செவ்வாய், 20 அக்டோபர், 2015

தூக்கம் - தூக்கத்தில் நடப்பதேன்?



தூங்காதே தம்பி! தூங்காதே!
வகுப்பில் ஆசிரியர் பாடம் கற்பிக் கும் போது மாணவன் தூங்குகிறான்.
அலுவலகத்தில் கோப்புகள் குன்றுபோல் குவிந்திருக்க அதன் பின்னால்  அலுவலர் தூங்குகிறார்.
பேருந்தை ஓட்டுநர் ஓட்டிச் செல்கின்றார். பயணிகள் சிலர் தூங்கு கின்றனர். ஆனால் ஓட்டுநரும் தூங்கு கிறார்.
இரவு நேரத்தில் வங்கி பாதுகாப் புக்காக காவலாளி இருக்கிறார். அவர் தூங்குகிறார்.
இவர்களுக்கு, இந்த தூங்காதே தம்பி! தூங்காதே! என்ற பாட்டு ஏற்ற தாக அமையும்.
இரவில்  நல்லா தூங்கனீங்களா? மருத்துவர் வினவுகிறார்.
அதாங்க! தூக்கமே வர மாட் டேங்குதுங்க டாக்டர்! வந்தவர் விடை யளிக்கிறார்.
இயற்கை அளிக்கும் பெரிய நன் கொடை தூக்கம் இந்த நன்கொடை யைப் பெறும் வாய்ப்பை இழந்தவர்கள் மன உளைச்சல் அடைகின்றனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களா கின்றனர்.
கட்டுமானப் பொருள்களின் விலை, கட்டுக் கடங்காமல் உள்ளதால், அந்த எண்ணத்தை  தூங்க போட்டுட்டேன் என்கிறார் புத்திசாலியான பத்மநாபன்.
எங்க மாவட்டத்துக்கு 5000 விடுதலை சந்தா என்று சேர்த்து முடிக்கும் வரை எனக்கு தூக்கமே வராதுங்க இது பெரியார் தொண்டரின் துணிச்சல் உரை.
இந்த இருவரையும் சுட்டும் வகையில் திருவள்ளுவர்.
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை என்ற திருக்குறளில் கருத்தை வழங்கி யுள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க, தூக்கத் தில் இயங்கும் ஒரு நிலையும் உள்ளது. ஒருவர் நன்றாக தூக்கத்தில் இருக்கிறார். ஆனால் படுக்கையில் படுத்து இல்லை. தூக்க நிலையிலேயே நடக்கிறார். இது ஒரு வியாதியின் பாற் பட்டதாகக் கூறுகின்றனர். இந்த வியாதியை சோம்னரம்பிலிசம் (ஷிமீனீஸீணீனீதீறீவீனீ) என்று குறிப்பிடு கின்றனர். திஃபேம்லி டாக்டர் (ஜிலீமீ திணீனீவீறீஹ் ஞிஷீநீஷீக்ஷீ) என்ற இதழில் இந்த வியாதியைப் பற்றிய குறிப்பு கூறுவதைப் பார்ப்போம்.
அய்ந்து லட்சத்துக்கு மேல், அதாவது பிரிட்டிஷ் தீவின் ஒரு சதவீத மக்களுக்கு மேல் தூக்கத்தில் நடக்கும் பிணியால் பாதிக்கப்பட்டுள் ளனர். இவர்களில் பெரும்பாலானவர் கள் சிறுவர்களாவார்கள். பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளை களே பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். இதற்கு உளவியல் காரணம் கூறப்படுகிறது.
பள்ளியில் தேர்வு நடத்தும் பருவத்தின் போது, மாணவர்களுக்கு ஒரு வகை பயம் ஏற்படுகிறது. அந்த பயம் ஒரு காரணமாக அமைகிறது. (பள்ளி தேர்வு காலத்தில், பள்ளியில் வெடிகுண்டு உள்ளது என்ற பீதியை உண்டாக்கும் செய்தி வருவதையும் காண முடிகிறது.)
வீட்டில் பெற்றோர்களிடையே பூசலும், சண்டையும், கூச்சலும் இருந்தால் இந்த வியாதி தோன்றலாம். வீட்டில் உடல் நலம் பாதிக்கப்பட்ட வர்கள் இருந்து கவனிக்கப்படாது வரும் சூழல் இருந்தால் இந்த பிணி வரும் வாய்ப்புள்ளது. வீட்டில் உள்ள பையன், பெண்ணுக்கு, தங்கையோ, தம்பியோ பிறந்தாலும் இந்த மனநிலை ஏற்படும். உளநிலை அடிப்படையில் ஏற்படும் பிணிக்கு, மூடநம்பிக்கைக் காரணம் கூறுவதையோ, காத்து கறுப்பு வேலை என்று நினைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
-விடுதலை,29.9.12