ஞாயிறு, 1 மார்ச், 2020

மனநலத்தை பேணிக் காப்போம்!

மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம் என்பது வள்ளுவர் வாக்கு. வள்ளுவரின் காலந்தொட்டே மனநலம் பற்றிய சிந் தனை எழுந்துள்ளது. மனத்தில் உருவாகும் எண்ணங்கள், அதனால் விளையும் செயல்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள் ஆகியவற்றின் தொகுப்பே, மனநலத்துக்கு அடித்தளமாகத் திகழ்கிறது.

மனநலம் குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் மேம்படுத்தும் நோக்கில் ஸ்டான்லி மருத்துவமனையின் மனநல மருத்துவத் துறை மனநலக் கையேட்டை வெளியிட்டுள்ளது. மன வருத்தம், தற்கொலை, மனப் பதற்றம், ஆளுமைக் கோளாறு குறித்த விளக்கங்கள் அந்தக் கையேட்டிலிருந்து இங்கே எடுத்துத் தரப்பட்டுள்ளன.

மன வருத்தம்

ஒரு இயல்பான மனநிலை, வேதனை யான உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடே இந்த மன வருத்தம். இந்த வருத்தம், சோர்வு தொடர்ந்து இருந்து தனக்கும் மற்றவர்களுக்கும் பிரச்சினை களைத் தருமானால் மன நோயாக மாறுகிறது. மனப் பாதிப்புகளிலேயே மிக அதிகமாகவும் பரவலாகவும் காணப் படுவது மன வருத்த நோய். ஆண்களைவிடப் பெண்கள் அதிக அளவில் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதிகமாகப் பாதிக்கப்படுவது வயது முப்பதிலிருந்து அய்ம்பதுவரை.

இந்த நோயைக் கண்டறியும் அறிகுறிகள்

# உறக்கமின்மை

# பசியின்மை

# எதிலும் நாட்டமின்மை

# எளிதில் சோர்வடையும் நிலை

# செயலில் மந்தநிலை

# மனத்தளவில் மகிழ்ச்சியின்மை

# தன்னம்பிக்கை இழந்த நிலை

எதிலும் எதிர்மறை எண்ணங்கள் எழும் நிலை காணப்படுகிறது. என்னால் முடியாது, எதிர்காலம் எனக்கில்லை, இவ்வுலகில் வாழ்வது வீணே என்பது போன்ற எண்ணங்கள் அதிகமாகும்போது தற்கொலை எண்ணம் தலைதூக்குகிறது. இந்நோயை முன்பே கண்டறிந்து மனநல நிபுணரை அணுகி உரிய நேரத்தில் மருந்துகள் உட்கொண்டு மனவழி மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் முற்றிலும் குணப்படுத்த முடியும்.

தற்கொலை என்பது தன் உயிரைத் தானே அழித்துக்கொள்வது. நாற்பது விநாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

காரணங்கள்

# தனி மனிதக் காரணங்கள்

# சமூகக் காரணங்கள்

தனிமனிதக் காரணங்களாகக் கருதப்படுவது ஏமாற்றம், தோல்வி, இழப்பு, அவமானம் ஆகியவை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், மதம், அரசியல் எனப் பல சமூகக் காரணங்கள் உள்ளன.

காரணங்கள் எதுவாக இருந்தாலும், அதைச் சமாளிக்கும் திறன், பிரச்சினை களுக்குத் தீர்வுகாணும் மனஉறுதி குறையும் போது, தற்கொலை எண்ணம் மேலோங்கு கிறது. பிரச்சினைகளை மற்றவர்களிடம் பேசும்போது மனபாரம் குறையும், ஒரு தீர்வு கிடைக்க வழிவகுக்கும். அந்த ஒரு நொடியில் அவரது பிரச்சினையைக் கேட்டு அரவணைத்து ஆதரவு கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது தற்கொலையிலிருந்து மீள, மறுவாழ்வு பெற ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு செய்ய முடியவில்லையெனில் மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றால், தற்கொலையைத் தடுக்க முடியும்.

மனப் பதற்றம்

மனப் பதற்றம் என்பது அச்சுறுத்தலின் போதோ அல்லது ஆபத்தான - கடினமான சூழ்நிலையிலோ நாம் அனைவரும் பெறும் ஓர் உணர்வு. ஆனால், நீங்கள் எந்தக் காரணமுமின்றிக் கவலைப்படுகிறீர்கள் அல்லது பதற்றப்படுகிறீர்கள் என்றால் அது வாழ்க்கையைப் பாதிக்கும்.

இதில் முக்கியமாக மூன்று வகைகள் உள்ளன.

# ஜெனரல் ஆன்சைட்டி டிஸ்ஆர்டர்

# பேனிக் அட்டாக்

# ஃபோபியா

நோய்க்கான காரணங்கள்

# மரபு வழி

# லேசான பதற்றத்தைக்கூடத் தீவிர உடல் நோயின் அறிகுறிகள் என்று நம்புவது

# உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகள்

# மனநலப் பிரச்சினைகள்

சிகிச்சை முறைகள்

# நீங்கள் நம்புகிற - மதிக்கும் ஒரு நல்ல நண்பர் அல்லது உறவினருடன் பேச முயல வேண்டும்.

# ஓய்வெடுப்பதற்கான சில சிறப்பு வழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

# மனநல மருத்துவரை நாட வேண்டும்.

உதவி பெறும் முறைகள்

# சுயஉதவி முறைகள்

# மன அழுத்தமாக இருக்கும்போது ஓய்வெடுக்க முயலுங்கள்.

# ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெறுவது அவசியம்

# உடல் ஆரோக்கியத்தைக் கவனி யுங்கள்.

# சில வழக்கமான உடற்பயிற்சிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

# நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் ஈடுபடுங்கள்.

ஆளுமைக் கோளாறு உள்ள ஒருவருடன் வாழும்போது அவர்களுக் கான இடத்தைக் கொடுப்பது, அவர்களின் கவலைகளைக் கேட்பது, ஒப்புக்கொள்வது, மற்றவர்களை (நண்பர்கள், உறவினர்கள், மருத்துவர்கள்) ஈடுபடுத்துவது அனைத் தும் பயனுள்ளதாக இருக்கும். உடன் இருப்பவர்களின் சொந்த உடல் / மன ஆரோக்கியத்தைக் கவனிப்பதும் முக்கிய மாகும்.

மனத்தைப் பேணுவோம்

ஒருவரின் எண்ணங்களும் செயல்களும் உணர்ச்சிகளும் தன்னையும், பிறரையும் பாதிக்காத அளவுக்கு இருக்குமேயானால், அதுதான் சிறந்த மனநலம்.

அதைப் பேணுவதும் போற்றிப் பாதுகாப்பதும் அவசியம். அதில் பிரச் சினை ஏற்பட்டால், மனநலம் பாதிக்கப் படும், பல விளைவு களையும் நாம் சந்திக்க நேரிடும்.

எனவே, விழிப்புணர்வு பெறுவோம், மனநலம் காப்போம், மனித இனம் வளர்ப்போம்.

- விடுதலை நாளேடு, 17.2.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக