வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

குறட்டையைத் தடுக்க நவீன கருவி



குறட்டையைத் தடுக்கும் நவீன கருவி ஒன்று, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வாங்கப் பட்டுள்ளது. ரூபாய் 12 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டிருக்கும் இந்த கருவி, டென்மார்க்கில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கிறது.  சிஷீறீபீ ணீதீறீணீtவீஷீஸீ என்ற பெயர் கொண்ட இந்த கருவி செயல்படும் விதம் பற்றி மருத்துவர்கள் விளக்கம் அளித்திருக் கிறார்கள். ஒருவருக்கு மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால் மூளைக்குத் தேவை யான ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்படுகிறது. இத னால்தான் மூச்சுக் காற்று அடைப்பு ஏற்பட்டு அவர்களது வாய் வழியாக சத்தம் வெளியேறுகிறது. இதையே குறட்டை என்கிறோம். இதுபோன்ற குறட்டையில் வெளியேறும் சத்தத் தின் டெசிபல் அளவு 5 புள்ளி முதல் 10 புள்ளிகள் வரை இருக்கலாம்.

இந்த அளவுக்கு மேல் சென்றால், அது சிக்கலானது. இதுபோல் அளவு கடந்த குறட்டையினால் தூக்கம் மட்டும் கெடுவதில்லை. ரத்த அழுத் தம் அதிகமாவது, சர்க்கரை நோய் ஏற்படுவது, மாரடைப்பு தாக்கும் அபாயம் போன்றவையும் ஏற்படு கின்றன. அதனால் குறட்டையை சாதா ரண பிரச்சினையாக நினைக்காமல் உடனே சரிசெய்ய முயற்சிக்க வேண்டும் என்று விளக்கமளித்த மருத்துவர்கள், இந்த கருவியின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வரு வதாகவும் அதன்மூலம் குறட்டை விடுவது சில நோயாளிகளுக்கு நின்று போனதாகவும் தெரிவித்திருக் கிறார்கள்.
-விடுதலை,6.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக