செவ்வாய், 20 மார்ச், 2018

இரவு உணவை 8 மணிக்குள் முடியுங்கள்!

நம்முடைய முன்னோர்கள் அறிவுறுத் தியபடி Early To Bed Early To Rise என்பதுதான் சரியான வாழ்க்கை முறை. ஆனால், இன்றைய நமது அன்றாட செயல்கள் எல்லாம்  தலை கீழாக மாறிவிட்டன.

அவற்றில் ஒன்றுதான் இரவு உணவை தாமதமாக சாப்பிடும் வழக்கமும். இதனால், வயிற்றை நிரப்புகிறோம் என்பதை தவிர, வேற எந்த பயனும் நமக்கு கிடைப்பது இல்லை என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

இரவு உணவை இதுபோல் தாமதமாக சாப்பிடுவதன் மூலம் பல்வேறு பிரச்சினை களும் உண்டாகிறது.

இரவு உணவை 8 மணிக்கு முன் முடித்து விட வேண்டும். அதுதான் சரியான நேரம். அதற்கு மேல் தாமதமாகும் போது வயிற்றில் அமிலச்சுரப்பு உண்டாகும். நெஞ்சு எரிச்சல் ஏற்படும். சாப்பிட்ட உணவு எதுக்கலிக்கும். பலமணி நேரம் செரிமானம் ஆகாமல் அப்படியே தங்கியும் விடும்.

மேலும், இரவில் தாமதமாக உண்ணும் வழக்கத்தால் இயல்பைவிட, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம். எனவே, உடலில் கலோரி அளவும் அதிகரிக்கும். தூங்கும் நேரம் குறைந்து உடல் எடை அதிகரிக்கும். இரவில் நேரங்கழித்து சாப்பிடுவதால், உடல் எடை யைக் குறைக்க முடியாது.

இரவில் தாமதமாக சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்று கூறுவதை பெரும்பாலும் யாரும் பின்பற்றுவது கிடையாது. உரிய நேரத்தில் சாப்பிடாமல் இருத்தல், சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களை உண்ணுதல் போன்ற காரணங்களால் வளர்சிதை மாற் றங்கள் குறையும். ரத்தத்தில் டிரைகிளிசரைட் என்ற கெட்ட கொழுப்பின் அளவு அதி கரிக்கும். காலை, மதியம் என எந்த நேரத்து உணவாக இருந்தாலும், உரிய நேரத்தில் சாப்பிட்டு வந்தால்தான், நமக்கு அந்த உணவால் பயன் கிடைக்கும்.

அதனால் எந்த வகை உணவை, எந்த நேரத்தில், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை நன்றாக அறிந்து, அதனை பின்பற்றி வந்தால் உணவு வேளை மற்றும் உறங்கும் நேரம் சரியான சுழற்சியில் நடைபெறும். இரவில், சீக்கிரமாக சாப்பிடுவதால் செரிமான குறைபாடு, உடல் எடை அதிகரித்தல் போன்ற எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் முழு உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என பல மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக தூங்கச் செல்லும் 2 மணி நேரத்துக்கு முன்னால் சாப்பிடுவது சிறந்தது. இதன்மூலம் மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படும்.

சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.  இரவு வேளையில் நேரங்கழித்து சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் களைப்பு காரணமாக உடனே படுத்து விடுவார்கள். அவ்வாறு செய் வதால் செரிமானமாக போதுமான நேரம் கிடைக்காது.

மேலும், செரிமானம் மெது வாகவும் நடைபெறும். இதனால், குடலுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். அதேபோல், இரவு உணவு தாமதம் ஆகும் போது, காலை உணவு தவிர்க்கப்படுகிறது. தலைவலி வரும். உடலில் கொழுப்பு தங்கி விடுகிறது. ஆகவே, இரவு சாப்பாட்டை எவ்வளவு சீக்கிரமாக சாப்பிடுகிறோமோ அவ்வளவும் உடலுக்கு நல்லது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

உடலில் மண்ணீரலுக்கு என்ன வேலை? 

இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் ராதா கிருஷ்ணன். மனித உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் குறிப்பிட்ட பணிகள் உண்டு. அந்த வேலைகள் தடையின்றி நடந்தால்தான் உடலை உயிருடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ளவும் முடியும். அந்த வகையில் மண்ணீரலும் தன் பங்குக்கு சிறப்பான பணிகளைச் செய்கிறது.

மண்ணீரல் அடிவயிற்றின் இடது மேல் திசையில் அமைந்துள்ள உறுப்பாகும். சுமார் 7 சென்டிமீட்டர் வரை  இருக்கும். பிறந்து 5 வயது வரை ரத்த உற்பத்தி பணியை தீவிரமாக பார்க்கிறது. இதனால் குழந்தைகளை வயிற்றில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலில் இயங்குதல் தன்மையை ஊக்குவிக் கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. இதயத்தின் இயக்கத்தைத் தூண்டுகிறது.

ரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண் கிருமிகளை அழித்து சிறுநீரகத்தின் செயல் பாடுகளை தூண்டுகிறது.

ரத்தத்தின் மூலமாக வருகிற நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 
வியர்வை சுரப்பிகளைத் தூண்டுகிறது.கல்லீரல், இரைப்பை பித்தப்பை, சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் மண்ணீரல் பாதிக்கப்படும். வயிற்றுப் பகுதி அடிபட்டாலும் மண்ணீரல் பாதிப்பு ஏற்படும். மண்ணீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் உடனடி யாக அதனை அகற்றிவிடுவார்கள்.

இதனால் உயிருக்கு எந்த ஆபத்தும் வருவதில்லை. மண்ணீரல் பார்த்த பணியை கல்லீரல் பார்க்கத் தொடங்கிவிடும். மண்ணீரல் பாதிக்கப்பட்டிருந்தால் உடலில் எடை அதிகரிக்கும், அடிவயிற்றில் பயங்கர வலி உண்டாகும், வாந்தி ஏற்படும். கீரைகள், காய்கறிகள், சிறு தானியங்கள், கொய்யாப்பழம், திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம் போன்ற உணவுகள் மண்ணீரலுக்கேற்ற உணவுகள் ஆகும் என்கிறார்.

- விடுதலை நாளேடு, 19.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக