வியாழன், 22 பிப்ரவரி, 2018

கருவுற்ற பெண்களுக்குத் தேவை





கர்ப்பிணிப்பெண்கள் குழந்தை உண் டாகிய காலம் முதல் கொழுப்பு நீக்கிய இறைச்சி, மீன், கோழி மற்றும் முட்டை போன்றவற்றை நாளொன்றுக்கும் 450 மிலி கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் கருவில் வளரும் சிசுவின் மூளைத்திறன் அதிகரிக்கும்.  பிற்காலத்தில் குழந்தையின் உடல் ஆற்றல் எளிதில் வலுப்பெறும் என்று கர்னில் பல்கலைக்கழக மருத்துவப் பேராசி ரியர் மேரிகுட்டில் தலைமையில் நடந்த நீண்ட கால ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

ஆய்வின் முடிவை உலக உயிரியல் ஆய்வாளர் கூட்டமைப்பு தாங்கள் நடத்தும் பத்திரிகையில் வெளியிட்டு சிறப்பித்துள் ளது. உலக மருத்துவக் கழகமும் அமெரிக்க  உயிராய்வியல் அமைப்பு (திகிஷிணிஙி) இரண் டும் இணைந்து 2017-ஆம் ஆண்டிற்கான எதிர்கால ‘ஆற்றல்மிகு மனித சமூகம்’ என்ற தலைப்பில் உலகம் முழுவதும் நடந்துள்ள பல்வேறு ஆய்வறிக்கைகளை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. இதில் நியூயார்க் கில் உள்ள கர்லின் பல்கலைக்கழக மருத் துவப்பேராசிரியர் மேரிகுட்டில் தலைமை யில் நடந்த ஆய்வறிக்கை ஒன்று வெளி யாகியுள்ளது.

அதில் கோலைன் (நீலீஷீறீவீஸீமீ) என்னும் புரதம் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்தப் புரதம் அடங்கிய உணவுகளை அன்றாடம் 450 மிலி கிராம் என்ற விகித்தில் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடவேண்டும்,  இதன் மூலம் வயிற்றில் வளரும் சிசுவின் மூளைத்திறனும் நரம்புமண்டல் தகவல் கடத்தும் திறனும் அதி கரிக்கும்  என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தவகைப் புரதம் அனைத்து வகை பச்சைக் காய்கறியில் காணப்படுகிறது, ஆனால் அதை வேகவைக்கும் போது அந்தப் புரதங்கள் சிதைந்துவிடுகின்றது. அதே நேரத்தில் முட்டையின் வெள்ளைக் கரு, கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சி, மீன், கோழி,  உலர்பருப்பு வகைகளில் இந்த வகைப்புரதங்கள் அதிகம் உள்ளது, தினசரி இவ்வகை உணவுகளை உட்கொள்ளும் போது சிசுக்களின் மூளைத்திறன் மட்டுமல் லாது, பார்வைத்திறனை அதிகரிக்கச் செய் யும் நரம்புகளும், லென்சுகளை உருவாக் கும்  புரோட்டினும் அதிக திறன் பெறும் முக் கியமாக பெண்கள் கர்ப்பமான 5 வாரத்தில் இருந்து இந்தவகை உணவுகளை உட் கொண்டு வரவேண்டும்.

கர்லின் மருத்துவப் பல்கலைக்கழகம் எதிர்கால ஆரோக்கியமான குழந்தைகள் என்ற பெயரில் தொடர்ந்து பல ஆண்டு களாக பல்வேறு பாலூட்டிகளின் கர்ப்ப காலப்பருவம் அதற்கு முந்தைய உணவு முறை, கர்ப்பகாலத்திற்கு பிறகு பிறக்கும் சிசுக்களின் ஆற்றல் திறன் குறித்து ஆய்வு செய்துவருகிறது, இதே போன்று ஆஸ்திரே லியாவின் அடிலைட் பல்கலைக்கழகமும் எதிர்காலக் குழந்தைகள் நலன் குறித்த நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து ஆய்வு நடத்திய மருத்து வக் குழுவின் தலைவர் பேராசிரியர் மேரி குட்டில் கூறியதாவது, “மூளைவளர்ச்சி, நரம்பு மண்டலத்தின் தகவல் கடத்தும் திறன் குறித்த சில முக்கிய வேலைகளை குறிப் பிட்ட வகைப் புரதங்கள் செய்கின்றன இந்தப் புரதங்கள் தாயின் கருவில் வளரும்போதே கிடைப்பது அவசியமாகும், அப்படி கிடைக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தைகள் திறமையான ஆற்றலோடு பிறக்கும் வாய்ப் புகள் மிகவும் அதிகம். ஆகையால் கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சி, மீன், முட்டை கோழி போன்ற உணவுகளை பரிந்துரை செய்கி றோம். இவ்வகை உணவுகளில் குழந்தை களின் மூளைவளர்ச்சிக்கு தேவையான ஆற்றல் புரதங்கள் உள்ளன.

மேலும் கோலைன் புரதங்கள் அடங்கிய உணவுகளை பேறுகாலம் நெருங்கும் போது ஒரு நாளை இரண்டு வேளை சரிவிகிதமாக எடுத்துக்கொள்ளவேண்டும். இதனால் குழந்தைகளில் பார்வைத்திறனும் அதிகரிக் கும் இதுவும் எங்களின் ஆய்வின் மூலம் தெரிவந்துள்ளது.

ஆய்வின் போது 40 கர்ப்பினிப் பெண் களை இரண்டு குழுக்களாக பிரித்து ஒரு குழுவிற்கும் கோலைன் புரதங்கள் அடங் கிய உணவுகளை தினசரி 930 மிகி என்ற விகித்தில் ஒரு குழுவிற்கும் மற்றொரு குழு விற்கு 480 மிகி என்ற விகிதத்திலும் வழங்கி வந்தோம். இரண்டு குழுக்களில் உள்ள கர்ப்பிணிப்பெண்களுக்கு பிறந்த குழந்தை கள் ஆற்றல்திறன் பெருக்கம், மூளை வளர்ச்சி, போன்றவை இருந்தது, அதே நேரத்தில் இவ்வகைப் புரதங்களை அதிகம் எடுத்துக்கொண்ட பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் அதிக அளவு நோயெதிர்ப்பு சக்தியுடனும் பார்வைத்திறன் பெருக்கம் புத்திகூர்மைத்திறனுடன் பிறந்துள்ளதை எங்கள் ஆய்வின் மூலம் உறுதிபடுத்தியுள் ளோம்” என்று கூறினார்.

இந்திய ஆயுஷ் அமைச்சரவை 2018 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் வெளியிட்ட கையேட்டில் கர்ப்பிணிப் பெண்கள் இறைச் சிகளை உண்ணக்கூடாது, என்றும் கர்ப் பணிப்பெண்கள் இறைச்சிவகை உணவை உண்டுவந்தால் அவர்கள் மந்தமான மற்றும் கோபத்திறன் கொண்ட குழந்தைகளைப் பெற்றேடுப்பார்கள் என்று சில புராணக் கதையில் வரும் பாத்திரங்களை எடுத்துக் காட்டாக காட்டியிருந்தது, ஆயுஷ் அமைச் சரகத்தின் இந்தக் கையேட்டை இந்திய மருத்துவர் குழுமம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது,

சென்னையைச்சேர்ந்த மருத்துவர் ஒருவர் இறைச்சி உண்ணும் பழக்கமுடைய பெண்கள் அவர்களுக்குப் பிறக்கும் குழந் தைகள் குற்றவாளிகளாக இருக்கிறார்கள் என்று 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டு ருந்தார். இந்தக் கட்டுரைக்கும் மருத்துவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

- விடுதலை ஞாயிறு மலர், 10.2.18
 

திங்கள், 19 பிப்ரவரி, 2018

பக்கவாதத்திலிருந்து மீண்டு வரலாம்!

முதுமையில் பலரையும் அதிகம் முடக்கிப் போடும் நோய், பக்கவாதம். இதன் பாதிப்பால் செயலிழந்த கை, கால்களை மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு மன உறுதி தேவை. தசைப் பயிற்சி உள்ளிட்ட தொடர் சிகிச்சைகள் தேவை. ஆனால், அதில்தான் பலரும் தவறு செய்கின்றனர். பெரும்பாலோர் அவற்றுக்கு வழி செய்யாமலும், அருகிலிருந்து கவனிக்க வசதிசெய்யாமலும் பாதிக்கப்பட்ட வரைத் தனிமையில் விட்டு விடுகின்றனர். அந்தத் தனிமையே அவர்களுக்குப் பெரும் தண்டனையாகிவிடுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிறகு, வீட்டில் தசைப் பயிற்சிகள் மேற்கொள்ள ஓர் இயன்முறை மருத்துவரை ஏற்பாடுசெய்ய வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் இதற்கு ஒதுக்க வேண்டும். தோள், முழங்கை, மணிக் கட்டு, விரல்கள், தொடை, முழங்கால், பாதங்கள் என வரிசையாகத் தசைப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் சில வாரங்களுக்கு இயன்முறை மருத்துவரை வீட்டுக்கே வரச் சொல்லி, பயிற்சி பெறலாம். அதன் பிறகு, நீங்களே அவற்றைச் செய்ய முடியும். அல்லது வீட்டில் உள்ளவர்கள் இதற்கு உதவலாம்.

பக்கவாதம் வந்தவர்களுக்கு உடல் சமன்பாட்டில் பிரச்சினை ஏற்படுவது வழக்கம். உதாரணமாக, படுக்கையைவிட்டு எழுந்தி ருக்கும் போது, உடல் ஒரு திசையில் இழுப்பது போன்று இருக்கும். இந்த நிலைமையைத் தவிர்க்கவும் தனிப் பயிற்சிகள் உண்டு. இயன்முறை மருத்துவர் உதவியுடன் இவற் றையும் செய்ய வேண்டும். தொடர்ந்து இந்தப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், சில வாரங்களில் வாக்கர் கொண்டு நடக்கப் பழகிவிடலாம்.

படுக்கைப் புண்களைத் தடுக்க

பக்கவாதம் வந்தவர்களுக்குப் படுக்கைப் புண்கள் வர வாய்ப்பிருக்கிறது. இதை முதலில் தவிர்க்க வேண்டும். அதற்குப் படுக்கும் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். மெலி தான தலையணையைத் தலைக்கு அடியில் வைத்துக்கொள்ளலாம். முழங்கைவரையிலும் கைக்குத் தலையணை வைத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் காலுக்கும் தலையணை வைத்துக்கொள்ளலாம். தோள்கள் தலை யணைக்கு முன்புறம் இருக்க வேண்டும்.

ஒரே நிலையில் 2 மணி நேரத்துக்கு மேல் படுக்கக் கூடாது. படுக்கையைச் சுத்தமாகவும் சுருக்கங்கள் இல்லாமலும் வைத்துக்கொள்ள வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும். தண்ணீர்ப் படுக்கை  நல்லது.

சருமம் சிவப்பாகிறதா, சருமத்தில் புண் இருக்கிறதா எனத் தினமும் சோதித்துக்கொள்ள வேண்டும். எழுந்திருக்கும்போதும் உட்காரும் போதும் மற்றவர் உதவியுடன் செய்வதே நல்லது. அல்லது படுக்கைக்கு அருகில் சுவரில் கைப்பிடிகளைப் பொருத்திக்கொண்டு, அவற்றைப் பிடித்து எழுந்து உட்காரலாம்.

நிறைய தண்ணீர் அருந்துங்கள்

உணவை விழுங்குவதிலும் பேசுவதிலும் சிரமம் இருக்கும். இவற்றுக்கும் தனிப் பயிற்சி களை மேற்கொள்ள வேண்டும். இயன்முறை மருத்துவர் தொண் டைத் தசைகள் வலிமை பெறப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுப்பார். சாப்பிடும்போது உணவு புரையேறிவிடாமல் இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும். அதற் கேற்ப உணவைத் தேர்வுசெய்ய வேண்டும். மெல்வதற்கு எளிதான உணவு வகைகளைச் சிறிதளவில் அடிக்கடி சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை எழாது.

பேச்சு - மொழிப் பயிற்றுநர் சுலபமாக உணவை விழுங்க வழி சொல்லுவார். உங்கள் பேச்சு தொடர்பான பிரச்சினைகளுக்கும் பயிற்சிகள் தருவார்.  விழுங்குவதில் சிரமம் ஏற்படும் காரணத்தால் முழு தானியக் கஞ்சி, பருப்புக் குழம்பு, அரைக்கப்பட்ட காய்கறி, கறி, பழம், மசிக்கப்பட்ட கிழங்கு, அரைவேக்காடு முட்டை, பிரக்கோலி, முட்டைக்கோஸ், சோயா பீன்ஸ், அவரை, பச்சைத் தேநீர், இலையுள்ள காய்கறிகள், ஓட்ஸ், தயிர், கிரில் செய்த மீன், பாலாடைக்கட்டி ஆகியவை சிறந்த உணவு வகைககள். இவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

மலச்சிக்கல்  தவிர்க்க நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். நார்ச்சத்துள்ள முழுத் தானியங்கள், சிறுதானியங்கள், காய், பழம் தினமும் சாப்பிடவேண்டும். மலச்சிக்கலை லகுவாக்கும் மாத்திரைகளையும் பயன்படுத் தலாம்.

- விடுதலை நாளேடு -19.2.18

தூக்கத்தை தவிர்த்தால் விளையும் பாதிப்புகள்


தூக்கம் மனிதர்களுக்கு  இன்றியமையாத ஒன்றாகும். சில நாட்கள் தூங்காமல் இருந்தாலே மனித உடலில் பல பாதகமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனம் சூரிய வெளிச்சத்தைப் பொறுத்தே தன்னுடைய தூக்கம், விழிப்பை அமைத்துக்கொண்டு வந்தி ருக்கிறது. அதற்கு ஏற்றவாறே நமது உடலும் சூரியகாந்தி மலர்களைப் போல் சூரிய வெளிச் சத்துக்கு ஏற்றவாறு பகலில் வேலை செய்யவும் இரவில் ஓய்வெடுக்கவும் பழகியுள்ளது.

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட இரவானதும் சுமார் ஏழு ஏழரை மணிக்கே மக்கள் தூங்கச் சென்றுள்ளனர். இரவைப் பகலாக்கும் மின்சாரத்தின் பரவலாக்கத்துக்குப் பின்னரே தூங்கச் செல்லும் நேரம் தாமதமாகத் தொடங்கியது. பின்னர் வானொலி, தொலைக் காட்சி, கணினி என ஒவ்வொன்றாகப் படுக்கை யறையை ஆக்கிரமிக்க, இறுதியில் செல்பேசியின் வருகையால் பலரும் மறுநாள்தான் தூங்கச் செல்வது என்றாகிவிட்டது. 
என்னதான் அதி நவீன அய்போனைப் பார்த்துக்கொண்டே படுத்துக்கொண்டிருந் தாலும், அந்தி கருத்தவுடனேயே தூங்கச் சென்ற ஆதிமனிதன் காலத்திலிருந்து நம்மு டைய உடல் பெரிதாக மாறிவிடவில்லை.

குறையும் எதிர்ப்பு ஆற்றல்

தூக்கத்தின்போது உடலுக்குள் நிகழும் செயல்கள் பற்றி இன்னும் முழுமையாகத் தெரிந்து கொள்ளப்படவில்லை. எனினும், உயிரினங்கள் எல்லாவற்றுக்குமே தூக்கம் மிக முக்கியம். அதுவும் உயிரினங்களில் மூளையின் செயல்பாடுகள் சிக்கலாகச் சிக்கலாகத் தூக்கத்தின் தேவையும் அதி கரிக்கிறது.

தூங்காமல் இருக்கும்போது உடலில் ஸ்டீராய்டு ஹார் மோன்கள் அதிகமாகச் சுரப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது.

உடல் பருமனுக்குத் தூக்கமின் மையும் ஒரு முக்கியக் காரணம். நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைதல் போன்ற பல எதிர் விளைவுகளும் ஏற்படுகின்றன.

தூக்கமின்மையால் வரும் கவனக் குறைபாட் டால் பல விபத்துகள் ஏற் படுகின்றன என்பதும் அதிர்ச்சியூட்டும் உண்மை.

கவலையால் வராத தூக்கம்

தூக்கமின்மைக்கு ஒரு முக்கியக் காரணம், மனப் பதற்றம். தூங்கப் போகும்போதுதான்  தேவையின்றி கவலைப்படவும் தொடங்கு கிறோம். ஏனென் றால், பகல் முழுதும் வேறு வேறு வேலைகள் நமது கவனத்தை ஆக்கிரமித்து இருந்திருக்கும்.

இன்னும் சிலருக்கு வேறொரு கவலையால் தூக்கம் வராமல் போய்விடும். தூக்கம் வரவில் லையே என்ற கவலைதான் அது! குடிப் பழக் கத்தை நிறுத்த முடியவில்லையே என்ற கவலை யால் குடிப்பதைப் போன்றதுதான்

தூங்கவிடாத சிந்தனை

தூக்கம் வரவில்லையே எனக் கவலைப் பட்டாலே தூக்கம் தொலைந்து போய்விடும். தூங்குவது இயல்பாக நடைபெறாமல், அதற்காகப் பெரிதும் முயற்சி மேற்கொண்டால்  எதிர்மறை யாகவே முடிந்துவிடும். பதவி, புகழ், நல்ல பெயர், விளம்பரம் போன்றவற்றைப் போல் தூக்கமும் தானாக வருவதே சிறப்பாகும்.

இன்னும் சிலர் மது, காபி, தேநீர், குளிர் பானங்கள் போன்றவை தூக்கத்துக்கு உதவும் என நினைத்துப் பயன்படுத்துவார்கள். அவை தற்காலிகமாகத் தூக்கத்தைத் தந்தாலும்,   நாள டைவில் தூக்கமின்மையை இவை அதிகரித்து விடும்.

தூங்கும் அறைக்குள் சிந்தனைகளுக்கும் செல்பேசிகளுக்கும் தடை போட வேண்டும். நல்ல தூக்கத்துக்கு உடற்பயிற்சி உறுதுணை.

இவ்வளவு சிறப்புமிக்க தூக்கம் முக்கியமே என்றாலும், அளவுக்கு அதிகமாகத் தூங்குவதும் சமநிலைச் சீர்குலைவை ஏற்படுத்தும். 
- விடுதலை நாளேடு, 19.2.18

வியாழன், 15 பிப்ரவரி, 2018

வைட்டமின் டி குறைபாடு ஆண்களை என்ன செய்யும்? 

நடுத்தர வயது ஆண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின்மை காரணமாக உண்டாகும் பல்வேறு நோய்கள் மற்றும் ஹார்மோன் பிரச்சினைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.  எலும்புகளின் வலுவுக்கு கால்சியம் மிகவும் முக்கியம். அந்த கால்சியம் சத்து உடலில் கிரகிக்கப்பட வைட்டமின் டி சத்து மிகவும் அவசியம். எலும்புகளின் ஆரோக்கியத்தை காப்பாற்றுவதை தாண்டி வைட்டமின் டிக்கு பல முக்கிய பணிகள் உண்டு. அதுவும் ஆண்களுக்கு நீரிழிவு வராமல் தடுப்பதில் தொடங்கி, குழந்தையின்மையைத் தவிர்ப்பது வரை இதில் அடக்கம்.

எலும்புகளில் மட்டுமின்றி, உடல் திசுக்கள் பலவற்றிலும் இந்த வைட்டமின் இருப்பதும், மூளையின் பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி, கணையம் போன்றவற்றிலும்கூட இருக்கிறது. ஆண்களுக்கு உயிரணு உற்பத்திக் குறை பாட்டுக்கும், அந்த அணுக்களின் தரக் குறைவுக்கும்கூட வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்கிறது இந்த ஆராய்ச்சி.

வைட்டமின் டி சத்தில் குறைபாடு ஏற்பட்டுவிட்டால் அது உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்காக செயல்படும் ஹார்மோன்களின் சீரான சுரப்பை குறைத்து விடுவதுடன் நாளாவட்டத்தில் உடல் தசை சரிவடைந்து பலவீனமடையச் செய்துவிடும் என்று அந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. படிப்படியாக உடலில் உள்ள சத்துக்களை இழந்து, உடல் இயக்கப் பிரச்சினை ஏற்பட்டு, வயது ஏறும் போதே வலுவிழந்து, உடல் பகுதிகளில் பாதிப்படைந்து ஒரு கட்டத்தில் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என்று அச் சுறுத்துகிறது இந்த ஆராய்ச்சி. உலகம் முழுவதும் பலவீனம் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது என்கிறார் அக்னிஸ்கா ஸ்விகிக்கா.

இத்தனை அவசியமான இந்த வைட்டமினை நம் உடலே உற்பத்தி செய்கிறது. சூரிய வெளிச்சத்தில் உள்ள புற ஊதா கதிர்கள், ஒரு வித ஹார்மோனின் தூண்டுதலின் உதவியுடன், டீஹைட்ரோ கொலஸ்ட்ரால் என்பதை சில வேதியல் மாற்றங்கள் செய்து, வைட்டமின் டியாக மாற்றித் தருகின்றன. காளான், மீனின் சதை (சல்மான், டியூனா மற்றும் மாக்கரெல்) மற்றும் மீனின் குடல் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் டி அதிக அளவில் இருக்கும் - எனவே அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்கு மேல் அடிக்கடி கை, கால் வலி, எலும்பு வலி, உடல் வலி போன்றவை இருந்தால் உடனே மருத்துவரை நாடி வைட்டமின் டி சத்துக் குறைபாடு இருக்கிறதா என ரத்தப் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்க வேண்டும்.
- விடுதலை நாளேடு, 5.2.18

50 வயதை கடந்தவர்களின் கவனத்துக்கு!  


அய்ம்பது வயதுக்குப் பிறகு சிலருக்கு நினைவுத் திறன் குறைந்துவிடுவது ஏன்?

ஞாபக மறதி என்பது 58 வயதிற்குப் பிறகு சகஜமான ஒன்றுதான். இது பரம்பரையாக வரக் கூடும். இதை சிறிய அளவில் ஏற்படும் ஞாபக மறதி என்று மருத்துவம் கூறுகிறது.

ஆனால் இது பின்னாளில் இது மன உளைச்சல், அல்லது, நரம்பியல் பிரச்சினைகள் அல்லது அல்னசிர்  எனப்படும் ஞாபக மறதி பிரச்சினையில் கொண்டு விடலாம். வேலை ஸ்டெரெஸ், குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் பற்றிய கவலை, இதனால் ஏற்படுகின்ற மன உளைச்சல், ஆகியவற்றால் இத்தகைய ஞாபக மறதி ஏற்படலாம்.

ஞாபக மறதி அதிகரிக்க பயம் ஏற்பட்டு, அதனால் பதற்றம் அடைவார்கள். பதற்ற நிலையில் இருந்தால் நிச்சயம் நினைவுத் திறன் குறையும். இது ஒரு விஷ வட்டம் போலத் தான். எனவே மறதியைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம், தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் எளிதாக இதை எதிர்க்கொள்ள முடியும்.

வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். அன்றாடம் செய்யும் வேலைகளில் சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்தால் மறதியை கட்டுக்குள் வைக்கலாம். உதாரணமாக ஒரு வேலையைத் தொடங்கும் முன் அதற்குரிய முன்னேற்பாடுகளை செய்து முடித்து விடுவது நல்லது. பொருட்களையும் அதனதன் இடத்தில் வைத்துவிட்டால் தேட வேண்டிய அவசியம் இருக்காது.

ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியல் இட்டு, ஒரு தாளில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும், அந்த வேலையைச் செய்து முடித்ததும் அதில் ஒரு டிக் போடுங்கள்.

உடலை உறுதியாக பராமரிப்பது போல், நமது எண்ணங்களை நினைவில் வைக்கும் திறனை அதிகரிக்க வைக்க வேண்டும். செஸ், கேரம் போர்டு, குறுக்கெழுத்துப் போட்டி போன்ற விளையாட்டுகள் மூளையை கூர்மை யாக்கும். நினைவுத் திறன், கவனம், ஒரு செயலின் மீது கருத்தை நிலை நிறுத்துதல் போன்றவற்றை மேம்படுத்தும்.

போதுமான தூக்கத்தை பெறவில்லையெனில் மறதி அதிகரிக்கும். தூக்கத்தில் ஏதேனும் நினைவுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தினால் முழுமையான தூக்கத்தை பெற முடியாது.

சத்தான காய்கறிகள், பழங்கள், வால்நட், பாதாம் பருப்பு போன்றவை நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்யும்.

- விடுதலை நாளேடு, 5.2.18

சிறுநீரக நோய்கள் யாரை அதிகம் பாதிக்கும்?


ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளது. அவை ஒவ்வொன்றும் 150 கிராம் எடை உடையது. அவரை விதை வடிவத்தில் உள்ள சிறுநீரகமானது உடலின் பின்பகுதியில் அமைந்துள்ளது. ரத்தத்தை பெறுவதும் வெளி அனுப்புவதும் இதன் முக்கியப் பணிகளாகும்.

சீறுநீரகத்தின் 
செயல்பாடுகள்

உடலில் உற்பத்தி ஆகும் நச்சுப் பொருட்களை பிரித்தல்

நீர்நிலை சமப்படுத்துதல்

உப்பைச் சமப்படுத்துதல்

அமிலத்தன்மையை சமப்படுத்துதல்

ரத்தக் கொதிப்பை சீர் செய்தல்

தெரியுமா?

சிறுநீரகத்தில் சுரக்கும் ஒருவித ஹார்மோன் ரத்த உற்பத்திக்கு காரணமாகிறது. வைட்டமின் டியின் உதவியால் எலும்புகளை உறுதிப்படுத்துகிறது

சிறுநீரகக் கோளாறின் 
அறிகுறிகள்

முகத்தில் வீக்கம்,  சிறுநீர்க் குறைவு

கால்களில் வீக்கம், சிறுநீரில் ரத்தம்

சிறுநீர் கழிப்பதில் சிரமம், பசியின்மை

வாந்தி, உடல் அழற்சி, தூக்கமின்மை

அரிப்பு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்

பரிசோதனைகள்

மேற்சொன்ன அறிகுறிகளில் ஏதேனும் சில உங்களுக்கு இருக்குமாயின் உடனடியாக மருத்துவரை அணுகி முதலில் ஆலோசனைகளைப் பெறுங்கள்.

ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளை மருத்துவரின் பரிந்துரையின் படி மேற்கொள்ளவும்.

இதற்கான பரிசோதனைகள் சுலபமானது. குறைந்த செலவில் செய்து கொள்ள முடியும்.

யாரை அதிகம் 
பாதிக்கும்?

சர்க்கரை நோய் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அதிக ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும் இது வரும் வாய்ப்பு அதிகமுள்ளது.

தற்காப்பு

சீரான உணவு முறை சிறுநீரகப் பராமரிக்கு அனுகூல மானதாகும்

புகை பிடிப்பதை நிறுத்தவும். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

சுய மருத்துவம் ஒருபோதும் செய்யாதீர்கள். குறிப்பாக வலி நிவாரணிகளை உட்கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள்.

உணவில் உப்பை குறைத்து சாப்பிடுங்கள்.

தினமும் நடப்பதோ அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

நிறைய தண்ணீர் குடியுங்கள்.

உங்கள் கவனத்துக்கு

ரத்த கொதிப்பு 120 / 180 வரை இருக்கலாம்

வெறும் வயிற்றில் ரத்தத்தில் சர்க்கரை 110 /க்கு குறைவாக இருக்க வேண்டும்

ரத்தத்தில் கிரியாடினின் அளவு 0.6 - 1.2 / இருக்க வேண்டும்.

மருத்துவர் என்ன செய்வார்?

உங்களுக்கு சிறுநீரக கோளாறு வர வாய்ப்பு உள்ளதா என்று கூறுவார்.

ஆரம்ப நிலையில் நோயை கண்டுபிடிப்பார்.

சிறுநீரகங்களைப் பாதுகாக்க மருந்துகளை அளிப்பார்.

நோயை தடுக்கவும் பல நாட்களுக்கு தவிர்க்கவும் ஆலோ சனை அளிப்பார்கள்.

சிறுநீரகம் பற்றி மேலும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும், இலவசமாக கவுன்சிலிங் மற்றும் ஆரம்ப கட்ட பரிசோதனைகளை செய்து கொள்ளவும் அம்பத்தூரில் இயங்கிவரும் டாங்கர் விழிப்புணர்வு அமைப்பை அணுகலாம். தொலைபேசி 044 - 2625 0727 / 4231 5115

- விடுதலை நாளேடு,5.2.18