ஞாயிறு, 6 டிசம்பர், 2015

எல்லா இரத்தப் பிரிவுகளையும் ஒன்றாக்கிய நொதியம்


இரத்த தானம் செய்ய பலர் முன்வந்தாலும் நோயாளியின் இரத்தப் பிரிவுடன் ஒத்திருந்தால் மட்டுமே நோயாளிக்குச் செலுத்த முடியும் என்ற நிலை இதுவரை இருந்துவந்தது. இந்த நிலையினை மாற்றியமைக்கும் புதிய நொதியம் (என்சைம்) கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிய நொதியமானது ஏ மற்றும் பி பிரிவு இரத்தத்தில் காணப்படும் உடற்காப்பு ஊக்கிகளை (ஆன்டிஜென்) பிரித்து எடுத்துவிடும். இதனால், அந்த ரத்தம் ஒ பிரிவு இரத்தத்தின் தன்மையைப் பெற்று விடும்.
ஏ, பி பிரிவு இரத்தங்களிலிருந்து ஏற்கெனவே உடற்காப்பு ஊக்கிகளைப் பிரித்தெடுக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும், நொதியத்தை  பரிணாம வளர்ச்சி இயக்கம் என்ற புதிய தொழில் நுட்பத்தைக் கொண்டு கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி யுள்ளனர்.
இந்த ஆய்வுக் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆய்வாளரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை இதழ்,16-31.5.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக