் சென்று, சுமார் நான்கு நாஷ்யீகள் அங்கே தங்கும். பிறகு, அங்கிருந்து இதயத் துக்குச் சென்று நுரையீரலுக்குள் நுழையும். அங்கிருந்து உணவுக் குழாய்க்கு வரும். மீண்டும் இரைப்பை வழியாகக் குடலுக்கு வந்து சேரும் இந்தச் சுற்றுலாவுக்கு, மூன்று மாதங்கள் எடுக்கும். அதற்குள் லார்வா கட்டத்தில் இருந் தவை முழுப் புழுக்களாக வளர்ந்துவிடும். அதற்குப் பிறகுதான் உடலுக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கும்.

பாதத்தைத் துளைக்கும் புழு

கொக்கிப் புழுவின் லார்வாக்கள் மட்டும் நம் பாதத்தைத் துளைத்துக் கொண்டு நேரடி யாகவே ரத்தத்தில் கலந்து, கல்லீரலுக்குச் சென்று இதயம், நுரையீரல், உணவுக்குழாய், இரைப்பை வழியாகக் குடலுக்கு வந்து, முழு புழுக்களாக வளர்ந்து பிரச்சினைகளை உரு வாக்குகின்றன.
இப்படிக் குடல் புழுக்கள் முட்டை, லார்வா, புழு என மூன்று பிறப்புகளை எடுத்திருக்கும். நம் குடலில் மட்டுமில்லாமல் உடலின் பல பகுதிகளில் இவை சுற்றிக்கொண்டிருக்கும். இவற்றில் முட்டையும் லார்வாவும் குட லின் சுவர்களில் அட்டைப் பூச்சிபோல் ஒட்டிக்கொண்டிருக்கும். கொக்கிப் புழுக்களின் வாயில்கொக்கிபோன்றஅமைப்புகள்இருப்ப தால், சுவரில் ஆணி அடித்துத் தொங்க விட்டதுபோல் குடல் சுவரில் அவை தொங்கிக் கொண்டிருக்கும். ஆகவே, குடல் புழுக்களைப் பேதி மருந்து கொடுத்து ஒழிக்க முடியாது.

என்ன செய்யவேண்டும்?

குடல் புழுவை ஒழிப்பதற்கான மருந்துகள் பெரியவர்களுக்கு மாத்திரையாகவும், குழந் தைகளுக்குத் திரவ வடிவ மருந்தாகவும் கிடைக்கின்றன. சுயமாக மருந்து கடைகளில் மாத்திரை வாங்குவதைவிட, எந்தப் புழுவின் பாதிப்புள்ளது என்பதை மலப் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப மருத் துவர் பரிந்துரைப்படி மருந்து சாப்பிட்டால் குடல் புழுக்கள் 90 சதவீதம் ஒழிந்துவிடும்.
முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இதில் உள்ளது. குடல் புழு பிரச்சினைக்கு முதலில் சாப்பிடும் மாத்திரையோடு பலரும் சிகிச்சையை நிறுத்திக் கொள்கின்றனர். இந்த மாத்திரையின் பலனால், குடலில் முழு வளர்ச்சி பெற்ற புழுக்கள் மட் டுமே இறக்கும். உடலில் லார்வா பருவத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் புழுக்கள் முதலில் சாப்பிட்டமாத்திரையால்அழிவதில்லை. இந்த லார்வாக்கள் புழுக்களாக வளர்ச்சி பெற்று குடலுக்கு வந்ததும் மறுபடியும் தொல்லை கொடுக்கும்.

சுத்தம் மிக முக்கியம்!

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முதலில்ஒருமுறை மாத்திரை/மருந்துசாப் பிட்ட பிறகு, இரண்டிலிருந்து  மூன்று வாரங்களுக்குள் மறுபடியும் ஒருமுறை குடல் புழுவுக்கு மாத்திரை/ மருந்து சாப்பிட வேண்டும். இப்படி ஒரு பின் சிகிச்சையை எடுக்கத் தவறுவதால்தான் பலருக்கும் குடல் புழு தொல்லை நீடிக்கிறது.

மேலும், குடும்பத்தினர் அனைவரும் ஒரே வேளையில் குடல் புழுவுக்குச் சிகிச்சை பெறுவது மிகவும் நல்லது. குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்குக்குடல்புழுவுக்கானஅறி குறிகள் இல்லை என்றாலும்கூட, இப்படி சிகிச்சை எடுக்கலாம். தவறில்லை. எல்லாவற்றையும்விட முக்கியமானது: சுயசுத்தம் காப்பது, குறிப்பாகக் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, வெளியில் செல்லும்போது காலணி அணிந்து கொள்வதுதான் குடல் புழுத் தொல்லைக்கு 100 சதவீதம் முடிவு கட்டும்.
-விடுதலை,31.7.17

மாரடைப்புக்கு பயோமார்க்கர் பரிசோதனை அவசியமா?


ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புள்ளதா என்பதை முன்னரே தெரிவிக்க பயோமார்க்கர் பரிசோதனை உள்ளது. இது அனைவருக்கும் அவசியமில்லை. முதலில் பயோமார்க்கர் என்றால் என்ன என்று பார்ப்போம்.

பயோமார்க்கர் - எச்சரிக்கை மணி

உடலில் குறிப்பிட்ட நோய் உள்ளது அல்லது நோய் வர வாய்ப்புள்ளது என்பதை உறுதிப்படுத்தும் உடலியல் உயிர்ப் பொருளுக்கு ‘பயோமார்க்கர்’ என்று பெயர். இது புரதம், கொழுப்பு, மரபணு, என்சைம் என எதுவாகவும் இருக்கலாம். களவுபோன வீட்டில் கைரேகைகளைப் பார்த்துத் திருடனைக் கண்டுபிடிப்பதுபோல, ஒருவர் ரத்தத்தில் குறிப்பிட்ட பயோமார்க்கர் காணப்பட்டால் அவருக்கு அந்த பயோமார்க்கருக்குரிய நோய் உள்ளது என்று முடிவு செய்யப்படும். அதன்மூலம் ஆரம்பகட்டத்தில் உள்ள நோய்களைக் கண்டுபிடித்துத் தடுத்துவிடலாம்.

மாரடைப்புக்கான பயோமார்க்கர்கள்  

1. ஹோமோசிஸ்டீன் பயோமார்க்கர்

ஹோமோசிஸ்டீன் என்பது ஓர் அமினோ அமிலப்புரதம். இது 100 மில்லி ரத்தத்தில் 12 மைக்ரோமோல்ஸுக்குக் கீழ் இருந்தால் இயல்பு அளவு. இது 16 மைக்ரோமோல்ஸ் அல்லது அதற்கும் அதிகமாக உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து நான்கு மடங்கு அதிகம் என்று அமெரிக்க இதயநலக் கழகம் உறுதி செய்துள்ளது.

குடும்பத்தில் இளம் வயதிலேயே மாரடைப்பால் யாரேனும் மரணம் அடைந்திருந்தால், அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்கள் அனைவருமே இந்தப் பரிசோதனையை ஆண்டுதோறும் செய்துகொள்வது நல்லது.

2. லிப்போ புரோட்டீன்  ஏ பயோமார்க்கர்

இது ஒரு வகை கொழுப்புப் புரதம். இதயத்துக்குக் கெட்ட கொலஸ்டிராலைச் சுமந்து செல்கிற ரத்த வாகனம். இது தமனி நாளங்களைப் புண்ணாக்கி ரத்த உறைவை அதிகப்படுத்தும். மற்றவர்களைவிட பரம்பரையில் மாரடைப்பு ஏற்பட்ட குடும்பத்தில் பிறந்தவர்கள், சிறுநீரகப் பிரச்சினை, ஈஸ்ட்ரோஜன் பிரச்சினை, கட்டுப்படாத நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இதன் அளவு அதிகரித்து மாரடைப்பை வரவேற்கும். 100 மில்லி ரத்தத்தில் இது 20-லிருந்து 30 மில்லி கிராம்வரை இருக்க வேண்டும். இதன் அளவு அதிகரித்தால் இதயத்துக்கு ஆபத்து என்கிறது சர்குலேஷன் எனும் மருத்துவ ஆய்விதழ்.

3. அப்போலிப்போ புரோட்டீன்  பி பயோமார்க்கர்

இதில் இரு வகை உண்டு. அப்போலிப்போ புரோட்டீன்  பி 48, அப்போலிப்போ புரோட்டீன்  பி 100. இரண்டாவதுதான் இதயத்துக்கு ஆபத்தைத் தருகிறது. இதன் அளவு அதிகரித்தாலும் மாரடைப்புக்கு வாய்ப்புள்ளது.

4. ஃபைப்ரினோஜன் பயோமார்க்கர்

நம் ரத்தம் உறைவதற்குத் தேவைப்படும் ஃபைப்ரினோஜன் எனும் சத்துப்பொருள் 100 மில்லி ரத்தத்தில் 150-லிருந்து 400 மில்லி கிராம்வரை இருக்க வேண்டும். இந்த அளவு அதிகமானால் இதயத்துக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம். எவ்வாறெனில், இயல்பான ரத்த ஓட்டத்தில் தட்டணுக்கள் தனித்தனியாக ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், ஃபைப்ரினோஜன் அதிகமாக உள்ளவர்களின் ரத்த ஓட்டத்தில் இவை ஒரு திராட்சைப் பழக்கொத்துபோல ஒட்டிக்கொண்டு ஓடும். அப்போது இதயத் தமனி போன்ற மிகச் சிறிய ரத்தநாளங்கள் எளிதில் அடைத்துக்கொள்ளும், இதனால் மாரடைப்பு ஏற்படும்.

5. ட்ரோப்போனின் பயோமார்க்கர்

தற்போது மாரடைப்பை முன்னரே அறியப் பயன்படும் முக்கியமான பரிசோதனை இதுதான். ட்ரோப்போனின் அய் மற்றும் டி  எனும் புரதங்களின் அளவை ரத்தத்தில் அளந்து இதயத்தின் நிலைமையை அறிந்துகொள்ள இது உதவுகிறது. இதன் அளவு பொதுவாக மாரடைப்புக்கான சிறு அறிகுறிகள் ஏற்பட்ட நான்கு மணி நேரத்தில் அதிகரிக்கத் தொடங்கி, இரண்டு வாரங்களுக்கு அதே அளவில் நிலைத்திருக்கும்.

6. கிரியேட்டின் பாஸ்போகைனேஸ் பயோமார்க்கர்

கிரியேட்டின் பாஸ்போகைனேஸ்  எனும் என்சைமை அளந்தும் மாரடைப்பை முன்னரே அறிய முடியும். இதன் இயல்பு அளவு 10 முதல் 120  னீநீரீ/லி.  இந்த அளவு அதிகமானால் மாரடைப்புக்கான சாத்தியம் உள்ளது என அறியலாம்.

யாருக்கு அவசியம்?

மாரடைப்புக்கான பயோமார்க்கர் பரிசோதனைகள் எல்லோருக்கும் பயன்தரக்கூடியதுதான் என்றாலும், பரம்பரையாக மாரடைப்பு நோய் உள்ளவர்கள், நாட்பட்ட புகைப் பழக்கம், கட்டுப்படாத உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடற்பருமன்,  அதிக மன அழுத்தம், ரத்தத்தில் அதிகக் கொழுப்பு உள்ளவர்கள் தங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதா என்பதை முன்னதாகவே தெரிந்துகொள்ள, மேற்கண்ட பரிசோதனைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முன்னெச்சரிக்கையாக இருந்து ஆபத்தைத் தவிர்க்கலாம்.
-விடுதலை,31.7.17