சனி, 29 அக்டோபர், 2016

கண்கள் பாதுகாப்பு


கண்களில் ஏற்படும் தற்காலிக எரிச்சல், அரிப்பு போன்றவற்றுக்குக் கை மருத்துவமாக நாமே சில சிகிச்சைகளைச் செய்யலாம்.  அதேநேரம், நாள்பட்ட பிரச்சினைகளுக்கு மருத்துவரையே நாட வேண்டும்.
சில எளிய முறைகள்:
> எப்போதுமே வெளியே போய்விட்டு, அலுவலகம் போய்விட்டு வீடு திரும்பிய பிறகு கண்களைத் தொடுவதற்கு முன் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவிவிடுங்கள். பொதுவாகக் கைகளிலிருந்துதான் நுண்கிருமிகள் கண்களுக்கு அதிகம் தொற்றுகின்றன.
> வெள்ளரிக்காய் குளிர்ச்சியைத் தரும். வெள்ளரியைச் சாப்பிடுவது மட்டுமல்லாமல், வட்டமாக நறுக்கிக் கண்களின் மேல் வைத்தால் கண் அரிப்பு, எரிச்சல் குறையும்.
> ரோஸ் வாட்டர் கண் அரிப்பைக் குறைக்கும். ரோஸ் வாட்டரை நேரடியாகப் பயன்படுத்தாமல், தண்ணீரில் கலந்து கண் இமைகளின் மேல் தடவலாம், கழுவலாம், துணியால் ஒத்தி எடுக்கலாம்.
> அதேபோல நல்ல, குளிர்ச்சியான பாலில் பஞ்சை நனைத்துக் கண் இமைகளின் மேல் ஒத்தி எடுக்கலாம்
-விடுதலை,3.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக