செவ்வாய், 21 மே, 2019

உறக்கத்தைக் கெடுக்கும் 8 முக்கிய காரணிகள்

சராசரி மனிதர்கள் தங்களின் வாழ் நாளில் மூன்றில் ஒரு பகுதியை உறங்கியே கழிக்கின்றனர்.உறக்கம் மனித உடலியலில் இன்னும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது  உறக்கம் மனிதன் உடல் மற்றும் சீரான மனநிலை இரண்டோடு மிகவும் ஆழமான தொடர்புடையதாக உள்ளது, பொதுவாக இதை நாம் மேலோட்டமாக அறிந்தி ருப்போம்.   சரியாக உறக்கமின்றி இருக்கும் மனிதர்கள் மாரடைப்பு உள்ளிட்ட பல உடல்நலச் சீர்கேடுகளுக்கு ஆளாகின்றனர். மருத்துவவல்லுனர்கள் மனிதர்களின் நிம்மதியான உறக்கம் குறித்து அதை கடைப் பிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு பரப்புரைச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறிக் கொண்டே உள்ளனர்.

உறக்கம் பற்றிய பல்வேறு கட்ட ஆய்வை உடல்நலத்திற்கான ஸ்லீப் ஹெல்த் என்ற தலைப்பில் ஆய்வு இதழ் பல்வேறு நபர்களிடம் ஆய்வை  நடத்தி யுள்ளது, அதுவும் உறக்கம் குறித்த விழிப் புணர்வை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு  இருக்கும் வகையில் உள்ளது. உறக்கம் பற்றிய நீண்ட ஆய்வில் மேற் கொண்ட மருத்துவ நிபுணர்கள் தூக்கமின் மைக்காக பல்வேறு காரணங்களை பட்டி யலிட்டு அதில் மிகவும் முக்கியமானதாக 20 காரணங்களை எடுத்துக் கொண்டு அவற்றை மனிதர்களின் இயல்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தி அவை எவ்வாறு மனிதர்களின் உடல் நலத்தைப் பாதிக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.   அந்த பட்டியலில் உறக்கமின்மைக்கான காரணங்கள் மிகவும் அபாயகரமானவை களாக உள்ளது.

1. சரியான உறக்கம்


பொதுவாக ஆரோக்கியமான மனிதர் களுக்கு குறைந்தபட்சம் அய்ந்துமணிநேரம் அல்லது அதற்கும் சிறிது குறைவான அளவு உறக்கம் கண்டிப்பாக தேவை, இந்த நேரம்  குறையும் போது உடல்நலிவுற ஆரம்பிக் கிறது,  நன்கு ஆரோக்கியமான ஒருவர் உறக்கத்தை தவிர்க்கும் போது அவரது உடல் பல்வேறு உபாதைகளுக்கு மெல்ல மெல்ல ஆளாகிக்கொண்டு வருகிறது, முக்கியமாக இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் மனநலம் தொடர்பான பாதிப்புகள், மனச் சோர்வு, போன்றவை அதிகரிக்கும். மேலும் உடலின் ஹார்மோன் செயல்பாடு களில் பெரிய மாற்றம் ஏற்படும். இதன் காரணமாக நீரழிவு, உடற்பருமன் அதிகரிக்கிறது, முதியவர்கள் மற்றும் தொடர் சிகிச்சை எடுக்கும் நபர்கள் 7 முதல் 9 மணி நேரம் தூங்கவேண்டும் என்று மருத்து வர்கள் பரிந்துரைக்கின்றனர். நன்றாக உறங்குவதும் ஒரு நோய் தடுப்பு சிகிச்சை முறைதான்,

2. உறங்கச் செல்லும், முன்பு


படுக்கைக்குச் செல்லும் முன்பு உங்களின் மனதிற்கு பிடித்த நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் பார்ப்பது அல்லது பாடல்களைக் கேட்பது ஒரு நல்ல பழக்கம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  நீங்கள் உறங்கச்செல்லத்தயாராகிக்கொண்டு இருக்கின்றீர்களா? முதலில் அலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பயன் படுத்துவதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.  மின்னணு திரைகள் வெளிவிடும் ஊதா கதிர்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளை விக்கின்றன. முக்கியமாக அவை மனங்களில் சஞ்சலத்தை உருவாக்கி தூக்கம் தொடர்பான எதிர்மறை காரணிகளை உருவாக்கி விடுகின்றன.

3.  உடலில் இயங்கும் கடிகாரம்


மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து உறக்க நேரம் கடைப்பிடிக்கப் படுகிறது, உங்கள் உடல் ஒரு கடிகாரம் போன்று அது தானாகவே இயங்கி உங்களின் உறக்க நேரத்தை உங்களுக்கு சுட்டிக்காட்டும் இதை நாம் எப்போதுமே புறந்தள்ளக்கூடாது, நமது உடல் வேலை செய்வது மற்றும் ஓய்வு எடுப்பது போன்றவை இயற்கையின் மாற்றங் களைப் பின்பற்றி நடைபெறுகிறது, சூரிய உதயத்தின் போது உடல் புத்துணர்ச்சி பெறுவது, சூரியன் மறையும் போது சோர் வாக இருப்பது போன்றவை நமது உடல் கடிகாரம் பின்பற்றும் ஒரு தொடர்நடவடிக்கை ஆகும். இதை நாம் பின்பற்றவில்லை என் றால் நமது உறக்க நேரத்தில் பெரும் மாற்றம் ஏற்படும். சரியான நேரத்திற்கு உறங்காமல் உட லுக்கு அதிக வேலைகளைக் கொடுத்து விட்டு நாமாகவே உறக்கத்திற்கு கால அளவை ஏற்படுத்துவது உடல் நலத்திற்கு கேடுகளை விளைவிக்கும் காரணிகள் ஆகும். கண்கள் மூடிய நிலையில் படுக் கையில் தூங்குவதுபோல் இருப்பதும் கிட்டத் தட்ட நல்லது.

இரவு நேரப் பணியில் உள்ளவர்கள் பெரும்பாலும் உறக்கமின்மை, மன அழுத் தம் போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளா கின்றனர். இதனால் நீரழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது

4. தூக்கம் வரவில்லையா? கண்களை மூடி ஒரு நிலைப் படுத்துங்கள்


சிலருக்கு வேலைப்பளு காரணமாக உறக்க உணர்வு மங்கியதைப் போல் உணரலாம், அல்லது களைப்பு ஏற்பட்டு உடல் சோர்வடைவது போல் உணரலாம், உடலை இவ்வாறு நாம் மாற்றுவது மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒன்றாக ஆய் வாளர்கள் கூறுகின்றனர்.  மனிதர்களது மூளை,  இதயம் மற்றும் நுரையீரல் போன்ற வற்றின் செயல்பாடுகள் விழித்திருக்கும் போது தனித்தன்மையுடனும் உறங்கும்  போது தனித்தன்மையுடனும் இயங்கு கின்றன, இது உடலுக்கு மிகவும் முக்கியமான செயல்பாடாக கருதப்படுகிறது.

உடலில் மிகமுக்கிய உறுப்புகளான இவைகளின் செயல்பாடுகள் ஆழ்ந்த உறக்கத்தின் மூலமே சாத்தியமாகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆழ்ந்த உறக்கம் மற்றும் அதன்மூலம் உடலில் உறுப்புகளின் செயல்பாடுகள் போன்றவை ஒன்றுக்கொன்று தொடர்பு டையது, ஆகவே நாம் உடலின் செயல்பாட்டிற்கு ஏற்ப மாற்றி கொள்ள வேண்டும். போதுமான தூக்கமின்மை உடலின் உறுப்புகளைப் பாதிக்கும் என் பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும் என்று ஆய்வாளர் ராபின்ஸ் கூறுகிறார்.

5.உறக்கம் என்பது நமக்கு கிடைத்த பரிசு ஆகும்


உறக்கமின்மை என்பது நாம் உறக் கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் பாதிப்பை ஏற்படுத்தும்,  உறக்கம் என்பது நமக்கு கிடைத்த பரிசு ஆகும், இதை நாம் கொண்டாடி வரவேற்கவேண்டும்,  சிலருக்கு முக்கிய அலுவலக கலந்துரையாடலின் போதோ, விமானப் பயணத்தில் நண்பருடன் பேசிக்கொண்டு இருக்கும் போதோ தூக்கம் வரலாம், முடிந்த வரை அது போன்ற நேரங்களில் உறக்கத்தைக் கட்டுப்படுத்து வதை விட விரைவாக முடித்துகொண்டு உறங்கச்செல்வது நல்லது.

6. உறங்கச்செல்லும் முன்பு தவிர்க்கவேண்டியது


இரவு உறங்கச்செல்லும் முன்பு வரவுசெலவு கணக்கு பார்ப்பது, சில மிடறு மது அருந்துவது, அல்லது நரம்புகளை மந்தப்படுத்தும் இருமல் மருந்துகளை சாப்பிடுவது போன்றவை உண்மையில் உங்களுக்கு உறக்கத்தைத் தராது, உங்களுக்கு உறக்கம் வந்தது போல் இருந்தாலும் இவை எல்லாம், உங்கள் மூளையை மிகவும் சோர்வடையச்செய்யும் ஒன்றாகும்,  இதன் மூலம் காலை நேரம் உங்களுக்கு தலைவலி மற்றும் சோர்வான உணர்வே ஏற்படும்

7. உறக்கமின்மையால் மூளையின் செயல்பாடுகள் பாதிப்படையும்


நாம் உறங்குவதற்காக சில பழக்க வழங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.  இது பொதுவான ஒரு நம்பிக்கையாக உள்ளது, இது நம்பிக்கை என்றாலும் இது ஒருவிதத்தில் நன்மை விளைவிக்கும் ஒன்றாகும், எடுத்துக் காட்டாக உறங்கச்செல்லும் முன்பு சூடான பால் அருந்தக் கூறுவார்கள். இது நல்ல பழக்கம் என்றாலும் சிலருக்கு பால் அருந்துவது பிடிக்காத ஒன்றாக இருக்கும். அப்படியென்றால் சூடான காபி சிறிது அருந்தலாம், இதன் மூலம் நல்ல உறக்கம் வரும் என்றால் அதை தொடர்வதில் தவ றில்லை என்கிறார் ஆய்வாளர் ராபின்ஸ்.

-  விடுதலை நாளேடு, 20.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக