வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

குழந்தை நீரிழிவுக்கு - தடுப்பூசி


நீரிழிவு நோய் உலகெங்கும் அதிகரித்து வருகிறது. இதில், 'டைப் 1' ரக நீரிழிவு நோய் சில வைரஸ் தொற்றினால் வரக்கூடும் என பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அந்த வைரஸ்களைப் பற்றி கடந்த, 25 ஆண்டுகளாக செய்த ஆய்வுக்குப் பிறகு, அவற்றைத் தடுக்கும் ஊசி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். டைப் 1 நீரிழிவு, டைப் 2 நீரிழிவை விட குறைவாகவே வருகிறது என்றாலும், வைரஸ் தொற்று ஏற்பட்ட குழந்தைகளுக்கு, சிறு வயதிலேயே டைப் 1 நீரிழிவு ஆரம்பித்து விடுவது கொடுமையானது. உலகெங்கும் ஆண்டுக்கு, 80 ஆயிரம் குழந்தைகளுக்கு டைப் 1 நீரிழிவு உண்டாகிறது. குறிப்பிட்ட சில வைரஸ்கள், உடலில் இன்சுலினை சுரக்கும் கணையத்தை தாக்குகின்றன. இதனால்தான் டைப் 1 நீரிழிவு குறைபாடு உண்டாகிறது. எனவே, அதை உருவாக்கும் வைரசுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் டைப் 1 நீரிழிவை வெற்றிகரமாக தடுக்க முடியும் என பின்லாந்திலுள்ள டேம்பர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். விலங்குச் சோதனைகளில் வெற்றி கிடைத்திருப்பதையடுத்து, 2018இல் மனிதர்களுக்கு அந்தத் தடுப்பூசியைப் போட்டு சோதனைகளை மேற்கொள்ள விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். அதில் வெற்றி கிடைத்தால், டைப் 1 வகை நீரிழிவு நோயாளிகள் இளம் வயதிலேயே உருவாவதை தடுக்க முடியும்.

-விடுதலை,3.8.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக