சனி, 3 செப்டம்பர், 2016

கருப்பை புற்றுநோய்க்குத் தடுப்பூசி

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயில் முக்கியமானது கர்ப்பப்பை வாய் புற்றுநோய். இதற்கு, ஹீயூமன் பேப்பிலோமா வைரஸ் என்ற கிருமிதான் காரணம். இதைத் தடுக்க தடுப்பூசி இருக்கிறது. இதை, 11 வயதில் இருந்து 26 வயதுக்குள், திருமணத்துக்கு முன் போட்டுக்-கொள்வது நல்லது. முதல் ஊசியைப் போட்டதில் இருந்து, இரண்டு மாதங்கள் இடைவெளியில் இரண்டாம் தவணை, இரண்டு அல்லது நன்கு மாதங்கள் இடைவெளியில், மூன்றாம் தவணையைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். ஆண் இனப்பெருக்க உறுப்பு வழியாகத்தான் இந்த வைரஸ் பரவுகிறது என்பதால், பாலியல் முதிர்ச்சி பெறும் காலத்திலேயே ஆணுக்கும் இந்த ஊசியைப் போட்டுக்கொள்வது நல்லது.
-உண்மை இதழ், 1-15.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக