திங்கள், 22 ஜனவரி, 2018

இளமையில் முடி உதிர்தல்- நரை வருவது ஏன்?


இளம் வயதிலேயே முடி உதிர்வதற்கு என்ன காரணம் எனக் கண்டறிய வேண்டும். அதைச் சரிப்படுத்தினால் முடி உதிர்வது நின்றுவிடும். உங்கள் வயதில் முடி உதிர்வதற்கான பொதுவான காரணங்களைப் பார்ப்போம்.

முடி வளர்வதற்குப் புரதச்சத்து, இரும்புச்சத்து, தாமிரச்சத்து, துத்தநாகச்சத்து, அயோடின், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், பயோட்டின் மற்றும் வைட்டமின்  சி சத்துகள் தேவை. இவற்றில் ஏதே னும் ஒரு சத்து குறைந்தாலும் முடி உதிரத் தொடங்கி விடும். அதிலும் இரும்பும் புரதமும் உடலின் தேவைக்கு இல்லையென்றால், முடி உதிர்வது உறுதி.

ஈஸ்ட்ரோஜன், தைராக்சின் போன்ற ஹார் மோன்களின் குறைபாடுகளால் தலைமுடி உதிர் கிறது. மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் தலைமுடி உதிரும். சமீபத்தில் டைபாய்டு, மஞ்சள் காமாலை, அம்மை நோய் போன்றவை பாதித்தி ருந்தால் தலைமுடி உதிரலாம். முடி உதிர்வதற்கு பொடுகும் ஒரு முக்கியக் காரணம்தான்.
குளித்தபின் ஈரம் காய்வதற்குள் தலைவாருதல், வீரியம் மிகுந்த அல்லது தரம் குறைந்த ஷாம்பு களைப் பயன்படுத்துதல், அடிக்கடி முடியை பிளீச் செய்தல், தரமற்ற தலைச்சாயங்களைப் பூசுதல், கடினமான சீப்புகளைப் பயன்படுத்துதல், ஹேர் டிரையரை அதிகமாகப் பயன்படுத்துதல், தலை முடியை இறுக்கமாகக் கட்டுதல் போன்றவை தலைமுடி உதிர்வதை ஊக்குவிக்கின்றன.

இளநரை விழுவது ஏன்?

இளநரைக்கு வம்சாவளி ஒரு முக்கியக் காரணம். உங்களுக்கு இந்த மாதிரி இளநரை வந்திருக்கு மானால், அதற்குச் சிகிச்சை பயன் தராது. தலைச் சாயம்தான் தீர்வு. ஆனால், வைட்டமின் குறைவு, தாதுச்சத்துக் குறைவு, பிட்யூட்டரி பிரச்சினை, தைராய்டு பிரச்சினை போன்றவை காரணமாக இளமையில் நரை ஏற்பட்டிருந்தால், அதைக் குணப் படுத்த முடியும். பயாட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் பென்டோதினேட், பி.ஏ.பி.ஏ , துத்தநாகம் போன்ற பல சத்துகள் கலந்த மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொண்டுவர, இளநரை மறையும். தைராய்டு பிரச்சினை உள்ளதா எனப் பரிசோதித்துத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெறுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். தினமும் கால் மணி நேரமாவது வெயிலுக்குச் செல்லுங்கள். நல்ல காற்றோட்டமான இடத்தில் படுங்கள்.

நீங்கள் தற்போது சாப்பிட்டு வரும் மாத்திரை களால் பக்கவிளைவுகள் ஏற்படாது. அதிக குளோ ரின் கலந்த தண்ணீரிலோ உப்புநீரிலோ குளித்தால், முடி உதிர வாய்ப்புண்டு. மென்மையான தண்ணீரில் குளித்தால் நல்லது.

- விடுதலை நாளேடு, 22.1.18

வாய்ப்புண்ணுக்கு காரணம் என்ன?


வாய்ப்புண்ணை ஏற்படுத்தும் பொதுவான காரணங்களை முதலில் பார்ப்போம். ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு, இரைப்பையில் புண், குடலில் அழற்சி நோய்கள், ரத்தச்சோகை, நீரிழிவு, பல் ஈறு கோளாறுகள், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வருகிற சாத்தியம் அதிகம். வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடும் பழக்கம் இருந்தாலும், புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களாலும் வாய்ப்புண் வரலாம்.

எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும்.

நீங்கள் வேறு ஊருக்கு மாறிச் செல்லும் பொழுது அங்குள்ள சுற்றுப்புறத்திலிருந்து சாயக் கழிவுகள், உலோகக் கழிவுகள், அமிலம் கலந்த புகைகள், தொழிற்சாலை நுண்துகள்கள் போன்றவற்றில் ஏதாவது ஒன்று தாக்கும் வாய்ப்பிருந்தாலும் வாயில் புண் வர வாய்ப்பிருக்கிறது.

சரியான உறக்கம் இல்லையென்றாலும், அதிகமாகக் கவலைப்பட்டாலும் வாய்ப்புண் வரும். கவலை, இரைப்பையில் அமிலச் சுரப்பை அதிகப்படுத்தும். அந்த அதீத அமிலம் உறக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும். அப்போது தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்.

வாய்ப்புண் வருவதற்கு ஒவ்வாமையும் ஒரு காரணம்தான். உணவு ஒவ்வாமை - குறிப்பாக, செயற்கை வண்ண உணவுகள், மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள்கன்னத்தைக் குத்திப் புண் உண்டாக வாய்ப்பு உண்டு.

அடிக்கடி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கும் அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கும் இது நிரந்தரத் தொந்தரவாகிவிடும். வலிப்பு நோய் மாத்தி ரைகள் போன்ற சில மருந்துகளின் பக்க விளைவு காரணமாகவும் வாய்ப்புண் வருவது உண்டு. திடீரென உடல் எடையைக் குறைத் தாலும் வாய்ப்புண் வர வாய்ப்பிருக்கிறது. மூட்டுவலி, சுயத்தடுப்பாற்றல் நோய், ஹார் மோன்களின் மாற்றம் ஆகிய காரணங் களாலும்

வாய்ப்புண் ஏற்படுவது உண்டு.

உங்களுக்கு எந்தக் காரணத்தால் வாயில் புண் வருகிறது என்று தெரிந்து சிகிச்சை பெறுங்கள்.

வாய்ப்புண்ணில் சில வகைகள் உள்ளன. அதன் வடிவத்தைப் பார்த்தே பெரும்பாலான வாய்ப்புண்களுக்குக் காரணத் தைச் சொல்லி விடலாம். இதற்கு மருத்துவரின் நேரடிப் பரிசோதனைதான் உதவ முடியும்.

பெரும்பாலான வாய்ப்புண்கள் சரியான உணவு மூலமே குணமாகிவிடும். அதே நேரத் தில் வாய்ப்புண் வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால் அது புற்றுநோயாக மாறு வதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே, வாய்ப்புண் தானே என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.

என்ன சிகிச்சை?

மருத்துவர்களிடம் உரிய ஆலோசனை பெற்று சிகிச்சையை மேற்கொள்ளவேண்
டும்.

தடுப்பது எப்படி?

வாய்ச்சுத்தம் காப்பது வாய்ப்புண்ணைத் தடுப்பதற்கான முதல் படி. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் காண்பித்து ஸ்கேலிங் முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கூரான பற்களைச் சரி செய்ய வேண்டும். சோடியம் லாரில் சல்பேட்  கலந்திருக்கும் பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது. புகைப்பிடிக்கக் கூடாது. வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடக் கூடாது. மது ஆகாது. நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவு ஒவ்வாமை/மருந்து ஒவ்வாமை இருந்தால் தவிர்க்க வேண்டும்.

இந்த உணவுகள் முக்கியம்!

பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல் லம், தேன், பேரீச்சை, முளைகட்டிய பயறுகள், கொண்டைக்கடலை, பச்சைப்பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் ஆகிய வற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படு வதை நிச்சயம் தடுக்கலாம்.

- விடுதலை நாளேடு, 22.1.18