புதன், 12 டிசம்பர், 2018

விஷமே மருந்தாகுமா?

பாம்புக்கடி சிகிச்சைக்கான மருந்து, பாம்பின் விஷத்திலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. பாம்பி லிருந்து அதன் விஷத்தைச் சேகரித்து, வேறு கரைசல்கள் சேர்க்கப்பட்டு, குதிரையின் உடலுக்குள் செலுத்தப்படும். குதிரையின் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு, விஷத்தை முறிப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை (ஆன்டிபயாட்டிக்) உருவாக்கும்.


விஷத்தைச் செலுத்திய குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னர், குதிரையின் ரத்தத்தைச் சேகரித்து, அதில் இருந்து விஷ முறிவு மருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. சில பூச்சிக்கொல்லிகளுக்கான விஷ முறிவு மருந்து ஊமத்தம் கொட்டையிலிருந்து தயாரிக் கப்படுகிறது. அதேபோல ஒடுவன்தழையிலிருந்து எடுக்கப்படும் மருந்தும் பூச்சிக்கொல்லிகளுக்கான விஷ முறிவுக்கு பயன்படுகிறது. அரளிக்கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, இதயச் செயலிழப்பு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.


-  விடுதலை ஞாயிறு மலர், 24.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக