புதன், 29 மே, 2019

புற்றுநோயை உருவாக்கும் மூலப்பொருள் உருவானதையடுத்து இரத்த அழுத்த மாத்திரைகளை திரும்பபெறும் நிறுவனங்கள்



இரத்தப் புற்றுநோய் தொடர்பாக ஆரம்பக்கட்ட நோய்க்குறியீடுகள் அதிகரித்துவருதைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் இரத்த அழுத்த மருந்துகள் திரும்பப்பெறப்படுகிறது.

இரத்த அழுத்த மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் தொடர்பான அறிகுறிகள் தொடர்ந்து  தென்படுவதாகக வந்த புகாரை அடுத்து மீண்டும் ஒரு புதிய நிறுவனம் தனது தயாரிப்பு மருந்துகளை திரும்பப்பெற்றது.

லாஸ்வர்டன் பொட்டாசியம் Losartan Potassium USP Tablets. மாத்திரைகளின் 29 பேட்ஸ்களை திரும்ப பெறத்துவங்கியுள்ளதாக டெவா பார்மசி அறிவித்துள்ளது. இந்த 100 மில்லிகிராம் மாத்திரைகள் அதிக அளவு ஆற்றல் கொண்டதாக உள்ளதாகவும் இது ரத்த அணுக்களின் செயல்பாட்டில் மாற்றம் விளை விக்கும் ஆற்றல் கொண்டதாகவும் அறியப்படுகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது தற்போது விற்பனையில் உள்ள மருந்துகளின் ஆற்றல் குறித்த சோதனைகளின் மூலம் சில மாற்றங்கள் கண்ட றியப்பட்டது, இது தொடர்பாக டோரண்ட் நிறுவன உணவு மற்றும் மருந்துப்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது  ”இரத்த அழுத்தம் கொண்டவர்கள் உட் கொள்ளும் மாத்திரைகளில் 36 பேட்ஸ் Losartan Potassium USP Tablets. ñŸÁ‹ 68 lots of Losartan Potassium/hydrochlorothiazide tablets USP.  திரும்பப் பெறப் பட்டுள்ளது.

மேலும் தொடர்புடைய மருந்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக் கையில், “விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட மருந்துகளை உட் கொண்டவர்களிடம் சில உடலியல் மாற்றங்கள் கண்டறியப்பட்டது. முக் கியமான டோரண்ட் பார்மாஸு டிகல்ஸ் நிறுவனம் டிசம்பர் மாதம் தயாரித்து வெளியிட்ட இரத்த அழுத்த மருந்துகள் திரும்பப்பெறப் பட்டது.

இதனைத் தொடர்ந்து நீண்ட காலமாக விற்பனையில் இருந்துவரும் இரத்த அழுத்த மாத்திரைகள் கடந்த ஜூலையில் இருந்து திரும்பபெறத் துவங்கியுள்ளோம் N-Nitroso N-Methyl 4-amino butyric acid (NMBA) மூலக்கூறு கொண்ட மாத்திரைகள் ஆரம்ப கட்ட இரத்த புற்றுநோய் தொடர்பாக நோய்க்கான அறிகுறிகளை உண் டாக்குவதாக கண்டறியப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் காம்பர் மருந்துகள் உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரிகளுக்கு 87 மில்லி 50 மில்லி மற்றும் 100 மில்லி லாரார்டன் மாத்திரைகள் ஆகிய வற்றைத் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளன.

தொடர்ந்து நோய் அறிகுறிகள் தென்படுவதால் கம்பெர் பார்மா ஸுடிகல் நிறுவனமும் உணவு மற்றும் மருந்து கழகத்திற்கு தங்களின் 87 பேட்ஸ் 25மிலி, 50மிலி மற்றும் Losartan tablets- களைத் திரும்பப் பெறுகிறோம் என்று கூறியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு மெக்லாண்டஸ் பார்மசுடிகல் நிறு வனம் தங்களின் அனைத்து பேட்ஸ் Losartan Potassium/Hydrochlorothiazide 100mg/25mg தொகுதி மாத்திரை களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மெக்லாண்டஸ் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ள தாவது, “சமீபத்தில் வெளியான இரத்த அழுத்த மாத்திரைகளில் N-nitrosodiethylamine (NDEA) மூலக் கூறுகள் துணைப்பொருளாக உரு வாவது கண்டறியப்பட்டுள்ளது.. இதனை உணவு மற்றும் மருந்து நிறு வனம் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் பல்வேறு வேதிப் பொருட்களில் இதுவும் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது, ஆகவே நாங்கள் இதனை திரும்பப் பெற ஆரம்பித்துள்ளோம் என்றார்கள்

Losartan tablets லாஸர்டென் மாத்திரைகள் உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு தொடர்ந்து கொடுத்துவந்தது. முக்கியமாக இதயத்தில் இருந்து தூய ரத்தம் கொண்டுசெல்லும் இரத்த குழாயில் சிக்கல் உள்ளவர்களுக்கு இந்த மருந் துகள் பரிந்துரைக்கப்பட்டது. கடந்த 7 மாதங்களாக இந்த மருந்துகளை விற்பனைக்கு வெளியிடுகிறோம்,  இதுவரை யாரும் இந்த மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி புகார் அளிக்கவில்லை. இருப்பினும் நாங்கள் இவற்றை திரும்பபெற ஆரம்பித்துள்ளோம்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் ஜப்பானைச் சேர்ந்த மருந்து நிறு வனம் Pfizer Inc இரத்த அழுத்தம் தொடர்பான தனது நிறுவன மருந்துகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது, உயர் இரத்த அழுத்தம் தொடர்பாக நோய்க்கு கொடுக்கும் மருந்துகளை திரும்பப் பெற்று வருகிறது.

ஜப்பானிய நிறுவனம் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த தகவலில் சுமார் 763,000  ஆம்வலோ தயாரிப்பு மாத்திரைகள் மற்றும் மைலின் லேபாரட்டரி தயாரிப்பு மாத்திரைகளை இந்தியாவிலும் திரும்ப பெறத்துவங்கியுள்ளது.

மே லும் சோல்சோ ஹெல்த்கேர் நிறுவனமும் தங்களின் இரத்த அழுத்த மாத்திரைகளை தாங்களா கவே முன் வந்து திரும்பப் பெற ஆரம்பித்துள்ளது.

முக்கியமாக இரத்த அழுத்தத்திற்கு பரிந்துரைக்கப்படும் Irbesartan and 7 தொகுதி Irbesartan HCTZ tablets மாத் திரைகள் தொடர்ந்து திரும்பப்பெறப் படுகிறது.

இவை அனைத்தும், புற்றுநோயை உருவாக்கும் முக்கிய மூலக்கூறுகள் துணைப்பொருட்களாக உருவா வதை கண்டறியப்பட்ட உடன் தொடர்ந்து மத்திரைகளை திரும்ப பெறும் நிகழ்வுகள் தொடர்கிறது,

இது மேலும் இம்மாத் திரைகளை உட்கொள்ளவேண்டாம் என்று மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்படுவதாகவும் நிறுவ னங்கள் கூறியுள்ளது.

 

எலும்புகளை பலப்படுத்தும் அரைக்கீரை


எலும்பு பலமாக இருந்தால்தான் உடல்நலம் நன்றாக இருக்கும். வயது அதிகமாகும்போது எலும்புகள் பலம் குறையும். எலும்புகள் தேய்மானம் அடைகின்றன.

இதனால் நடப்பதற்கு சிரமம், கூன் விழுவது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். அரைக்கீரை, முருங்கை கீரை, புளிச்சை கீரை ஆகியவை எலும்புகளை பலப்படுத்தும் மருந்துகளாக விளங்குகின்றன.  மேலும் எலும்புகளில் உள்ள கால்சியம் குறைபாடு நீங்கும்.

- விடுதலை நாளேடு 27. 5 .2019

செவ்வாய், 21 மே, 2019

உறக்கத்தைக் கெடுக்கும் 8 முக்கிய காரணிகள்

சராசரி மனிதர்கள் தங்களின் வாழ் நாளில் மூன்றில் ஒரு பகுதியை உறங்கியே கழிக்கின்றனர்.உறக்கம் மனித உடலியலில் இன்னும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது  உறக்கம் மனிதன் உடல் மற்றும் சீரான மனநிலை இரண்டோடு மிகவும் ஆழமான தொடர்புடையதாக உள்ளது, பொதுவாக இதை நாம் மேலோட்டமாக அறிந்தி ருப்போம்.   சரியாக உறக்கமின்றி இருக்கும் மனிதர்கள் மாரடைப்பு உள்ளிட்ட பல உடல்நலச் சீர்கேடுகளுக்கு ஆளாகின்றனர். மருத்துவவல்லுனர்கள் மனிதர்களின் நிம்மதியான உறக்கம் குறித்து அதை கடைப் பிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு பரப்புரைச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறிக் கொண்டே உள்ளனர்.

உறக்கம் பற்றிய பல்வேறு கட்ட ஆய்வை உடல்நலத்திற்கான ஸ்லீப் ஹெல்த் என்ற தலைப்பில் ஆய்வு இதழ் பல்வேறு நபர்களிடம் ஆய்வை  நடத்தி யுள்ளது, அதுவும் உறக்கம் குறித்த விழிப் புணர்வை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு  இருக்கும் வகையில் உள்ளது. உறக்கம் பற்றிய நீண்ட ஆய்வில் மேற் கொண்ட மருத்துவ நிபுணர்கள் தூக்கமின் மைக்காக பல்வேறு காரணங்களை பட்டி யலிட்டு அதில் மிகவும் முக்கியமானதாக 20 காரணங்களை எடுத்துக் கொண்டு அவற்றை மனிதர்களின் இயல்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தி அவை எவ்வாறு மனிதர்களின் உடல் நலத்தைப் பாதிக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.   அந்த பட்டியலில் உறக்கமின்மைக்கான காரணங்கள் மிகவும் அபாயகரமானவை களாக உள்ளது.

1. சரியான உறக்கம்


பொதுவாக ஆரோக்கியமான மனிதர் களுக்கு குறைந்தபட்சம் அய்ந்துமணிநேரம் அல்லது அதற்கும் சிறிது குறைவான அளவு உறக்கம் கண்டிப்பாக தேவை, இந்த நேரம்  குறையும் போது உடல்நலிவுற ஆரம்பிக் கிறது,  நன்கு ஆரோக்கியமான ஒருவர் உறக்கத்தை தவிர்க்கும் போது அவரது உடல் பல்வேறு உபாதைகளுக்கு மெல்ல மெல்ல ஆளாகிக்கொண்டு வருகிறது, முக்கியமாக இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் மனநலம் தொடர்பான பாதிப்புகள், மனச் சோர்வு, போன்றவை அதிகரிக்கும். மேலும் உடலின் ஹார்மோன் செயல்பாடு களில் பெரிய மாற்றம் ஏற்படும். இதன் காரணமாக நீரழிவு, உடற்பருமன் அதிகரிக்கிறது, முதியவர்கள் மற்றும் தொடர் சிகிச்சை எடுக்கும் நபர்கள் 7 முதல் 9 மணி நேரம் தூங்கவேண்டும் என்று மருத்து வர்கள் பரிந்துரைக்கின்றனர். நன்றாக உறங்குவதும் ஒரு நோய் தடுப்பு சிகிச்சை முறைதான்,

2. உறங்கச் செல்லும், முன்பு


படுக்கைக்குச் செல்லும் முன்பு உங்களின் மனதிற்கு பிடித்த நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் பார்ப்பது அல்லது பாடல்களைக் கேட்பது ஒரு நல்ல பழக்கம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  நீங்கள் உறங்கச்செல்லத்தயாராகிக்கொண்டு இருக்கின்றீர்களா? முதலில் அலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பயன் படுத்துவதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.  மின்னணு திரைகள் வெளிவிடும் ஊதா கதிர்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளை விக்கின்றன. முக்கியமாக அவை மனங்களில் சஞ்சலத்தை உருவாக்கி தூக்கம் தொடர்பான எதிர்மறை காரணிகளை உருவாக்கி விடுகின்றன.

3.  உடலில் இயங்கும் கடிகாரம்


மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து உறக்க நேரம் கடைப்பிடிக்கப் படுகிறது, உங்கள் உடல் ஒரு கடிகாரம் போன்று அது தானாகவே இயங்கி உங்களின் உறக்க நேரத்தை உங்களுக்கு சுட்டிக்காட்டும் இதை நாம் எப்போதுமே புறந்தள்ளக்கூடாது, நமது உடல் வேலை செய்வது மற்றும் ஓய்வு எடுப்பது போன்றவை இயற்கையின் மாற்றங் களைப் பின்பற்றி நடைபெறுகிறது, சூரிய உதயத்தின் போது உடல் புத்துணர்ச்சி பெறுவது, சூரியன் மறையும் போது சோர் வாக இருப்பது போன்றவை நமது உடல் கடிகாரம் பின்பற்றும் ஒரு தொடர்நடவடிக்கை ஆகும். இதை நாம் பின்பற்றவில்லை என் றால் நமது உறக்க நேரத்தில் பெரும் மாற்றம் ஏற்படும். சரியான நேரத்திற்கு உறங்காமல் உட லுக்கு அதிக வேலைகளைக் கொடுத்து விட்டு நாமாகவே உறக்கத்திற்கு கால அளவை ஏற்படுத்துவது உடல் நலத்திற்கு கேடுகளை விளைவிக்கும் காரணிகள் ஆகும். கண்கள் மூடிய நிலையில் படுக் கையில் தூங்குவதுபோல் இருப்பதும் கிட்டத் தட்ட நல்லது.

இரவு நேரப் பணியில் உள்ளவர்கள் பெரும்பாலும் உறக்கமின்மை, மன அழுத் தம் போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளா கின்றனர். இதனால் நீரழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது

4. தூக்கம் வரவில்லையா? கண்களை மூடி ஒரு நிலைப் படுத்துங்கள்


சிலருக்கு வேலைப்பளு காரணமாக உறக்க உணர்வு மங்கியதைப் போல் உணரலாம், அல்லது களைப்பு ஏற்பட்டு உடல் சோர்வடைவது போல் உணரலாம், உடலை இவ்வாறு நாம் மாற்றுவது மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒன்றாக ஆய் வாளர்கள் கூறுகின்றனர்.  மனிதர்களது மூளை,  இதயம் மற்றும் நுரையீரல் போன்ற வற்றின் செயல்பாடுகள் விழித்திருக்கும் போது தனித்தன்மையுடனும் உறங்கும்  போது தனித்தன்மையுடனும் இயங்கு கின்றன, இது உடலுக்கு மிகவும் முக்கியமான செயல்பாடாக கருதப்படுகிறது.

உடலில் மிகமுக்கிய உறுப்புகளான இவைகளின் செயல்பாடுகள் ஆழ்ந்த உறக்கத்தின் மூலமே சாத்தியமாகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆழ்ந்த உறக்கம் மற்றும் அதன்மூலம் உடலில் உறுப்புகளின் செயல்பாடுகள் போன்றவை ஒன்றுக்கொன்று தொடர்பு டையது, ஆகவே நாம் உடலின் செயல்பாட்டிற்கு ஏற்ப மாற்றி கொள்ள வேண்டும். போதுமான தூக்கமின்மை உடலின் உறுப்புகளைப் பாதிக்கும் என் பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும் என்று ஆய்வாளர் ராபின்ஸ் கூறுகிறார்.

5.உறக்கம் என்பது நமக்கு கிடைத்த பரிசு ஆகும்


உறக்கமின்மை என்பது நாம் உறக் கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் பாதிப்பை ஏற்படுத்தும்,  உறக்கம் என்பது நமக்கு கிடைத்த பரிசு ஆகும், இதை நாம் கொண்டாடி வரவேற்கவேண்டும்,  சிலருக்கு முக்கிய அலுவலக கலந்துரையாடலின் போதோ, விமானப் பயணத்தில் நண்பருடன் பேசிக்கொண்டு இருக்கும் போதோ தூக்கம் வரலாம், முடிந்த வரை அது போன்ற நேரங்களில் உறக்கத்தைக் கட்டுப்படுத்து வதை விட விரைவாக முடித்துகொண்டு உறங்கச்செல்வது நல்லது.

6. உறங்கச்செல்லும் முன்பு தவிர்க்கவேண்டியது


இரவு உறங்கச்செல்லும் முன்பு வரவுசெலவு கணக்கு பார்ப்பது, சில மிடறு மது அருந்துவது, அல்லது நரம்புகளை மந்தப்படுத்தும் இருமல் மருந்துகளை சாப்பிடுவது போன்றவை உண்மையில் உங்களுக்கு உறக்கத்தைத் தராது, உங்களுக்கு உறக்கம் வந்தது போல் இருந்தாலும் இவை எல்லாம், உங்கள் மூளையை மிகவும் சோர்வடையச்செய்யும் ஒன்றாகும்,  இதன் மூலம் காலை நேரம் உங்களுக்கு தலைவலி மற்றும் சோர்வான உணர்வே ஏற்படும்

7. உறக்கமின்மையால் மூளையின் செயல்பாடுகள் பாதிப்படையும்


நாம் உறங்குவதற்காக சில பழக்க வழங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.  இது பொதுவான ஒரு நம்பிக்கையாக உள்ளது, இது நம்பிக்கை என்றாலும் இது ஒருவிதத்தில் நன்மை விளைவிக்கும் ஒன்றாகும், எடுத்துக் காட்டாக உறங்கச்செல்லும் முன்பு சூடான பால் அருந்தக் கூறுவார்கள். இது நல்ல பழக்கம் என்றாலும் சிலருக்கு பால் அருந்துவது பிடிக்காத ஒன்றாக இருக்கும். அப்படியென்றால் சூடான காபி சிறிது அருந்தலாம், இதன் மூலம் நல்ல உறக்கம் வரும் என்றால் அதை தொடர்வதில் தவ றில்லை என்கிறார் ஆய்வாளர் ராபின்ஸ்.

-  விடுதலை நாளேடு, 20.5.19