புதன், 25 செப்டம்பர், 2019

சர்க்கரை நோய் ஏற்படுவது எப்படி?

*சர்க்கரை நோய் ஏற்படுவது எப்படி?  நீங்கள் சாப்பிடும் மருந்து எப்படி வேலை செய்கிறது? என்ன மருந்து சாப்பிடலாம்?*


சர்க்கரை நோய் ஏற்படுவது எப்படி?

நீங்கள் சாப்பிடும் மருந்து எப்படி வேலை செய்கிறது?

என்ன மருந்து சாப்பிடலாம்?

நாம் உணவு சாப்பிட்டவுடன்  நம் உணவில் உள்ள  குளுக்கோஸ் குடலால் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலக்கிறது.

ஆனால் அந்த குளுக்கோஸை நம் உடலில் உள்ள செல்களால் நேரடியாக ஏற்க முடியாது.

செல்கள் குளுக்கோசை ஏற்றுக் கொள்ள இன்சுலின் தேவை. இன்சுலினை கணையம்தான் உற்பத்தி செய்யனும்.

இன்சுலின் இரண்டு வேலை செய்கிறது

1) உடலில் உள்ள செல்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோசை ஏற்று அதை சக்தியாக மாற்ற உதவுகிறது

2) இரத்தத்தில் அதிகப்படியாக உள்ள குளுக்கோஸை கல்லீரல் சேமிக்க உதவுகிறது.

கல்லீரல்தான் குளுக்கோஸை
glycogen என்ற பொருளாக மாற்றி கல்லீரலிலேயே சேமிக்கிறது.

கணையம் போதுமான இன்சுலீனை சுரக்காவிடில் இரத்தில் உள்ள குளுக்கோஸ் சிறுநீராக வெளியேறி விடும்.
இதுதான் Type 2 சர்க்கரை நோய்.

கணையம் இன்சுலீனை கொஞ்சமும் சுரக்காவிடில் அது Type 1 சர்க்கரை நோய். அதற்கு Insulin Injection மட்டுமே தீர்வு

(Insulin helps control blood glucose levels by signaling the liver and muscle and fat cells to take in glucose from the blood. Insulin therefore helps cells to take in glucose to be used for energy.
If the body has sufficient energy, insulin signals the liver to take up glucose and store it as glycogen.
The liver can store up to around 5% of its mass as glycogen.)

இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு மிகவும் அதிகமானால் அதை
hyperglycemia என்பர்.
மிகவும் குறைந்தால் என்பர் hypoglycemia.

கணையம் இன்சுலினை சுரக்க வைக்க என்ன மருந்து.?

glibenclamide (Daonil)  என்ற மருந்துதான் அதிகமாக பயன்படுகிறது. இது கணையத்தை தூண்டி இன்சுலினை சுரக்க வைக்கிறது.

(Daonil lowers high blood glucose by increasing the amount of insulin released by your pancreas)

சர்க்கரை நோய் உண்டாக இரண்டாவது முக்கிய காரணம் என்ன?

ஒரு ஆரோக்கியமான மனிதன் உணவு உண்ணாத போது அவனுடைய கல்லீரல் தான் சேமித்து வைத்துள்ள கிளைக்கோஜனை குளுக்கோஸ் ஆக மாற்றி  இரத்தத்தில் கலந்துக் கொண்டே இருக்கும். ஏனென்றால் நம் உடல் செல்களுக்கு தேவையான Energy ஐ குளுகோஸ்தான் தருகிறது.

அதே மனிதன் உணவு சாப்பிட்டவுடன் அந்த மனிதன் சாப்பிடும் உணவில் இருந்து குளுக்கோஸ் இரத்தத்தில் கலக்கிறது. உடனே அவனுடைய கணையம்(known as beta cells)
இன்சுலினை சுரக்க ஆரம்பிக்கிறது

கணையத்தில் உள்ள  CBP என்ற புரோட்டின் கல்லீரலிடம் குளுக்கோசை இரத்தத்தில் கலக்கும் வேலையை நிறுத்தச் சொல்கிறது.

உடன் கல்லீரல் குளுக்கோசை இரத்தத்தில் கலப்பதை நிறுத்துகிறது.

ஆனால் சிலருக்கு இந்த CBP புரோட்டின் குறைவால் கணையத்தில் இருந்து கல்லீரலுக்கு செய்தி போவதில்லை.
அதனால் கல்லீரல் தொடர்ந்து குளுக்கோஸை இரத்தத்தில் கலந்துக் கொண்டே இருக்கும்.
the liver fails to sense insulin and continues to make glucose.

இதனால் இரத்தத்தில் அதிகமான குளுக்கோஸ் சேர்ந்து Type 2 சர்க்கரை நோய் உண்டாகிறது.

இதைத்தான் insulin resistance என்கிறோம்.

(In healthy people, the liver produces glucose during fasting to maintain normal levels of cell energy production. After people eat, the pancreas releases insulin, the hormone responsible for glucose absorption. Once insulin is released, the liver should turn down or turn off its glucose production, but in people with Type 2 diabetes, the liver fails to sense insulin and continues to make glucose. The condition, known as insulin resistance, is caused by a glitch in the communication between liver and pancreas)

இந்த" insulin resistance" என்ன மருந்து சாப்பிலாம்?

Metformin (metformin hydrochloride)
என்ற மருந்தே 1950 முதல்
சர்க்கரை வியாதியினர் உபயோப்படுத்தி வருகிறார்கள்.

இந்த மருந்துதான் கணையம் சொல்லும் செய்தியை கல்லீரலுக்கு சொல்லி கல்லீரல் இரத்தத்தில்  வெளியிடும் குளுக்கோசை நிறுத்த வைக்கிறது

அதாவது கணையத்தில் உள்ள CBP
புரோட்டின் செய்ய வேண்டிய வேலையை இந்த மருந்து செய்கிறது

தற்போது அதிநவீன மருந்துகள் வந்து விட்டது. எனினும் மிகவும் எச்சரிக்கையாக அதை வாங்கி சாப்பிடுங்கள். பல மருந்துகள் மிகவும் ஆபத்தானவையே.

*-By Antony Parimalam*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக