செவ்வாய், 1 நவம்பர், 2016

தொண்டையில் வீக்கமா?  அது புற்றுநோயாக இருக்கலாம்! 

விதவிதமான புற்றுநோய்களைப் பற்றி தெரிந்த நமக்கு தைராய்டு புற்றுநோயைப் பற்றி தெரியாமல் போனது ஆச்சரியம்தான். பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களின் வரிசையில் தைராய்டு புற்று நோய் எட்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. எல்லா வயதின ருக்கும் ஏற்படக்கூடிய தைராய்டு புற்று நோய், இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளாக அதி கரித்து வருவதை தி மெட்ராஸ் மெட்ரோ பாலிடன் டியுமர் ரெஜிஸ்ட்ரி  சென்னை என்ற அமைப்பு பதிவு செய்திருக்கிறது.

"பலருக்கும் இதன் தீவிரம் தெரியவில்லை. தைராய்டு புற்றுநோயை குணப்படுத்த, ஆரம்ப நிலையிலேயே அதனை கண்டறிவதே சிறந்த வழி என்கிறார் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை துணைப் பேராசிரியர் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி.

தைராய்டு புற்றுநோய் என்பது தைராய்டு சுரப்பியில் ஏற்படுகிற கட்டி அல்லது வளர்ச்சியாகும். நாளமில்லா சுரப்பி அமைப்பில் மிக அதிகமாக காணப்படும் புற்றுநோயாக இது இருக்கிறது. ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் எந்த வயதிலும் இது வரக்கூடும். எனினும், ஆண்களைவிட பெண்களிடத்தில் 3 மடங்கு மிக அதிகமாக தைராய்டு புற்றுநோய் ஏற்படுகிறது.

சமீபத்திய ஆய்வுகளின்படி, தமிழ்நாட்டில் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2016ம் ஆண்டில் 100 சதவிகிதம் அதிகரிக்கலாம். கழுத்துப்பகுதியை அல்ட்ராசவுண்ட் /  ஸ்கேன்   ஆகியவற்றின் மூலம் இமேஜிங் செய்வது அதிகரித்து வருவதால், தைராய்டு புற்று நோய் கண்டறியப்படுவது அதிகரித்திருப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

இதனால் இந்த நோய் இருப்பது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு சிறிய அளவிலான சிகிச்சையை  விரைவில் தொடங்கி எளிதில் குணப்படுத்துவது சாத்தியமாகிறது என்கிறார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட 400க்கும் அதிக நோயாளி களுக்கு நான் சிகிச்சை அளித்து வருகிறேன். இவர்களில் 80 சதவிகிதத்தினர் குறைந்த அளவு ஆபத்துள்ளவர்களாக இருக்கிறார்கள். சரியான சிகிச்சை மற்றும் தவறாத பின்தொடர் சிகிச்சையின் மூலம் இத்தகைய நோயாளிகள் நல்ல தரமான வாழ்க்கையை வாழ முடியும் என்கிறார் அணு மருத்துவத்துறையின் முதுநிலை சிறப்பு நிபுணர் டாக்டர் ஷெல்லி சைமன்.

பொதுவாக தைராய்டு புற்றுநோயானது, வலியில்லாத தைராய்டு முடிச்சாக வெளிப்படுகிறது. தைராய்டு புற்றுநோய் முற்றிய நிலையை உணர்த்தும் வகையில், கழுத்தின் கீழ்புற முன்பகுதியில் வலி, கழுத்தில் வீங்கிய நிணநீர் கணுக்கள், பேசும் போது கரகரப்பு மற்றும் சுவாசிப்பதிலும், விழுங்குவதிலும் சிரமம் ஆகியவை அறிகுறிகளாகும். உடற்பரி சோதனை, ரத்தப் பரிசோதனைகள், தைராய்டு அல்ட்ராசவுண்ட் மற்றும் நுண்ணிய ஊசியின் வழியாக உறிஞ்சி வெளியில் எடுக்கப்படும் பயாப்சி ஆகியவை, தைராய்டு புற்றுநோய்க் கான சோதனைகள்.

தைராய்டு புற்றுநோயானது வளரக்கூடியது, வளராதது  என இரு வகைப் படும். வளரக்கூடிய தைராய்டு புற்றுநோய்க்கு கதிரியக்க அயோடின் சிகிச்சை அளிக்கப் படுகிறது. பாதித்த மற்றும் பாதிக்காத அணுக் களை தனித்தனியே அறிவது கடினம் என்பதால் கதிரியக்க அயோடினை பாய்ச்சும் போது பாதிக்கப்பட்ட அணுக்கள் தூண்டப்படும்.

அவை அயோடினை உள் வாங்கியவுடன், கதிரியக்கம் அவற்றை அழித்துவிடும். ஒட்டுமொத்த தைராய்டு சுரப்பியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதே முதன்மையான சிகிச்சை யாகும். அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, நோயாளிகளுக்கு கதிரியக்க அயோடின் ஸ்கேன் மற்றும் கதிரியக்க நீக்க செயல் முறைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தைராய்டு ஹார்மோனை அகற்றுவது அல்லது தைராய்டை தூண்டி விடுகிற ஹார்மோன் ஊசி மருந்துகளை செலுத்தும் சிகிச்சைகளை மேற் கொள்வதன் மூலம் ரத்தத்தில் உயர் அளவிலான தைராய்டு ஹார்மோனை தூண்டச் செய்யலாம். தைராய்டு ஹார்மோன்களை அகற்றும்போது, மிதமானது முதல் தீவிரமான ஹைப்போதைராய்டிசம் (தைராய்டு சுரப்புக்குறை) ஏற்படுவதற்கு வழிவகுக்கக்கூடும்.  அளவுகளை அதிகரிப்பதற்கான ஊசி மருந்துகளை செலுத்துவதன் மூலம் நோயாளிகள் வழக்கமான வாழ்க்கைமுறையை மேற்கொள் வதில் எந்த சிரமும் இருக்காது என்று நம்பிக்கையூட்டுகிறார் டாக்டர் ஷெல்லி.

அனைத்து புற்றுநோய்களையும் போலவே உரிய நேரத்தில் நோய் கண்டறிதல் மற்றும் உரிய சிகிச்சையை பெறுதல் ஆகியவை அவசியமாகின்றன. ஒரு வெற்றிகரமான தைராய்டு டெக்டமி என்பது, ஒத்துழைப்புடன் கூடிய அணுகுமுறையை மேற்கொள்வதும், தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர்கள், நாளமில்லா சுரப்பு மருத்துவர்கள் மற்றும் அணு மருத்துவர் ஆகியோரின் நிபுணத் துவத்தை ஒருங்கிணைப்ப தாகும்.

முழுமையான தைராய்டு சுரப்பியை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாமல் தைராய்டு திசு பாதிப்பு பகுதிகளை சிறிதளவு விட்டுவிட்டாலும் அதன் பாதிப்பானது முந்தைய நிலையைவிட பன்மடங்கு அதிகரித்து விடும்  எச்சரிக்கிறார். வேறு எந்த புற்றுநோயையும்விட, தைராய்டு புற்று நோயில் சிகிச்சை மூலம் குணமடைந்து உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் சிறப்பானதாக இருக்கிறது என்ற ஆறுதலான விஷயம்.
-விடுதலை,31.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக