மாரடைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாரடைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (11)இதயத்தமனி (அடைப்பு) நோய்

புதன், 11 மார்ச், 2020

மாரடைப்பு என்றால்....

மாரடைப்பு  (Heart Attack) என்பது என்ன?

இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் கொழுப்புப் படிந்து, ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போது, மாரடைப்பு (Heart Attack) உருவாகிறது. அதாவது, ரத்த ஓட்டம் தடைபடுவதால் அல்லது ரத்த ஓட்டம் இல்லாமல் போவதால் இதயத்துக்குத் தேவை யான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், ரத்த செல்கள் அழியத் தொடங்கும். இதனால், இதயம் பாதிக்கப்பட்டு, தனது துடிப்பை நிறுத்திக்கொள்வதே மாரடைப்பு.

திடீர் இதயத்துடிப்பு முடக்கம்(Sudden Cardiac Arrest) என்பது என்ன?

நம் இதயத்துக்கு மத்திய நரம்பு மண்டலத்தில் இருந்து மின்னோட்டம் வருகிறது. சில காரணங்களால் இந்த மின்னோட்டத்தில் ஏற்ற இறக்கங்கள் (Fluctuations) ஏற்படும்போது, இதயத் துடிப்பு திடீரென  அதிகரித்தும் குறைந்தும் தாறுமாறாக செயல்படுகிறது. இதனால், ஒரு கட்டத்தில் எரிந்துகொண்டிருக்கும் பல்பு ணஃபீஸ் போவதைப் போல நமது இதயம் சட்டென தன் துடிப்பை நிறுத்திக்கொள்கிறது. இந்த நிலையையே திடீர் இதயத் துடிப்பு முடக்கம் (Sudden cardiac arrest) என்பார்கள். இதயத் துடிப்பின் திடீர் நிறுத்தத்தால், உடலுக்குத் தேவையான ரத்த ஓட்டம், ஆக்ஸிஜன் தடைபடுகிறது. தொடர்ச்சியாக 10 நிமிடங்களுக்கு மேல் மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் தடை ஏற்படுவதால் மயக்க நிலைக்குச் சென்று,  சுயநினைவு இழக்கும் நிலை ஏற்படுகிறது.

வேறுபாடு  அறிவது எப்படி?

மாரடைப்பு ஏற்படும்போது முதலில் நெஞ்சுப் பகுதியில் ஒரு விதமான வலி (நெஞ்சைப் பிசைகிற மாதிரியோ, அழுத்துகிற மாதிரியோ வலி) ஏற்படுவது போல தோன்றும். இந்த வலி கழுத்து மற்றும் இடது கை பகுதிகளில் பரவும், ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். இதயத்துடிப்பு இருக்கும்,  மூச்சுத் திணறல் உண்டாகும். வியர்த்துக் கொட்டி, மயக்கம் வரும். இதுபோன்ற அறிகுறிகளை வைத்தே மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அறியமுடியும். அதாவது மாரடைப்பு வந்தவர்கள் நெஞ்சுவலியைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு சுயநினை வோடுதான் இருப்பார்கள். எனவே, உடனடியாக ரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆஸ்பிரின் போன்ற மாத்தி ரைகள் எடுத்துக்கொண்டு  இதய அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்கு வசதி உள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கே மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகள் அளித்து உயிரைக் காப்பாற்றுவர்.

திடீர் இதயத்துடிப்பு முடக்கம். மாரடைப்பைவிடவும் அபாயகரமானது, ஏனெனில் எந்தவித அறிகுறியும் இல்லாமல், திடீரென ஒருவர் நிலைகுலைந்து, மயக்க நிலையில் தரையில் சாய்ந்தால் அது திடீர் இதயத் துடிப்பு முடக்கமாக இருக்கலாம். இதயத் துடிப்பு நின்றுவிடுவதால், இதயத்தின் உள்ளிருந்து ரத்தத்தை உந்தித் தள்ளும் பணியை இதயம் நிறுத்திவிடுகிறது. எனவே, இதயத்திலிருந்து பிற உறுப்புகளுக்கு ரத்தம் செல்ல, நெஞ்சுப் பகுதியில் வேகமாக அழுத்தம் கொடுத்து, வாயோடு வாய் வைத்து செயற்கை  மூச்சு  அளிக்கும் முதலுதவி அளிக்க வேண்டும். இதற்கு  சி.பி.ஆர் (Cardiopulmonary Resuscitation) முத லுதவி என்று பெயர். தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் கொண்டுசென்றால் டிஃபிப்ரிலே ஷன் (Defibrillation) கருவி மூலம் மின் தூண்டல் ஏற்படுத்தி, இதயத்துக்கு உயிரூட்ட முடியும். திரைப் படங்களில் நெஞ்சுப் பகுதியில் அயன் பாக்ஸ் போல ஒரு கருவியை வைத்து வைத்து எடுப்பார்களே அதுதான் டிஃபிப்ரிலேஷன் கருவி.

 - விடுதலை நாளேடு 9. 3.20

வியாழன், 8 நவம்பர், 2018

*கொழுப்புக்கும் இருதய நோய்க்கும் தொடர்பு இல்லை!' - ஆய்வில் தகவல்*

இதய நோய்க்கும் கொழுப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது ஆய்வில் நிரூபணமாகியுள்ளதாக சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இருதய நோய்
இதுதொடர்பாக அவரிடம் பேசினோம்.`` கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் என வரும்போது அறிவியலா அரசியலா என்ற போராட்டத்தில் அறிவியல் தோற்று, அரசியல் வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய உலகில் மனித நலன் புறம் தள்ளப்படுகிறது என்பதை உறுதியாக்கி உள்ளது. உணவில் உள்ள கொழுப்புச்சத்தால் இதய நோய் அதிகமாகிறது என்பதே பரவலான கருத்தாக இருந்தாலும் உண்மை என்னவெனில் இக்கருத்தில் அறிவியல் தோல்வியடைந்து மக்கள் எவ்வாறு முட்டாள்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ காரணவியல் ஆய்வாளர் அன்செல் கீ (Ancel key ) 7 நாடுகளில் கிடைத்த புள்ளி விவரப்படி கொழுப்பு மற்றும் இதய நோய் தொடர்பான ஆய்வை மேற்கொண்டார். அதில் உணவில் உள்ள கொழுப்பு மற்றும் இதய நோய்க்கு நேரடி தொடர்பு இல்லை என்று உறுதியாகியுள்ளது. 22 நாள்கள் புள்ளி விவரங்களை ஆய்வு செய்த அவர் நேரடி தொடர்பை உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதை உணர்ந்தார். இதை அறிந்து ஒன்றன் பின் ஒன்றாக புள்ளி விவரத்தை நீக்கினார். இதன் மூலம் நேரடி தொடர்பு இருப்பதாக அவரால் வெட்டி, ஒட்டி காண்பிக்க முடிந்தது. இந்த ஆய்வு அறிவியல் ரீதியானது அல்ல என்பது மட்டுமல்லாமல் முற்றிலும் தவறானதும் கூட. ஆனாலும் மருந்து குழுமங்கள், அரசு, மருத்துவர்கள் ஊக்கம் அளித்து இந்தப் பொய்யைத் தொடர்ந்து பரப்புவதில் வெற்றி கண்டனர். உண்மையில் இதய நோய் பாதிப்புக்கும் கொழுப்புக்கும் நோரடி தொடர்பு இல்லை என இருந்தும் இம்மருந்துகள் சுயேச்சையாக சிந்திக்காத மருத்துவர்களால் தொடர்ந்து , பரிந்துரைக்கப்பட்டு மருந்து குழுமங்கள் பெருத்த லாபத்தை அடைந்து வருகிறது. கொழுப்பைக் குறைக்கும் மருந்துகளால் இறப்பு அதிகமாக உள்ளது. அது குறையவில்லை எனும் உண்மை மறைக்கப்பட்டு வருகிறது.

உடம்பில் உற்பத்தியாகும் கொழுப்பில் (cholesterol)  80-90% கொழுப்பு ஈரலின் மூலம் நமது உடம்பின் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்படுகிறது என்ற உண்மை பலருக்கும் தெரியவில்லை. சமீபத்திய ஆய்வில் ரத்தக்குழாய் அடைப்பில் உள்ள கொழுப்பு செறிவற்ற கொழுப்பு (unsaturated fat) என்பது உறுதியாகி உள்ள நிலையில் செறிவு நிறைந்த கொழுப்பு (saturated fat) தான் அபாயகரமானது என்பது தவறு என உணர்த்துகிறது.

ஒரு காலகட்டத்தில் வழக்கமான கொழுப்பின் அளவு 200-250 MG என இருந்தது. நாடுகளின் கொழுப்பு பற்றிய புள்ளி விவரங்களை  நீக்கியதின் விளைவாக , மருந்து குழுமங்களுக்கு சாதகமாக 150-200 MG என குறைக்கப்பட்டது . இந்த விஷயத்தை உணர்ந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

          >>>---{ *இர* }--->
- கட்செவி மூலம் வந்தது....

வியாழன், 1 பிப்ரவரி, 2018

மாரடைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உணவுகள்!



மாரடைப்பைத் தடுப்பதற்கு உதவும் உணவு வகைகளைத்தான் பெரும்பாலும் மார டைப்பு வந்தவருக்கும் பரிந்துரை செய்வது வழக்கம். என்ன, மாரடைப்பு வருமுன்னர் உணவில் அவ்வளவாக கவனம் செலுத்தி யிருக்க மாட்டோம். ஆயுளில் பாதியைக் கழித்து விட்டோம். இனிமேல் வாழ்க்கை முறையை மாற்றி என்ன செய்யப் போகிறோம்? என்று அலுத்துக்கொண்டே சாப்பிட்டிருப்போம். மாரடைப்பு வந்த பின்னர் உயிர் பயம் வந்திருக்கும். அப்போது கொஞ்சம் கூடுதல் அக்கறையோடு சாப்பிடுவோம். அவ்வளவுதான் வித்தியாசம்!

இதயம் காக்கும் உணவு வகைகள்

அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு, முழுத்தானியங்கள். நார்ச்சத்து மிகுந்த பயறு, பட்டாணி வகைகள், ஓட்ஸ், துவரை, அவித்த கொண்டைக்கடலை. வெண்ணெய் நீக்கப் பட்ட பால், மோர். கீரைகள், பச்சைக் காய் கறிகள், பழங்கள். தக்காளி, அவரை, வெண் டைக்காய், வெள்ளைப்பூண்டு, முருங்கை, புடலங்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், முட்டைக்கோஸ், காளிஃபிளவர், புரோக் கோலி ஆகியவை இதயம் காக்கும் உணவு வகைகள்.

அசைவம் விரும்புபவர்கள் தோல் நீக் கப்பட்ட கோழி இறைச்சியைச் சாப்பிடலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்குப் பாதுகாப்பு தரும் ஒரு சத்துப்பொருள். இது மீனில் உள்ளது. மீனையும் கோழி இறைச்சியையும் எண்ணெய்யில் பொரிக் காமல் வேகவைத்து குழம்பாக்கிச் சாப்பிடுவது நல்லது.

தினமும் 500 கிராம் பழம் அவசியம். பழங்களில் ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், கொய்யா, மாதுளை, அன்னாசி நல்லது. காபிக்குப் பதிலாக கிரீன் டீ குடிக்கலாம்.

எண்ணெய் விசயத்தில் கவனம் தேவை. செக்கு எண்ணெய்தான் நல்லது. வாரம் ஒரு வகை எண்ணெய் என சுழற்சிமுறையில் பயன்படுத்தலாம். நாளொன்றுக்கு 15 மி.லி. எண்ணெய் போதும்.

வேண்டாம் என சொல்லுங்கள்!

பாமாயில், வனஸ்பதி, முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி. தயிர், வெண்ணெய், பாலாடை, பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, அப்பளம், வடை, பஜ்ஜி, போண்டா, பூரி, சிப்ஸ், சீவல், சமோசா, எண்ணெயில் ஊறிய, வறுத்த, பொரித்த உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். செயற்கை இனிப்புகள், ‘ஜங்க் ஃபுட்’ எனப்படும் நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

உப்பின் அளவு எச்சரிக்கை!

உணவில் உப்பின் அளவு முக்கியம். நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு போதும். நாம் உண்ணும் உணவின் மூலம் நேரடியாக உப்பு நம் உடலுக்குள் சேர்வதைவிட, பல உணவு வகைகளில் மறைந்திருக்கும் உப்பு நமக்கே தெரியாமல் சேர்வதுதான் அதிகம். முக்கிய மாக, துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைத்து விற்கப் படும் உணவுகள் போன்றவற்றில் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவில் உப்பு உள்ளது. இவற்றைத் தவிர்க்க வேண்டும். தவிரவும் ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், அப்பளம், வடாம், சிப்ஸ் போன்ற உப்பு மிகுந்த உணவைக் குறைத்துக்கொள்வதும் நல்லது.

- விடுதலை நாளேடு,29.1.18