வியாழன், 31 ஜனவரி, 2019

சளி பிடித்தல் என்றால்....



சளிப் பிடித்தல் என்பது நேரடியாக நுரையீர லிலோ தலையிலோ நீர் கோத்துக் கொள்வதல்ல; நமது உடலில் தேங்கியிருக்கும் கழிவின் வெளி யேற்றமே அது. நமது உடலின் ஒவ்வொரு செல் லுக்கும் இடையில் சளி எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சளி செல்லுக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் ஷாக் அப்சர்வராகவும் ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லுக்கு எதையும் எடுத்துச் செல்லும் கடத்தியாகவும் ஊடகமாகவும் இருக்கிறது.

உடலின் கழிவு மிகும்பொழுது முதலில் அது செல்லுக்கு வெளியில்தான் தங்கும். செல்லுக்கு வெளியே உள்ள சளிப்படலத்தில் கழிவுக்கு இடம் இல்லாமல் ஆகி, செல்லுக்குள் நுழைந்தாக வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகும் சூழலில், அது சுவாச வெளிக் காற்றின்   வழியாக நீராக (சளியாக) வெளியேறுகிறது.

இதற்கு தைலம் நல்லதா?


இருமல், தும்மல், மூக்கில் நீர்வடிதல் போன்றவை வெறும் கழிவு நீக்கம் என்பதால் அவை வெளியேற அனுமதிப்பதே நல்லது. ஆனால், உடல் தானாகவே மூக்கடைப்பை உருவாக்கி உள்ளிழுத்தலை மறுக்கும்போது அது பெரும் தொந்தரவாக மாறும். அது போன்ற நேரத்தில் தைலம் தடவுவதும் மருத்துவ உதவியை நாடுவதும் இயல்பு. ஆனால், அவை மூக்கடைப்பைத் தற்காலிகமாகத் தளர்த்துமே தவிர, நிரந்தரத் தீர்வளிக்காது.

சொல்லப்போனால் முன்னிலும் அதிகமான தொந்தர வையே அது அளிக்கும். ஏனென்றால், மூக்கில் ஏற்பட்ட தடையை மருந்து உள்நோக்கி நுரையீரலுக்குள்தான் தள்ளும். நீர் வடிவத்தில் இருந்த தடை, தூசி வடிவத்துக்கு மாறி நுரையீர லுக்குள் செல்வதால், சளித் தொல்லைக்கு உட்பட் டோர் கூடுதலாக அவதியுற நேர்கிறது.

-  விடுதலை நாளேடு, 21.1.19

நீரிழிவு ஒரு குறைபாடு, நோயல்ல...



உலக அளவில் இந்தியாவில்தான் நீரிழிவுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். நமது கலாச்சாரம், உணவுப் பழக்கம், சமூகப் பொருளாதாரக் காரணிகள், வாழ்க்கை முறை போன்ற கார ணங்களால் டைப் 2 நீரிழிவுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதையும்விடத் தற்போது அதிகமாக உள்ளது.

குளுக்கோஸை நமது உடலின் அனைத்து செல்களுக்கும் இன்சுலின் எடுத்துச் செல்கிறது. இந்த இன்சுலினை வயிற்றின் பின்பகுதியில் உள்ள கணையம் சுரக்கிறது. இந்தக் கணை யத்தின் செயல்பாடே நம் உடல் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. இந்த இன்சுலின் சுரப்பில் உள்ள குறைபாடுகளே நீரிழிவு வருவதற்கான அடிப்படைக் காரணம்.

உடல் பருமனாலும் அதிக ரத்தக் கொழுப்பாலும் நீரிழிவுக் குறைபாடு ஏற்படு வதற்கு அதிக சாத்தியம் உண்டு. உடலின் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலின் தேவையும் அதிகரிக்கும்.

இதனால் கணையம் அடிக்கடி இன்சுலின் சுரந்துக் களைத்துப் போய்விடும். இதன் காரணமாக உடல்பருமன் அதிகமுள்ள வர்களுக்கு நீரிழிவுக் குறைபாடு ஏற்படுகிறது.

உடல் திசுக்களில் தேவைக்கு அதிகமாகக் கொழுப்பு சேரும்போது இன்சுலினால் செல்களுக்குள் நுழைய முடியாது. அப்படியே சிரமப்பட்டு திசுக்களுக்குள் இன்சுலின் போனாலும் கொழுப்பு அடைத்துக்கொள் வதால் இன்சுலின் தனக்கான பணியைச் செய்ய முடியாது. இதனாலும் நீரிழிவு ஏற்படுகிறது. இவை தவிர, நீரிழிவுக் குறைபாடு பரம்பரையாகத் தொடர்வதற்கும் சாத்தியம் உண்டு.

நீரிழிவின் வகைகள்


நீரிழிவுக் குறைபாடு டைப் 1, டைப் 2 என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. கணையத்திலிருந்து முற்றிலும் இன்சுலின் சுரக்காமல் இருப்பதால் ஏற்படும் குறைபாடு டைப் 1 நீரிழிவு. பொதுவாக, டைப் 1 நீரிழிவுக் குறைபாடு குழந்தைப் பிறப்பின்போது ஏற்படும்.

கணையத்திலிருந்து போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் இருப்பதால் டைப் 2 நீரிழிவு  ஏற்படுகிறது. மகப்பேறு காலத்தில் பெண்களுக்குக் கர்ப்பகால நீரிழிவுக் குறைபாடு ஏற்படும். இந்தக் குறை பாடு பெரும்பாலும் குழந்தைப் பிறப்புக்குப் பின் சரியாகிவிடும். இவை தவிர, அரிதான நீரிழி வுக் குறைபாடுகளும் உள்ளன.

நீரிழிவால் ஏற்படும் பாதிப்புகள்


முறையான சிகிச்சை பெறாவிட்டால், நீரிழிவால் கண்கள், இதயம், சிறுநீரகம், பாதம் ஆகியவை விரைவில் பாதிப்படையும். நீரிழிவால், கண்களில் புரையும் கண் நீர் அழுத்தநோயும் (கிளாகோமா) ஏற்படுகின்றன.

சிறுநீரகத்தில் உள்ள நெஃப்ரான் செல்கள் பாதிக்கப்பட்டு சிறுநீரகம் வழியாக புரதம் வெளியேறி சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படும். உலக அளவில் சிறுநீரகப் பாதிப்புக்கு நீரிழிவுக் குறைபாடு முக்கியக் காரணியாக உள்ளது.

பிரச்சினைகளை எப்படித் தடுக்கலாம்?


பாதங்களின் உணர்வுத் தன்மையை அவ்வப்போது சோதிக்க வேண்டும், பாதத்தில் உணர்வுக் குறைபாட்டை உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். நீரிழிவுக் குறைபாடு உள்ளவர்கள் கண் பரிசோதனையையும் கண் ரெட்டினா பரிசோதனையையும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும்.

ஏ.சி.ஆர் எனப்படும் சிறுநீரகப் பரிசோதனையில் கிரியாட்டின் அளவைத் தெரிந்துகொள்வது அவசியம். நீரிழிவுக் குறைபாடு உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், உடலில் அதிக அளவு கொழுப்பு, புகைபிடிக்கும் பழக்கம் ஆகியவை இருந்தால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட சாத்தியம் உண்டு.

எனவே, அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

துன்பம் களைவோம்


உடலை முறையாகப் பராமரிப்பதே நீரிழிவால் பாதிக்கப் பட்டவர்களின் முதல் கடமை.

முறையான பரிசோதனைகளும் தொடர் சிகிச்சைகளும் நீரிழிவால் ஏற்படும் பாதிப்புகளை வெகுவாகக் குறைக்கும், நீரிழிவு என்றவுடனே வாழ்வில் இன்பம் எல்லாம் தொலைந்துவிட்டது எனக் கருத வேண்டாம். அதை நோய் என்று கருதாமல், ஒரு குறைபாடாகக் கருதி அதற்கு முறையான சிகிச்சைகள் மேற்கொண்டால் நீரிழிவின் அவதி விலகும்.

-  விடுதலை நாளேடு, 28.1.19

வியாழன், 24 ஜனவரி, 2019

சளி பிடித்தல் என்றால்....



சளிப் பிடித்தல் என்பது நேரடியாக நுரையீர லிலோ தலையிலோ நீர் கோத்துக் கொள்வதல்ல; நமது உடலில் தேங்கியிருக்கும் கழிவின் வெளி யேற்றமே அது. நமது உடலின் ஒவ்வொரு செல் லுக்கும் இடையில் சளி எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சளி செல்லுக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் ஷாக் அப்சர்வராகவும் ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லுக்கு எதையும் எடுத்துச் செல்லும் கடத்தியாகவும் ஊடகமாகவும் இருக்கிறது.

உடலின் கழிவு மிகும்பொழுது முதலில் அது செல்லுக்கு வெளியில்தான் தங்கும். செல்லுக்கு வெளியே உள்ள சளிப்படலத்தில் கழிவுக்கு இடம் இல்லாமல் ஆகி, செல்லுக்குள் நுழைந்தாக வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகும் சூழலில், அது சுவாச வெளிக் காற்றின்   வழியாக நீராக (சளியாக) வெளியேறுகிறது.

இதற்கு தைலம் நல்லதா?


இருமல், தும்மல், மூக்கில் நீர்வடிதல் போன்றவை வெறும் கழிவு நீக்கம் என்பதால் அவை வெளியேற அனுமதிப்பதே நல்லது. ஆனால், உடல் தானாகவே மூக்கடைப்பை உருவாக்கி உள்ளிழுத்தலை மறுக்கும்போது அது பெரும் தொந்தரவாக மாறும். அது போன்ற நேரத்தில் தைலம் தடவுவதும் மருத்துவ உதவியை நாடுவதும் இயல்பு. ஆனால், அவை மூக்கடைப்பைத் தற்காலிகமாகத் தளர்த்துமே தவிர, நிரந்தரத் தீர்வளிக்காது.

சொல்லப்போனால் முன்னிலும் அதிகமான தொந்தர வையே அது அளிக்கும். ஏனென்றால், மூக்கில் ஏற்பட்ட தடையை மருந்து உள்நோக்கி நுரையீரலுக்குள்தான் தள்ளும். நீர் வடிவத்தில் இருந்த தடை, தூசி வடிவத்துக்கு மாறி நுரையீர லுக்குள் செல்வதால், சளித் தொல்லைக்கு உட்பட் டோர் கூடுதலாக அவதியுற நேர்கிறது.

-  விடுதலை நாளேடு, 21.1.19

நோயை தடுக்கும் நல்ல கிருமிகள்



கிருமிகள் எல்லாமே நமக்கு கெடுதலை விளைவிப்பதில்லை. நல்ல கிருமிகளும் பல உண்டு. உணவை செரித்து, சத்துக்களை பிரித்தெடுக்க, நமது வயிற்றில் உள்ள பல நல்ல கிருமிகள் உதவுகின்றன. அவை இல்லாவிட்டால் நமக்கு உணவு செரிக்காது.

அதேபோலத் தான், மூக்கிலும், தொண்டையிலும் சில நல்ல பாக்டீரியா இருந்தால் ப்ளூ வைரஸ் தாக்குதலிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும்

என்பதை, அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.ப்ளூ வைரஸ் தாக்கியவர்கள், அதிலிருந்து தப்பியவர்கள் ஆகியோரின் மூக்கு மற்றும் தொண்டையிலிருந்து சேமிக்கப்பட்ட பாக்டீரியாக்களை மிச்சிகன் விஞ்ஞானிகள் வகைப்படுத்தி ஆராய்ந்த போது, குறிப்பிட்ட சில வகை பாக்டீரியாக்கள் உள்ளவர்களுக்கு ப்ளூ வைரஸ் தாக்குதல் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.இந்த கண்டுபிடிப்பு, ப்ளூ வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உதவும் என்பதோடு, மனித உடலில் நல்ல கிருமிகள் ஆற்றும் பங்கைப் பற்றியும் நமக்கு புரிதலை தரும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

-  விடுதலை நாளேடு, 24.1.19

சனி, 12 ஜனவரி, 2019

அசைவ உணவே ஆரோக்கியம்!




சைவ உணவாளர் களைக் காட்டிலும் அசை வர்களே அதிக ஆரோக் கியத்துடன் வாழ்வதாகச் சொல்கிறது ஆஸ்ட்ரியா வின் க்ராஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அண்மைக்கால ஆய்வு முடிவு, சைவர்களின் கொழுப்புச்சத்து குறைபாடு காரணமாகவும் அதிக அளவில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் எடுத்துக் கொள்வதாலும் அவர்களுக்குப் புற்றுநோய், ஆஸ்துமா, ஒவ்வாமை, மனநலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு சாத்தியங்கள் அதிகம் என்கிறது இந்த ஆய்வு. அசைவர்களை ஒப்பிடும்போது சைவர்களின் வாழ்க்கைத் தரமும் மேம்பட்டதாக இல்லை, அதிக அளவில் மருத்துவச் சிகிச்சை தேவைப்படுபவர் களாகவும் இருக்கிறார்கள் என்ற இந்த ஆய்வு உணவின் அரசியலை உலகுக்கு காட்டும் அவசியத்தேவை!

தொகுப்பு: சந்தோஷ்

- விடுதலை ஞாயிறு மலர், 22.12.18

செவ்வாய், 8 ஜனவரி, 2019

மருத்துவ உலக நிகழ்வுகள் 2018

நலம் காக்கும் கம்பளிப்பூச்சி


வெளிநாடுகளில் மருத்துவ அறுவை சிகிச்சையில் ரோபோ பயன்பாடு இன்று பெரிய அளவில் வந்துவிட்டது. அந்தவகையில் மருத்துவ வசதிக்காக உருவாக்கப்பட்ட சிறிய வகை கேட்டர்பில்லர் ரோபோ (கம்பளிப்பூச்சி ரோபோ) இந்த ஆண்டு கவனம் ஈர்த்தது. ஹாங்காங் சிட்டி பல்கலைக்கழக ஆய்வாளர்களின் கைவண்ணம் இது. மனித உடலில் மருந்துகளைச் சரியான இடத்துக்குக் கொண்டுசெல்வதற்காக இந்த ரோபோவை உருவாக்கினர். கம்பளிப்பூச்சிக்கு இருப்பதுபோலச் சிறிய கால்கள் இந்த ரோபோவுக்கு இருப்பதால், அந்தப் பெயரில் இது அழைக்கப்படுகிறது. சிறிய கால்களைப் பயன்படுத்தி உடலில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஊர்ந்து சென்று மருந்துகளைச் சரியான இடத்தில் இந்த ரோபோ சேர்த்துவிடுகிறது.

குருத்தெலும்பில் புதுக் காது


சீனத் தலைநகர் பெய்ஜிங்கில், ஓசை இல்லாமல் புதிய சாதனை ஒன்றை மருத்துவ விஞ்ஞானிகள் படைத்திருக் கிறார்கள். உலகிலேயே முதன்முறையாகக் குருத்தெலும்பு செல்களைக் கொண்டு புதிய காதுகளை உருவாக்கிக் காட்டினார்கள். சில வளரும் குழந்தைகளுக்குக் காதின் வெளிப்பகுதி வளர்ச்சியடையாமல் போய்விடலாம். மைகுரோசியா என்றழைக்கப் படும் இந்தக் குறைபாடு உள்ளவர்களால், மற்றவர்கள் பேசுவதைத் தெளிவாகக் கேட்க முடியாது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும்வகையில், நோயாளியின் குருத்தெலும்பு செல்களைக் கொண்டு புதிய காதுகளை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அந்த முயற்சி இந்த ஆண்டு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதயநோய் ஏற்பட காரணம்


இதயநோய் ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிவதில் சுமார் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா கண்டுபிடித்த அளவீட்டு முறைகளையே இன்றுவரை உலகெங்கும் பயன்படுத்திவருகிறார்கள். இந்த அளவீடுகளின் மூலம் 30 சதவீத இதய நோய் களையே கண்டறிய முடிந்தது. அந்தக் குறையை இந்திய மருத்துவர்கள் போக்கியிருக்கிறார்கள். அப்போலோ குழுமத்தைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் இதயநோய் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான கூடுதல் அளவீடு களைக் கண்டறிந்துள்ளனர். சுமார் ஏழு ஆண்டுகளாகச் செய்துவந்த ஆய்வின் அடிப்படையில் இது சாத்தியமானது. இந்த அளவீடுகள்மூலம் 67 சதவீத இதய நோய்களைக் கண்டறிந்து விட முடியும்.

புதிய வைரஸ் தாக்குதல்


கேரளத்தில் நிபா என்ற வைரஸ் பரவியதால் மாநிலம் முழுவதும் பீதி நிலவியது. இந்த வைரஸ் தாக்கியதில் கோழிக்கோடு, மலபார் மாவட்டங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. பழந்தின்னி வவ்வால்களால் நிபா வைரஸ் பரவியதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்தது. இந்தத் தொற்றைக் குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 1998ஆம் ஆண்டில் மலேசி யாவில் கண்டுபிடிக்கப் பட்ட இந்த வைரஸ், 2001ஆம் ஆண்டில் வட இந்தியாவிலும் கண்டுபிடிக்கப் பட்டது.

புது ஆண்டிபயாடிக்


தற்போது பயன்பாட்டில் இருந்துவரும் பெரும்பாலான ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. நீண்ட கால மாகவே புதிய ஆண்டிபயாடிக் மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் போஸ்டனில் இருக்கும் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் முயன்று வந்தார்கள். அந்த முயற்சி இந்த ஆண்டு திருவினையானது. குறிப்பாக, எந்த ஆண்டிபயாடிக் மருந்துக்கும் கட்டுப்படாத நோயாக எலும்புருக்கி நோய் உருவெடுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் புதிய ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பு, மருத்துவ உலகின் மைல்கல் என வர்ணிக்கப்படுகிறது. இதன்மூலம் அதிகமான புதிய வகை ஆண்டிபயாடிக் மருந்துகளைக் கண்டுபிடிக்கத் தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாதுகாக்கும் கவசம்


சிகிச்சையின்போதும் பரிசோதனையின்போதும் கதிர்வீச்சுத் தாக்குதலுக்கு மருத்துவர்களும் ஆய்வகப் பணியாளர்களும் உள்ளாவது தவிர்க்க முடியாதது.

தான் கண்டுபிடித்த புது மேல் அங்கி (ஏப்ரன்) மூலம் அந்தக் கதிர்வீச்சுத் தாக்குதலுக்கு முடிவுரை எழுதி யிருக்கிறார், மதுரையைச் சேர்ந்த அரசு மருத்துவர் செந்தில்குமார். ராஜாஜி அரசு மருத்துவமனை கதிரியக்க இயற்பியல் துறை உதவிப் பேராசிரியரான இவர். பிஸ்மத், ஆன்டிமனி, பேரியம் சல்பேட் (4) ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த ஏப்ரனை உருவாக்கியுள்ளார். அது மனிதனுக்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் நன்மை யளிப்பதாக உள்ளது.
- விடுதலை நாளேடு, 7.1.19

உடற்பயிற்சியே உடல் ஆரோக்கியம்



உடற்பயிற்சி உடல் ஆரோக்கி யத்துக்கு மட்டுமல்லாமல்; இதய ஆரோக் கியத்துக்கும் இன்றியமையாதது.  இதயப் பாதுகாப்பு தொடர்பான உடற்பயிற்சி இதயம் நன்றாகச் செயல்பட உதவும். தசைகள் தொடர்பான உடற்பயிற்சி தசை களை உறுதிப்படுத்த உதவும்.

இதயப் பாதுகாப்பு


இதயப் பாதுகாப்பு தொடர்பான உடற்பயிற்சி மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் பாதுகாக்க உதவுகிறது. உடல் தசைகளைத் தொடர்ந்து அசைத்து, கால் தசைகளையும் கைத்தசைகளையும் இயங்கச் செய்தால் அது இதயத்தை நன் றாக வேலை செய்ய வைப்பதுடன் சுத்த மான காற்றைச் சுவாசிக்கவும் உதவும்.

நீந்துதல், சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவை இதயம் தொடர்பான உடற்பயிற்சிகளில் அடங்கும். இந்த உடற்பயிற்சிகளால் கொழுப்பின் அளவு குறைகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக் குள் வைத்து உடல் எடையைச் சீராக வைக்க உதவுகிறது. மேலும், அவை உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்து, கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்துகிறது.

எது சிறந்த உடற்பயிற்சி?


உடற்பயிற்சியானது ஒருவருடைய வயது, அவரது உடலமைப்பு, உடல் நலம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். ஒருவர் தன்னுடைய 20ஆவது வயதில் உடலின் நெகிழ்வுத் தன்மை அதிகம் இருப்பதால் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சுமார் 30 வயதை எட்டும்போது உடல் தசை இயக்கம் குறையும் என்பதால், மூச்சை உள்வாங்கி வெளியிடும் (மூச்சுப் பயிற்சி) உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்க வேண்டும். 40 வயதைத் தொடும்போது, இதய நோய், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதால், இந்தப் பருவத்தில் 30 அல்லது 45 நிமிடங்கள் குதித்துச் செய்யும் உடற் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

50 வயதைத் தாண்டும்போது தண் ணீர் குடிக்கும் (தாகம்) விருப்பம் குறைய ஆரம்பிக்கும். எனவே, ஒருவர் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், இலகுவான, முறையான உடற் பயிற்சி செய்வது அவசியம். 60 வயதுப் பருவத்தில் மூட்டுவலி வர வாய்ப்புள்ள தால் அதிக எடை தூக்குவது போன்ற கடுமையான வேலை செய்வதைத் தவிர்த்துச் சாதாரண நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். 70 வயதுக்கு மேல் உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

உடற்பயிற்சி வழிமுறைகள்


நடைப்பயிற்சியானது உடல் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு விரைவாக வும் நாடித்துடிப்பின் அளவை உயர்த்து வதாகவும் வியர்வை ஏற்படும் வகை யிலும் இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது மெதுவாக ஆரம்பித்து, உடலை உடற்பயிற்சிக்குத் தயார் செய்து கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி செல்லும்போது மூச்சை அடக்கிக்கொண்டு செல்லக் கூடாது. உடற்பயிற்சி செய்யும்போது, நெஞ்சில் வலி, நெஞ்சடைப்பு, கழுத்து மற்றும் தொண்டைப் பகுதியில் இறுக்கம், மூச்சுவிடுவதில் சிரமம், வாந்தி வரும் உணர்வு, தலைச்சுற்றல், உடல் நடுக்கம், பார்வைக் குறைபாடு ஏற்படுதல் போன் றவை இருந்தால் உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுக வேண்டும்.

தூங்குவதற்கான உடற்பயிற்சி


படுக்கையில் மல்லாந்து படுத்துக் கொண்டு சாதாரணமாக இயல்பு நிலை யில் 8 முறை மூச்சை இழுத்து விட வேண்டும். பிறகு வலது புறமாகத் திரும்பி 16 முறை மூச்சை இழுத்து விட வேண்டும். அதன்பின் இடது புறமாகத் திரும்பி 32 முறை மூச்சை இழுத்து விட வேண்டும். இந்தப் பயிற்சியை முடிப்பதற்கு முன்ன தாகவே பலருக்குத் தூக்கம் வந்துவிடும்.

உடற்பயிற்சிக்கு ஏற்ற நேரம்


உடற்பயிற்சி செய்வதற்கு காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையே ஏற்ற நேரமாகும். மாலை நேரத்தைவிடக் காலை நேரத்தில் சுற்றுப்புறம் தூய்மை யாகவும், ஓசோன் மண்டலம் ஆக்சிஜன் நிறைந்த காற்றைக் கொண்டதாகவும் இருக்கும். சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்யக் கூடாது. அதேநேரம், உடற் பயிற்சிக்கு முன் வயிற்றுக்கு எளிதான திரவ உணவு அருந்தலாம். பொழுது விடிதற்கு முன் (அதிகாலையில்) குளிர் இருக்கும் போது உடற்பயிற்சி செய்தால் நெஞ்சுவலி ஏற்படக்கூடும்.

 

மாதவிலக்கு சீராக - கருப்பைக் கோளாறுகளை குணப்படுத்தும் தன்மையும் மாதுளம் பூவிற்கு உண்டு. இதன் பூவுடன் சம அளவு வால் மிளகு, சிறிது பனங்கற் கண்டு சேர்த்து இடித்து பொடியாக்கி காலை, மாலை இருவேளையும் 5 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.

மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்த மாதுளை பழத் தோலை (1) அரைத்து புளித்த மோரில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தலாம்.
- விடுதலை நாளேடு, 7.1.19