மருத்துவ உலகு

மருத்துவம் குறித்த பொதுவான கருத்துகள் மற்றும் குறிப்புகள் இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • அறிவியல் அறிவோம்
  • தமிழ் மருத்துவம்
  • மூலிகை உலகு
  • மூலிகை மன்னன்
  • வேளாண்மை(மருதம்) அறிவோம்
  • வெற்றிவலவன் பதிவுகள்

ஞாயிறு, 11 ஜூன், 2023

மரணம் (DEATH) 1& 2

 

மருத்துவம்: மரணம் (DEATH)

2023 மருத்துவம்
January 3, 2023உண்மை

– மருத்துவர் இரா. கவுதமன்

ஒரு மனிதருக்கு, மீள முடியாமல் இரத்த ஓட்டமும், மூச்சும் நின்று விட்டாலோ, மூளைச் செயல்பாடு முழுமையாக நின்றுவிட்ட நிலை ஏற்பட்டு விட்டாலோ மரணம் நிகழ்ந்து விட்டதாக மருத்துவர்கள் முடிவு செய்வர். பொதுவாக முன்பெல்லாம் இதயமும், நுரையீரலும் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டாலே மரணம் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் மாறிவரும் மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் ‘மூளை’ செயல்பாட்டை இழந்துவிட்டால் மட்டுமே மரணம் நிகழ்ந்துவிட்டதாகவும், அதுவே மீண்டும் உடல் உறுப்புகள் இயக்கத்தை நிறுத்தி, செயல்படாத நிலையை (Irreversible) அடைந்து விட்டதையே மரணம் என்றும் இன்றைய மருத்துவம் விளக்குகிறது. இன்றைய நிலையில் ‘இழப்பு’ அல்லது மரணம் என்பது சுற்றமும், நட்பும் வருந்தக்கூடிய ஒரு நிகழ்வாக மட்டும் இல்லை. மருத்துவ முன்னேற்றம் உறுப்புகள் கொடை, உடற்கொடை, சமூகவியல், சட்டம் சார்ந்த பல கூறுகளைக் கொண்டதாக இருக்கிறது.

இந்திய குற்றவியல் சட்டம் (Indian Penal code) 46ஆவது பிரிவு _ உயிரோடு இருக்கும் மனிதர், எந்தவித உயிர் இயக்கமும் இல்லாமல் முழுமையாகச் செயலிழப்பதை மரணம் (“The permanent disappearance of all evidence of life at any time after live-birth has taken place)” என்று விளக்குகிறது. இன்றைய நிலையில் மூளைச் சாவையே மரணம் என்று பல நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுகின்றன.!
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கூட, இதயமும், மூச்சும் செயலிழப்பதையே ‘மரணம்’ என்று மருத்துவ நிலையிலும், சட்டத்தின் நிலையிலும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது. பல நூறு ஆண்டுகளாக இந்த நிலைப்பாடுதான் நிலவியது. ஒருவர் இறந்து விட்டதை, அவரது நாடித் துடிப்பு நின்று விட்டதை வைத்தும், மூச்சு நின்று விட்டதையும், மூக்கின் அருகே ஒரு கண்ணாடி வைத்து, அதில் படியும் (மூச்சு வெளிப்படும் பொழுது) படிவு (Condensation) மூலமும், கண்ணின் “பாப்பா (Pupil) சுருங்கி, விரியும் தன்மை நின்று விடுவதையும் வைத்து மரணம் நிகழ்ந்ததை மருத்துவர் உறுதி செய்வார். ஆனால், இதயம் செயல்பாட்டை, இதய அறுவை மருத்துவம் செய்யும் பொழுது ஈறத்தாழ 40 நிமிடங்கள் வரை மருத்துவர்கள் நிறுத்தி விடுகின்றனர். இதய மாற்று அறுவை மருத்துவம் (Heart Transplantation), இதயத்தைத் திறந்து செய்யும் (Open Heart Surgery) அறுவை மருத்துவம் போன்ற மருத்துவ முறைகளில் இதயம் நிறுத்தப்படுகிறது. மிகச் சில ஆண்டுகளுக்கு முன்பு கூட இதயத்தமனி மாற்றுவழி மருத்துவத்தில் (Coronary Artery Bye pass Grafling – CABG)  கூட இதயம் நிறுத்தப்பட்டே செய்யப்பட்டது. (இப்பொழுது இதயத் துடிப்பைக் குறைத்து, இதயத்தை நிறுத்தாமலேயே (Beating heart Surgery)  இந்த அறுவை மருத்துவம் செய்யப்படுகிறது). இதயம் நிறுத்தப்படும் அந்த நேரத்தில் உடலின் இரத்தக் குழாய்கள் இதய, நுரையீரல் பொறியில் (Heart lung Machine), இணைக்கப்பட்டு, நோயாளி உயிரோடு இருக்க வகை செய்யப்படுகிறது.

மாறிவரும் மருத்துவத்தில் இன்று இதயச் செயலிழப்பு மரணம் இல்லை என்று நிறுவப்பட்டுவிட்டது. அதே போல் மூச்சு விடும் நிலை நின்று விடாமல் தடுக்க மருத்துவ உதவிகள் இன்று வந்து விட்டன. நுரையீரல் பாதிப்பால் செயலிழந்து விடும் நுரையீரல்கள், முழுமையாக மாற்றிப் பொருத்துவதும் இன்று வந்துவிட்டது. வேறு நுரையீரல் கிடைக்கும் வரை, நோயாளி, மரணம் அடையாமல் தவிர்க்க செயற்கை மூச்சுக் கருவியின், (Ventilator) மூலம் பாதுகாக்கப்படுவார். இதுபோன்ற மருத்துவ அறிவியல் முன்னேற்றங்களால், இதயமோ, நுரையீரலோ செயலின்மை (Cardio-Pulmonary failure) மரணம் என்று கூறப்படுவதில்லை.

1960களில் “மரணம்” என்பதற்கு மருத்துவ முறைகளில் முற்றிலும் மாறான விளக்கம் கொடுக்கப்பட்டது. இதைச் சட்டமும் ஏற்றுக் கொண்டது. ஹார்வர்ட் மருத்துவப் பல்கலைக்கழகம், மாறிவரும் மருத்துவ வளர்ச்சியை மனதில் கொண்டு மரணம்’ என்பதற்குப் புதிய விளக்கம் கொடுத்தது, அதை அனைத்து மருத்துவ உலகமும் ஏற்றுக் கொண்டது. மூளை முழுமையாகச் செயலின்மை (Permanently non-functioning Brain) அடைந்தால், அதை முழு உணர்விழந்த மயக்க நிலை (Irreversible Coma) என்று மருத்துவம் விளக்கியது.
இந்த நிலைக்கே நாளடைவில் “மூளைச் சாவு” (Brain Death) என்று பெயரிடப்பட்டது. முழுமையான உணர்வின்மை, முழுமையான செயலின்மை (Unreceptivity and responsivity), இயல்பாக மூச்சுவிட முடியாமை, உடல் அசைவின்மை (No Movements),, மூளை மின்னலைப் பதிவில் (Electro encephatogram) மூளையின் செயல்பாடின்மை போன்றவை ஒரு நோயாளிக்கு ஏற்பட்டால் அதுவே “மூளைச்சாவு” என்றழைக்கப்பட்டது. ஆனால் “மூளைச்சாவு” என்றழைக்கப்பட்டு, அவர்கள் உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு, மற்றவர்களுக்குப் பொருத்தும் நிலைகளில் பல சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டன. இதற்காக ஓர் ஆய்வுக் குழு, அமெரிக்க அதிபர் தலைமையில் அமைக்கப்பட்டது.
மருத்துவ, சட்ட, சமூகவியல் அறிஞர்கள் அடங்கிய இந்தக் குழு அனைவருக்கும் பொதுவான, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விளக்கத்தை “மரணத்திற்கு” அளித்தது. “மூளையின் முழு நிலைப்பாடு’’ (Total brain standard) என்று பெயரிடப்பட்ட இந்த நிலையை இன்று மருத்துவத்துறையும் நீதித்துறையும் ஏற்றுக் கொண்டுள்ளன.

பண்டைய காலங்களில் மரணத்திற்குப் பின்னும் உயிர் இருக்கும் என்ற நம்பிக்கையில்
பல நாட்கள் உடல்கள் வைக்கப்பட்டு, அழுகிப்போயின. இறந்தபின் உயிர் வராது என்பது மனித அறிவுக்கு எட்டுவதற்கே பல காலம் தேவைப்பட்டது. எகிப்து நாட்டில் மீண்டும் உயிர் வரும் என்ற நம்பிக்கையிலேயே, அரச, அரசி உடல்கள் பிரமிடுகள் என்று கல்லறைக்குள் வைக்கப்பட்டன. உடலோடு, நகைகள், உணவுகளுடன், அவர்களின் பணிப் பெண்களையும் (உயிரோடு) சேர்த்தே பிரமிடுகளில் வைத்து மூடும் பழக்கம் எகிப்தில் நிலவியது.

மனித இனம் அறிவியல் பாதையில் பயணம் செய்யத் தொடங்கிய பின்னர்தான் மரணம் என்பது ஒரு மீள முடியாத நிலை என்பதை மனிதன் உணர்ந்தான்.உடல் உறுப்புக் கொடை மருத்துவத் துறையால் செய்யத் துவங்கிய இந்தக் காலகட்டத்தில், சட்டமும், நீதியும் அதில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சட்டமும், நீதியும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு முறையில் இருந்ததால், மரணத்தை விளக்குவதில் பலவகைக் குழப்பங்கள் நிலவின. முடிவாக, ஒரு வழியாக உடல் உறுப்புக் கொடைக்குப் பல சட்டங்கள் இயற்றப்பட்டு, மூளைச் சாவே (Brain Death) ‘மரணம்’ என்று உலகம் ஒத்துக்கொள்ளக் கூடிய நிலை இன்று அனைத்து நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது.

  • முந்தைய இதழ்கள்
    • 2022
      • 1-6
        • ஜனவரி 1-15,2022
        • ஜனவரி 16-31,2022
        • பிப்ரவரி 1-15,2022
        • பிப்ரவரி 16-28,2022
        • மார்ச் 1-15 2022
        • மார்ச் 16-31,2022
        • ஏப்ரல் 1-15,2022
        • ஏப்ரல் 16-31,2022
        • மே 1-15,2022
        • மே 16-31 2022
        • ஜூன் 1-15 2022
        • ஜூன் 16-30 2022
      • 7-12
        • ஜுலை 16-31 2022
        • ஜுலை 01-15 2022
        • ஆகஸ்ட் 01-15 2022
        • ஆகஸ்ட் 16-31 2022
        • செப்டம்பர் 1-15-2022
        • செப்டம்பர் 16 -30 2022
        • அக்டோபர் 01-15 2022
        • அக்டோபர் 16-30 2022
    • 2021
      • ஏப்ரல் 1-15,2021
      • ஏப்ரல் 16-31,2021
      • செப்டம்பர் 1-15,2021
      • செப்டம்பர் 16-30,2021
      • அக்டோபர் 1-15,2021
      • அக்டோபர் 16-31,2021
      • ஆகஸ்ட் 1-15,2021
      • ஆகஸ்ட் 16-31,2021
      • டிசம்பர் 1-15,2021
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  •  
  • விடுதலை
  •  
  • புத்தகம் வாங்க
  •  
  • வலைக்காட்சி

மருத்துவம் :மரணம் (2)

2023 மருத்துவம் ஜனவரி 16-31 ,2023
January 21, 2023உண்மை

மருத்துவர் இரா. கவுதமன்

1980இல் ‘மரணம்’ என்பதன் விளக்கம் தெளிவாக்கப்பட்டது.
1. ஒருவர் மீள முடியாத நிலையில் இரத்த ஓட்டம் நின்றுவிடுதல் மூச்சு விடுவது நின்று விடுதல் (Irreversible cessation of circulatory and respiratory function).

2. மீள முடியாத நிலையில் ‘மூளை’யின் செயல்பாடுகள் நின்று விடுதல் (Irreversible cessation of all functions of the entire brain).

மருத்துவ முறையிலும், சட்டத்தின் முறையிலும் இன்று உலகம் முழுவதும் மரணம் குறித்து இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மரணம் நிகழக் காரணங்கள்:
விபத்துகள்
தற்கொலைகள்
கொலைகள்
நோய்கள்
இயற்கை மரணங்கள்
இவற்றில் விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவை எதிர்பாராது திடீரென ஏற்படும் நிகழ்வுகளாகும். இவற்றில் விபத்துகளில், தலையில் அடிபட்டு, தலை எலும்புகள் உடைந்து, மூளையும் பாதிப்படைந்தால் ‘மூளைச் சாவு’ ஏற்பட்டு மரணம் நிகழக்கூடும். மனத் தளர்ச்சி (Depression), சமூகப் பயங்கள், தற்கொலைகள் நிகழக் காரணங்களாக அமைகின்றன. நச்சு மருந்துகள், பூச்சிக்கொல்லிகளை அதிக அளவு எடுத்துக் கொள்ளுதல், தூக்கிட்டுக் கொள்வது போன்ற செயல்பாடுகளால் தற்கொலை நிகழ்கிறது. சண்டைகள், பகை, பயம், பழிவாங்குதல் போன்றவை கொலைகள் நிகழக் காரணமாகின்றன.
நோய்வாய்ப்பட்ட மரணங்களும், இயற்கை மரணங்களும் இயல்பான மரணங்களாக நிகழ்கின்றன. மாரடைப்பு, இதய முடக்கம் (Heart attack, Cardiac arrest) முதிர்ச்சியடைந்த புற்றுநோய், சிறு நீரகச் செயலிழப்பு, கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய், மிகு இரத்த அழுத்தம், தோல்வியடைந்த மருத்துவம், மூப்பு போன்றவற்றால் இயற்கை மரணங்கள் நிகழ்கின்றன.

மரணம் நிகழும் பொழுது:
மரணம் என்கிற நிகழ்வு நடக்கும் பொழுது, உடல் திசுக்களின் இயக்கம் முழுமையாக நின்றுவிடுகிறது. இதயம் தன் துடிப்பை நிறுத்திவிடும். மூச்சு நின்றுவிடும். மூளைச் செயல்பாடு முழுமையாக நின்றுவிடும். சில ஆய்வுகள், மரணம் நிகழ்ந்த உடன் மூளை முழுமையாகச் செயலை நிறுத்திவிடாமல், மேலும் சில நிமிடங்கள் செயல்படுவதாகக் கூறுகின்றன. ஆனால் அந்தச் செயல்பாடுகளும் உயிரோடு இருக்கும் பொழுது மூளை செயல்படுவதைப் போலில்லாமல் மந்தகதியில் அச்செயல்பாடுகள் இருக்கும் என்பதும் அவ்வாய்வுகளின் முடிவு.

மரணத்தின் முக்கிய நிகழ்வுகள்:
மரணம் நிகழும் பொழுது, இதயம் நின்றுவிடும். இதயம் மெதுவாக நிற்கும் பொழுது, அது வெளியேற்றும் இரத்தமும், இரத்த ஓட்டமும் மெதுவாகி, இரத்த ஓட்டம் நின்றுவிடும். இரத்த ஓட்டம் நிற்பதால் உடல் திசுக்களுக்குத் தேவையான உயிர் மூச்சுக்காற்று, திசுக்களுக்குச் செல்வது தடைபட்டு அத்திசுக்களின் இயக்கம் நின்றுவிடும். இரத்தத்தின்மூலம் செல்லும் உணவுச் சத்துக்களும் உயிர் மூச்சுக்காற்றும் (Oxygen) நின்று விடுவதால், செல்களில் ஏற்படும் “மூச்சுக்காற்று ஏற்றம்’’ (Oxidation) நின்றுவிடும். அதன் விளைவாக செல்களில் உண்டாகும் வெப்பம் உண்டாகாமல் உடல் சில்லிட்டுப் போகும். இறந்த உடல் சில்லிட்டுப் போக இதுவே காரணம்.
அனைத்துத் திசுக்களில் ஏற்படும் மாற்றங்கள் போலவே நரம்பு மண்டலமும், அதன் தலைமையகமான மூளைத் திசுக்களும் செயலிழக்கத் துவங்கி, சில நிமிடங்களில் தன் செயல்பாட்டை முழுமையாக நிறுத்திக்கொள்ளும். “இறப்பு’’ என்பதற்கு “மூளைச்சாவு’’ என்று உறுதியான பின், மூளையின் செயல்பாடுகள் நின்ற பிறகும் இன்றைய மருத்துவ அறிவியல் மற்ற உறுப்புகளின் செயல்பாட்டை நிறுத்தாமல் பல நாள்கள் செயல்பட வைக்கக்கூடிய வகையில் வளர்ந்துள்ளது.

எதிர்பாராத விபத்துகளால் பாதிக்கப்பட்ட-வர்களின் தலையில் அடிபடும் சூழ்நிலையில் (Head Injury) அடிபட்டவர் முழு மயக்க நிலைக்குச் (Coma) சென்றுவிடும் சூழ்நிலை ஏற்படும். அப்படிப்பட்ட நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால் மூளை மெதுவாகச் செயலிழக்கும் நிலை ஏற்பட்டாலும், மற்ற முக்கிய உறுப்புகள் செயலிழக்காமல், நோயாளிக்கு வெளியிலிருந்து, பொறிகள் மூலம் (Mechines) இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளைச் செயல்படுத்த முடியும். இந்த மருத்துவ வளர்ச்சி, உறுப்பு மாற்று (Organ Transplantation) மருத்துவத்தில் ஒரு பெரும் புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி பல்லாயிரக் கணக்கான நோயாளிகள் (உறுப்புகள் செயலிழந்தவர்கள்) வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
* இறப்பிற்கு முன் முதல் நாளோ அல்லது
சில நாட்களுக்கு முன்போ உடல் செயல்பாடுகள் சிறிது சிறிதாகக் குறைந்துகொண்டே வரும்.
* மரணத்திற்கு முன் நோயாளி மிகவும் அமைதியாக இருக்கக் கூடிய சூழ்நிலை சில நேரங்களில் ஏற்படும்.
* மரணம் என்பது சில நேரங்களில், சிலருக்கு திடீரென ஏற்பட்டாலும் (எடுத்துக்காட்டாக, இதய முடக்கம் (Cardiac arrest) ஏற்பட்டு இறத்தல்), பெரும்பாலான நோயுற்றவர்களுக்கு மருத்துவம் செய்வதற்கேற்ப, மெதுவாகவே ஏற்படலாம். மரணம், மருந்துகள் மூலம் அமைதியாகவும், மெதுவாகவும் இறப்பு ஏற்படுத்துவதையே மருத்துவர்கள் செயல்படுத்துவர்.
* நோயாளிகள் வலியின்றி, அமைதியாக, அதிகத் தொல்லைப்படாமல் இயற்கையாக மரணமடையும் நிலையும் சில சமயம் எற்படும்.
* மரணம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகையில் நிகழும் என்பதே உண்மை.
ஒவ்வொருவருடைய வயது, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய், அதனால் ஏற்பட்ட உறுப்புகளின் பாதிப்புகள், அந்நோயினை£ல் பாதிக்கப்பட்ட முக்கிய உறுப்புகளின் செயலிழப்பு, மருத்துவம் செய்வதன் நிலைப்பாடுகள் போன்றவை ஒருவரின் மரணம் நிகழும் நேரத்தை நிர்ணயிக்கும் (எடுத்துக்காட்டாக மாரடைப்பு ஒரு சில மணி நேரத்தில் நிகழும் இதய முடக்கம் உடனே நிகழ்ந்துவிடும். விபத்துகளால் ஏற்படும் மரணம் அவர்களுக்குப் படுகின்ற காயங்கள், இரத்தப்போக்கு போன்றவற்றைப் பொருத்து ஏற்படும். வயது மூப்பினால் ஏற்படும் மரணம், உறுப்புகளின் செயலிழப்பைப் பொறுத்து சில மணி நேரம் முதல் சில நாள்கள் வரைகூட மெதுவாக நிகழும்.)
இதய நோய்கள், நுரையீரல் நோய்கள், புற்று நோய்கள், சிறு நீரக நோய்கள் மருத்துவம் செய்வதைப் பொறுத்தும், மருத்துவம் பயனின்றிப் போவதைப் பொறுத்தும் மரணத்தைத் தள்ளிப்போடலையும், பின் மரணம் நிகழும் வகையில் அமையும். மரணத்தின் நிகழ்வை இந்த உறுப்புகளுக்குச் செய்யும் மருத்துவம் மெதுவாக நிகழ வைக்கும் (slow down)

மரணத்திற்கு முன் ஏற்படும் மற்ற மாற்றங்கள்:
பெரும்பாலானவர்கள் மரணத்திற்கு முன் ஒரு சில மணிகளோ, ஒரு சில நாள்களோ அமைதியான உறக்க நிலையிலோ (More Sleep) ஆழ்ந்த மயக்கத்திலோ (Coma) ஆழ்ந்துவிடுவர். உடல் இயக்கத்திற்கு தேவையான உணவுகள் உடலில் உள்ளே செல்லாததால் உடல் உறுப்புகளின் செயல்பாட்டிற்குத் தேவையான சக்தி கிடைக்காது. அதனால் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் குறைந்துகொண்டே வரும். இதயம் மெதுவாக இயங்குவதால் உடலுக்குத் தேவையான இரத்தம் இதயத்திலிருந்து செல்லாது.
இரத்தத்தின் மூலமே செல்களின் இயக்கத்திற்குத் தேவையான உணவு, உயிர்மூச்சுக்காற்று கிடைக்காது. மெதுவாக உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கும். இறக்கத் துவங்கும் உறுப்புகளுக்கு செயலிழப்பின் விளைவாக பசியோ, தாகமோ எடுக்காது. இந்த பசியின்மை நோயினாலோ, மூப்பினாலோ ஏற்படும் மரணத்திற்கு பல நாள்களாகவோ, பல வாரங்களாகவோ, பல மாதங்களாகவோகூட நிகழக்கூடும்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:44 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: மரணம்

திங்கள், 17 ஏப்ரல், 2023

மகப்பேறு (PRAGNANCY) - நவீன மருத்துவங்கள் (104)

 

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (104)

2022 மருத்துவம் ஜுலை 01-15 2022
July 5, 2022உண்மை

மகப்பேறு
(PRAGNANCY)
மரு.இரா.கவுதமன்


கருவுறுதல் நிகழும்பொழுது அறிகுறிகள் அனைத்துமோ அல்லது ஒரு சிலவோ மட்டுமோ தோன்றலாம். சில நேரங்களில் சிலருக்கு எந்த அறிகுறிகளுமே இல்லாமல், மாத விலக்கம் நின்று மட்டும் போகலாம். கருவுறுதல் ஆய்வுச் சோதனை செய்வதன் மூலம், கருவுற்ற நிலையை அறியலாம்.
இரும்புச் சத்து மாத்திரைகள், ஃபோலிக் அமில மாத்திரைகள், வைட்டமின் மாத்திரைகள் முதல் பருவ கருவுற்ற காலத்தில் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். மருத்துவ அறிவுரைகளும், ஆய்வும், மருந்துகளும் முதல் பருவத்தில் உண்டாகும் தொல்லைகளைக் குறைக்க உதவும்.

இரண்டாம் மூன்று மாதப் பருவம் (II Trimester) அறிகுறிகள்:
இரண்டாம் மூன்று மாதப் பருவம் அல்லது இரண்டாம் பருவம் என்பது கருவுற்ற 13 வாரம் தொடங்கி, 26வது வாரம் வரை இருக்கும் காலக் கட்டமாகும். முதல் பருவத்தில் உண்டான பல தொல்லைகள் குறையத் தொடங்கி முழுமையாகவே மறைந்து விடும். ஆரம்ப நிலையில் உண்டான களைப்பு குறைந்துவிடும். ஓய்வெடுக்க வேண்டும் என்ற உணர்வு மாறிவிடும். குமட்டல், சில நேரங்களில், சிலருக்கு உண்டாகும். வாந்தி போன்றவை நின்று விடும். ஆனால், வேறு சில அறிகுறிகள் தோன்றத் துவங்கும். அவற்றை இங்கு காண்போம்.

கருவுற்றலைப் பற்றிய சந்தேகம்:
இதுபோன்ற உணர்வு பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும். முதல் பருவத்தில் ஏற்பட்ட பல அறிகுறிகள் இரண்டாம் பருவத்தில் மறைந்துவிடும். பெரும்பாலான பெண்கள் எப்பொழுதும் இருப்பதுபோல் இயல்பான நிலைக்குத் திரும்பி விடுவர். குமட்டல் நின்று விடும், வாந்தி வராது. பசி எடுக்கும். களைப்பும், சோர்வும் மாறி கருவுற்ற பெண்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவர். முதல் பருவத்தில் ஏற்பட்ட பல சங்கடங்கள், இரண்டாம் பருவத்தில் முற்றிலும் நின்று விடுவதால், கருவுற்ற நிலை பற்றி சந்தேகம்கூட பலருக்கு ஏற்படும். உங்கள் உடல் வாகுக்கேற்ப உடல் வீக்கம் (Bump) போன்றவை ஏற்படாமல் இருக்கும். விரைவிலேயே இரண்டாம் பருவத்தில் படபடப்பு (Flutters) ஏற்படும். இதுவே கருவுற்றிருப்பதை உறுதிப்படுத்தும் அறிகுறியாக சில நேரங்களில் அமையும்.
இரண்டாம் பருவத்தில் கருப்பையில் குழந்தையும், பெண்களின் உடல் வளர்ச்சியிலும் மாற்றங்கள் ஏற்படும். பலருக்கு உடலில் வலி ஏற்பட வாய்ப்புண்டு. இடுப்புப் பகுதியிலும், வயிற்றின் பக்கவாட்டிலும் இந்த வலி அதிகமாகத் தெரியும். கருப்பையின் விரிவாக்கத்தால், கருப்பையின் சுற்றுத் தசை நார்கள் (Round ligament), மற்ற தசை நார்கள் விரிவடைவதால் இந்த வலி உணர்வு ஏற்படும். படுக்கையிலிருந்தும், உட்கார்ந்திருந்த நிலையிலிருந்து வேகமாக எழுந்தாலும், தும்மும்பொழுதும், இருமும்பொழுதும் இந்த வலியைப் பெண்கள் அதிகம் உணரும் நிலை ஏற்படும். இது தவிர முதுகுவலி (Back Pain), இடுப்பு வலி (Hip pain), கால்களில் வலி போன்றவையும் ஏற்படக்கூடும். வெந்நீர் ஒத்தடம் இடுப்புப் பகுதியில் கொடுப்பதன் மூலம் இந்த வலியைக் குறைக்க முடியும். இடுப்புப் பட்டை (Hip support belt) பயன்-படுத்துவதன் மூலம் வலியைக் குறைக்கலாம்.

கவட்டையில் மின்னல் போன்ற உணர்வு (Lightning Crotch):
இரு தொடைகள் சேரும் இடத்தில் பிறப்புறுப்பில் இடிப்பது போன்ற ஒரு இனிமையான உணர்வு (Lightning Crotch) சில நொடிகள் தோன்றி மறையும். எந்த நேரத்திலும் இந்த உணர்வு தோன்றும். ஆனால், நீண்ட நேரம் இந்த உணர்வு இருக்காது. சில பெண்களுக்கு அடிக்கடி இந்த உணர்வு ஏற்படும். சிலருக்கு ஏதாவதொரு நேரத்தில் ஏற்படும்.
சிலருக்கு ஏற்படாமல்கூட இருக்கும். எதனால் இந்த உணர்வு ஏற்படுகிறது என்பது தெரியவில்லை. இடுப்புப் பட்டை பயன்பாடு இந்த உணர்வைக் குறைக்க உதவும். குழந்தை வளர்ச்சி கூடும்பொழுதும் அது திரும்பும்-பொழுதும், உதைக்கும்பொழுதும் இந்த உணர்வு அதிகரிக்கும்.

தலைச்சுற்றல் (Dizziness):
கருப்பையில் குழந்தை வளர்ச்சியடையும் பொழுது, இரத்தத்தின் அளவும், இரத்த அழுத்தமும் அடிக்கடி மாறுபடும் நிலை கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும். இதனால் தலைச்சுற்றல், தலைபாரம், சில நேரங்களில் மயக்கம் கூட ஏற்படலாம். ஆனால், இது தற்காலிகமானது. சில நொடிகளிலிலே இயல்பு நிலைக்கு பெண்கள் திரும்பி விடுவர். இதற்காக அஞ்ச வேண்டியதில்லை.
அடிக்கடி உணவு எடுத்துக் கொள்வதும், அதிகளவு நீர்மப் பொருள்களை உட்கொள்வதன் மூலம், உடலின் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் தலைச்சுற்றல் ஏற்படும்பொழுது குளியல் கூட அதனைப் போக்கும். தலைச்-சுற்றல் சில நேரங்களில், லேசான மயக்கம் உண்டாக்கும் நிலை ஏற்படக் கூடுமாதலால், அருகில் துணை இருப்பது நலம்.

கரு நெளிவு உணர்தல் (Flutters – quickening):
20 முதல் 21 வாரங்களில், தாயின் உடல்நிலைக்கேற்பவும், கருப்பையில் உள்ள நஞ்சுக் கொடியின் (Placenta) அமைந்துள்ள நிலைக்கேற்பவும் கரு நெளிவதை (Flutters-quickening) தாயால் உணர முடியும். முதல் பேறு காலத்தில் இதை முதலில் எளிதாக உணர முடியாது. ஆனால், நாளடைவில் தெளிவாக உணர முடியும். இரண்டாம் பேறு காலத்தில் முன் அனுபவம் காரணமாக இதைத் தெளிவாக உணர முடியும். இந்தக் கருவின் நெளிவுகள் கருவுற்ற தாய்மார்களுக்கு ஓர் இன்பமான உணர்வைக் கொடுக்கும். நஞ்சுக் கொடி கருப்பையின் முன்புறம் அமைந்திருப்பின் கரு நெளிவு தெரிய நாளாகும். இயல்பான நிலையில் நஞ்சுக் கொடி இருப்பின் இந்த உணர்வை எளிதில் உணரலாம். நஞ்சுக் கொடி முன் பகுதி அமைப்பில் இவ்வுணர்வு லேசாகக் கூட தெரியலாம்.
ஆரம்ப நாள்களில் இந்த உணர்வு வண்ணத்துப் பூச்சி, சிறகடிக்கும் உணர்வு போன்று வயிற்றுப் பகுதியில் உணர முடியும். சில நேரங்களில் லேசான அரிப்பு உணர்வுபோல்கூட இந்த உணர்வு தோன்றும். ஓர் இனிமையான உணர்வு உண்டாக்கும் (குழந்தை) கருவின் நெளிவுகள் பற்றி கருவுற்ற பெண்கள் “குழந்தைத் துடிப்பு’’ தெரிவதாக மருத்துவரிடம் சொல்லுவார். குழந்தை வளர, வளர இந்தத் துடிப்பு அதிகமாகி வயிற்றில் இடிப்பது போலவும், உதைப்பது போலவும் தெரியும். கருவுற்ற பெண்களுக்கு, அதுவும் முதல் மகப்பேறென்றால், ஓர் இனிமையான மகிழ்ச்சி கலந்த பெருமித உணர்வை உண்டாக்கும்.
(தொடரும்…)

இடுகையிட்டது parthasarathy r நேரம் 12:13 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கரு வளர்ச்சி, மகப்பேறு
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

மருத்துவ சின்னம்

மருத்துவ சின்னம்
கடுசியஸ் (Caduceus)

மருந்து

உணவே மருந்து!
Powered By Blogger

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

இந்த வலைப்பதிவில் தேடு

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (1)
    • ▼  ஜூலை (1)
      • சிறுநீரகச் செயலிழப்புக்கு டயாலிசிஸ் தீர்வா?
  • ►  2025 (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2024 (20)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (6)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2023 (22)
    • ►  ஜூன் (5)
    • ►  ஏப்ரல் (16)
    • ►  மார்ச் (1)
  • ►  2022 (18)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (11)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (1)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (1)
  • ►  2021 (35)
    • ►  டிசம்பர் (2)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (6)
  • ►  2020 (15)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2019 (33)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (7)
  • ►  2018 (48)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (2)
  • ►  2017 (43)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (7)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (5)
  • ►  2016 (29)
    • ►  டிசம்பர் (7)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (3)
  • ►  2015 (27)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  ஜூலை (1)
  • ►  2014 (4)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (3)

லேபிள்கள்

  • (APPENTICITIS)
  • 2018
  • அடைப்பு
  • அழற்சி
  • அளவுகள்
  • ஆண் இனப்பெருக்கு
  • ஆண்கள்
  • ஆய்வு
  • ஆர்வி
  • ஆவி பிடித்தல்
  • ஆன்டிபயாடிக்
  • ஆஸ்துமா
  • ஆஸ்பிரின்
  • இதய
  • இதயம்
  • இதயம் ❤️
  • இரண்டாம் நிலை
  • இரத்த அழுத்தம்
  • இரத்தக்குழாய்
  • இரத்தம்
  • இரைப்பை
  • இரைப்பை அழற்சி
  • இளமை
  • இறைச்சி உணவு
  • இன உறுப்பு
  • இன உறுப்பு ஆய்வு
  • உடல் எடை
  • உடல்நிலை
  • உடற்கொடை
  • உடற்பயிற்சி
  • உணவு
  • உணவுக்குழாய்
  • உயிர்க்கொல்லி
  • எலும்பு
  • ஒமைக்ரான்
  • ஓஆர்எஸ்
  • ஓட்டம்
  • கடவுள் நம்பிக்கை
  • கண்
  • கரு வளர்ச்சி
  • கருத்தடை
  • கருவுறுதல்
  • கரோனா
  • கல்லீரல்
  • கல்லீரல் அழற்சி
  • கல்லீரல் அழற்சி (Hepatitis)
  • கலப்பு
  • கற்கள்
  • காது
  • காது-மூக்கு-தொண்டை
  • காய்ச்சல்
  • கால்வலி
  • கிருமி
  • குடல்
  • குடல்வால் அழற்சி
  • குடும்ப நலம்
  • குடும்ப நலன்
  • குரோமோசோம்
  • குழந்தை பிறப்பு
  • குழந்தையின்மை
  • கை இணைப்பு
  • கை மாற்று
  • கொலஸ்ட்ரால் - கவலை
  • கொழுப்பு
  • கோதுமை
  • சளி
  • சிறுநீரகக் கற்கள்
  • சிறுநீரககோளாறு
  • சிறுநீரகச் செயலிழப்பு
  • சிறுநீரகம்
  • சிறுநீரகம் (Kidney)
  • சினையுறுதல்
  • செயல் இழப்பு
  • சைனசு
  • டயாலிசிஸ்
  • தலை சுற்றல்
  • தாய்ப்பால்
  • தாவர உணவு
  • தூக்கம்
  • தைராய்டு
  • தொண்டை
  • நஞ்சு முறிவு
  • நினைவு
  • நீரிழிவு
  • நுண்ணுயிர் எதிர்ப்பிகள்
  • நுரையீரல்
  • நுரையீரல் பொறி (ECMO)
  • நுறையீரல்
  • நெஞ்சகம்
  • நெஞ்சு
  • நோய்
  • நோய் எதிர்ப்பு
  • நோய் கண்டறிதல்
  • நோய் தடுப்பு
  • பக்கவாதம்
  • பல்
  • பன்றி
  • பாக்டீரியா
  • பாத எரிச்சல்
  • பிசியோதெரபி
  • பித்தவெடிப்பு
  • பிறவி குறைபாடு
  • புரதம்
  • புற்றுநோய்
  • பேய்
  • பேறுகாலம்
  • மகப்பேறு
  • மஞ்சள் காமாலை
  • மயக்கவியல்
  • மரணத்திற்குப் பின்
  • மரணத்துக்கு பின்
  • மரணம்
  • மருத்துவ வளர்ச்சி
  • மருத்துவம்
  • மருந்து
  • மருந்துகள்
  • மன நலம்
  • மனநிலை
  • மாதவிடாய்
  • மார்பு வலி
  • மாரடைப்பு
  • முக சீரமைப்பு
  • மூச்சிரைப்பு
  • மூட்டுவலி
  • ரத்த அழுத்தம்
  • வயிற்றுப்போக்கு
  • வலி
  • வாடகைத்தாய்
  • விந்துப்பை வீக்கம்
  • விருது
  • வைட்டமின்
  • வைரசு
  • ஸ்டெம் செல்
  • DEATH
  • GASTRITIS
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.