சனி, 13 அக்டோபர், 2018

பாக்டீரியா எனும் பயங்கரவாதி



ஒரு பத்து லட்சம் ரூபாய்க்கு மனை வாங்கி நாற்பது லட்சம் செலவு செய்து அழகாக வீடு கட்டி குடிபோகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நமக்கே நமக்காக நம்முடைய உழைப்பால் கட்டிய வீடு என்று பெருமிதமாக உணர்ந்து உணர்ந்து பூரிப்படை வீர்கள். ஆனால் அதில் உங்களுக்குத் தெரியாமல் - உங்களுக்கு வாடகையும் கொடுக்காமல் எத்தனை பேர் உடன் வாழ்கிறார்கள் தெரியுமா? நன்றாகத் தேடிப் பாருங்கள்...

உங்கள் வீட்டில் ஒரு 10 பல்லியாவது குடியிருக்கும். 50 சிலந்திப் பூச்சிகள் நம் வீட்டிற்கு உள்ளேயே தனி வீடு கட்டி இருக்கும். ஒரு 1000 எறும்புகளாவது சுற்றிக் கொண்டிருக்கும். மாலை வேளைகளில் ஒரு 300 கொசுக்கள் நம் உத்தரவில்லாமல் நம் வீட்டிற்குள் வந்து நம்மையே கடிக்கும். இரவில் 4 எலிகள் சுற்றும். 2 பூனைகள் அவற்றைக் கண்காணிக்கும். 5 குளவிகள் தன் குழந்தையோடு வாழ்ந்து கொண்டிருக்கும். ஒரு 10 கரப்பான் பூச்சிகள் மீசையை முறுக்கிக் கொண்டு உங்களையே முறைக்கும். ஒரு 4 தவளையாவது நம் குளியலறையில் அடைக்கலமாகி இருக்கும். இவை வாடகை தராமல் நாம் கட்டிய வீட்டில் நம்முடனே  வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இவை நம் கண்ணுக்குப் புலப்படுபவை. ஆனால் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரி யாக்கள் என்னும் நுண்ணுயிரிகள் லட்சக் கணக்கில்... அல்ல, அல்ல, கோடிக்கணக்கில் கூட நம் வீட்டில் உல்லாசமாக உடன் வாழ்ந்து வருகின்றன. இவை எல்லாவற் றாலும் ஏராளமான நோய்களுக்கு நாம் ஆளாகிறோம்.

தினமும் ஷூக்கள் அல்லது பூட்ஸ் அணிபவர்கள் தங்கள் காலுறையை அன்றாடம் துவைத்து சுத்தமாகப் பயன்படுத்த வேண்டும். ஒரே காலுறையைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது அதில் வியர்வை உறிஞ்சப்பட்டு ஏராளமான பாக்டீரியாக்கள் அண்டிக் கொள்ளும். காலுறை இல்லாமல் ஓட்டப்பயிற்சி (ரன்னிங்) ஷூ அணிபவர்கள் வருடம் ஒருமுறையாவது ஷூக்களையே மாற்றிக் கொள்ள வேண்டும். இவை வியர்வையை நேரடியாக உறிஞ்சுவதால் பாக்டீரியாக்கள் விரைவில் பெருகி அவை வசதியாக வாழ ஆரம்பித்துவிடும். நமது காலணிகளைக்கூட வருடம் ஒருமுறை மாற்றிக் கொள்வது நல்லது. அல்லது அவற்றை அடிக்கடி கழுவி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம் வீட்டையும், கழிவறைகளையும், தரையையும் சுத்தம் செய்யும் பிரஷ், குச்சிகள், கையுறை போன்றவற்றை ஆறு மாதங் களுக்கு ஒரு முறையாவது புதிதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தலையணையை அதன் உறையை இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றுங்கள். நம் வீட்டிலேயே அதிகமாக விரைவாக அழுக்காகி விடும் துணி தலையணை தான். இதில் சேர்ந்து வாழும் பாக்டீரியாக்களால் சரும அரிப்பு, இருமல், தும்மல், சளி போன்ற தொந்தரவுகள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

நீங்கள் குளித்துவிட்டு துடைத்துக் கொள்ளும் துண்டில் ஒருவித ஃபைபர் தன்மை இருக்கும். பயன்படுத்த பயன்படுத்த துண்டில் உள்ள ஃபைபர் தன்மை குறைந்துவிடும். இதில் பாக்டீரியாக்கள் வாசம் பண்ணத்தொடங்கி விடும். இந்தத் துண்டு களைத் துவைக்க துவைக்க அதில் பாக்டீரி யாக்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இவற்றையும் அடிக்கடி மாற்றிவிடுங்கள்.

நீங்கள் பல் துலக்கும் டூத் பிரஷ்ஷை கண்டிப்பாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிவிடுங்கள். குழந்தைகளுக்கான பிரஷ்ஷை மாற்றுவது கட்டாயம். இவற்றில் உள்ள நாட்பட்ட பாக்டீரியாக்கள் பல் தொற்றை ஏற்படுத்தி விடும்.

நீங்கள் தூங்கப் பயன்படுத்தும் மெத்தைப் படுக்கைகளைக்கூட 5 ஆண்டிற்கு

ஒருமுறை மாற்ற வேண்டும். ஆனால் அவை விற்கும் விலையில் நம் பொருளா தார சூழலுக்கு நிச்சயமாகக் கட்டுப்படி யாகாது. எனவே உங்கள் மெத்தை விரிப்பை குறைந்தது இரண்டு வாரங் களுக்கு ஒரு முறையாவது மாற்றி விடுங்கள். இவையெல்லாம் பாக்டீரியாக் களின் அட்டகாச பூமி என்றால் அது மிகை யில்லை.

ஒரு வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் முடிந்தவரை தனித்தனி சீப்பைப் பயன்படுத்துங்கள். அல்லது பயன்படுத்திய சீப்பை வாரம் ஒருமுறை யாவது கழுவி சுத்தம் செய்து வையுங்கள்.

நம் வீட்டில் குளியலறை, சமையலறை, தரைகள் துடைக்கப் பயன்படுத்தும் பஞ்சை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மாற்றி விடுங்கள். இவற்றில் வளரும் பாக்டீரியாக் களால் ஃபங்கஸ் (பூஞ்சை) தொற்று அதிகரிக்கும்.

இன்னும் முக்கியமானது நமது உள்ளாடைகள் மற்றும் ஆடைகள். இவற்றை நன்றாகத் துவைத்து சுத்தமாகப் பயன்படுத்த வேண்டும். தொற்றுநோய் பிரச்சினைகள், அரிப்பு, எரிச்சல், புண் போன்றவை ஏற்பட இவற்றில் வாழும் பாக்டீரியாக்களே பெரும் காரணமாக அமைகின்றன. சிலர் பல ஆண்டுகளாக ஒரே உள்ளாடைகளைப் பயன்படுத்துவார்கள். மேற்கண்ட நோய் அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்போது எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டாலும் குணமாகாது. உள்ளாடைகளை மாற்றி விட்டால் சரியாகி விடும். நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் மருந்து களுக்கு மட்டுமல்ல, நாம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களுக்கும் காலாவதி நாள் (Expiry Date) உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இவை எல்லாவற்றையும்விட முக்கிய மானது நாம் அன்றாடம் தொட்டுப் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்கள். பல வருடங்களுக்கு முன் இங்கிலாந்தில் பிளேக் என்னும் தொற்று நோயால் ஏராளமான மக்கள் குறுகிய காலத்தில் உயிரிழந்தனர். இந்த நோய் அவர்களிடம் புழங்கிய ரூபாய் நோட்டுகள் மூலம் பரவியிருந்ததை நீண்ட ஆராயச்சிக்குப் பின் கண்டறிந்தனர். சிறுநீரகத் தொற்றுநோய், மூச்சுப் பிரச்சினை, காச நோய், வயிற்றுப்போக்கு, தோல் பிரச்சினைகள், மூளைக் காய்ச்சல் போன்ற 78 வகையான நோய் பரப்பும் பாக்டீரியாக்கள் இந்திய ரூபாய் நோட்டுகளில் வசிக்கின்றன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. எனவே ரூபாய் நோட்டுகளை எச்சரிக்கை யாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ரூபாய் நோட்டுகளை எண்ணும்போது நாக்கால் எச்சில் தொட்டு எண்ணுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
- விடுதலை ஞாயிறு மலர், 29.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக