ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க செய்யும் உணவு முறைகள்...!




எலும்புகள்தான் உடலின் அசைவுகளைச் சுலபமாக்குகின்றன. சிறு வயது முதல் உடல் உழைப்பு சீராக உள்ளவர்களுக்கு எலும்புத் தேய்மானம் சற்றுக் குறைவாக  இருக்கும். உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்களுக்கு எலும்புத் தேய்மானம் அதிகமாக ஏற்படும்.

பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் 30 முதல் 35 வயது வரை எலும்பு நல்ல வலிமையாக இருக்கும். பிறகு எலும்பின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும்.

பால் சாப்பிட்டால் எலும்பு நல்ல வலிமை பெறும். பாலில் வைட்டமின்கள், புரதம் மற்றும் பொட்டாசியம் உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான  எலும்புக்கு உதவிபுரிகின்றன. தயிர், மோர் போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

எலும்புகளுக்கு எந்த அளவுக்கு கால்சியம் அவசியமோ, கால்சியத்தைக் கிரகிக்க வைட்டமின் டி-யும் அவசியம்.தினமும் காலை மற்றும் மாலை வேளையில்  அரை மணி நேரம் சூரிய ஒளி நம் சருமத்தில் பட்டாலே, வைட்டமின் டி கிடைத்துவிடும்.
மீன் சாப்பிடுவதாலும் எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். மீனில் வைட்டமின் பி மற்றும் இ, கால்சியம், இரும்பு, மக்னீசியம் அடங்கியுள்ளன. எலும்பு வலிமையாக இருக்க, பேரீச்சம்பழமும் சாப்பிடலாம்.

ஆரஞ்சுப் பழத்தில், கால்சியம் மற்றும் வைட்ட மின் சி நிறைவாக உள்ளன. இதுவும், எலும்புக்கு வலிமை தரும். வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுவதாலும், எலும்புகளுக்கும் தசைக்கும் வலிமை கிடைக்கும்.

முட்டையில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் எலும்பு மற்றும் தசைகளை வலிமை பெறச் செய்கின்றன. அசைவ உணவுகள் உட்கொள்வதாலும் எலும்புகளுக்கும் தசைக்கும் வலிமை கிடைக்கும்.

அதிக உடல் எடை எலும்பு மூட்டுக்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி, தேய்மானத்தை விரைவு படுத்தும். உடல் பருமனானவர்கள் எடையைக் குறைப்பதன்  மூலம் முதுகெலும்பு, கால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக் கலாம்.
-  விடுதலை நாளேடு, 23.4.18


கொலஸ்ட்ரால் பற்றி...



நம் உடம்பில் உள்ள கொலஸ்ட்ராலிலும், கொழுப்பு - நல்ல கொழுப்பு (HDL), கெட்ட கொழுப்பு (LDL) என்று

இரண்டு வகைகள் உள்ளன. உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று நம்பிக் கொண்டி ருக்கிறது மருத்துவ உலகம்.

அதன் காரணமாக இதய நோயைத் தடுக்க, உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிப்பது, கெட்ட கொலஸ்ட் ராலின் அளவைக் குறைப்பது என்ற அணுகுமுறையை அது பின்பற்றி வருகிறது. 1 லிட்டர் ரத்தத்தில் 1.03 மில்லி மோலுக்கும் குறைவாக நல்ல கொழுப்பு இருந்தால் இதயத்தில் பிரச்சினை வரும் என்று முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவித்திருந்தது தான் இந்த அணுகு முறைக்கு அடிப்படை.

ஆனால் கடந்த வாரம் (ஜூலை 22) பன்னாட்டு அளவில் புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு இதழான லேன்சட் தனது இணைய தளத்தில் வெளி யிட்டுள்ள ஒரு தகவல், நல்ல கொலஸ்ட்ரால் அளவிற்கும் இதய நோய்க்குமிடையே சம்பந்தம் இருப்பதாகக் கருதி மேற்கொள் ளப்பட்ட அணுகுமுறையைத் தூக்கி யெறிந்து விட்டது!

முதல்நிலை இதய நோய்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பதை ஆராய 17,800 பேரிடம் ஜூபிடர் என்ற ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் சரி பாதிப் பேருக்கு அதாவது 8,900 பேருக்கு, உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந் தான ரோசுவாஸ்டாட்டின், தினம் 20 மி.கி. அளவிற்குக் கொடுக்கப்பட்டது.

மீதமுள்ள மற்றொரு பாதியினருக்கு மருந்து கொடுக்கப் படவில்லை. ஆய்வின் முடிவுகள், நல்ல கொலஸ்ட்ரால் அளவிற்கும் இதய நோய்க்கு மிடையே சம்பந்தம் ஏதுமில்லை எனத் தெரிவிக்கின்றன. முதல் நிலை இதய நோய் ஏற் படாமல் தடுக்க, கெட்ட கொலஸ்ட் ராலின் அளவைக் கணிசமாகக் குறைத்து விட்டால் போதும், நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை எனத் தெரிவிக் கின்றன.

ஜூபிடர் ஆய்வறிக்கை இதுவரை மருத்துவ உலகம் கொண் டிருந்த நம்பிக்கைக்கு முற்றிலும் மாறாக உள்ளதால் மருத்துவ உலகில் ஒரு சிறிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

- விடுதலை நாளேடு, 2.4.18

இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் உணவுபொருள்கள்

பொதுவாக உடலில் கைகள், பாதம், விரல்கள், கால்கள் போன்ற பாகங்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால் தான் இந்த பிரச்சினை ஏற்படும். மேலும் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையெனில், சிறுநீரக பிரச்சினை, உயர் இரத்த அழுத்தம், வீங்கி பருத்து வலிக்கிற நரம்பு போன்ற தீவிரமான ஆரோக்கிய  பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தும் இஞ்சி, பல்வேறு பிரச்சினைகளுக்கும் நல்ல மருந்தாக செயல்படுகிறது. இதற்கு இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோன் மற்றும் ஜிஞ்சரால் என்னும் பொருட்கள் தான் காரணம். இவை இரத்தம் உறைதலைத் தடுத்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

பல்வேறு உணவுகளில் சேர்க்கப்படும் பூண்டு, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் பூண்டு இரத்த நாளங்களை அமைதிப்படுத்தி, இரத்த சிவப்பணுக்களுடன் சேர்ந்து ஹைட்ரஜன் சல்பைட்டின் உற்பத்தியை அதிகரிக்கும். ஏனெனில் ஹைட்ரஜன் சல்பைடு தான் உடலில் இரத்த ஓட்டத்தை  அதிகரிக்கும்.

வெங்காயம் கூட இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதற்கு அதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் தான் காரணம். எனவே முடிந்த அளவில் இதனை  உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டுமெனில் தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வாருங்கள். ஏனெனில் அதில் உள்ள எபிகேலேகேட்டசின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்களின் ஆரோக்கியத்தை அதிகரித்து, இரத்த நாளங்களை விரிவடைய செய்து, இரத்த ஓட்டத்தை தடையின்றி உடல் முழுவதும் பாய  உதவு கிறது.  பெரும்பாலான உணவுப் பொருட்களில் காரத்திற்கும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் மிளகு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதிலும் இதனை அன்றாடம் ஏதேனும் ஒரு உணவுப்பொருளுடன் சேர்த்து சாப்பிட்டால், இரத்த நாளங்கள் விரிவடைந்து, இரத்த ஓட்டம் உடல் முழுவதும் சீராக பாயும்.

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க, லைகோபைன் நிறைந்த தக்காளியை உணவில் அன்றாடம் சேர்த்து வர வேண்டும். ஏனெனில் இதில் உள்ள லைகோபைன் பிளேக் கட்டமைப்பை உடைத்து, இரத்த ஓட்டத்தை உடலில் சீராக்குகிறது.

ஆப்பிள் சாப்பிட்டால் அளவிலா நன்மைகள்

ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை  உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது. ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.  ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.

ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர்தான் ஆப்பிள் சிடர் வினிகர். வெளிநாட்டில் அனைத்து வீடுகளிலும் அத்தியாவசியமாக வைத்திருக்கும்  பொருள்களில் ஒன்று.

ஆப்பிளை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி  அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு.

எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க செய்யும் உணவு முறைகள்...!



எலும்புகள்தான் உடலின் அசைவுகளைச் சுலபமாக்குகின்றன. சிறு வயது முதல் உடல் உழைப்பு சீராக உள்ளவர்களுக்கு எலும்புத் தேய்மானம் சற்றுக் குறைவாக  இருக்கும். உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்களுக்கு எலும்புத் தேய்மானம் அதிகமாக ஏற்படும்.

பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் 30 முதல் 35 வயது வரை எலும்பு நல்ல வலிமையாக இருக்கும். பிறகு எலும்பின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும்.

பால் சாப்பிட்டால் எலும்பு நல்ல வலிமை பெறும். பாலில் வைட்டமின்கள், புரதம் மற்றும் பொட்டாசியம் உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான  எலும்புக்கு உதவிபுரிகின்றன. தயிர், மோர் போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

எலும்புகளுக்கு எந்த அளவுக்கு கால்சியம் அவசியமோ, கால்சியத்தைக் கிரகிக்க வைட்டமின் டி-யும் அவசியம்.தினமும் காலை மற்றும் மாலை வேளையில்  அரை மணி நேரம் சூரிய ஒளி நம் சருமத்தில் பட்டாலே, வைட்டமின் டி கிடைத்துவிடும்.
மீன் சாப்பிடுவதாலும் எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். மீனில் வைட்டமின் பி மற்றும் இ, கால்சியம், இரும்பு, மக்னீசியம் அடங்கியுள்ளன. எலும்பு வலிமையாக இருக்க, பேரீச்சம்பழமும் சாப்பிடலாம்.

ஆரஞ்சுப் பழத்தில், கால்சியம் மற்றும் வைட்ட மின் சி நிறைவாக உள்ளன. இதுவும், எலும்புக்கு வலிமை தரும். வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுவதாலும், எலும்புகளுக்கும் தசைக்கும் வலிமை கிடைக்கும்.

முட்டையில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் எலும்பு மற்றும் தசைகளை வலிமை பெறச் செய்கின்றன. அசைவ உணவுகள் உட்கொள்வதாலும் எலும்புகளுக்கும் தசைக்கும் வலிமை கிடைக்கும்.

அதிக உடல் எடை எலும்பு மூட்டுக்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி, தேய்மானத்தை விரைவு படுத்தும். உடல் பருமனானவர்கள் எடையைக் குறைப்பதன்  மூலம் முதுகெலும்பு, கால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக் கலாம்.

- விடுதலை நாளேடு, 23.4.18

திங்கள், 2 ஏப்ரல், 2018

கொலஸ்ட்ரால் பற்றி...



நம் உடம்பில் உள்ள கொலஸ்ட்ராலிலும், கொழுப்பு - நல்ல கொழுப்பு (HDL), கெட்ட கொழுப்பு (LDL) என்று

இரண்டு வகைகள் உள்ளன. உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று நம்பிக் கொண்டி ருக்கிறது மருத்துவ உலகம்.

அதன் காரணமாக இதய நோயைத் தடுக்க, உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிப்பது, கெட்ட கொலஸ்ட் ராலின் அளவைக் குறைப்பது என்ற அணுகுமுறையை அது பின்பற்றி வருகிறது. 1 லிட்டர் ரத்தத்தில் 1.03 மில்லி மோலுக்கும் குறைவாக நல்ல கொழுப்பு இருந்தால் இதயத்தில் பிரச்சினை வரும் என்று முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவித்திருந்தது தான் இந்த அணுகு முறைக்கு அடிப்படை.

ஆனால் கடந்த வாரம் (ஜூலை 22) பன்னாட்டு அளவில் புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு இதழான லேன்சட் தனது இணைய தளத்தில் வெளி யிட்டுள்ள ஒரு தகவல், நல்ல கொலஸ்ட்ரால் அளவிற்கும் இதய நோய்க்குமிடையே சம்பந்தம் இருப்பதாகக் கருதி மேற்கொள் ளப்பட்ட அணுகுமுறையைத் தூக்கி யெறிந்து விட்டது!

முதல்நிலை இதய நோய்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பதை ஆராய 17,800 பேரிடம் ஜூபிடர் என்ற ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் சரி பாதிப் பேருக்கு அதாவது 8,900 பேருக்கு, உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந் தான ரோசுவாஸ்டாட்டின், தினம் 20 மி.கி. அளவிற்குக் கொடுக்கப்பட்டது.

மீதமுள்ள மற்றொரு பாதியினருக்கு மருந்து கொடுக்கப் படவில்லை. ஆய்வின் முடிவுகள், நல்ல கொலஸ்ட்ரால் அளவிற்கும் இதய நோய்க்கு மிடையே சம்பந்தம் ஏதுமில்லை எனத் தெரிவிக்கின்றன. முதல் நிலை இதய நோய் ஏற் படாமல் தடுக்க, கெட்ட கொலஸ்ட் ராலின் அளவைக் கணிசமாகக் குறைத்து விட்டால் போதும், நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை எனத் தெரிவிக் கின்றன.

ஜூபிடர் ஆய்வறிக்கை இதுவரை மருத்துவ உலகம் கொண் டிருந்த நம்பிக்கைக்கு முற்றிலும் மாறாக உள்ளதால் மருத்துவ உலகில் ஒரு சிறிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

- விடுதலை நாளேடு, 2.4.18