செவ்வாய், 1 நவம்பர், 2016

பக்கவாதம் நேர்கையில்  மூளையில் சேதம் ஏற்படாமல் தடுக்க...


உலக பக்கவாத தினம் 2016, "பக்கவாதம் சிகிச்சை யால் குணப்படுத்தக்கூடியதே" என்ற தகவலையும். அறிவையும் மக்கள் அறியுமாறு முன்னிலைப்படுத்து கிறது. இந்த நோய் குறித்தும் மற்றும் இதனால் விளைகின்ற சேதத்தையும், பாதிப்பையும் கட்டுப் படுத்த உதவுகின்ற அத்தியாவசிய செயல்நடை முறைகள் குறித்தும் விழிப்புணர்வை பரப்புவது இந்த உலக பக்கவாத தின அனுசரிப்பில் முக்கிய மானதாகும்.

பக்கவாதம் (ஸ்ட்ரோக்) என்பது, மூளையில் எந்தவொரு பகுதிக்கும் இரத்த ஓட்டம் நிகழ்வதில் ஏற்படும் இடையூறால் விளைகின்ற ஒரு மூளை தாக்குதலாகும். ஒரு சில நொடிகளுக்கும் கூடுதலான நேரத்திற்கு மூளைக்கு இரத்த ஓட்டம் செல்வது தடைபடுமானால், மூளைக்கு இரத்தமும், ஆக்ஸி ஜனும் (பிராணவாயு) கிடைக்காமல் போகிறது.

இதனால், மூளையிலுள்ள செல்கள் உயிரிழக்கின்றன மற்றும் மூளையின் அப்பகுதியால் கட்டுப்படுத்தப் படும் உடலின் செயல்திறன்கள் இழக்கப்பட்டு விடுகின்றன. மூளைக்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் செல்வதை தடைசெய்கின்ற பக்கவாதம் ஏற்படும் போது, ஒவ்வொரு நொடிக்கும் 1.9 மில்லியன் நரம்பு உயிர் அணுக்கள் பாதிக்கப்படக்கூடும்.

தலை அல்லது கழுத்தில் ஏற்படும் விபத்தின் தாக்கம் அல்லது காயமானது, 50 வயதுக்கும் குறை வான நோயாளிகள் மத்தியில் ஆக்ஸிஜன் குறை பாட்டை ஏற்படுத்துகின்ற பக்கவாத பாதிப்பு ஏற் படும் வாய்ப்பை மூன்று மடங்கு அதிகரிக்கிறது. பக்கவாத பாதிப்பு தொடக்க நிலையிலேயே கண்ட றியப் படுமானால், நீண்டகால செயல்திறனிழப்பு ஏற்படாமல் தடுக்க உரிய நேரத்திற்குள் பயனளிக் கக்கூடிய சிகிச்சையை வழங்கமுடியும்.

இதுகுறித்து ஃபோர்டிஸ் மலர் மருத்துவ மனையின் நரம்பியல் மற்றும் பக்கவாத சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர்.சதீஷ் குமார் தெரிவித்திருப்ப தாவது: சமீபத்தில், சென்னையில் மீஞ்சூருக்கு அருகே ஒரு வாகன விபத்தில் சிக்கியதற்குப் பிறகு, 26 வயதுள்ள ஜெகதீஷ் என்ற நபர், ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட் டார்.

முகத்தில் அதிக இரத்த கசிவுள்ள காயத்தோடு குழப்பமடைந்த நிலையிலும், தான் எங்கிருக்கிறோம் என்று தெரியாத நிலையிலும் அவர் அங்கு கொண்டுவரப்பட்டார். பக்கவாத சிகிச்சை பிரிவால் அவர் தொடக்கத்தில் பரிசோதிக்கப்பட்டபோது, மூளை - நரம்பியல் பாதிப்பு இல்லாதது கண்டறியப் பட்டது.

எனினும், ஒரு சில மணிநேரங்களுக் குள்ளாகவே, மருத்துவமனையில் இருக்கும்போது உடலின் இடது புறத்தில் பக்கவாத பாதிப்பு இருப் பதை செவிலியர் கண்டறிந்தார். உடனடியாக, கழுத்து மற்றும் இரத்த நாளங்களுக்கான ஊவு ஆஞ்சியோகிராபி (மூளைக்கு செல்லும் இரத்த நாளங்கள் மீது விரிவான நிழற்படங்களை வழங்கக் கூடிய எக்ஸ்ரேக்களை பயன்படுத்துகின்ற) எடுக்கப் பட்டது.

தமனி சார்ந்த அழுத்தத்தின்கீழ் இரத்தம் தமனியின் சுவருக்குள் நுழைவதையும் மற்றும் அதன் அடுக்குகளை பிரிக்கவும் அனுமதிக்கிற முக்கியமான தமனிகளுள் ஒன்றில் கிழிசல் ஏற்பட்டிருப்பதை அது வெளிப்படுத்தியது. நுண் இரத்தத்துகள் கட்டிகள் ஏற்படுவதற்கான காரணமாக இது இருந்து பக்கவாதத்தை விளைவித்திருக்கக்கூடும் என்பது அறியப்பட்டது," என்று கூறினார்.

நோயின் அறிகுறிகளில் விரைவாக அடையாளம் கண்டு, பக்கவாத தாக்குதல் ஏற்பட்டதிலிருந்து 4 மணி நேரங்களுக் குள்ளாக (வின்டோ பிரியட்) உரிய மருத்துவ சிகிச்சையை வழங்குவதன் மூலம் பக்கவாத பாதிப்புள்ள நோயாளிகளைக் காப்பாற்றி அவர்கள் தொடர்ந்து வாழ வகை செய்யமுடியும். நோய் நிலையானது ஆரம்பத்திலேயே கண்டறியப் படுமானால், சிகிச்சையின் விளைவு பொதுவாகவே நன்றாக இருக்கும் என்றார் அவர்.
-விடுதலை,31.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக