செவ்வாய், 24 ஜூலை, 2018

முழங்கால் மூட்டுவலி ஏற்படக் காரணம்




மூட்டுவலி மனிதனை வாட்டி வதைத்து அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளைப் பாதிக்கும் அளவிற்கு வேதனையை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். கீல்வாதம், மூட்டுவலி அல்லது மூட்டு தேய்மானம் என அழைக்கப்ப்படும் இந்த நோயானது, பொதுவாக ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக, 45 வயதைக் கடந்த இரு பாலினத்தவரும் இந்நோயால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

நோய்க் காரணங்கள்

கீல்வாதமானது மூட்டுகளில் ஏற்படும் நோயானது என்றாலும், குறிப்பாக முழங்கால் மூட்டே அதிகமான பாதிப்பிற்கு உள்ளாகிறது.

முழங்கால் மூட்டு எலும்புகளின் அதீத செயல்பாடுகளால் ஏற்படும் உராய்வினால் மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பு  மற்றும் மூட்டைச் சுற்றியுள்ள தசை நார்கள் பாதிப்படைந்து மூட்டு எலும்புகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி இடைவெளி குறைவதால் தேய்கிறது.

மேலும் மூட்டுகளில் உள்ள சைனோவியம் என்ற திரவமானது மூட்டைச்சுற்றித் தேங்கி நீர்க்கோர்த்து வீக்கத் துடன் வலியும் உண்டாகிறது.

இதுபோல், அதிக உடல் எடை, மூட்டுகளில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகள், மூட்டுகளில் நோய் தொற்றுப் பாதிப்புகள், மூட்டுகளில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், முழங்கால் மூட்டுகளை அதிகமாக உபயோகித்துப் பணி செய்பவர்கள், விளையாட்டினால் ஏற்படும் பாதிப்புகள், பரம்பரையாக ஏற்படும் மூட்டு வலி, முடக்குவாத பாதிப்பிற்கு உள்ளானவர்கள், அதீத ஹார்மோன் சுரப்பு என்று பல காரணங்களால் மூட்டு வலி வந்து விடுகிறது.

அறிகுறிகள்

மூட்டு வலி ஏற்படுவதற்கான முதல்நிலை அறிகுறிகளாக;

1. மூட்டுகளில் வலி

2. மூட்டுகளில் இறுக்கம் (குறிப்பாகக் காலை நேரங்களில்)

3. மண்டியிடும் போதோ, முழங்காலை மடக்கும் போதோ கூச்ச உணர்வு

4. அன்றாட நிகழ்வுகள் பாதிப்பு

போன்றவை ஏற்படுகின்றன.

இரண்டாம் நிலை அறிகுறிகளாக..

1. பாதிக்கப்பட்ட மூட்டுகளில் இயக்கமற்ற நிலை

2. தசைகள் வலுவிழப்பு

3. மூட்டுகளில் ஸ்திரத்தன்மை

4. மூட்டுகள் அசைவின்போது சத்தம்

போன்றவை ஏற்படுகின்றன.

பரிசோதனைகள்

எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனைகள், ஸ்கேன் போன்ற பரிசோதனைகளின் மூலம் மூட்டுவலி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

பொது மருத்துவ சிகிச்சை

பொது மருத்துவ சிகிச்சையில் ஆரம்ப நிலையில் வலி குறைப்பிற்கான மருந்துகள் அளிக்கப்படுகின்றன. அதிகமான மூட்டு பாதிப்பு உள்ளான நோயாளிகளுக்குப் பாதிப்பிற்கு ஏற்ப அறுவை சிகிச்சையோ  அல்லது மூட்டு மாற்று அறுவை சிகிச்சையோ  மேற்கொள்ளப்படுகிறது.

இயன்முறை சிகிச்சை

மூட்டு வலிகளுக்கு இயன்முறைச் சிகிச்சை செய்யப் படுவதன் மூலம் கீழ்க்காணும் நன்மைகளைப் பெற முடியும்.

1. வீக்கம் மற்றும் வலியைக் குறைத்தல்

2. பாதிக்கப்பட்ட மூட்டுகளில் ஏற்படும் இறுக்கத்தைக் குறைத்தல்

3. உடல் எடையைக் குறைக்க அறிவுறுத்துதல்

4. மூட்டுகளின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல்

5. வலு குறைந்த தசைகளை உடலியக்கப் பயிற்சிகளின் மூலம் வலுப்படுத்துதல்

6. நோயாளிகளின் அன்றாட வாழ்வின் முறையை மேம்படுத்த ஊக்கப்படுத்துதல்

மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க மெழுகு சிகிச்சை மற்றும் பனிக்கட்டி சிகிச்சை போன்ற சில சிகிச்சை களும் இயன்முறை மருத்துவர்களால் அளிக்கப்படுகிறது.

இதுபோல், வலியைக்குறைக்க குறுக்கலை மின்சிகிச்சை  மற்றும் மின் தூண்டுதல் சிகிச்சை, லேசர் சிகிச்சை மற்றும் நீரியல் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, அல்ட்ராசவுண்ட் சிகிச்சை போன்ற முறைகளும் நோயாளியின் மூட்டுவலிப் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து அளிக்கப்படுகின்றன.

மூட்டுகளின் செயல்பாடுகளை எளிமையாக்கவும், அன்றாட நிகழ்வுகளைப் பாதிக்கப்பட்டவர்கள் சிரமமின்றி செய்ய ஏதுவாகவும் எளிய உடலியக்கப் பயிற்சிகளும் இயன் முறை மருத்துவரால் அளிக்கப்படுகிறது. இலகுவான நடைப்பயிற்சி மற்றும் ஏரோபிக் வகை பயிற்சிகளும் வலுக்குறைந்த தசைகளை வலுப்படுத்த உடலியக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

நோயின் பாதிப்பிலிருந்து விடுபட

மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்கள் நோயின் பாதிப்பி லிருந்து விடுபட, இயன்முறை மருத்துவர்களின் ஆலோ சனைப்படி சில நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள் ளலாம். அவை;

1. உடல் எடையைக்குறைக்க வேண்டும்

2. நடைப்பயிற்சி மற்றும் இலகுவான ஏரோபிக் பயிற்சிகள்

3. பாதிக்கப்பட்ட மூட்டுகளுக்கு அதிக வேலைப்பளு கொடுக்காமல் இருக்க வேண்டும்

4. உடல் செயல்பாடுகளின்போது உடல் எடை மூட்டுகளில் அழுத்தம் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்

5. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே வலி குறைப்பு மற்றும் வெளிப்பூச்சு மருந்துகளை நோயாளிகள் பயன்படுத்த வேண்டும்

6. அறுவை சிகிச்சைக்கு பிறகு இயல்பாக நடப்பதற்கும், அன்றாட நிகழ்வுகளை மேம்படுத்துவதற்கும் இயன்முறை மருத்துவரின் ஆலோசனைப்படி உடலியக்கப்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

7. மூட்டு வலியைக் குறைக்கவும் ,நோயின் தாக்கத்தைக் குறைக்கவும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி முழங்கால் மூட்டுப்பட்டை, மூட்டு உரைகள்  போன்றவற்றை அணியலாம்.

உங்களுக்காக...

றீ மிக நீண்ட நேரம் தொடர்ந்து கணினி முன் அமர்வதை தவிர்க்கலாம். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து தண்ணீர் குடிக்க இடம் பெயருங்கள். எழுந்து நடப்பதால் உங்கள் ரத்த ஓட்டம் புதுபிக்கப்படும்.  இது உங்கள் முது கெலும் புகளை அழுத்தில் இருந்து சிறிது நேரம் மீட்டு எடுக்கும்.

றீ கணினி திரையை வேலைப் பளுவால் உற்று நோக்க ஆரம்பித்து விடுகிறோம் மிக விரைவாக இதனை தவிருங்கள், முடிந்த வரை உங்கள் கண்களை 45 நிமிடங்களுக்கு ஒரு முறை இடது வலது புறம் திரும்பி பார்வைக் கோட்டை அகலப்படுத்தி விட்டு மீண்டும் திரையில் முழுகலாமே.

- விடுதலை நாளேடு, 16.7.18

கண்களைப் பாதுகாப்போம்



இந்திய இலக்கியங்கள் கண்ணைக் கொண்டாடிய நிகழ்வுகள் ஏராளம். உண்மையில் அகத்திலுள்ளதை முகத் தில் காட்டும் முக்கிய பணியைச் செய்வது கண்கள்தாம்.

அழுக்கோ அழகோ தன் முன்னால் உள்ளதை ஒளிக்கற்றை வழியாகப் பெற்று, மூளைக்கு அனுப்பி, அங்கே அமைக்டலாவைத் தூண்டி காதலையோ கரிசனத்தையோ கொட்டச் செய்வது கண்கள் வழிதாம்.

அந்தக் கண்களை, கரிசாலை மை தடவிக் குளிர்ப்பித்த காலத்திலிருந்து, மஸ்காரா பயன்படுத்தும் காலம்வரை பராமரித்த விதங்கள் ஏராளம். 80-களில் கண்ணாடி போட்டவர்களை கேலி செய்வது, அவமானப்படுத்தும் சொல். ஆனால், இன்று கண்ணாடி அணிவது மதிப்பான ஒன்றாகிவிட்டது.

விளைவுகளை

உதாசீனப்படுத்தாதீர்

இனிப்பு தேசத்தில் இந்தக் கண்களைப் பராமரிக்க இன்னும் கூடுதல் அக்கறை தேவைப்படுகிறது. ரத்தச் சர்க்கரை அளவு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாத போது, ஆரம்பத்தில் நிகழும் சில விளைவுகளை உதாசீனப்படுத்திவிட்டு, பின்னாட்களில் பார்வைக்காகப் போராட்டம் நடத்துவோர் பலர்.

சர்க்கரை நோயினர், கண்கள் விசயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?

# அடிக்கடி நிகழும் பார்வைத்திறன் மாற்றம்

# பார்வையில் கரும் புள்ளிகள் அல்லது அழுக்கு மிதப்பது போன்ற உணர்வு

# தெளிவற்ற காட்சி

# காட்சியில் ஆங்க £ங்கே வெற்றிடம் அல்லது கருவட்டம்

இந்தப் பிரச்சினைகள் இருந்தால் அது டயாபட்டிக் ரெட்டினோபதியின்  தொடக்கம் எனலாம்.

என்ன நடக்கிறது கண்ணில்?

கண்ணில் விழித்திரையை (ரெட்டினா) ஒட்டிய நுண்ணிய ரத்தக் குழாய்கள் பாதிப்புறுவதால், விழித் திரையில் உள்ள நரம்புகளுக்கு ரத்த ஓட்டம் குறைகிறது. ஆதலால் அந்த நுண்ணிய நரம்புகள் வலுவிழப்பது, நரம்பின் உறை வீக்கமுறுவது என பாதிப்புகள் ஏற்பட்டு, பார்வைத்திறன் குறைய ஆரம்பிக்கிறது.

கேட்டராக்ட் நோயில் நிகழும் லென்ஸ் பாதிப்பு போன்றோ, சாதாரண கிட்ட- தூரப் பார்வை போன்றோ இது அவ்வளவு எளிதாகச் சரி செய்யக் கூடியது அல்ல என்பதை இனிப்பு நோயினர் கவனத்தில் கொள்ள வேண்டும். விழித்திரையின் நரம்பில் ஏற்படும் நாள்பட்ட பாதிப்பு முழுமையான பார்வை இழப்பைக் கொடுத்து விடும்.

இரண்டு வகை பிரச்சினைகள்

சர்க்கரை நோய் இரண்டு விதமாய் விழித்திரையைப் பாதிக்கிறது. நான் ப்ரோலிஃபரேட்டிவ் ரெட்டி னல் டிசீஸ்,  ப்ரோலிஃபரேட்டிவ் ரெட்டினல் டிசீஸ்   என்பன அவை. முதலாவதில், அடிக் கடி பார்வைத்திறன் குறைந்து கண்ணாடி மாற்றும் செலவை அடிக்கடி தரும். நரம்பு உறை நார்கள் வீக்கமும், விழித்திரையின் மய்யப் பகுதியில் வீக்கமும் ஏற்படும். இது தொடர்ந்தால், நாளடைவில் ரெட்டினல் டிடேச் மெண்ட் எனும் விழித்திரை விலகல் ஏற்படலாம்.

இரண்டாம் பிரிவில், விழிக்கோள நீரினுள் ரத்தக் கசிவு, விழித்திரை விலகல், க்ளுக்கோமா எனப்படும் கண் அழுத்தம் அதிகரித்தல் என ஒவ்வொன்றாய் ஏற்பட்டு முடிவில் பார்வை இழப்பு வரக் கூடும்.

என்ன செய்ய வேண்டும்?

குறிப்பிட்ட கால இடைவெளியில் கண் பரிசோதனை நிச்சயம் அவசியம். இன்று லேசர் சிகிச்சை முதல் கண்ணுக்கு உள்ளேயே செலுத்தும் மருந்துவரை நிறைய மருத்துவ வசதிகள் வந்துவிட்டன. அதனால் ஆரம்ப கட்டத்தில் பரிசோதித்துவிட்டால், சிகிச்சை சுலபம்.

தவிர, சீரான ரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு மிக மிக அவசியம். பொதுவாகக் கண்களைப் பாதுகாக்க மரபு சொல்லும் முக்கிய வழி எண்ணெய்க் குளியல். பித்தத்தைச் சீர்செய்யும் இந்த மரபுப் பழக்கம், பல நூறு ஆண்டுகள் நம்மிடம் இருந்த நலவாழ்வுப் பேணல். இனிப்புநோய் அதி பித்தத்தில் பிரதானமாய்த் தொடங்கும் நோய். ஆதலால் இனிப்பு நோயினருக்கு எண்ணெய்க் குளியல் நிச்சயம் அவசியமான ஒன்று.

கூடவே, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக் கீரை, மீன்கள், வெள்ளாட்டு மண்ணீரல் ஆகியவை கண் களைப் பாதுகாக்க, மரபு சொன்ன உணவு வகைகள்.

- விடுதலை நாளேடு, 23.7.18

புதன், 4 ஜூலை, 2018

டாக்டர் பழ.ஜெகன்பாபுவுக்கு சிறந்த மருத்துவருக்கான விருது



சென்னை, ஜூன் 30- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்து வப் பல்கலைக்கழக வளா கத்தில் 28.06.2018 வியாழக் கிழமை மாலை 6.00 மணியள வில் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற விழா வில் சிறந்த பல் மருத்துவருக் கான விருதினை, ஊற்றங்கரை பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி பழ னியப்பன், வேலூர் மாவட்ட மகளிரணி செயலாளர் ச.கலைமணிபழனியப்பன் வாழ்விணையரின் இளைய மகனும் பெரியார் மருத்துவ ரணி செயலாளரும், விழுப்பு ரம் மருத்துவக் கல்லூரியின் பல் மருத்துவத்துறை தலை வருமான மருத்துவர் பழ.ஜெகன்பாபு அவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் விருது அளித்து பாராட்டினார்.

இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட தலைவர் வி.இ. சிவக்குமார், மாவட்ட செய லாளர் கு. இளங்கோவன், மாவட்ட மாணவர் கழக தலைவர் ந.கண்ணன், மாவட்ட மளிரணி செயலாளர் ச.கலைமணி பழனியப்பன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன்மொழி, குடியாத்தம் நகர மகளிர் பாசறை தலைவர் சி.லதா ஆகியோர் கலந்துகொண்டு கழக சார்பில் பாராட்டை தெரிவித்தார்கள்.

-  விடுதலை நாளேடு, 30.6.18