செவ்வாய், 10 நவம்பர், 2015

நலம்தானா? உடலும் உள்ளமும் நலம்தானா?
















1. உயிர் என்பது என்ன?
உயிர் என்பது பொருளின் ஓர் இன் றியமையாத குணம். குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையால் இது வெளிவருகிறது. இந்த சூழ்நிலை மாறினால் இந்த குணம் மங்கிவிடும்.
ஒரு மனிதன் இறந்தான் என்றால் உயிர் என்று குணம் தணிந்து விடுகிறது. உயிர் என்பது ப்ரோட்டீன்களின் ஜீவ உருவம்.             -_- எங்கெல்ஸ்
உடலில் ஒரு சிறப்பு நிலையே உயிர் எனலாம். ஒரு செல் உயிரினங்களுக்கும் உயிர் உண்டு. இதிலிருந்து உயிர் என்பது அணுக்களால் ஆன உயிரியம் மூலக்கூறுகளின் தனித்தன்மை என்பதை அறிந்து கொள்ளலாம்.
2. செல்பற்றி கூறுக?
செல்கள் திறமையுள்ள சிறிய உலைக்கலன் ஆகும். செல் குளு கோஸை எரித்து சக்தியை உண்டாக் குகின்றன. அதற்கு தேவையான எரிபொருளை இன்சுலின் தருகின்றது.
அயோடின் சத்து  மனித உடலில் செல்கள் வளரவும், செல்கள் எண் ணிக்கையால் பெருகிடவும் மிகவும் அவசியம். உயிருக்கு அஸ்திவாரம் (அல்லது) உயிருள்ள அமைப்பை செல் என்கிறோம்.
செல்கள் தானாகவே சந்ததிகளை உற்பத்தி செய்து கொள்ளவும் முடியும். இவ்வாறு ஏற்படுபவை குரோமோ சோம்ஸ் எனப்படும்.
3. உடம்பு என்பது பற்றி கூறுக?
உடல் அய்ந்து அடுக்குகளால் ஆனது.
1. சிற்றறைகள், 2. இரத்த ஓட்டம், 3. நரம்பு மண்டலம், 4. காற்று, 5. உயிர்
நமது உடல் எப்பொருள்களால் ஆக் கப்பட்டு உள்ளதோ அப்பொருள்கள் யாவும் நாம் உட்கொள்ளும் உணவிலும் இருக்க வேண்டும்.
உழைப்பு அதிகம் இல்லாதபோது சத்துள்ள உணவும், இனிப்பும் அதிக மாக உட்கொள்வது ஊளைச்சதையை உண்டாக்குகிறது. அதிக சதை இதயத் தில் சரியான வேலையைத் தடுக்கிறது.
4. என்சைம்ஸ் என்றால் என்ன?
அமைப்பற்ற உயிர் துளிகள் கண் ணுக்கு புலப்படாதவை. என்சைம்ஸ் இருப்பதால்தான் மனிதன் உயிருடன் வாழ்கிறான்.
5.. புதிய சிவப்பு  செல்கள் எங்கு தயாரிக்கப்படுகிறது?
எலும்பின் உட்புறம்  உள்ள மஜ்ஜையில் தயாரிக்கப்படுகிறது.
6. எலும்பு எதனால் ஆனது?
எலும்பு உயிருள்ள செல்களாலும், மெல்லிய இரத்த நாளங்களாலும், நரம்புகளாலும் ஆனது.
7. குரோமோசோம் -பற்றி கூறுக?
குரோமோசோம் என்பது வேதி மூலக்கூறு ஆகும்.
8. ஜீன்கள் பற்றி கூறுக?
ஜீன்கள் தனிவகை மூலக்கூறுகள்.
9. நீர் பற்றி கூறுக?
நீருக்கு சுவை இல்லை. நீரின் பிர தான குணம் பொருட்களை கரைப்பது.
10. காற்று நமது உடலில் கொண் டுள்ள தொடர்பு பற்றி கூறுக?
மனித உடலில் ஒவ்வொரு பகுதியி லும் காற்று உள்ளது. மூளை செயல் படுவதற்கு முக்கியமாக காற்றில் உள்ள ஆக்ஸிஜன் நமக்கு தேவைப்படுகிறது.
11. குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதித்தல் எப்போது ஏற்படும்?
குழந்தை பிறந்தது முதல் இரண்டு வயதுவரை மூளை வளர்ச்சி வேகமாக நிகழ்கிறது. இந்த சமயத்தில் சத்துணவு குறைபாடு ஏற்பட்டாலும், கடும் நோய் தாக்கினாலும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம்.
12. மூளை உற்சாகம் அடைய என்ன செய்யலாம்?
1. மூளை உற்சாகம் அடைய:- பழைய வேலையை புதிய முறையில் செய்.
13. இதயம் பற்றி கூறுக?
இதயத்தில் மேற்புறத்தில் ஆரிக் கிள்கள் உள்ளன. கீழ்புறம் வெண்டிரிக் கள் உள்ளன. இதயத்தை நோக்கி இரத்தத்தை கொண்டு செல்வது சிரை.
இதய பலத்துக்கு சுற்றுப்புற சுகா தாரம் அவசியம். உடலை வலுப்படுத் துதல், உடற்பயிற்சி, ஒழுங்கான வாழ்க்கை முறை தேவை. நாம் அசைவின்றி இருக் கும்போது இதயம் சற்று அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது.  14. இதய நோய் வராமல் இருக்க நாம் மேற்கொள்ள வேண்டியவை தவிர்க்கவும்.
நொறுக்கு தீனிகள், பொறித்த உணவுகள், துரித உணவுகள், போன்ற வற்றைத் தவிர்க்கவும்.
கொழுப்பை முடிந்த அளவு உணவிலிருந்து நீக்கிவிடுவது நல்லது.
_- ஹேமா மாலினி, சத்துணவு நிபுணர், விடுதலை 22.9.2012
15. உயிர்த் தாது என்பது என்ன?
உயிர்த்தாது என்பது புரோட் டோபிளாசம் ஆகும். இது உயிர் உள்ள பொருள் ஆகும். உயிரணுக்கள் எல்லாம் இப்பொருளால் தான் உயிரோடு இருக்கின்றன.
16. சுத்தமான இரத்தத்தை உருவாக்க வழிமுறை யாது?
உணவு, குடிநீர், மூச்சுக்காற்று, தூக்கம், உழைப்பு ஆகிய அய்ந்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும்.
17. ஹீமோகுளோபின் அவசியம் என்ன?
சுத்த இரத்தம் உடலின் பகுதிகளுக்கு செல்லும்போது அங்கு ஆக்ஸிஜன் அளவு குறைவாய் உள்ளமையால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் தான் கொண்டு வந்த ஆக்ஸிசனை அங்கு கொடுத்துவிடுகிறது. ஆகவே ஹீமோகுளோபினை நாம் இழக்கக் கூடாது.
ஹீமோகுளோபின் என்னும் புரதத் தில் முக்கிய செயல்படு பொருள் இரும்பு சத்துதான். ஆக்ஸிஜனை எடுத்துச்  செல்ல கார்பன்-டை-ஆக்ஸைடு வெளி யேற்றல் வேலையை ஹீமோகுளோபின் செய்கிறது.
18. நகம் பற்றி கூறுக?
உடலின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள நமது நகம் பயன்படுகிறது.          _- ஆர்சார்டு
நகத்தில் சிறு ரத்த சிறாய்வுகள் இருப்பின் இதயம் அல்லது ரத்தத்தில் தொற்றுநோய் என உணரலாம்.
நகத்தின் மீது சிறு குழிவுகள் இருப் பின் அது சோரியாசிஸ் அறிகுறியாகும். எங்கெங்கே அழுத்தம் இருக்கிறதோ அங்கெல்லாம் உண்டாகும் அழுத் தத்தை தாங்குவதற்கு வசதியாக சர்மம் நகமாக வளர்கிறது. நகச்சுற்று (கீலீவீ லிஷீஷ்): நல்லவேளை என்ற மூலிகை இலைகளை கசக்கிவைத்து கட்டினால் குணமாகும்.
19. தோலின் சுருக்கம் ஏற்படுவது ஏன்?
வயது முதிர்வு அடையும்போது தோல் எலாஸ்டிக் தன்மையை இழக்கிறது. செல்களும் செயல்படாமல் போகின்றன. ஆகவே விரிவடைந்த தசை திரும்ப  பழைய  நிலைக்கு வர மறுக் கவே தோலில் சுருக்கம் ஏற்படுகின்றன.
மனிதனின் அன்பின் வளர்ச்சியையும், அறிவின் வளர்ச்சியையும் எடுத்துக்காட் டும் அளவுகோல்தான் நகைச்சுவை.
_- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
20. சிரிப்பின் தன்மை யாது?
வலிகளை குறைப்பது என்டார்பின் என்ற வேதிப்பொருளாகும். சிரிப்பதால் உடலில் இது அதிகம் சுரக்கும். நமது  உடலில் உருவாகும் கான்சர் செல்களை அழிக்கும் செல் பெயர் என்.கே.செல் ஆகும். இது அதிகரிக்க தாராளமாக சிரிக்க வேண்டும்.
21. இதயம் கடைசிவரை நன்கு வேலை செய்ய எதை பின்பற்றலாம்?
கரிசாலாங்கண்ணி கீரையுடன் பூண்டு சேர்த்து உண்பதால் ரத்த அழுத்தம் தேவையான அளவு பாது காக்கப்படும். இதயம் கடைசிவரையில் நன்கு வேலை செய்யும்.
22. அயோடின் அவசியம் யாது?
அயோடின் பச்சை இஞ்சியில் உள்ளது. அயோடின் குறைந்தால் புத்திமந்தம் ஏற்படும்.
23. வலி என்றால் என்ன?
சோர்வுற்ற உறுப்பின் (அல்லது) உடலின் அழுகுரல்.
24. நோய் என்றால் என்ன?
நோய் என்பது அன்னிய பொருளை நீக்குவதற்காக வாழ்க்கை நடத்தும் போராட்டம். இப்படி நீக்குவதற்கு சக்தி தேவை. இந்த சக்தி ஜீவாதார சக்தி. நோயுள்ளவன் ஜீவாதாரசக்திக்கு உதவ வேண்டும்.
25. தொந்தி வரக்காரணம் என்ன?
உடலில் உள்ள கொழுப்புச்சத்து எரிக்கப்படாமல் லேயர் லேயராக சருமத்தின் இடைவெளிகளில் சேமிக் கப்படுகிறது. அந்த சேமிப்பு தான் தொந்தி.
26. அலர்ஜி என்றால் என்ன?
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியில் உண்டாகும் குறைபாடுதான் அலர்ஜி எனப்படும். உடலின் ஒவ்வொரு பாகத் திலும் ஒவ்வொருவிதமாக ஒவ்வாமை தடம் பதிக்கும்.
27. நாள் ஒன்றுக்கு ஒருவர் அய்ந்து கிலோ மீட்டர் நடந்தால் எவ்வளவு கலோரிகள் எரிக்கலாம்?
250 கலோரிகள் எரிக்கப்படும்.
28. இன்சுலின் அவசியம் என்ன?
நாம் சாப்பிடும் உணவில் கார் போஹைட்ரேட் இருக்கிறது அது இரத்தத்தின் வழியே பயணிக்கும் போது குளுக்கோசாக மாறுகிறது. இந்த குளுகோஸ் நம் உடலுக்கு பயன்படக் கூடிய சக்தியாக மாறவேண்டுமானால் அதற்கு இன்சுலின் தேவை.
இரத்தத்தில் வருகிற குளுக்கோஸ் அளவும் அதை சக்தியாக மாற்றி பயன்படுத்த தேவையான இன்சுலின் அளவும் சரியான விகிதத்தில் இருக்கும் வரை பிரச்சினை இல்லை.
29. மனிதன் - வரையறு?
பொதுப்பெயர் - மனிதன், புலம் - விலங்குகள், பகுப்பு (பைலம்) -_ முது கெலும்பிகள்
உட்பகுப்பு தண்டுவடம் உடையன
வரிசை - _ முதனிலை பாலூட்டிகள்
துணைவரிசை _- மண்சாயல்
உள்வரிசை -_ காட்டரினி
பெருங்குடும்பம் -_ மன்பதை
குடும்பம் (மனுபு) _ --பிளிவிழிளிமிஞிகி
பேரினம் - மனு - (பிளிவிளி)
இனம் -_ மனிதன்
உள் இனம் - வளர்மதி மனிதன் (இன்றைய மனிதன்)
பொதுப்பெயர் _- மனிதன்
30. நமது செயல்முறை எப்படி உள்ளது?
நமது 70 ஆண்டு வாழ்க்கையில்
இளமை -_ 5 ஆண்டுகள்
உறக்கம் -_ 22 ஆண்டுகள்
உழைப்பு, முதுமை _- 22 ஆண்டுகள்
கேளிக்கை -_ மீதிகாலம்

கண்ணாடி பார்ப்பது _- 2.5 ஆண்டுகள்
சுமார் 6 மாதங்கள் மட்டுமே சிந்திக் கிறோம்!
இதையும் தெரிஞ்சுக்குங்க
உடலுக்கு தேவையான ஆக்சிஜனை அளிப்பதில் வைட்டமின் பி.2 (க்ஷிஙி2) முக்கிய பங்கு வகிக்கின்றது. இது வாழைப்பழம், தக்காளி, கறிவேப்பிலை, புதினா போன்றவற்றில் உள்ளது.
மருத்துவக் குறிப்புகள் மேலும் சில:-
1. முதியோர்கள் அவசரஅவசரமாக வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.
மெதுவாக எச்சரிக்கையோடு பணியாற்ற வேண்டும்.
2. குறைகாணும் போக்கை நிலையாக வடிவமைத்துக் கொள்பவர்களுக்கு வலியோடு கூடிய மூட்டு வீக்கம் (கிக்ஷீலீக்ஷீவீவீ) வரும்.
3. மனிதனுக்கு தேவையான 10 உடை மைகள்:-
1. அன்புடைமை, 2. அருளுடைமை, 3. அறிவுடைமை, 4. அடக்கமுடைமை, 5. ஆள்வினையுடமை, 6. ஒழுக்க முடைமை, 7. ஊக்கமுடைமை, 8. நாண் உடைமை, 9. பொறையுடைமை, 10. பண்புடைமை.
4. மூட்டுவலி, முழங்கால் வலி, பாதவலி, உள்ளவர்கள் அந்தந்தப் பகுதியில் புற்றுமண் பூசி நலம் பெறலாம். வலி, உபாதை உடனடியாக குறையும்.
5.  சோர்வை நீக்குவது எது?
பொட்டாசியம் அளவை சமப்படுத் துவது எது?
பதற்றத்தை குறைப்பது எது?
உடலில் இரும்பு சத்து எதன் மூலம் அதிகரிக்கின்றது?
நெஞ்செரிச்சலை எது போக்கும்?
முடக்கு வாதத்தை எது போக்கும்-
விடை: வாழைப்பழம்
6. கழிவுகளின் தேக்கமே புற்று நோயாக மாறுகிறது. ஆனி ஆடியில் வேப்பம்பழம் நாள்தோறும் சாப் பிடுவது நலம்.
(விருத்தாசலம் மாவட்ட திராவிடர் கழக துணைத்தலைவர் தங்க.இராசமாணிக்கம் விஜயா மணிவிழாவையொட்டி வெளி யிடப்பட்ட அரிய சிறிய வெளியீடு)
-விடுதலை .ஞா.ம.,10.8.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக