திங்கள், 21 நவம்பர், 2016

மழையோடு வரும் மாபெரும் தொற்று

மழையைப் பற்றிய இனிய நினைவுகளைக் கலைத்துப் போட்டு வெறும் கசப்புகளையும் பயத்தையும் மட்டுமே கொடுத்துச் சென்றது கடந்த  ஆண்டு மழையும் வெள்ளமும். இந்த  ஆண்டு மழை எப்படி இருக்குமோ... ஆனால், மழையால் ஏற்படும் சாதாரண காய்ச்சல், சளி, இருமல் இவற்றுடன் 'ஹெபடைடிஸ் ஏஎனப்படும் மிகக் கொடிய தொற்று நோயையும் சந்திக்க நேரிடும்  "தூய்மையற்ற நீர், உணவு இவற்றால்  ஏற்படுகின்ற ஆரம்பகட்ட கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்து கிறது ஹெபடைடிஸ் ஏ வைரஸ் தொற்று.  மழை நீர் மாசுபடுவதால் தொற்றுக்கிருமிகள் உற்பத்தி அதிகமாகி ஹெபடைடிஸ் ஏ பரவக்கூடிய  நிலை உருவாகிறது.

மேலும் ஹெபடைடிஸ் ஏவால்  பாதிக்கப்பட்ட நோயாளியின் இயற்கைக் கழிவுகளாலும் அவ ருடைய நேரடித் தொடர்பினாலும் இது மற்ற வர்களுக்கு பரவுகிறது. சுற்றுப்புறத்திலுள்ள சரியாகப் பராமரிக்கப்படாத கழிவு அகற்றும் குழாய்கள், சாக்கடைகளில் உற்பத்தியாகும் கிருமி களால் இந்தத் தொற்று திடீரென்று  வேகமாக பரவு கிறது. 14 முதல் 28 நாட்களுக்குள் ஹெபடைடிஸ் ஏ நோயின் கிருமிகள் பெருகி மஞ்சள் காமாலை எனும் நோயை ஏற்படுத்துகிறது.

கண்களிலும், சருமத்திலும் மஞ்சள் ஏற்படுவது, பசியின்மை, பலவீனம், வயிற்றுப்போக்கு, வாந்தி இவை அறிகுறிகள்.  இந்த தொற்றினால் பாதிக்கப் பட்ட 70 சதவிகித நோயாளிகளில், 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளிடம் இதன் தீவிரம் அதிக மாகக் காணப்படுகிறது. ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு தொற்றுஆபத்து குறையும்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர் களுக்கும், சுகாதாரமற்ற சூழலில் வாழ்பவர்களுக் கும், தொற்றினால் பாதிக்கப்பட்ட தனிநபருடன் பழகுபவர்களுக்கும் தொற்று பரவும் ஆபத்து அதிகம். நம் உடலில் சேரும் நச்சுப்பொருட்களை கழிவுகளாக உருமாற்றி நீக்கும் பணியைச் செய்யும் கல்லீரல், ஹெபடைடிஸ் ஏ தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகிறது.

ஹெபடைடிஸ் ஏ தொற்றுக்கு வரையறுக் கப்பட்ட சிகிச்சையோ தடுப்பு மருந்துகளோ கிடை யாது. இதிலிருந்து நோயாளி முற்றிலுமாக விடுபடு வதற்கு ஒரு மாத காலமாகும். சத்தான உணவும், போதுமான நீராகாரங்களும் வழங்கப்பட வேண் டும். இல்லையெனில் ஊட்டச்சத்து குறைவு ஏற் பட்டு, குமட்டல், வாந்தி  மற்றும் வயிற்றுப்போக்கை நீட்டிக்கும் என்று  அறி குறிகளையும் கூறுகிறார்.

தடுப்பூசி மூலம் மட்டுமே ஹெபடைடிஸ் ஏ வைரஸ் தொற்றிலிருந்து உறுதியான பாதுகாப்பு கிடைக்கிறது. ஊசி மூலம் ஏற்றப்படும் தடுப்பு மருந்து ஒரு மாதத்துக்குள் உடலில் நோய் எதிர்ப்பு கிருமிகளை உருவாக்கி நீண்ட கால நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க வல்லது.

தடுப்பூசி போட்டுக் கொண்டதிலிருந்து  இரண்டு வார காலத்துக்குள், இந்தத் தொற்றினால் திடீரென்று பாதிக்கப் பட்டவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. இப்போது மேம்பட்ட வடிவங்களில் தடுப்பூசி மருந்து வந்துவிட்டது.

வழக்கமாக போடப்படும் அதிக வலியை தரக்கூடிய இரண்டு டோஸ் ஐ.எம். எனும் தசையின் மூலம் ஏற்றப்படும் ஊசிக்கு பதிலாக சருமத்துக்கு அடியில் செலுத்து வதன் மூலம் மருந்து உடலினுள் ஏற்றப்படுகிறது. ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி தொற்றிலிருந்து  நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்ய உங்கள் குழந்தையின் நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந் துரைக்கிறது  தடுப்பூசியின் அவசியத்தை எடுத் துரைக்கிற மருத்துவர்கள், யாரெல்லாம் இத்தடுப் பூசியை போட்டுக் கொள்ளலாம் என்பதையும் சொல்கிறார்.

1 வயதுக்கு குறைவான குழந்தைகள் தவிர, எந்த வயதினரும் எடுத்துக்கொள்ள முடியும். குழந்தை பருவத்தில் தடுப்பூசி போட்டுக் கொள் ளாத பெரியவர்கள் கூட, இப்போது தடுப்பூசி போடுவதன் மூலம் இந்த தொற்று ஏற்படுவதற்கான அபாயத் திலிருந்து தங்களை பாதுகாக்க முடியும். வரும் மழைக்காலம் தொடங்கும் முன், தங்களுக் கும் தங்கள் பிள்ளைகளுக்கும் முறையான தடுப்பூசி மூலம் பாதுகாக்க வேண்டும். முறையான சுகாதாரம், உணவு மற்றும் இன்றியமையாத தடுப்பூசி மருந்து  இவை யாவும் ஹெபடைடிஸ் ஏ எனும் கொடிய தொற்றிலிருந்து நம்மைக் காத் துக்கொள்ளும் வழிகளாகும் என முன்னெச் சரிக்கை முறைகளை முன் வைக்கின்றனர் மருத்துவர்கள்.
-விடுதலை,21.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக