செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

மருத்துவ சிகிச்சையோடு பிசியோதெரபியும் அவசியம்




தசைகள், நரம்புகள் மற்றும் எலும்பு பகுதிகளில் நோயாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருத்துவ சிகிச்சையோடு, பிஸியோதெரபி பயிற்சிகளையும் இணைத்து தருவது அவசியம். அப்போதுதான் விரைவில் குணமடைய முடியும் என்கிறார் நரம்பியல் இயன்முறை மருத்துவர் மணிவேல். பிஸியோதெரபியில் இருக்கும் வகைகள், அவை எப்போது தேவைப்படும் என்பதைத் தொடர்ந்து கூறுகிறார்.

பிஸியோதெரபி சிகிச்சையில் நோயாளி ஒருவரின் மீட்பு நிலையைச் சார்ந்து இயக்கப் பயிற்சிகள் கொடுக்கப் படுகின்றன. இதில் Active, Passive 
மற்றும்   Active, Passive என்ற 3 முக்கிய நிலைகளில் பயிற்சிகள் கொடுக்கப் படுகின்றன. ஆக்டிவ் தெரபி என்பது நோயாளிகளை தானாகவே செய்ய வைக்கும் பயிற்சியாகும்.

நோயாளிக்கு ஒரு குறிப்பிட்ட நரம்போ, தசையோ பிடித்துக் கொள்ளும்போது அதை தளர வைப்பதற்காக சில பயிற்சிகளை மருத்துவர்கள் சொல்லிக் கொடுப்பார்கள். அவற்றை தாங்களாகவே செய்து அப்பகுதியை செயல்பட வைக்கும் முறைதான் ஆக்டிவ் பிசியோதெரபி. அதாவது மூளை இடும் கட்டளைகளை ஏற்று உடலின் பகுதிகள் தானாக இயங்கும் முறை.

பாஸிவ் என்பது செயலற்ற நிலையைக் குறிக்கும். மூளையின் கட்டளைகளைப் பெற முடியாமலும், தானாக இயங்காமலும் உடல் செயலற்று இருக்கும் நிலையில் உள்ள நோயாளிக்குக் கொடுக்கப்படும் தெரபி இது. இந்த பாஸிவ் தெரபி நிபுணரின் உதவியோடு செய்யப்படும். ஆக்டிவ் அஸிஸ்டிவ் என்ற மூன்றாவது வகையில் பயிற்சியாளரின் மேற்பார்வையுடன்  நோயாளிகள் செய்வார்கள்.

சில நேரங்களில் கை, கால், தோள்பட்டை மூட்டு இணைப்புகள் இறுக்கமாக இருக்கும். அசைக்க நினைத் தாலும் குறிப்பிட்ட அளவுக்குமேல் அசைக்க முடியாது. இந்நிலையில், திசுக்கள் மற்றும் மூட்டுகளைத் தளர்த்த வெப்பமூட்டும் நடைமுறையை பயன்படுத்தி, உறுப்பு களை அசையவைத்து அவற்றின் இயக்கத்தை மேம் படுத்துவோம் என்றவரிடம், இன்னும் கொஞ்சம் விளக்க மாகச் சொல்லுங்கள் என்று கேட்டோம்.

பாஸிவ் என்ற இயக்கமற்ற நிலையிலிருந்து மாறி, நோயாளிகளின் இயக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டவுடன் நலிவுற்ற தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் கொடுக்கப் படும்.

நீண்ட நாட்கள் அசையாமல் படுத்த நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு தசை மற்றும் மூட்டுகள் மிகவும் நலிவடைந்திருக்கும். நோயாளிகளின் நிலை மையை கருத்தில் கொண்டு, பிற்காலத்தில் தசைகளிலோ, எலும்பு இணைப்புகளிலோ காயங்கள் ஏற்படாத வண்ணம் படிப்படியாக வலுப்படுத்தும் பயிற்சிகளை கொடுப்போம்.
செயலற்ற நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு முதுகு மற்றும் மார்பு தசைகள் இறுக்கமாகும். அப் பகுதிகளில் லேசாக தட்டுவதன்() மூலம் தசைகளை தளர்வடையச் செய்வோம். நுரையீரல் செயலற்று இருக்கும் நோயாளிக்கு மார்பை கைகளால் தட்டி சிகிச்சை கொடுப்போம்.

தீவிரமான சிகிச்சைதேவைப்படும் நிலையில் எலக்ட் ரானிக் கருவிகள், மற்ற கருவிகளின் உதவியோடு மார்புப் பகுதிகளில் அதிர்வுகள் கொடுத்து தசைகளை தளர் வடையச் செய்வோம். எலக்ட்ரானிக் அதிர்வுகளால் தசை களின் இறுக்கம் குறையும் போது லேசாக இருமல் வரும்.

இதனால் நுரையீரலில் இறுக்கம் குறைந்து இயல்பான சுவாசம் ஏற்படும். இயல்பு நிலை திரும்பியவுடன் படிப்படி யாக பயிற்சிகளை குறைத்து வருவோம்.
வெளிநாடுகளில் நுரையீரல் பாதிப்புக்கு ஆன்ட்டி  பயாட்டிக் மருந்துகள் கொடுப்பதைத் தவிர்த்து, பிரதான மாக பிஸியோதெரபி பயிற்சிகளையே மேற்கொள் கிறார்கள். நம் நாட்டில்தான் அதிகமான அளவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உபயோகிக்கிறார்கள்.

இதனால் உடல் மருந்துகளுக்கு பழக்கப்பட்டு ஆன்டிபயாடிக் எதிர்ப்புநிலை  உருவாகி விடுகிறது. அதாவது, அதற்குப் பிறகு கொடுக்கும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பலன் தராமல் மேலும் அதிக வீரியமுள்ள மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை வந்துவிடும். அதனால், பிசியோதெரபி பயிற்சிகளைப் போதுமான அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

-விடுதலை,20.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக