புதன், 6 பிப்ரவரி, 2019

நம்பிக்கை தரும் புதிய புற்றுநோய் சிகிச்சைகள்

இன்று (பிப்ரவரி-4) உலகப் புற்றுநோய்


விழிப்புணர்வு நாள்




இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 8 லட்சத்துக்கும் மேலானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 3 லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கிறார்கள். புற்றுநோய் விழிப்புணர்வின் போதாமைகளும், வரும்முன் காக்கத் தவறுவதும்,  தொடக்க நிலையில் சிகிச்சை பெறத் தவறு வதும், அடித்தட்டு மக்களைச் சென்றடையாத புற்றுநோய் சிகிச்சைகளும்தாம் இந்த இறப்புக்குக் காரணங்கள் என ‘இந்தியப் புற்றுநோய்க் கழகம்’ பட்டியலிட்டுள்ளது.

புற்றுநோய்க்கு சிகிச்சை


மருந்து சிகிச்சை, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, பேலியேட்டிவ் சிகிச்சை போன்றவை புற்றுநோயை மட்டுப் படுத்துகின்றன. முழுமையாகவும் களைகின்றன புற்று நோயின் வகை, இடம், நிலை ஆகியவற்றைப் பொறுத்து இந்த சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

கதிர்வீச்சு சிகிச்சை


எக்ஸ்-ரே கருவியின் துணையுடன் கதிர்வீச்சுப் பொருள்களை உடலுக்குள் அனுப்பிப் புற்றுநோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறையே கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy). மனித உடலில் நேரடி விளை வையும் மறைமுக விளைவையும் இந்தக் கதிர்வீச்சு ஏற்படுத்துகிறது. நேரடி விளைவால் உடல் செல்களின் ‘டிஎன்ஏ’க்கள் அழிகின்றன. மறைமுக விளைவால் புற்றுநோய் செல்கள் அழிகின்றன. புற்றுநோய் செல்கள் மீண்டும் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்வதே கதிர்வீச்சு சிகிச்சையின் முக்கிய நோக்கம்.

கதிர்வீச்சு முறைகள்


கதிர்வீச்சில் வெளிக்கதிர் வீச்சு, உட்கதிர் வீச்சு என இரு உட்பிரிவுகள் உண்டு. வெளிப்புறத்திலிருந்து தோல் வழியாக நோயாளியின் உடலுக்குள் கதிர்களைச் செலுத்தி, புற்றுநோய் செல்களை அழிப்பதே வெளிக்கதிர் வீச்சு. இது ‘டெலிதெரபி’ (Teletherapy) என்றும் அழைக்கப்படுகிறது. உதாரணம், நுரையீரல் புற்றுநோய்க்குத் தரப்படும் சிகிச்சை.

கதிர்வீச்சை உமிழும் அய்சோடோப்புகளை உடலுக் குள் செலுத்தி, அதன் மூலம் புற்றுநோய் செல்களை அழிப்பதே ‘பிரேக்கிதெரபி’ (Bracytherapy) எனப்படும் உட்கதிர் வீச்சு. இந்தக் கதிர்வீச்சு தோல் வழியாகச் செல்வ தில்லை. பெரும்பாலும் குறிப்பிட்ட அளவுக்கு வெளிக்கதிர் வீச்சு கொடுக்கப்பட்ட பிறகு, உட்கதிர் வீச்சு தரப்படுகிறது. உதாரணம், உணவுக்குழாய்ப் புற்று, கருப்பைவாய்ப் புற்று.

பழைய கதிர்வீச்சு முறை


பழைய முறை கதிர்வீச்சு சிகிச்சையை ‘2D ரேடியோ தெரபி’ என்பார்கள். இதில் அதிக அளவு கதிர்வீச்சைத் தரவேண்டி இருந்தது. அப்போது அது புற்றுள்ள இடத்தின் அருகில் இருக்கும் திசுக்களையும் அழித்தது. அதனால் நோயாளிக்கு வாயில் புண் ஏற்படுவது, தலைமுடி உதிர்வது போன்ற பல பக்க விளைவுகள் ஏற்பட்டன.

இதைத் தவிர்க்க ‘3D கன்ஃபார்மல் ரேடியோதெரபி’ (3D conformal radiotherapy) வந்தது. இந்த சிகிச்சை முறையில் சி.டி. ஸ்கேன் மூலம் நோயுள்ள இடத்தை முப்பரிமாணத்தில் படமெடுத்துக்கொண்டு, கணினி உதவியுடன் நோய்க்குத் தகுந்தவாறு கதிர்வீச்சின் அளவைக் கணக்கிட்டு, புற்றுள்ள இடத்தை மட்டும் தாக்கி அழிக்கும் வகையிலும், அருகில் உள்ள ஆரோக்கிய உறுப்புகளைத் தவிர்க்கும் வகையிலும் சிகிச்சை வடிவமைக்கப்பட்டது. இதில் பக்கவிளைவுகள் குறைந்தன என்றாலும், முழுவதுமாகத் தவிர்க்க முடிய வில்லை.

புதிய கதிர்வீச்சு முறைகள்


நவீனக் கதிர்வீச்சு முறையில் பலவிதம் உள்ளன. அவற்றில் ஒன்று, ‘அய்எம்ஆர்டி’ (Intensity Modulated Radiation Therapy). இதில் கதிர்வீச்சுக் கருவியிலிருந்து புறப்படும் ஒவ்வொரு கதிரின் தன்மையையும் தீவிரத் தையும் மாற்றிக்கொள்ள முடிகிறது. இதன் பலனாக, உடல் உறுப்பு உள்ள இடத்தைப் பொறுத்தும் அதன் அமைப்பைப் பொறுத்தும் கதிர்வீச்சின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ முடிகிறது. அப்போது அது நல்ல உடல் பகுதி களைத் தாக்குவது தடுக்கப்படுகிறது. உதாரணமாக, மூளைக் கட்டிகளுக்கு ‘அய்எம்ஆர்டி’ கதிர்வீச்சைத் தரும்போது, மூளைக்குள் உள்ள நரம்புகளையோ சுரப்பிகளையோ தேவையில்லாமல் அது தாக்குவது இல்லை.

‘அய்ஜிஆர்டி’ (Image Guided Radiotherapy) என்பது அடுத்ததொரு நவீனக் கதிர்வீச்சு சிகிச்சைமுறை. ‘கோன் பீம் சிடி’(CBCT) 
எனும் பிரத்தியேக ஸ்கேன் துணையுடன் நோயுள்ள இடத்தை நேரடியாகப் பார்த்துக்கொண்டே கதிர் வீச்சு தரப்படும் சிகிச்சை இது. இதனால் புற்றுநோயுள்ள இடத்தை மட்டும் மிகவும் துல்லியமாக அழிக்க முடிகிறது. இது பொதுவாக எல்லாப் புற்றுநோய்களுக்கும் பொருந்தக் கூடியது.

‘எஸ்பிஆர்டி’ (Stereotactic Body Radiotherapy) என்பது மற்றொரு நவீனக் கதிர்வீச்சு சிகிச்சைமுறை. மிகவும் அதிக அளவில் கதிர்வீச்சு தேவைப்படும் புற்றுநோய்களுக்கு ‘சைபர் நைஃப்’ (CyberKnife) எனும் கருவி கொண்டு அளிக்கப்படும் சிகிச்சை இது. கல்லீரல், சிறுநீரகம், கணையம், புராஸ்டேட், கழுத்து, மூளை, தண்டுவடம் போன்ற முக்கியமான உடல் உறுப்புகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத அளவுக்குப் புற்றுநோய் ஏற்படு மானால், இந்த சிகிச்சை வழங்கப் படுகிறது. மிகத் துல்லியமான சிகிச்சை மட்டுமில்லா மல் குறுகிய கால சிகிச்சையாகவும் இது கருதப்படுகிறது.

புரோட்டான் சிகிச்சை – அதிநவீன சிகிச்சை!


‘புரோட்டான் சிகிச்சை’ (Proton therapy) என்பது அதி நவீனமானது. ‘புரோட்டான் பீம்’ எனப்படும் பிரத்யேகக் கருவிகொண்டு இந்தக் கதிர்கள் வெளியேற்றப் படுகின்றன. முதலில் ‘சைக்ளோட்ரான்’ எனும் கருவியில் புரோட்டான் கதிர்களின் வேகம், ஆற்றல் செறிவூட்டப் படுகிறது. பிறகு இவை பல்வேறு கட்டங்களில் வடிகட்டப்பட்டு, புற்று நோயுள்ள இடத்தை மட்டும் தாக்கி அழிக்கவல்ல கதிர்களாக வெளித்தள்ளப்படுகின்றன.

இவை பென்சில் முனை போன்று மிகக் கூர்மையாகப் புற்றுள்ள இடத்தை மட்டுமே தாக்கி அழிக்கக் கூடியவை (Cutting-edge pencil-beam scanning technology). இவற்றின் பயணப்பாதையில் முன்னும் பின்னும் உள்ள மற்ற நல்ல உறுப்புகளும் நரம்புகளும் துளியும் தாக்கப்படாமல் தப்பித்துவிடுகின்றன. அதேவேளையில் புற்றுள்ள பகுதி மிகத் துல்லியமாகவும் முழுவதுமாகவும் அழிக்கப்படுகிறது. நோய் நன்கு கட்டுப்படுகிறது.

கூடுதல் நன்மைகள்


நுரையீரல், குடல், கண், கணையம், மார்பகம், புராஸ்டேட், மூளை, தண்டுவடம், முகத்தில் உள்ள சைனஸ் அறைகள் போன்ற இடங்களில் உருவாகும் புற்றுநோய் களுக்கு புரோட்டான் சிகிச்சை சிறந்த பலனைத் தருகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்கும் இது பயன்படுகிறது.  புற்றுநோய்க் கட்டிகளுக்கு மட்டுமன்றி, சாதாரண வகைக் கட்டிகளுக்கும் இது நல்ல பலனைத் தருகிறது. கதிர்வீச்சு சிகிச்சையின் பக்க விளைவாக வரக்கூடிய இரண்டாம் நிலைப் புற்றுநோய் (Secondary cancer) 
வருவதும் இதில் தடுக்கப்படுகிறது. கதிர்வீச்சு சிகிச்சைக்கு 30-க்கும் மேற்பட்ட அமர்வுகள் தேவைப்படும். புரோட்டான் சிகிச்சையில் 10-க்கும் குறை வான அமர்வுகளே போதுமானது. இதனால், நோயாளிக்கு அலைச்சல் மிச்சமாகிறது. இந்த சிகிச்சை முறை தற்போது சென்னையிலும் வழங்கப்படுகிறது.

-  விடுதலை நாளேடு, 4.2.19

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

இரண்டு கைகளையும் இழந்தவருக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு

சென்னை, பிப்.3 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் போடிக்காமன்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி.  கூலித்தொழிலாளி.    இவ ருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இவரது ஒரே மகன் நாராயணசாமி.  ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நாராயணசாமியால் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க இயலவில்லை. மேலும் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் நாராயணசாமியின் தலையில் விழுந்தது. இதனையடுத்து பத்தாம் வகுப்பு முடிந்த உடனேயே கட்டட வேலைக்குச் சென்ற நாராணசாமி படிப்படியாக கொத்தனாராக உயர்ந்தார்.

2015-ம் ஆண்டு ஆகஸ்டு இரண்டாம் தேதி  சித்தையன்கோட்டை என்ற இடத்தில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தபோது கான்கிரீட் போடுவதற்காக ஒரு நீண்ட கம்பியை தூக்கிய போது எதிர்பாராதவிதமாக மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பியில் உரசியது. இந்த விபத்தில் இவரது இரண்டு கைகளும் முழங்கைக்கு கீழே கருகிப்போனது. கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலன் இல்லை.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் டி.ஜி.வினய் கொடுத்த ஆலோசனை மற்றும் உதவியுடன் கடந்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில்  சேர்ந்தார். அடுத்த நாளே  மூளைச் சாவு ஏற்பட்ட கொடையாளி ஒருவரின் இரண்டு கைகளும் அவருக்குப் பொருத்தப்பட்டன.  கடந்த  ஓராண்டாகத் தொடர் சிகிச்சை, தொடர் கண் காணிப்பில்  இருந்த நாராயணசாமி, திங்கள்கிழமை வீடு திரும்புகிறார். நாராயணசாமிக்கு மேற் கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை குறித்து  கை ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைத் துறை தலைவர் மருத்துவர் ரமாதேவி கூறியது:

ஸ்டான்லி மருத்துவமனை கை ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைத் துறை இந்திய அளவில் புகழ்பெற்ற முதல்நிலை மய்யம் என்றாலும் மூளைச்சாவு ஏற்பட்டவரின் கைகளை பயன் படுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதுவேதான் முதன்முறையாகும்.  உலகம் முழுவதும் 87 மருத்துவமனைகளில் இதுவரை 110 பேருக்கு இவ்வகை அறுவைச் சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என்றார் மருத் துவர் ரமாதேவி.

- விடுதலை நாளேடு, 3.2.19

வியாழன், 31 ஜனவரி, 2019

சளி பிடித்தல் என்றால்....



சளிப் பிடித்தல் என்பது நேரடியாக நுரையீர லிலோ தலையிலோ நீர் கோத்துக் கொள்வதல்ல; நமது உடலில் தேங்கியிருக்கும் கழிவின் வெளி யேற்றமே அது. நமது உடலின் ஒவ்வொரு செல் லுக்கும் இடையில் சளி எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சளி செல்லுக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் ஷாக் அப்சர்வராகவும் ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லுக்கு எதையும் எடுத்துச் செல்லும் கடத்தியாகவும் ஊடகமாகவும் இருக்கிறது.

உடலின் கழிவு மிகும்பொழுது முதலில் அது செல்லுக்கு வெளியில்தான் தங்கும். செல்லுக்கு வெளியே உள்ள சளிப்படலத்தில் கழிவுக்கு இடம் இல்லாமல் ஆகி, செல்லுக்குள் நுழைந்தாக வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகும் சூழலில், அது சுவாச வெளிக் காற்றின்   வழியாக நீராக (சளியாக) வெளியேறுகிறது.

இதற்கு தைலம் நல்லதா?


இருமல், தும்மல், மூக்கில் நீர்வடிதல் போன்றவை வெறும் கழிவு நீக்கம் என்பதால் அவை வெளியேற அனுமதிப்பதே நல்லது. ஆனால், உடல் தானாகவே மூக்கடைப்பை உருவாக்கி உள்ளிழுத்தலை மறுக்கும்போது அது பெரும் தொந்தரவாக மாறும். அது போன்ற நேரத்தில் தைலம் தடவுவதும் மருத்துவ உதவியை நாடுவதும் இயல்பு. ஆனால், அவை மூக்கடைப்பைத் தற்காலிகமாகத் தளர்த்துமே தவிர, நிரந்தரத் தீர்வளிக்காது.

சொல்லப்போனால் முன்னிலும் அதிகமான தொந்தர வையே அது அளிக்கும். ஏனென்றால், மூக்கில் ஏற்பட்ட தடையை மருந்து உள்நோக்கி நுரையீரலுக்குள்தான் தள்ளும். நீர் வடிவத்தில் இருந்த தடை, தூசி வடிவத்துக்கு மாறி நுரையீர லுக்குள் செல்வதால், சளித் தொல்லைக்கு உட்பட் டோர் கூடுதலாக அவதியுற நேர்கிறது.

-  விடுதலை நாளேடு, 21.1.19

நீரிழிவு ஒரு குறைபாடு, நோயல்ல...



உலக அளவில் இந்தியாவில்தான் நீரிழிவுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். நமது கலாச்சாரம், உணவுப் பழக்கம், சமூகப் பொருளாதாரக் காரணிகள், வாழ்க்கை முறை போன்ற கார ணங்களால் டைப் 2 நீரிழிவுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதையும்விடத் தற்போது அதிகமாக உள்ளது.

குளுக்கோஸை நமது உடலின் அனைத்து செல்களுக்கும் இன்சுலின் எடுத்துச் செல்கிறது. இந்த இன்சுலினை வயிற்றின் பின்பகுதியில் உள்ள கணையம் சுரக்கிறது. இந்தக் கணை யத்தின் செயல்பாடே நம் உடல் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. இந்த இன்சுலின் சுரப்பில் உள்ள குறைபாடுகளே நீரிழிவு வருவதற்கான அடிப்படைக் காரணம்.

உடல் பருமனாலும் அதிக ரத்தக் கொழுப்பாலும் நீரிழிவுக் குறைபாடு ஏற்படு வதற்கு அதிக சாத்தியம் உண்டு. உடலின் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலின் தேவையும் அதிகரிக்கும்.

இதனால் கணையம் அடிக்கடி இன்சுலின் சுரந்துக் களைத்துப் போய்விடும். இதன் காரணமாக உடல்பருமன் அதிகமுள்ள வர்களுக்கு நீரிழிவுக் குறைபாடு ஏற்படுகிறது.

உடல் திசுக்களில் தேவைக்கு அதிகமாகக் கொழுப்பு சேரும்போது இன்சுலினால் செல்களுக்குள் நுழைய முடியாது. அப்படியே சிரமப்பட்டு திசுக்களுக்குள் இன்சுலின் போனாலும் கொழுப்பு அடைத்துக்கொள் வதால் இன்சுலின் தனக்கான பணியைச் செய்ய முடியாது. இதனாலும் நீரிழிவு ஏற்படுகிறது. இவை தவிர, நீரிழிவுக் குறைபாடு பரம்பரையாகத் தொடர்வதற்கும் சாத்தியம் உண்டு.

நீரிழிவின் வகைகள்


நீரிழிவுக் குறைபாடு டைப் 1, டைப் 2 என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. கணையத்திலிருந்து முற்றிலும் இன்சுலின் சுரக்காமல் இருப்பதால் ஏற்படும் குறைபாடு டைப் 1 நீரிழிவு. பொதுவாக, டைப் 1 நீரிழிவுக் குறைபாடு குழந்தைப் பிறப்பின்போது ஏற்படும்.

கணையத்திலிருந்து போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் இருப்பதால் டைப் 2 நீரிழிவு  ஏற்படுகிறது. மகப்பேறு காலத்தில் பெண்களுக்குக் கர்ப்பகால நீரிழிவுக் குறைபாடு ஏற்படும். இந்தக் குறை பாடு பெரும்பாலும் குழந்தைப் பிறப்புக்குப் பின் சரியாகிவிடும். இவை தவிர, அரிதான நீரிழி வுக் குறைபாடுகளும் உள்ளன.

நீரிழிவால் ஏற்படும் பாதிப்புகள்


முறையான சிகிச்சை பெறாவிட்டால், நீரிழிவால் கண்கள், இதயம், சிறுநீரகம், பாதம் ஆகியவை விரைவில் பாதிப்படையும். நீரிழிவால், கண்களில் புரையும் கண் நீர் அழுத்தநோயும் (கிளாகோமா) ஏற்படுகின்றன.

சிறுநீரகத்தில் உள்ள நெஃப்ரான் செல்கள் பாதிக்கப்பட்டு சிறுநீரகம் வழியாக புரதம் வெளியேறி சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படும். உலக அளவில் சிறுநீரகப் பாதிப்புக்கு நீரிழிவுக் குறைபாடு முக்கியக் காரணியாக உள்ளது.

பிரச்சினைகளை எப்படித் தடுக்கலாம்?


பாதங்களின் உணர்வுத் தன்மையை அவ்வப்போது சோதிக்க வேண்டும், பாதத்தில் உணர்வுக் குறைபாட்டை உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். நீரிழிவுக் குறைபாடு உள்ளவர்கள் கண் பரிசோதனையையும் கண் ரெட்டினா பரிசோதனையையும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும்.

ஏ.சி.ஆர் எனப்படும் சிறுநீரகப் பரிசோதனையில் கிரியாட்டின் அளவைத் தெரிந்துகொள்வது அவசியம். நீரிழிவுக் குறைபாடு உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், உடலில் அதிக அளவு கொழுப்பு, புகைபிடிக்கும் பழக்கம் ஆகியவை இருந்தால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட சாத்தியம் உண்டு.

எனவே, அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

துன்பம் களைவோம்


உடலை முறையாகப் பராமரிப்பதே நீரிழிவால் பாதிக்கப் பட்டவர்களின் முதல் கடமை.

முறையான பரிசோதனைகளும் தொடர் சிகிச்சைகளும் நீரிழிவால் ஏற்படும் பாதிப்புகளை வெகுவாகக் குறைக்கும், நீரிழிவு என்றவுடனே வாழ்வில் இன்பம் எல்லாம் தொலைந்துவிட்டது எனக் கருத வேண்டாம். அதை நோய் என்று கருதாமல், ஒரு குறைபாடாகக் கருதி அதற்கு முறையான சிகிச்சைகள் மேற்கொண்டால் நீரிழிவின் அவதி விலகும்.

-  விடுதலை நாளேடு, 28.1.19

வியாழன், 24 ஜனவரி, 2019

சளி பிடித்தல் என்றால்....



சளிப் பிடித்தல் என்பது நேரடியாக நுரையீர லிலோ தலையிலோ நீர் கோத்துக் கொள்வதல்ல; நமது உடலில் தேங்கியிருக்கும் கழிவின் வெளி யேற்றமே அது. நமது உடலின் ஒவ்வொரு செல் லுக்கும் இடையில் சளி எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சளி செல்லுக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் ஷாக் அப்சர்வராகவும் ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லுக்கு எதையும் எடுத்துச் செல்லும் கடத்தியாகவும் ஊடகமாகவும் இருக்கிறது.

உடலின் கழிவு மிகும்பொழுது முதலில் அது செல்லுக்கு வெளியில்தான் தங்கும். செல்லுக்கு வெளியே உள்ள சளிப்படலத்தில் கழிவுக்கு இடம் இல்லாமல் ஆகி, செல்லுக்குள் நுழைந்தாக வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகும் சூழலில், அது சுவாச வெளிக் காற்றின்   வழியாக நீராக (சளியாக) வெளியேறுகிறது.

இதற்கு தைலம் நல்லதா?


இருமல், தும்மல், மூக்கில் நீர்வடிதல் போன்றவை வெறும் கழிவு நீக்கம் என்பதால் அவை வெளியேற அனுமதிப்பதே நல்லது. ஆனால், உடல் தானாகவே மூக்கடைப்பை உருவாக்கி உள்ளிழுத்தலை மறுக்கும்போது அது பெரும் தொந்தரவாக மாறும். அது போன்ற நேரத்தில் தைலம் தடவுவதும் மருத்துவ உதவியை நாடுவதும் இயல்பு. ஆனால், அவை மூக்கடைப்பைத் தற்காலிகமாகத் தளர்த்துமே தவிர, நிரந்தரத் தீர்வளிக்காது.

சொல்லப்போனால் முன்னிலும் அதிகமான தொந்தர வையே அது அளிக்கும். ஏனென்றால், மூக்கில் ஏற்பட்ட தடையை மருந்து உள்நோக்கி நுரையீரலுக்குள்தான் தள்ளும். நீர் வடிவத்தில் இருந்த தடை, தூசி வடிவத்துக்கு மாறி நுரையீர லுக்குள் செல்வதால், சளித் தொல்லைக்கு உட்பட் டோர் கூடுதலாக அவதியுற நேர்கிறது.

-  விடுதலை நாளேடு, 21.1.19

நோயை தடுக்கும் நல்ல கிருமிகள்



கிருமிகள் எல்லாமே நமக்கு கெடுதலை விளைவிப்பதில்லை. நல்ல கிருமிகளும் பல உண்டு. உணவை செரித்து, சத்துக்களை பிரித்தெடுக்க, நமது வயிற்றில் உள்ள பல நல்ல கிருமிகள் உதவுகின்றன. அவை இல்லாவிட்டால் நமக்கு உணவு செரிக்காது.

அதேபோலத் தான், மூக்கிலும், தொண்டையிலும் சில நல்ல பாக்டீரியா இருந்தால் ப்ளூ வைரஸ் தாக்குதலிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும்

என்பதை, அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.ப்ளூ வைரஸ் தாக்கியவர்கள், அதிலிருந்து தப்பியவர்கள் ஆகியோரின் மூக்கு மற்றும் தொண்டையிலிருந்து சேமிக்கப்பட்ட பாக்டீரியாக்களை மிச்சிகன் விஞ்ஞானிகள் வகைப்படுத்தி ஆராய்ந்த போது, குறிப்பிட்ட சில வகை பாக்டீரியாக்கள் உள்ளவர்களுக்கு ப்ளூ வைரஸ் தாக்குதல் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.இந்த கண்டுபிடிப்பு, ப்ளூ வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உதவும் என்பதோடு, மனித உடலில் நல்ல கிருமிகள் ஆற்றும் பங்கைப் பற்றியும் நமக்கு புரிதலை தரும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

-  விடுதலை நாளேடு, 24.1.19

சனி, 12 ஜனவரி, 2019

அசைவ உணவே ஆரோக்கியம்!




சைவ உணவாளர் களைக் காட்டிலும் அசை வர்களே அதிக ஆரோக் கியத்துடன் வாழ்வதாகச் சொல்கிறது ஆஸ்ட்ரியா வின் க்ராஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அண்மைக்கால ஆய்வு முடிவு, சைவர்களின் கொழுப்புச்சத்து குறைபாடு காரணமாகவும் அதிக அளவில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் எடுத்துக் கொள்வதாலும் அவர்களுக்குப் புற்றுநோய், ஆஸ்துமா, ஒவ்வாமை, மனநலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு சாத்தியங்கள் அதிகம் என்கிறது இந்த ஆய்வு. அசைவர்களை ஒப்பிடும்போது சைவர்களின் வாழ்க்கைத் தரமும் மேம்பட்டதாக இல்லை, அதிக அளவில் மருத்துவச் சிகிச்சை தேவைப்படுபவர் களாகவும் இருக்கிறார்கள் என்ற இந்த ஆய்வு உணவின் அரசியலை உலகுக்கு காட்டும் அவசியத்தேவை!

தொகுப்பு: சந்தோஷ்

- விடுதலை ஞாயிறு மலர், 22.12.18