ஞாயிறு, 30 அக்டோபர், 2016

எடைக் குறைப்பு உணவுக் கட்டுப்பாடு நல்லதா?

இப்போதெல்லாம் பலரும் சட்சட்டென எடையைக் குறைக் கிறார்கள். அதைப் பெரிய சாதனை போலச் சொல்கிறார்கள். இப்படித் திடீர் எடை குறைப்புக்குப் பின்னால் இருப்பது கிராஷ் டயட் எனப்படும் திடீர் உணவுக் கட்டுப்பாடு. இது பல நேரங்களில் மோசமாக முடிவதும் உண்டு. எடையைக் குறைப்பதற்காக உணவைக் கட்டுப்படுத்துவதற்கு முன் யோசிக்க வேண்டியவை:
உணவைக் கட்டுப்படுத்தும்போது உடலுக்கு அத்தியாவசியமான சோடியம், பொட்டாஷியம் போன்ற உப்புகள் தேவையான அளவு கிடைக்காமல் போகலாம். இவை தடைபட்டால் மாரடைப்பு ஏற்படுவதற் கான சாத்தியம் இருக்கிறது.
உணவுக் கட்டுப்பாட்டை கண்மூடித்தனமாகக் கடைப்பிடிக்கும்போது எலும்பு வலுவிழப்பு நோய் (ஆஸ்டியோபோரோசிஸ்), ரத்தசோகை போன்ற நோய்கள் தாக்கக்கூடும்.
போதுமான அளவு ஊட்டமுள்ள உணவு உடலுக்குள் செல்ல வில்லை என்றால் மனரீதியான பிரச்சினைகள், மன அழுத்தம் போன்ற வையும் ஏற்படக்கூடும்.
அலட்சியம் பார்வையை பறிக்கலாம்  
நாம் படிக்கும்போதும், எழுதும்போதும், தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை பயன்படுத்தி பார்க்கும்போது கண்ணீர், நீர் வடிவதோ, தலை வலி வருவதோ, பார்வை குறைபாட்டுக்கான காரணமாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பார்வைக் குறைபாடு இருந்தால் சாதாரணக் கண்ணாடி போட்டு ஆரம்ப நிலையிலேயே சரி செய்துவிடலாம்.
பார்வைக் குறைபாட்டுக்கு உரிய நேரத்தில் கண்ணாடி போடாவிட்டால், குறைபாடு அதிகமாகி பார்வைக் கோளாறு என்ற நிலைக்குச் சென்றுவிடும். இந்த நிலையில் கண் பார்ப்பதற்கு வெளித்தோற்றத்துக்கு நன்றாக இருப்பதுபோல் தோன்றினாலும், நிரந்தரமாகப் பார்வையிழப்பு ஏற்பட்டு விட வாய்ப்பு உண்டு.
சிலருக்குப் பார்வைக் குறைபாடு இருக்கும். கண்ணாடி போட்டால் சரியாகி விடலாம். ஆனால் அது தெரியாமல் கண் மருத்துவமனைக்குப் போனால் கண்ணாடி போட வைப்பார்கள், ஆபரேஷன் ஏதாவது செய்துவிடுவார்கள் என்று பயந்துகொண்டு கண்ணாடி போடாமலேயே பார்வை பிரச்சினையுடனேயே நடமாடிக்கொண்டிருப்பார்கள். ஆரம்ப நிலையிலேயே முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வதன்மூலம் பார்வையைக் காப்பாற்ற முடியும்.
கண்ணில் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் சுயவைத்தியம் வேண்டாம். கண்ணில் ஏற்படும் சிவப்பு எல்லாமே மெட்ராஸ் அய் இல்லை. சில ஆபத்தான கண் நோய்களின் அறிகுறியாகவும் இருக்க லாம். எனவே, கண்ட கண்ட மருந்துகளைப் போட்டு, சரிப்படாவிட்டால் கடைசியில் மருத்துவரைப் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனப்போக்கு இனியும் வேண்டாம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு கண் பரிசோதனை மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவர்களின் சிறு நீரகங்கள் கண்களில் பாதிப்பு ஏற்படுவது அதிகம் என்பதால், அதனை உணர்த்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
-விடுதலை,24.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக