திங்கள், 13 பிப்ரவரி, 2017

தடுப்பு மருந்துகளும் சந்தேகங்களும்



இயற்கையி லேயே நம் உடலில் நோய் தடுப்பு ஆற் றல் இருக்கிறது. தற் போதைய சூழலில் நோய்களின் தாக்கம் அதிகமாகிவிட்டது. அதை கட்டுப்படுத்த நாம் தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். நோயின் தன்மையை பொறுத்தும், வயதைப் பொறுத்தும் பல்வேறு தடுப்பு மருந்துகள் இருக்கின்றன என்கிறார் பொது நல மருத்துவர் தேவராஜன்.நோய் தடுப்பு மருந்துகள் பற்றியும் எப்போது அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் தொடர்ந்து விளக்கு கிறார்.

நோய் தடுப்பு மருந்துகள் எப்படி செயல்படுகிறது?

நோய் வராமல் நம்மை காக்க நோய்க்கு காரணமான கிருமிகளை உடலில் இருந்து எடுத்து, உயிரோடோ அதன் வீரிய சக்தி குறைந்த நிலையிலோ அல்லது உயிரற்ற நிலையிலோ அந்த கிருமியை வைத்து தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. அந்த மருந்தை ஒருவர் உடம்பில் செலுத்துவதன் மூலம் நோயை உண்டுபண்ணக்கூடிய கிருமி களுக்கு எதிராக அந்த மருந்து செயல் படுகிறது. இதனால் நோய் பரவுவதைத் தடுத்து நம் உடலை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

தடுப்பூசிகள் எப்போது போட்டுக் கொள்ள வேண்டும்?

தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்துகள் பற்றிய அட்டவணையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.  இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பும் தடுப் பூசிகள் பற்றி ஓர் அட்டவணையைப் பரிந்துரைத்திருக்கிறது. இவற்றில் போலியோ சொட்டு மருந்துகள், பி.சி.ஜி, ஹெப்-1, மீஸல்ஸ் சொட்டு மருந்துகள் (அம்மை),  தடுப்பூசி என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இதை பொது வான அட்டவணையாகக் கொடுப்பதை விட, உங்கள் குழந்தைகள் நல மருத் துவரின் வழிகாட்டுதலின்படி, உங்கள் குழந்தையின் தேவைக்கேற்ப அட்ட வணையைப் பெற்றுக் கொண்டு அதைப் பின்பற்றுவதே சரியானது.

பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

ஒவ்வொரு தடுப்பு மருந்தையும் சரியான கால இடைவெளியில் குழந்தை நல மருத்துவரை அணுகி போட்டுக் கொள்ள வேண்டும். குழந்தைக்குத் தடுப்பூசி போட்ட பிறகு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தெரிந்தால் அதை மருத்து வரிடம் தெரிவிக்க வேண்டும். தடுப்பு மருந்துகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; பெரியவர்களுக்கும் உண்டு.கர்ப்பிணி பெண்கள், எய்ட்ஸ் நோயாளிகள், உடல் பலவீனமானவர்கள் மற்றும் உடல் ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்ப வர்கள் எல்லா தடுப்பூசிகளையும் போட் டுக்கொள்ள முடியாது. அவர்கள் மருத்து வரை அணுகி அவர்களின் ஆலோ சனையின் படியே ஊசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.கர்ப்பிணி பெண்கள் தாய் சேய் நல மருத்துவரை அணுகி தங் களுக்கான தடுப்பு ஊசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். குழந்தை பிறந்த வுடன் ஓர் அட்டையில் பதிவு செய்து அதை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு தடுப்பு ஊசியையும் மருத் துவர் ஆலோசனையின் படி குறிப்பிட்ட கால இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு கடைப்பிடிக்காமல் விட்டால் நோய் தடுப்பு வீரியம் குறைந்து விடும்.
-விடுதலை,13.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக