வியாழன், 8 நவம்பர், 2018

டெங்கு, சிக்கன் குனியா, ஜிகா காய்ச்சல்கள் எச்சரிக்கை!

பேராசிரியர் டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் அவர்களின் மருத்துவத்துறை அனுபவ அறிவுரை


டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சல்கள்


டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சல்கள் வைரசால் ஏற்படுகின்றன. தேங்கியிருக் கும் தண்ணீரிலுள்ள பெண் கொசுக்கள் பகல் நேரத்திலேயே கடிப்பதால் பரவு கின்றன. டெங்கு, சிக்கன் குனியாவால் காய்ச் சல் அதிகமாகும். தோல் வெடிப்புகள், மூட்டு வலிகள் ஏற்படும். டெங்கு காய்ச் சலின்போது இரத்த இழப்பு ஏற்படுவ தால், இரத்த உறைதலுக்கு மூலப் பொருளான இரத்த தட்டுகள் குறைந்து விடுவதால் இரத்த இழப்பு அதிகமாகிறது. பாரசிட்டமால் மற்றும் மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நிலையும், டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய் களுக்கு தடுப்பு மருந்தும் இல்லாத நிலையும் உள்ளது.

ஜிகா காய்ச்சல்


ஒருவரிடமிருந்து மற்றவருக்கு சுவாசிக்கின்ற காற்றின்மூலமாகவும், பாலியல் உறவுகளின் மூலமாகவும்  பரவுகின்ற வைரஸ் காரணமாக ஜிகா காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல், உடல் வலி, தலைவலி ஏற்படும். தும்மல், மூக்கடைப்பு இராது. தடுப்பு மருந்து இல்லை.

பப்பாளியின் பயன்


பப்பாளி இலைகள் டெங்குவைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. டெங்கு வால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பப்பாளி இலைச் சாறு அளிப்பதன்மூலமாக 5 நாள்களில் குணம் அடைகிறார்கள்.

ஸ்வைன் புளூ காய்ச்சல்


ஸ்வைன் புளூ காய்ச்சலுக்கு மருந்து உள்ளது.


- விடுதலை நாளேடு, 6.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக