புதன், 22 ஜனவரி, 2020

தீவிர சைவ உணவு உயிருக்கே உலை வைக்கும்!


நாட்டில் மிகவும் மோசமான மதவாத அரசியல் அரங்கேறி வருகிறது. இந்து மதக்கலாச்சாரப்படி தான் வாழவேண்டு மென்று சட்டம் மட்டும் இயற்றவில்லையே தவிர மற்றபடி வட இந்தியாவில் இந்து வென்றால் இப்படி இருக்கவேண்டும் என்று மறைமுகமாக பரப்புரை செய்தும் அதை பின்பற்றாதவர்களை இந்து அமைப் பினர் தாக்கியும் வருவது அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் நவராத்திரி மற்றும் இதர இந்து விழாக்களின்போது பல மாநி லங்களில் இறைச்சி விற்பனை தடை செய் யப்பட்டு வருகிறது, காந்தி பிறந்தநாள், மகாவீரர் பிறந்த நாள் உள்ளிட்ட பல முக்கிய நாட்களில் அவர்களின் நினை வாக அவர்கள் கடைப்பிடித்த வன்முறை யின்மை, கொல்லாமை குறித்த கொள்கை களுக்காக இந்த இறைச்சி விற்பனை தடை உள்ளது, அதுவும் கடைகளில் மட் டும் விற்பனை செய்யப்படாது, மற்றபடி வீடுகளில் சாப்பிட தடையில்லை.

ஆனால் தற்போது உத்தரப்பிரதேசம் அரியானா, குஜராத் போன்ற மாநிலங் களில் நவராத்திரி என்னும் 9 நாள் விழா வில் இறைச்சிக்கடைகளை மூடுங்கள் என்று மறைமுக மிரட்டல் விடுத்து வரு கின்றனர்.  தற்போது வாரத்தின் மூன்று விரதநாட்களில் இறைச்சிக்கடைகளை மூடுங்கள் என்று மிரட்டி வருகின்றனர். அரியானா  மாநிலத்தில் இறைச்சிகடைகள் இந்துக்கள் வாழும் பகுதியில் இருக்க கூடாது என்று மாநகர ஆணையர்களே மறைமுக உத்தரவு பிறப்பித்து வருகின்ற னர்.

இந்த நிலையில் இறைச்சி தொடர்பான விளம்பரங்களுக்கும் தடை விதித்து வரு கின்றனர். நாட்டில் அதிக அளவு கிளை களைக் கொண்ட அயல்நாட்டு இறைச்சி நிறுவனம் ஒன்று சமீபத்தில் ஒரு விளம் பரம் செய்தது, அதில் 'காய்கறிகள் சாப் பிட்டு சலிப்படைந்து விட்டீர்களா? புரோட்டின் உள்ள இறைச்சிகள் உங்களது விருப்பமாக இருக்கட்டும் எங்கள் நிறு வனம் உங்களுக்கு தேவையான புரத உணவை வழங்குகிறது' என்று விளம்பரப் படுத்தி இருந்தது,

இதைக் கண்ட மத்திய உணவுப் பாது காப்புத்துறை அந்த நிறுவனத்திற்கு எச் சரிக்கை விடுத்துள்ளது, அதில் இறைச்சி சாப்பிடுவதை விட காய்கறி சாப்பிடுவதை கெடுதல் என்று கூறுவது போல் உங்கள் விளம்பரம் உள்ளது, இறைச்சிக் கலாச் சாரத்தை ஆதரிப்பது போல் உங்கள் விளம்பரம் உள்ளது. ஆகையால் உங்கள் விளம்பரத்திற்கு அரசு அபராதம் விதிக் கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்தியப் பிரதேச அரசு கொண்டு வந்த அங்கன்வாடிகளில் முட்டை கொடுக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும்  பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் இறைச்சி சாப்பிடுவது, முட்டை சாப்பிடுவது போன்றவை இந் துக்களின் கலாச்சாரம் இல்லை. இறைச்சி, முட்டை சாப்பிடுபவர்கள் இந்துக் கலாச் சாரத்திற்கு எதிராக செயல்படுபவர்க ளோடு கூட்டு சேர்ந்துவிட்டனர் என்று கூறிவருகின்றனர்.

வட இந்தியாவில் இறைச்சி சாப்பிடு பவர்கள் இந்துக்களாக இருக்க முடியாது என்ற ஒரு சமூக அச்சத்தை பரப்பி வரு கின்றனர். ஆனால் இறைச்சி உண்ணாமல் புரதச்சத்து குறைபாடு ஏற்பட்டு நாட்டில் மிகப்பெரிய ஊட்டச்சத்தின்மை சூழல் உருவாகும் அபாயம் ஏற்படும் என்பது குறித்து இவர்கள் அக்கறைகொள்வ தில்லை.

தீவிர சைவ உணவான "வீகன்" உணவுமுறையைப் பின்பற்றியதால் குழந்தை மரணம்... பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றத்துக்காகப் பெற் றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

'வீகன்’ என்னும் உணவு முறையைப் பின்பற்றியதால் ஊட்டச்சத்துக் குறை பாட்டால் 18 மாத குழந்தை இறந்ததை அடுத்து அக்குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகா ணத்தைச் சேர்ந்தவர்கள் ஷீலா- ரயான் தம்பதியர். இவர்களுக்கு 18 மாத ஆண் குழந்தை இருந்தது. 'வீகன்' உணவு முறையைப் பின்பற்றும் இத்தம்பதியர் தங்களது குழந்தைக்கும் இதே உணவு முறையைப் பழக்கப்படுத்தி வந்துள்ளனர்.

வீகன் என்பது சைவத்தின் அடுத்தபடி யான ஒரு உணவு முறை ஆகும். இந்த உணவு முறையால் குழந்தை ஊட்டச் சத்துக் குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அறியாத பெற்றோர் தொடர்ந்து குழந்தைக்கு அதே உணவு முறையை அளித்து வந்துள்ளனர்.

திடீரென கடந்த செப்டம்பர் மாதம் அந்தக் குழந்தை மரணமடைந்துவிட்டது. ஊட்டச்சத்துக் குறைபாடால் உடல் மெலிந்து இறந்துள்ளது அக்குழந்தை. இதையடுத்து பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றத்துக்காகப் பெற் றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தம்பதியருக்கு 5 மற்றும் 3 வயது களில் இரண்டு குழந்தைகள் வேறு உள்ள னர். இந்தக் குழந்தைகளும் பற்கள் சொத் தையாகி, உடல் மெலிந்து காணப்பட்டுள் ளனர். தற்போது இந்த இரண்டு குழந்தை களுக்கும் ஊட்டச்சத்து மற்றும் புரதம் அடங்கிய உணவு வழங்கப்படுகிறது, இவர்கள் தொடர்ந்து உணவு முறையை கண்காணிப்பதற்காக குழந்தைகள் அரசு காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

 -  விடுதலை ஞாயிறு மலர், 30.11.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக