புதன், 11 ஜனவரி, 2017

ரத்த ஓட்டமுள்ள செயற்கை சிறுநீரகங்கள்! அமெரிக்க மருத்துவர்கள் சாதனை!!




மனித உடலில் இயற்கையாக உள்ள சிறுநீரகம் போன்று செயல்படும் செயற்கை சிறுநீரகத்தை அமெரிக்க மருத்துவர்கள் முதல் முறையாக உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர்.

மனித உடலில் இயற்கையாக உள்ள சிறுநீரகம் போன்று செயல்படும் செயற்கை சிறுநீரகத்தை அமெரிக்க மருத்துவர்கள் முதல் முறையாக உருவாக்கி சாதனை புரிந் துள்ளனர். பரிசோதனைச் சாலையில் செயற்கை சிறு நீரகத்தை உருவாக்க வேண்டுமென்பது அறிவியல் அறிஞர்களின் நீண்ட நாள் கன வாகும்.  இதற்கான முயற்சிகள் இதற்கு முன்பும் மேற்கொள்ளப்பட்டன.  ஆனால் அவற்றின் அளவு, எலி போன்ற சிறிய பிராணிகளுக்கு மட்டுமே பொருந்துவதாக இருந்தது.

மேலும், சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு பின் ரத்தம் ஓடாமல் உறைந்ததால் பயனற்று போனது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா நகரில் வேக் பாரஸ்ட் பாப்டிஸ்ட் மருத்துவ மய்யம் உள்ளது.  இங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்ட அறிவியல் அறிஞர்கள், பன்றிக்கு பொருந்தும் அளவிலான சிறுநீரகத்தை உருவாக்கி உள்ளனர். பன்றியின் சிறுநீரகமும், மனித சிறுநீரகமும் ஒரே அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு உருவாக்கப்பட்ட சிறுநீரகத்தில் ரத்த ஓட்டம் ஒரு மணி அல்லது 2 மணி நேரம் மட்டுமே இருந்து, பின் உறைந்தது.  தற்போது உருவாக்கப்பட்டுள்ள சிறுநீரகத்தின் ரத்த ஓட்டம் 4 மணி நேரத்திற்கு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.  ரத்த ஓட்டம் 4 மணி நேரத்திற்கு உறை யாமலிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.  ஏனென்றால், இதே அடிப்படையில் ஈரல், கணையம் போன்ற உறுப்புகளையும் பரிசோத னைச் சாலையிலேயே செயற்கையாக உருவாக்க முடியும்.

இவ்வாறு வேக் பாரஸ்ட் பாப்டிஸ்ட் மருத்துவ மய்ய இயக்குநரும், பேராசிரி யருமாகிய அந்தோணி அடலா தெரிவித்தார்.

இதய நோய்களை குணப்படுத்தும் புதிய விதை


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள புகையிலை ஆராய்ச்சி மய்யத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதிய விதைக்கு இதய நோய் களைக் குணப்படுத்தும் தன்மை இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புகையிலை மூலம் புதிய விதை உற்பத்தியை புகையிலை ஆராய்ச்சி மய்யம் அறிமுகப் படுத்தி உள்ளது. இந்த விதையால் நிறைய பயன்கள் உள்ள தென்றும், குறிப்பாக புகை யிலையிலிருந்து எடுக்கப்படும் சோலினி சால் என்ற பொருள் இருதய நோய்க்கு நல்ல மருந்தாக அமையும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

-விடுதலை,18.9.14

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

🚨 *விழிப்புணர்வு* 🚨

சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்களிடம் பேசும்போது சொன்ன தகவல் இது..

*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

S T R  என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE

T = TALK

R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்வில், பொது இடங்களில் அல்லது வீட்டில் இருக்கும் போது, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார்.

நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம்.

*ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும்.

மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம்.

அதனை S T R  அதாவது,

*SMILE (சிரிக்க சொல்வது),*

*TALK (பேச சொல்வது),*

*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)*
போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* 👆இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.

மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

அதாவது, *அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*

அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம்.

அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!! 👍

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமு ம், ஏன் மனிதாபிமான அடிப்படையில் கூட விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாமே...!!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருவொற்றியூர் கணேசன்

சனி, 7 ஜனவரி, 2017

அறிகுறிகள் இல்லாமலும் ஆபத்து வரும் ! 
அம்மாவோ, மனைவியோ, நீங்களோ வீட் டிலேயே சமைத்த பாரம்பரிய உணவைச் சாப்பிடும் வரையில், உங்களுக்கு கொலஸ்ட்ரால் குறித்த பயம் இல்லை! நீரிழிவு பக்கவிளைவுகளின் காரணமாக பல்வேறுவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற் படக்கூடும். குறிப்பிட்ட இடைவெளிகளில் மருத் துவ ஆலோசனை பெற்றுவரும் நிலையில், இது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தாது. மருத்துவரே இப்பிரச்சினைகளுக்கும் மருந்துகள் அளித்து, அபாயம் வரும் முன் காத்துவிடுவார். அதனால்தான் ஆரம்ப நிலையிலேயே மாத்திரைகள் வழங்கப்படு கின்றன.
கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் இந்தப் பிரச்னைகள் நீரிழிவாளர்களுக்கு ஏற்படும்போது, இதயநோய்களும் ஸ்ட்ரோக்கும் தாக்கும் அபாயம் உண்டு. இவை தொடக்கத்திலேயே அறிகுறிகளைக் காட்டாது எனினும், மருத்துவர்களால் வரவிருக்கும் பிரச்னைகளை உணர்ந்துவிட முடியும். ஆகவே, மருத்துவர்கள் நீரிவுக்கான மருந்துகளைத் தாண்டி, கூடுதலாகப் பரிந்துரைக்கும் மருந்துகளையும் தயங்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ரத்த ஓட்டத்தில் காணப்படுகிற மென்மையான, மெழுகு போன்ற ஒருபொருள்தான் கொலஸ்ட்ரால். இப்படி, குருதிக்குழல்களில் படிந்துவிடக்கூடிய ஒருவித கொலஸ்ட்ராலையே, நாம் கெட்ட கொலஸ்ட்ரால் என்கிறோம். இந்த கொலஸ்ட்ரால் படிவு காரணமாக குருதிக்குழல்களின் சுற்றளவு குறைந்து போகும். இதனால் ரத்த அழுத்தம் அதிகமாகும். இதன் விளைவாக மாரடைப்பு அபாயம் ஏற்படும். அது மட்டுமல்ல...
இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் குருதிக்குழல்களில் கெட்ட கொழுப்பு படிதல் அதிக மாகும்போது, இதயத்தை ஆபத்துக்குள் தள்ளி, இதயநோய்களையும் வழங்கும். இது அனைத்து மக்களுக்குமே பொதுவானதுதான் என்றாலும், நீரிழிவாளர்களுக்கோ அபாயத்தின் அளவு மிக அதிகம். உயர் ரத்த அழுத்தமும் இதயநோய்களும் சட்டென தாக்கும். அதனால்தான் 6 மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆண்டுக்கு ஒரு முறையோ கொலஸ்ட்ரால் டெஸ்ட்(லிபிட் புரஃபைல்) எடுத்துக் கொள்ளும்படி நீரிழிவாளர்களுக்கு அறிவுறுத்தப் படுகிறது.
ரத்த அழுத்த சோதனை (பி.பி செக்அப்) மாதம் தோறும் அல்லது வாரம் தோறும் எடுக்கும்படியும் கூறப்படுகிறது. இனியாவது, நம் மருத்துவர் தேவையில்லாமல் டெஸ்ட்டுக்கு எழுதிக் கொடுக் கிறார், எக்ஸ்ட்ரா மாத்திரைகள் எழுதிக் கொடுக் கிறார் என்றெல்லாம் குழம்பவும் புலம்பவும் வேண்டாம். சில நீரிழிவாளர்கள் நிறைய மாத்திரைகள் எழுதிக் கொடுத்தால், மருத்துவரையே மாற்றிவிடுவதும் உண்டு. இந்தக் காரணத்தால், விஷயத்தைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு ஓரிரு மாத்திரைகளோடு நிறுத்திவிடுவது சில மருத்துவர் களின் வழக்கமாகி விட்டது.
கொலஸ்ட்ரால் குறைக்கும் மாத்திரைகள்...கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகம் கொண்ட நீரிழிவாளர்களுக்கு முதலில் பரிந்துரைப்பது இதயத்துக்கு இதமான உணவுகளையே. இரண்டாவ தாக முறையான உடற்பயிற்சி. மூன்றாவதாகவே கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் மாத்திரைகள். இந்த மாத்திரைகள்  தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும்படியே பரிந்துரைக்கப்படும். சோதனையில் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து விட்டாலும் கூட, மருத்துவர் அறிவுறுத்தினால் தொடர்ச்சியாக உட்கொள்ளத்தான் வேண்டும்.
கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு ஒற்றை மாத் திரையும் உண்டு. காம்பினேஷன் மாத்திரைகளும் உண்டு. நம் உடல்நலம், வாழ்க்கை முறைக்கு ஏற்ப இம்மாத்திரைகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும். ஒருவருக்கு அளிக்கப்படும் மாத்திரை இன்னொரு வருக்கு அப்படியே பொருந்தாது. எல்.டி.எல் எனும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு பொதுவாக ஸ்டாட்டின் மாத்திரைகள் வழங்கப்படும். ஸ்டாட் டின் தெரபி என்று அழைக்கப்படும் இந்த முறையை உலகம் முழுக்கவே மருத்துவர்கள் தவறாது பின்பற்றுகிறார்கள். அதாவது...கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் வந்தாலும் கூட, நீரிழிவாளர் களுக்கு வாழ்க்கைமுறை மாற்றங்களோடு, ஸ்டாட்டின் தெரபியும் தொடரப்பட வேண்டும். வெளிப் படையான இதயநோய் கொண்டவர்களுக்கு ஸ்டாட்டின் தெரபி அவசியம். இதயநோய் இல் லாமல் இருந்தாலும், 40 வயது தாண்டி, இதய நோய்களுக்கான ஒரிரு அபாய காரணி கொண்ட வர்களுக்கும் (நீரிழிவு போன்றவை) ஸ்டாட்டின் தெரபி தேவை.
இதயநோய் இல்லாமல் இருந்தாலும் கூட, 40 வயதுக்குள் இருந்தாலும் கூட, வாழ்க்கைமுறை மாற்றங்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவு 100 என்பதைத் தாண்டி னாலும், இதயநோய்களுக்கான அபாய காரணிகள் ஒன்றுக்கு அதிகமாக இருந்தாலும், இதயநோய் இல்லாமல் இருந்தாலும் கூட, 40 வயதுக்கு குறை வானவர்களுக்கும் ஸ்டாட்டின் தெரபி தொடங்கப் பட வேண்டும். நீரிழிவாளர்களுக்கு ஏன் கொலஸ்ட் ரால் மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது என இப்போது புரிகிறதா?
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள்...உயர் ரத்த அழுத்தமும் அறிகுறி களைக் காட்டாது என்பதால், மருத்துவரைச் சந்திக்கும் மாதாந்திர/காலாந்திரத் திட்டத்தில் இதையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். வீட்டிலேயே சோதித்துக் கொள்ளும் எளிதான பிபி மானிட்டர்களும் இப்போது கிடைக்கின்றன. பிபியை கண்டுகொள்ளாமல் விட்டாலோ, மருத் துவர் அளித்த மாத்திரைகளை உட்கொள்ளாமல் விட்டாலோ, அது பெரிய பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும்.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக மருத்துவர்கள் ஒன்று அல்லது கூடுதலான மாத் திரைகளை அளிக்கக்கூடும். மருத்துவர் அறிவுறுத் திய படி அம்மாத்திரைகளை உட் கொண்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும். ஏதேனும் பக்க விளைவுகள் தோன்றினால், உடனே மருத்துவரிடம் கூறுங்கள். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்து வதற்காக   வகை மருந்துகள் அளிக்கப்படுகின்றன.
கல்லீரல் வீக்கத்துக்கு சிகிச்சை
கல்லீரலில் அதிகக் கொழுப்பு சேர்வதைத்தான், கல்லீரல் மிகைக் கொழுப்பு நோய் என்று சொல்கிறோம். இவ்வாறு கல்லீரலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உடல் கொழுப்பைக் கல்லீரலால் முறையாக வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்த முடியாத நிலை உருவாகும் போதுதான், கல்லீரல் செல்களில் கொழுப்பு படிந்து, இந்த நோய் ஏற்படுகிறது. இதற்குக் காரணமாக இருப்பதில் முக்கியமானது மது பழக்கம். மது பழக்கமில்லை என்றால், அடுத்த முக்கியமான காரணம் நீரிழிவு நோய்தான்! உடல் பருமனும், மிகை ரத்தக் கொழுப்பும் இந்த நோய்க்கு வழிவகுக்கும். சில மருந்துகளாலும், பரம்பரை காரணங்களாலும்கூட இந்நோய் ஏற்படலாம்.
ஒரேயொரு ரத்தச் சர்க்கரை அளவை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது என்பதால், ரத்தச் சர்க்கரை அளவு சீராக இருக்கிறதா என்பதை முதலில் பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோன்று ரத்தக் கொழுப்பு அளவை கண்டறிவதும் அவசியம். மது பழக்கமிருந்தால் அதைக் கைவிடவும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது அவசியம். உணவில் மாவு,கொழுப்பு உணவைக் குறைத்து, காய்கறி, கீரை, பழங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் பலருக்கும் ஆரம்பத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் இல்லாமல் இருப்பதால், அலட்சியமாக இருந்துவிடுவார்கள். இதன் காரணமாகக் கல்லீரலில் நாரிழை சேர்ந்து, கல்லீரல் செல்கள் நலிந்து சிரோசிஸ் நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. எனவே, எச்சரிக்கை தேவை!
-விடுதலை,12.12.16

வியாழன், 5 ஜனவரி, 2017

மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு

லண்டன், ஜன.5 மனித உடலில் இது வரை மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றினை அயர்லாந்தின் உடற்கூறியல் ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உடற்கூறியல் ஆய்வின் உச்ச கட்டமாக கருதப்படும் இந்த உறுப்பை பற்றி அறிந்து கொள்வோம்.

உடற்கூறியல் வரலாற்றில் சுமார் நூறு ஆண்டுகளாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டு பிடித்துள்ளனர். மனித உடலின் குடல் பகுதியை வயிற்றுடன் இணைக்கும் 'நடுமடிப்பு', இத்தனை காலமாக பல்வேறு திசுக்கள் ஒன்றிணைந்த ஒரு அமைப்பாகவே கருதப்பட்டு வந்தது. இந் நிலையில், அயர்லாந்தை சேர்ந்த லிமெரிக் பல்கலைக்கழகத்தின் ஜெ.கேல்வின் காஃப்பே என்ற ஆராய்ச்சியாளர் வயிற்றின் நடுமடிப்பு பகுதியானது, தொடர்ச்சியான உள்கட்டமைப்பினை கொண்டதொரு தனிஉறுப்பு என்று உறுதிப்படுத்தியுள்ளார். மற்ற உறுப்புகளை போல் இதனை அணுகும் போது, இந்த உறுப்பு தொடர்பான  நோய்களை வகைப்படுத்தி, அவற்றை குணப்படுத் துவது எப்படி என்ற ரீதியில் அடுத்தகட்ட ஆய்வுகளை மேற் கொள்ள முடியும்.

உடலில் புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுமடிப்பு என்ற இந்த உறுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவிற்கேற்ப, இந்த புதிய உறுப்பின் இயக்கம் குறித்து இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள முடியும். இதன் இயக்கம் குறித்த தகவல்கள் அறிந்து கொள்ளும்பட்சத்தில் வயிறு மற்றும் குடல் பகுதி சார்ந்து பல்வேறு நோய்களை எளிமையாக குணப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-விடுதலை,5.1.17

சனி, 31 டிசம்பர், 2016

பெண்கள் ஹார்மோன்களில் ஏற்படும் மாறுபாடு இதயத்துக்கு கேடு

விடுதலை ஞா.ம.,5.7.14


பெண்களுக்கான மாதவிலக்கின் போது ஏற்படும் பாலின ஹார்மோன் களின் மாறுபாடுகளால் இதய நோய்க்கு வாய்ப்பு ஏற்படுவதாக ஆய்வுத்தகவல் கூறுகிறது.
பெண்களுக்கு கொழுப்புச் சத்துக் குறையும்போது, ஹார்மோன் அளவுகள் மாறுபாடு அடைந்து, அதிக அளவில் இதய நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு ஏற்படுவதாக ஆய்வுத்தகவல் கூறுகிறது.

அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் பட்ட தாரிகளுக்கான  பொது சுகாதாரப் பள்ளியின் உதவிப் பேராசிரியர் சாமர் ஆர். எல் கவ்தரி கூறும்போது, பெண்கள் மாதவிலக்கிற்கு காரணமாக உள்ள ஈஸ்ட்ராடியோல் என்கிற பெண்களுக்கான உறுதியான ஹார் மோன்களின் அளவு குறைவதைக் கண்டுபிடித்தோம். அந்த ஹார் மோன்கள் குறைந்து, தரம் குறைந்த கொழுப்புக்களுடன் இணைந்து கொள்வதால், இதய நோய்க்கு வாய்ப் பான காரணங்களாக அமைந்து விடுகின்றன என்று கூறினார். கொழுப் புச்சத்து இரத்த ஓட்டத்தில் சிறிய அளவில் சென்று லீப்போ-புரோட்டீன் என்று அல்லது கொழுப்பை கொண்டு செல்பவை என்று அழைக்கப் படுகின்றன.

பழைய முறை இரத்தப் பரிசோ தனைகளில் வெறுமனே கொழுப்பு அளவைக் கண்டறியும்போது லீப்போ-புரோட்டீன் அளவைமட்டும் பொது வாகக் கொள்வார்கள். ஆனால், அதில் HDL,LDL என்று இரு பெரும் பிரிவுகள் உள்ளன.  அதிக அடர்த்தி உள்ள லீப்போ-புரோட்டீன் (High-Density Lipoprotein-HDL) இது தமனிகளில் கொழுப்பு சேர்வதை தடுப்பது,  குறைந்த அடர்த்தி கொண்ட லீப்போ-புரோட்டீன் (Low-Density Lipoprotein-LDL)  இது தமனிகளில் கொழுப்பைச் சேர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்து தடுப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன.

120 பெண்களிடையே மேற்கொள் ளப்பட்ட ஆய்வின்படி, இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கண்டறிய அணு காந்த  அதிர்வின் மூலம் செயல்படும் ஸ்பெக்ட் ரோஸ்கோபி என்னும் கருவியைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஆய்வின்படி, ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்தால், பெண்கள் கொழுப்பின் அளவு, அடர்த்தி, தரமற்ற கொழுப்பு ஆகிய அனைத்தும் இதய நோய்க்கு அடிகோலும் காரணிகளாக இருப்ப தால், அதிக அளவில் கவனமாக இருக்க வேண்டும்.

எங்கள்  ஆய்வு முடிவு பரிந் துரைப்பது என்னவென்றால், நவீனப் பரிசோதனைகள்மூலம் மதிப்பற்ற முடிவுகளைப் பெற முடிகிறது. அனைத்துவிதத்திலும் கொழுப்பைக் கொண்டு செல்பவற்றின் தரத்தை மாதவிலக்கின் தொடக்கத்திலேயே அறியமுடியும். ஆகவே, அந்த முடிவுகளின்படி, உட்கொள்ளக்கூடிய உணவுமுறைகள், பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறி முறைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். என்று எல் கவ்தரி குறிப்பிட்டார். இந்த ஆய்வுத்தகவல் லிபிட் ரிசர்ச் என்கிற ஏட்டில் வெளியாகி உள்ளது.

  

சர்க்கரை வியாதிக்கு இயற்கை தரும் நிவாரணம்



இரண்டாம் ரக சர்க்கரைவியாதி மற்றும் இன்சுலின் தடுப்புக்கு எதிரான போராட்டத்தில் ஒமேகா - 3 என்ற கொழுப்பு அமிலத்தில் இருந்து பெறப்படும் மூலக்கூறு ஒன்று பெரும் உதவி புரியக்கூடும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த மூலக்கூறு சர்க்கரை வியாதிஉடையவர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளில் அவர்கள் ஏற்கனவே இறங்கிவிட்டனர். இந்தஇயற்கை மூலக்கூறுக்கு அவர்கள்டிஎக்ஸ்(பிடிஎக்ஸ்) என்று பெயரிட்டுள்ளனர்.

மனித தசைஉயிரணுக்களில் இண்டர்லூகின் 6 (ஐஎல்-6) எனப்படும் வேதியல் பொருளை உற்பத்தி செய்து வெளியில் பரவவிடுவது இதன் முக்கிய செயல்களில்ஒன்றாக இருக்கும். இந்த ஐஎல்- 6 உற்பத்தி அதிகரிப்பு முக்கியமானதாகும்.

இது ரத்த ஓட்டத்தில் கலந்தால், ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவைக் கட்டுப்படுத்த இரண்டு வழிகளில் உதவி புரிகிறது.முதலாவதாக, குளுகோஸ் உற்பத்தியைக் குறைக்குமாறு இது கல்லீரலுக்கு உத்தரவிடுகிறது.

இரண்டாவதாக தசை உயிரணுக்கள் பயன்படுத்தும் குளுகோஸின் அளவை அதிகரிக்க வேண்டுமென்று நேரடியாக தசை உயிரணுக்களுக்கு கட்டளையிடுகிறது. இந்த இரண்டும் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றுநிறைவேற்றப்பட்டால், ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவுகுறைந்து விடும்.

இது இரண்டாம் ரக சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணம் தரும். உடற்பயிற்சியால் உருவாகும் விளைவுகளை இந்த இயற்கை மூலக்கூறு உருவாக்குகிறது என்ற போதும், உடற்பயிற்சிக்கு இது பதிலியாகவோ, மாற்றாகவோ இருக்க முடியாது என்று பேராசிரியர் ஆண்ட்ரே மாரெட் கூறுகிறார்.
-வடுதலை ஞா.ம.,31.5.14

வியாழன், 29 டிசம்பர், 2016

நுட்பநோக்கி (ஸ்கேன்) ஏன்? எதற்கு?


ரத்தப் பரிசோதனையோ, ஸ்கேனோ, வேறு சோதனைகளோ... நோய்களைக் கண்டுபிடிப்பது மட்டுமே அவற்றின் நோக்கமல்ல. நோய்களின்றி, உங்கள்  உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்தான்! 4 லட்ச ரூபாய் செலவழித்து வாங்குகிற ஒரு காருக்கே, ஆண்டுக்கு  ஒருமுறையோ, இரு முறையோ சர்வீஸ் செய்து பராமரிக்கிறோம்.

விலைமதிக்க முடியாத உங்கள் உடலுக்கு அப்படியொரு பராமரிப்பும் கவனமும்  அவசிய மில்லையா? வருமுன் காத்துக் கொள்ள உதவுகிற அத்தகைய பரிசோதனைகளை அனைத்து மருத்துவர் களும் வலியுறுத்தக் காரணம்  இதுதான்... என்கிறார் பாரத் ஸ்கேன்ஸ் டாக்டர் பியூலா இம்மானுவேல்.

பெண்கள் தங்களது வயதுக்கேற்ப, ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கொள்ள வேண்டிய அவசியமான பரிசோதனைகள் சிலவற்றைப் பற்றி விளக்கமாகப்  பேசுகிறார் அவர்.

திருமணத்துக்கு முன்...

* அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பெண்களின் சினைப்பை நல்ல நிலையில் உள்ளதா எனத் தெரிந்து கொள்ளலாம்.

* 20 முதல் 30 வயதில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் மார்பகங்களில் புற்றுநோயல்லாத கட்டிகள் ஏதேனும் உள்ளனவா எனத் தெரிந்து  கொள்ளலாம்.

கருவுற்ற காலத்தில்...

* முதல் ஸ்கேன் (35 முதல் 50 நாட்களில்) கர்ப்பத்தை உறுதி செய்யவும், கருவிலுள்ள குழந்தையின் இதயத் துடிப்பைத் தெரிந்து கொள்ளவும்... ஒருவேளை இதயத் துடிப்பு இல்லை என்றால் 15 நாட்கள் கழித்து மறுபடி இன்னொரு முறை ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம். அப்போதும் இதயத் துடிப்பு  இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அந்தக் கரு கலைக்கப்படும்.

* 2ஆவது ஸ்கேன்  (11 முதல் 14 வாரங்களில்) கருவின் வளர்ச்சி இயல்பாக இருப்பதை அறிந்து கொள்ளவும், குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம்  பாதிப்பிருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளவும்...

குழந்தையின் கழுத்துப் பகுதி அடர்த்தியை Nuchal translucency சோதனையின் மூலம் பார்த்து டவுன் சிண்ட் ரோம் உறுதி  செய்யப்படும். சில நேரங்களில் இந்த என்.டி. சோதனையில் துல்லியம் தவறிப் போகலாம். அதைத் தவிர்க்க ஆட்டோ என்.டி. என்கிற லேட்டஸ்ட்  சோதனை வந்திருக்கிறது. anomaly scan (20 வாரங்களில்) குழந்தையிடம் வேறு ஏதேனும் குறை பாடுகள் உள்ளனவா எனத் தெரிந்து கொள்ள...

இந்தக் காலத்தில் செய்யப்படுகிற 4டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் குழந்தை தாயின் வயிற்றுக்குள் கொட்டாவி விடுவது, சொரிவது, கண்களைத்  திறந்து பார்ப்பது, கால்களை உதறுவது போன்ற சேட்டைகளைக் கூடப் பார்க்க முடியும்.

கடைசி ஸ்கேன் (கர்ப்பத்தின் கடைசி 3 மாதங்களில்) குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குட நீர் போதுமான அளவு உள்ளதா, தொப்புள் கொடி அமைப்பு, அது குழந்தையின் கழுத்தைச் சுற்றியுள்ளதா,  குழந்தையின் தலை கீழே இருக்கிறதா, சுகப்பிரசவம் நிகழ வாய்ப்புள்ளதா போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள... டிரான்ஸ் வெஜைனல் ஸ்கேன்  என்ற அல்ட்ரா சவுண்ட் வகை ஸ்கேன் கருவியை பெண்களின் பிறப்பு உறுப்புவரை கொண்டு செல்லலாம். அதன் மூலம் சினைப்பை, கருப்பை,  கருக்குழாய்களில் இருக்கும் பாதிப்பைத் துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

கர்ப்பிணி அல்லாதவர்களுக்கான சோதனைகள்...

* மார்பகங்களின் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, ஒரு பகுதியிலோ முழுமையாகவோ நிறமாற்றம் ஏற்பட்டாலோ, வலி தோன்றினாலோ,  அக்குளில் நெறிகட்டியது போலத் தோன்றினாலோ பெண்கள் நவீன டிஜிட்டல் மோமோகிராம் சோதனைக்கு உள்படுத்திக்கொள்ளவேண்டும். வெறும்  பத்தே நிமிடங்களில் இந்தச்சோதனையை முடிக்கலாம்.

* மோமோகிராம் மூலம் கட்டி ஏதேனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது சாதாரண கட்டியா, புற்றுநோய் கட்டியா என்பதை கண்டறிய  எஃப்.என்.ஏ.சி என்கிற fine needle aspiration cytology (FNAC) முறையைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வலி இல்லாமல் செல்  எடுக்கப்படும். பயாப்சி செய்தும் பார்க்கப்படும். இவை இரண்டையுமே இப்போது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் வழிகாட்டுதல்படி துல்லியமாக செய்ய  முடிகிறது.

* மார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டாலும் 40 வயதைக் கடக்கும் பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை டிஜிட்டல்  மோமோகிராம் பரிசோதனை செய்துகொள்ள முன்வர வேண்டும். அதன் மூலம், நோய் இருந்தால் தொடக்க நிலையிலே கண்டறிந்து சிகிச்சை  கொடுத்துவிடலாம்.

* கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் தீவிரமும் இன்று மிகவும் அதிகமாக இருக்கிறது. பாப் ஸ்மியர் சோதனை யின் மூலம் கர்ப்பப்பை வாயிலிருந்து  செல்களை எடுத்து புற்றுநோயைக் கண்டறியலாம். அதில் சந்தேகம் இருந்தால் எம்.ஆர்.அய். மற்றும் பெட் சி.டி. ஸ்கேன்களும் பரிந்துரைக்கப்படும்.

* 50 வயதுக்கு மேல் பெண்களுக்கு ஆஸ்டியோ போரோசிஸ் (Osteoporosis) என்ற எலும்பு பலவீன நோய் வரும். எலும்புகளின் பலவீனத்தின்  அளவைத் துல்லிய மாகக் கண்டறிய டெக்ஸ்சா ஸ்கேன் உதவும்.

-விடுதலை,14.7.14